For Read Your Language click Translate

16 June 2014

மூச்சுக்காற்றே மூலதனம்-


 
காலையில் முழித்த முகம் சரியில்லை! எடுத்த காரியம் எதுவும் நடக்கவில்லை! என்று அலுத்துக் கொள்வோர்களும், இன்றைக்குக் கழுதை முகத்தில் முழித்திருப்பான் போலிருக்கிறது! அதிர்ஷ்டக்காரன், அவனுக்கு அடித்தது, யோகம் என்று வியந்துபோவோரும் இருக்கின்றார்கள்.
ஆனால், காலையில் தூங்கி எழும்போதே அன்றைய தினம் எப்படி இருக்கும்! எப்படி இருந்தால் தனக்கு நன்மை உண்டாகும் என்பதை அறிந்து செயல்படுபவர்கள் குறைவு.
நாம் நமது மூக்கின் வழியாக விடுகின்ற மூச்சுக்காற்று நம்மை ஆக்குகின்றது. நம்மை ஆள்கின்றது. நம்மை வழி நடத்துகின்றது.
நம்மைப் பற்றியும் நம் உடம்பைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்யும் மணியாக மூக்கையும் மூச்சையும் குறிப்பிடலாம்.



படுக்கையிலிருந்து எழ வேண்டிய நேரம் அதிகாலை 4.00 மணி. 4.00 மணி என்பது மிகவும் முக்கியமான நேரமாகும். அதிகாலை 4.00 மணிக்கு எந்த நாசிப்பக்கமாக மூச்சு வெளிவருகிறது என்பதைக் கவனித்தால், அன்றைய பொழுதில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.


மூக்கிலிருந்து வெளிவருகின்ற மூச்சு முறையாக இல்லாமல் தாறுமாறாக இருக்குமேயானால், மதங்கொண்ட யானையைப் போல் தாறுமாறாக நடந்து இன்பங்களை இழந்து துன்பங்களைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டியிருக்கும்.

ஒவ்வொரு நாளும் நாம் விடுகின்ற மூச்சு, மூக்கின் இரண்டு நாசிகளில் ஒரு பக்க நாசியில் வெளி வர வேண்டும்.

மூக்கில் விடுகின்ற மூச்சுக்காற்று முறையாக வெளிவர முதலில் இடது பக்கத்து நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து வலது பக்க நாசி வழியாக வெளியிட வேண்டும். அடுத்து, வலது பக்க நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து இடது பக்கத்து நாசி வழியாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு, காலையிலும் மாலையிலும் 21 முறை செய்து பழக வேண்டும். அவ்வாறு செய்தால், மூக்கிலும் மூச்சுக் குழாயிலும் நுரையீரலிலும் உள்ள அடைப்புகளும், சளியும் வெளியேறிவிடும். அதன் பின் மூச்சுவிடுவது இயல்பாக இருக்கும்.


அடுத்ததாக, அதிகாலையில் விழித்தெழுந்து மூக்கில் எந்த நாசி வழியாக மூச்சுக்காற்று வெளியே வருகிறது என்று பார்க்க வேண்டும்.

அதிகாலையில் எந்தப்பக்கத்து நாசி வழியாக மூச்சுக் காற்று வெளிவருகிறது என்பதைக் கொண்டு, அன்றைய தினம் நமது உடம்பு எவ்வாறு இருக்கும் என்பதை முன்னரே அறிந்து கொள்ளலாம்.
வலது நாசி என்பது சூரிய கலை.
இடது நாசி என்பது சந்திர கலை.

ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு அன்றைய பொழுதின் உடல் நலம் தொடங்குகிறது. அன்றைய பொழுதின் உடல் நடத்தை அதிகாலையிலேயே கண்டறிந்து கொண்டு, அதற்கு வேண்டிய மாற்ற நடவடிக்கைகளைச் செய்து கொண்டால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல, அதிகாலையிலேயே முடிந்துவிடும்.

எப்படியென்றால், வார நாள்களில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய இம்மூன்று நாள்களில் அதிகாலை நான்கு மணியிலிருந்து காலை ஆறு மணி வரை இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.

ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய இம்மூன்று நாள்களில் வலது பக்க நாசி வாயாக மூச்சு வெளிவர வேண்டும்.

