For Read Your Language click Translate

03 June 2014

பிராய்லர் சிக்க‍ன் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் கெடுதல்கள் – ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்


பிராய்லர் கோழி தற்போது கிலோ Rs.400/-க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா ?

பிறந்து 55நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிரா ணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம்… இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங் கள் நண்பர்களே …
இன்னும் சில நாட்களில் கோழி கறியினால் வரப் போகும் பிரச்சனைகளால் Rs.120/–இல் இருந்து Rs.40/- நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இவர்க ளின் திட்டத்தின்படிRs.180/- என்று விலையை உயர்த்தி, பிறகு 120rs என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்.
மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றி லும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப் பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதி களின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்றுநோய் பிரச்சனை அதிக மாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணை களின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர்….
நாமக்கலின் HEALTH CARE ORGANIZATION எவ்வளவோ முயற்ச்சி எடுத்தும் அவர்களால் இந்த உண்மையை ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆறாம் திணை என்ற தொகுப்பில் மட்டும் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது …..
உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய்கனிகளும் ஏராளமாகப்புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கையில் வழியும் குருதியை யும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன்குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.
இன்றைக்கு அசைவம் சாப்பிடுவதுபற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று… அசைவம் சாப் பிட்டால், உடம்பு வளரும்; மூளை வளராது; சைவ மே சிறந்தது என்பது. இரண்டாவது… அசைவம் சாப்பிடு வோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடு வில் இருக்கிறது என்பதே சரி!
அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தின ரும், உல கை உலுக்கி மாற்றிய ‘மைக்ரோசாஃப்ட்’, ‘ஆப்பிள்’ முதலாளிகளும் அசைவப் பிரிய ர்கள்தான். புலாலில் உள்ள புரத மும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய், கனிகளில் குறைவு. உதாரணத் துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம் தான் இரும்புச்சத்து இருக் கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத் தை எப்படிச்சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது தான், முக்கியமான ஒரு கேள்வி!
ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசி க்கு அப்படியே சரிப்படாது. அன்றுமுதல் இன்றுவரை கட்டுமரத்தில் நெடுஞ் சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப் பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் ‘ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர்செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக் கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப் போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிட லாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்க ள். ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒருகிலோ கோழிக்கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும் கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக் கொண்டால், இன்னும் சிறப் பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒருநாள் –குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வுகொடுத்து விரதம் இருங் கள். எல்லாமே விருந்துதான். எல்லா வற்று க்குமே ஒரு புரிதல் தேவைப் படுகிறது!
அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள் ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்து வைத்தி ருந்தார்கள் நம் முன் னோர்கள். நாம் எதை அறிந்து வைத்திருக்கி றோம்?
மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண் டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண் டும் என்கிறது தமிழ் மருத்துவம். இதுவரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்க ரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்துஉள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும்தரும் கறி பக்கோடாக் களில் கறி மசாலா வை நீங்கள் பார்க்க முடி யாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறை களில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீ ர்க ளே… அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக் குத் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்… நூற்றுக்கணக் கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்பு கள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.
கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரைதேடி வளர்ந்த கோழி யாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக்கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உடல் தாது வை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச்சத்து அதிகம்; வைட்டமி ன் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக்கியத்து டன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.

நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக்கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழி யின் சதைப்பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிற மாக இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழ ந்து இருக்கும் பக்கவாத நோயினருக்கும், பிற தசை நோயின ருக்கும் இந்தக் கோழியைத் தான் உண வாக, மருந்தாகப் பன்னெடுங் காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சியின், பின்னணி குறித்து, ‘கூவாத கோழி யும், குடை சாயும் இறையாண்மையும்’ என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிர வைப்பவை.
‘பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்க ப்படும் ‘ரோக்ஸார்சோன்’ (Roxarsone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்று நோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ் பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல் கலைக் கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்தி லேயே சிறுமி கள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய் களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொட ர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக் கின்றன!” என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமானது.

No comments:

Post a Comment