வார நாள்கள் எனில் வியாழக்கிழமை மிகவும் முக்கியமான நாளாகும். மற்ற ஆறு நாள்களைப்போல வியாழக்கிழமையில் மூச்சு விட முடியாது.
வியாழக்கிழமை அன்று பௌர்ணமியாக இருந்தால், அதிகாலை நான்கு மணிக்கு இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.

வியாழக்கிழமை அன்று அமாவாசையாக இருந்தால் இடது நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
இவை இரண்டும் இல்லாமல் வளர்பிறையாக இருந்தால் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
தேய்பிறையாக இருந்தால் வலது பக்க நாசி வாயாக மூச்சு வெளிவர வேண்டும்.

மேலே கூறியது கூறியவாறு மூச்சு வெளிவந்து கொண்டிருந்தால் அந்த ஏழு நாள்களும் உடல் நலமும் மன நலமும் சீறாக இருக்கும். எவ்விதமான நோய்நொடிகளும் அண்டாமல் இருக்கும்.

அதற்கு மாறாக, நடந்தால் என்ன நடக்கும் என்பதைக் காண்பதற்கு முன் ஒரு சிறிய இடைவேளை.

ஞாயிறு அன்று காலையில் வலது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், தலைவலி, சளி, இருமல், ஈளை, மூச்சடைப்பு நோய்கள் உருவாகும்.

திங்கள் அன்று காலையில் இடது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவந்தால், ஜலதோசம், ஆஸ்துமா, தும்மல் நோய்கள் உண்டாகும்.

செவ்வாய் அன்று காலையில் வலது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூசு வெளிவந்தால், காய்ச்சல், கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், பித்த மயக்கம் ஆகியவை ஏற்படும்.

புதன் அன்று காலையில் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், உடல் வலி, கைகால் குடைச்சல், மூட்டுவலி, நீரேற்றம், தலைக்குத்தல் போன்ற நோய்கள் உருவாகும்.

வியாழக்கிழமை நாளில் பௌர்ணமி, அமாவாசை, வளர்பிறை, தேய்பிறை ஆகியவை இருந்தால், முறையே இடது நாசி, வலது நாசி, இடது நாசி, வலது நாசி ஆகிய நாசி வழியாக மூச்சு வெளிவரவேண்டும். அதற்கு மாறாக வெளிவந்தால், அடி வயிற்றில் நோயுண்டாகும். பெண்களுக்குக் கருப்பைக் கோளாறு ஏற்படும். மலட்டுத் தன்மை உருவாகும். இல்லற உறவு கசந்து போகும்.

வெள்ளி அன்று காலையில் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், கண் வலி வரும். கண் நோய் உண்டாகும். பார்வை குறையும்.

சனி அன்று காலையில் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், குளிர் கரம், சரும நோய், குட்டம் போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு.

மூக்கின் வழியாக வருகின்ற மூச்சுக்காற்று தடம் மாறி நடந்தால் உடல்நலம் மட்டுந்தான் பாதிக்கும் என்றில்லை. மன நலமும் பாதிக்கும். மன நலத்தில் ஏற்படுகின்ற பாதிப்பினால், உற்றார் உறவினர்களுடன் பழகும் பழக்கங்களும் பாதிக்கும். அதனால், உறவு முறிவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

வார நாள்களில் விடுகின்ற மூச்சுக்காற்று தடம்மாறினால் உடல் நலத்தில் குறைபாடுகளும் நோய்களும் உருவாகி, அவற்றின் ஆதிக்கத்தினால் உடல் நலம் பாதிக்கும். உறவும் தொழிலும் உடன்படாமல் எதிர்மறையாகச் செயல்படும். கசப்பும் இழப்பும் வாழக்கையைத் தடம் புரளச் செய்துவிடும்.

இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமானது மூச்சுக்காற்று. அது, நாள்தோறும் விடியற்காலையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கொண்டு அன்றைய பொழுதின் ஆரோக்கியத்தை, மன வளத்தை அறிந்து கொள்ளலாம்.

மூச்சுக்காற்று எந்த நாசியில் இயங்குகிறது என்பதைக் கண்டறிந்து அன்றைய பொழுது எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்வது மட்டும் உடல் நலத்தைப் பேணுவது ஆகாது.
தீங்கும் தீமையும் வரப்போகிறது என்றறிந்து கொண்டு வருவது வரட்டும்! ஒரு கை பார்த்துக் கொள்ளலாம்! என்றிருப்பது அறிவுடமையுமாகாது.

எந்தச் செயலுக்கும் ஒரு மாற்று இருப்பதைப் போல, எல்லாவற்றுக்கும் தீர்வு என்பது இருக்கும் என்பதை உணர்ந்து அந்தத் தீர்வு என்ன என்று அறிய முற்பட வேண்டும்.

மூச்சுக்காற்று அதன் இயல்புக்கு மாறாக நடக்கத்தொடங்கும் போதே அதனை மாற்றுவதற்கான தீர்வைச் செய்து முறையாக இயங்கச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தீங்கும் தீமையும் நீர்த்துப் போகும்.

கிழமைக்கு ஏற்றவாறு நாசியின் வலப்புறமோ அல்லது இடப்புறமோ இயங்குகின்ற மூச்சானது, சுமார் ஒரு மணி நேரம் வரை இயங்கிவிட்டு அடுத்த நாசிக்கு மாறிவிடும்.
அதிகாலை நான்கு மணி என்பது அன்றையப் பொழுதின் தொடக்க நேரம் என்று முன்னரே சொன்னோம். அந்த நேரத்தைக்குறிப்பிடவே 'வைகறை துயில் எழு’ என்று கூறப்பட்டுள்ளது.

சூரியகலை சூரியனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது. இது வெப்பமானது. சந்திரகலை சந்திரனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது. இது குளிர்ச்சியானது. குளிர்ச்சியும் வெப்பமும் உடலுக்குத் தேவை என்பதால் அவை இரண்டும் மாறி மாறி இயங்கி உலைப் பாதுகாக்கின்றன.
வெப்பம் மிகுந்தாலும் நோயாகும். குளிர்ச்சி மிகுந்தாலும் நோயாகும். அவை இரண்டும் சம அளவில் இயங்கிக் கொண்டிருந்தால், அல்லது இயங்கச் செய்து கொண்டிருந்தால் நோய் என்னும் பேச்சுக்கே இடமில்லை.

அதிகாலையில் எழுந்திருந்த காலைக்கடன்களை முடித்து விட்டு, முகத்தைச் சுத்தம் செய்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், நாசிக்குக் கீழே கையை வைத்து எந்த நாசியின் வழியாக மூச்சுக்காற்று வந்து போகிறது என்பதைச் சோதிக்க வேண்டும்.
அதன் பிறகு, அன்றைய கிழமை என்ன, அக்கிழமையன்று எந்த நாசியின் வழியாக மூச்சு இயங்க வேண்டும் என்றறிந்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு வலப்புற நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்க வேண்டும். அன்றைக்கு அதிகாலையில் வலப்புறத்தில் இயங்கினால் தோஷமில்லை. மாறாக இடப்புறமாக இயங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்ய வேண்டும்?
போர்வை, சமுக்காளம் போன்ற துணியைத் தரையில் விரித்துக் கொண்டு, அதன் மீது பத்ம ஆசனம் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். பத்மாசனம் போட முடியாவிட்டால் சுகாசனம் போட்டு அமர்ந்து கொள்ளலாம்.
சுகாசனம் என்பது சாப்பிடும்போது உட்காருவதுபோல் உட்கார்வது. அவ்வாறு உட்கார்ந்து கொண்டு வலது கையின் கட்டை விரல் மோதிர விரல் ஆகிய இரண்ட மட்டும் நீட்டிக் கொண்டு மற்ற மூன்று விரல்களையும் உட்புறமாக மடக்கிக் கொண்டு, கட்டை விரலை வலப்புற நாசியிலும் மோதிர விரலை இடப்புற நாசியிலும் மூக்கைச் சிந்தும்போது வைப்பது போல் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது, கட்டை விரலால் வலப்புற நாசியை அமுக்கி மூச்சு வராமல் அடைத்துக் கொண்டு இடப்புறத்து நாசி வழியாக மூச்சை மெதுவாக உள்ளுக்குள் இழுக்க வேண்டும். அவ்வாறு இழுக்கும் நேரம் அரை நிமிடம் என்று வைத்துக் கொள்வோம்.

மூச்சை இழுத்தவுடன் மோதிர விரலால் இடப்புறத்து நாசியை அடைத்துக் கொண்டு, கட்டை விரலை எடுத்து விட்டு, வலப்புற நாசி வழியாகக் காற்றை வெளியே விட வேண்டும். மூச்சை வெளியே விடும்போது, இடப்புறமாக மூச்சை இழுக்கும்போது ஆகும் நேரம் அரை நிமிடத்தைப் போல இரண்டு மடங்கு நேரம் (ஒரு நிமிடம்) மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும்.

அடுத்து, வலப்புற நாசி வழியாக மூச்சை வெளியே விட்டதும், அந்த நாசியின் வழியாகவே மூச்சை அரை நிமிட நேரம் அளவுக்கு உள்ளே இழுக்க வேண்டும்.
காற்று உள்ளே சென்ற வலப்புற நாசியைக் கட்டை விரலால் அடைத்துக் கொண்டு, இடப்புறத்தை அடைத்துக் கொண்டிருக்கும் மோதிர விரலைத் தளர்த்திக் கொண்டு ஒரு நிமிட நேரம் அளவுக்கு உள்ளே சென்ற காற்றை மெதுவாக வெளியே விட வேண்டும்.
இவ்வாறு, வலப்புறமும் இடப்புறமும் மாறி மாறி விட வேண்டும். வலது புறத்திலும் இடது புறத்திலும் மூச்சு விடுவது ஒன்று எனக் கணக்கிட்டு, இருபத்தொரு முறை விட வேண்டும்.

அவ்வாறு செய்த பின்பு, சிறிது நேர ஓய்வுக்குப் பின்பு நாசியைச் சோதிக்க வேண்டும். அப்போது, இயல்பாக வரவேண்டிய வலது புறத்து நாசி வழியாக மூச்சு வர வேண்டும்- அப்போதும் இடது புறத்து வழியாகவே மூச்சு வந்து கொண்டிருந்தால், கவலைப்படவேண்டாம்.

விரித்து வைத்துள்ள துணியின் மீது, தெற்கில் தலையை வைத்துப் படுத்துக் கொள்ளலாம். இடது கையை மடக்கி தலைக்கு வைத்துக் கொள்ளலாம். உள்ளங்களையில் காதைவைத்து படுத்துக் கொள்ளவும். இடது காலை மடக்கி வலது காலை நீட்டிக் கொள்ளவும். வலது கை வலது தொடையில் இருக்குமாறு நீட்டிக் கொண்டு, பத்துப் பதினைந்து நிமிடங்கள் படுத்திருந்தால், மூச்சு இடது கலையிலிருந்து மாறி வலதுக்கு வந்துவிடும்.


மேலும் மற்றொரு முறை சுவர் ஓரமாக நின்று கொண்டு இடது காலைத் தூக்கி வலது கால் தொடை மீது வைத்துக் கொள்ளவும். கை இரண்டையும் ஒன்றாகச்¢சேர்த்து கும்பிடுவதுபோல வைத்துக் கொண்டு, கையைத் தலைக்கு மேலே நீட்டிக் கொள்ளவும். இதற்கு நின்ற பாத ஆசனம் என்று பெயர். இந்த ஆசனத்தில் ஐந்து நிமிடம் நின்றால் மூச்சு இடகலையிலிருந்து வலதுக்கு மாறிவிடும்.
இவ்வாறு கலையை மாற்றிக்கொண்டால், அன்றைய பொழுது ஆனந்தமாக இருக்கும்.


கால் மேல் கால்:

ஒரு சிலர் எந்த இடத்தில் அமர்ந்தாலும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
பெரியவர்கள் முன்னிலையில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு அமரக் கூடாது! அது மரியாதைக் குறைவு என்றெல்லாம் கூறப்பட்டாலும், யார் எதைச் சொன்னாலும் நான் அப்படித்தான் உட்காருவேன் என்று, உட்காருவோரும் இருக்கின்றார்கள்.
வலது காலின் பெரு விரலிலிருந்து சூரிய கலையும், இடது காலின் பெருவிரலில் இருந்து சந்திர கலையும் தொடங்குகிறது என்பதால், வலது காலைச் சூரியனாகவும் இடது காலைச் சந்திரனாகவும் கருதலாம்.

உட்காரும் போது வலது கால் இடது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்தால் சூரிய ஆற்றல் மிகும். இடது கால் வலது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்தால் சந்திர ஆற்றல் மிகும்.
எப்போதும் வலது காலை இடது கால் மீது போட்டுக் கொண்டு அமர்கின்றவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இடது காலை வலது கால் மீது போட்டுக் கொண்டு அமர்கின்றவர்கள் சாந்தமானவர்களாக இருப்பார்கள்.


இருக்கையில் அமரும் போது அப்படி அமரலாம். தரையில் அமரும் போது என்ன செய்யலாம்?
தரையில் அமரும் போதும் முதலில் இடது காலை மடக்கிக் கொள்ளவும். அடுத்து வலது காலைத்தூக்கி இடது கால் மீது போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டால் சூரிய ஆற்றல் கிடைக்கும்.


மன அழுத்தம் விலக ஆசனப் பயிற்சிகள்
By Aatika Ashreen

மனம் விரிந்து குவிந்தது மாதவ
மனம் விரிந்து குவிந்தது வாயு
மனம் விரிந்து குவிந்தது மன்னுயிர்
மனம் விரைந்துரை மாண்டது முத்தியே.

மனம் நிம்மதி, மன அமைதி பெற ஒரு சில யோகப் பயிற்சிகள், பிராணாயமாப் பயிற்சிகள் குறிப்பாக சாந்தி ஆசனம் அத்துடன் நெற்றி ஈரத்துணிப்பட்டி, வயிற்று ஈரத்துணிப் பட்டி செய்திட மிக மிக நல்ல பலனை இலகுவாக, சுலபமாக செலவில்லாமல் செய்யலாம். உடல் களைத்தும், சோர்வாகவும் இருக்கும் சமயம் 10 நிமிடம் செய்தால் இரண்டு மணி நேரம் தூங்கியதன் பலன கிட்டி நாம் நல்ல புத்துணர்ச்சி பெறலாம்.
அற்புதமான காற்று, ஆகாயம் என்ற இரு பஞ்ச பூதங்கள் இணைந்த சிகிச்சையாகவும் உள்ளது. அனைவரும் தினமும் அவசியம் செய்யவேண்டும்.


சாந்தி ஆசனம் செய்முறை:&

காலை, மாலை செய்யலாம். உணவுக்கு முன் செய்யலாம். களைந்த போது மன அழுத்தம், இரத்த அழுத்தம் மிகும் சமயம் செய்யலாம்.காற்றோட்டம் உள்ள இடத்தில் செய்யலாம். வெறும் தரையில் செய்யாமல் விரிப்பு, பாய் மேல் செய்யலாம். படுத்த நிலை ஆசன & எனிளய குறைந்த உடையுடன் செய்யலாம்.

பாயின் மேல் அமர்ந்து கால்களை நீட்டவும். இருகைகளையும் இடப்புறம் வைத்திடவும். அதே நிலையில் மெதுவாக இடது கையை பின்னால் இறக்கி இடது புறமாக ஒருக்களித்துப் படுக்கவும். பின் உடலைத் திருப்பி மல்லாக்கப் படுக்க வேண்டும். முகம் வானம், கூரையைப் பார்த்த நிலை, கால்கள் கைகள் உடலைத் தொடாதவாறு ஒரு அடி இடைவெளியில் இயல்பாக விரிந்து இருக்கலாம். உள்ளங்கை வானத்தைப் பார்த்த நிலை. கண் மூடி இருக்கலாம். ஒவ்வொரு உறுப்புகளும் அற்புதமாக ஓய்வு பெறும். 

கால் முதல் உச்சந்தலை வரை 60 புள்ளிகள் தயார் செய்து ஒவ்வொரு புள்ளியாக மூன்று நிமிடம் வரை நினைவுப் பயணம் செய்ய வேண்டும். இதுபேல் 7 முறை செய்ய வேண்டும்.
தலையணை இல்லாமல் படுத்துப் பழகவும். சிலருக்கு தூக்கம் வரலாம். அதனால் தவறில்லை. பலர் இந்நிலையில் ஆழ்மனது நிலை சென்று வருவர். தன்னை மறந்த நிலை, உயர்ந்த நிலைக்கு செல்லும் வல்லமை பெறுவர். இது பார்ப்பதற்கு எளிதான ஆசனம் எனினும் பொறுமையாக, இயல்பாக தனித்து செய்திட சிறிது சிரமம் இருக்கும். தியானத்தை செய்ய இவ்வாசன நிலைமிக நல்ல நிலை
. கோபம் உடன் மட்டுப்படும். அதிக குருதி அழுத்தம் குளிர்ச்சி பெறும். தூங்கியும் தூங்காத நிலை கிட்டும். இவ்வாசனம் செய்யும் சமயம் ஒரு நிமிட நேரம் கூட ஒரு மணி நேரம் ஆனது போல் இருக்கும்
.
முதுகுத்தண்டு தரையில் நன்றாகப் படிந்து ஓய்வு தர வேண்டும். அதிக குருதி அழுத்தம், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இதுவே மருந்து. இதைச் செய்ய செய்ய தூக்க மாத்திரைகளைக் குறைத்திடலாம்.

சாந்தி ஆசனம் முடியும் சமயம் ஓம் சாந்தி மூன்று முறை சொல்லி மறுபடி ஒருக்களித்துப் படுத்து பின் மெதுவாக அமர்ந்து எழ வேண்டும்.பவன முக்தாசனம், கைவிரல்கள், கால் விரல்கள் மடக்கும் பயிற்சிகள், கழுத்துபயிற்சிகள், விருச்சிகாசனம், கபாலபதி, சீத்களி, பத்மாசனம், வஜ்ராசனம், எளிய நாடி சுத்திகள் அனைத்தும் மன அமைதி தரும் பயிற்சிகளாகும். இப்பயிற்சிகளை அறிய ஆசிரியரின் தினம் ஒரு யோகா நூலை நாடலாம்.

சாந்தி ஆசனம் செய்யும் முன் ஒரு டம்ளர் குடிநீர் அருந்தி செய்யவும். இத்துடன் நெற்றி, கண்ணிற்கு ஈரத்துணி பட்டியும் போடலாம்.சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச் சொற்பதமாம் அந்தச் சுந்தரக் கூத்தனைப் பொற்பதிக் கூந்தனைப் பொற்றில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யாரறி வரே.



சிரிப்பு ஒரு மாமருந்து
By Aatika Ashreen

பற்றற்றவர் பற்றி நின்ற பரம் பொருள்
கற்றற்றவர் கற்றுக் கருதிய கண்ணுதல்
கற்றற்றவர் சுற்றி நின்ற என் சோதியைப்
பெற்றுற்றவர்கள் பிதற் றொழிந்தாரே.

உலகில் பிற உயிரினங்களுக்கும் பசி உணர்ச்சிகளும் உயிரை தக்க வைத்திடும், மற்றும் உயிரைக் காப்பாற்றும் உணர்ச்சிகளும் மிகுந்து இருந்தாலும் மனித இனம் அதையும் மீறி பேசும் வல்லமை பாடும் வல்லமை, சிரித்திடும் கலையை அறிந்திருக்கிறான்.
சிரித்திடும் சமயம் நமது முக அசைவுகள் அனைத்தும் தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகளின் திசுக்களை இயல்பாக்கி அமைதிப்படுத்துகின்றன. மேலும் 14 தசைகள் மட்டும் அச்சமயம் இயங்குகின்றன. பாரா சிம்பதடிக் நரம்புகள் ஆட்சி புரிகின்றன.கோபம் உச்சநிலை அடையும் சமயம் 100க்கும் மேற்பட்ட தசைகள், நாடி நரம்புகள் வேகம் கொண்டு சிம்பதடிக் நரம்புகள்(தானியங்கி) முறுக்கேறி அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது உடலில் இரத்தத்தில் அமிலம் மிகுகிறது.

எனவே நாம் வாழ்வில் நமது உணவின் அங்கம் போல் சிரிப்புக்கு, சிரிப்புக் கலையைக் கற்பதற்கு, கடைப்பிடிக்க சில நிமிடங்களாவது ஒதுக்கிடலாம்.
பிuனீணீக்ஷீs சிறீuதீ சிரிப்பு சங்கத்தில் சேரலாம்.
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். துன்பம் வரும் சமயமும் துவளாமல் சிரிப்புடன் எதிர் கொள்வது ஓர் அரிய கலை. அற்புதக் கலை.சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும். கவலை அலைகள் பிறரை நம்மிடம் இருந்து விரட்டும்.சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி பாஸிடிவ் கரண்ட்டை பரப்பும்.
சோக அலைகள் நம்மைச்சுற்றி நெகடிவ் கரண்ட் தரும்.
எது தேவை முடிவு செய்யுங்கள் & சிரிப்பதற்கு கூட பயிற்சிகள் தேவைப்படுகின்றன. ஐந்து நிமிடம் காலையில் சிரித்துப் பழகலாம்.

நீங்கள் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, சிரிக்கும் சமயம் மட்டுமே உங்கள் வீட்டில் இருந்து வெளி வாருங்கள். மகிழ்சி அலைகளைப் பரப்புங்கள் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.சோக அலைகள், துக்க சுவடுகளை, கவலை எண்ணங்களை வீட்டில் புதையுங்கள். வெளி உலகில் வந்து பரப்பாதீர்கள் என அறிவுறுத்துகிறார். ஆனால் நாம் யாரைப் பார்த்தாலும் நமது சோகக் கதையை கவலை மூட்டையை துக்க வியாபாரத்தை ஆரம்பிக்கிறோம்.
இனி வாழ்வில் இன்று முதல் சிரிப்பு வியாபாரம் தொடங்கலாம். அதனால் ஒரு நஷ்டமும் இல்லை. இதில் லாபம் மட்டுமேகிட்டும். இது உறுதி.அதிலும் பிறர் மனம் புண்படாத நிலை சிரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தரலாம். உயிர் எழுத்துக்களை அ முதல் ஓ வரை வரிசையாக தொடர்ந்து வேகமாக உச்சரித்தால் சிரிப்பு அலைகள் உருவாகும்.
நம்மை சுற்றி நடக்கும் தவறான நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல் நாம் சாட்சியாக நிற்கும் சமயம் பல உண்மைகள் புரியும். பல நேரம் நமது தேவையே பிறக்கு தேவையிருக்காது. மேலும் நம்மால் ஏற்பட்ட தொல்லையும் நம் உறவினர்கள், நண்பர்களுக்கு குறையலாம்.

நாம் பொருள் உதவிகளை கேட்காமல் கொடுக்க வேண்டும்.நமது ஆலோசனை உதவிகளை மூன்று முறை கேட்ட பிறகே கொடுக்க வேண்டும்.
இவ்விஷயத்தில் நாம் பல நேரம் மாறி தவறி விடுகிறோம்.சிரித்துப் பழக வேண்டும்.சிறுவர்களிடம் சிரித்துப் பழக வேண்டும்.சிறு குழந்தைகளைப் பார்த்து சிரித்துப் பழக வேண்டும்.சினம் அடையும் சமயம் சிரித்துப் பழக வேண்டும்.செயல்படும் போது சிரித்த முகத்துடன் பழகவேண்டும்.சிரிப்பு நமது வாழ்வின் மூச்சாக வேண்டும்.சோகம் நமது ஆரோக்கியச் செல்வத்தைக் குறைக்கும்.சிரிப்பு நமது ஆரோக்கியச் செல்வத்தை உயர்த்தும்.'சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என்ற சிந்தனையுடன் சிரிப்பு வியாபாரத்தை இன்று தொடங்குங்கள். முதலில் வீட்டு உறவினர்களிடம் சிரிப்பு வியாபாரத்தை தொடங்குகள். எளிய வியாபாரம் & சிறப்பான உத்திகள்.கோப அலைகள் அனைத்தையும் சிரிப்பு அலைகளாக மாற்ற முயற்சி செய்யுங்கள். அது ஒரு அற்புதக் கலை.
வாழ்க்கை வானம் உங்களுக்கு வசப்படும் தூரந்தான். துணிச்சலின் சொந்தக்காரராக மாறிடுவீர்கள்.மகிழ்சியின் பொக்கிஷதாரராக ஆகிவிடுவீர்கள்.அதற்கான வழி தெரியவில்லையா? & இயற்கை உணவுகளும், கனி உணவுகளும் அப்பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டும். இயற்கை வாழ்வியல் வளமாக வழி நடத்திச் செல்லும். நாம் அதற்குத் தயாரா? சிரிக்கும்போது நைட்ரஜன் காற்று கூட நமக்கு சக்தி தரும். காற்றாக மாறும் வல்லமையைப் பெறுகிறோம். சிரித்துப் பழகுகிறவர்களுக்கு உணவின் தேவை குறைகிறது.

மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்
By Aatika Ashreen

மனமே பொக்கிஷம்
உங்களுக்குள் ஓர் தங்கச் சுரங்கம் , அற்புத பொக்கிஷம்

புத்தாகு மருந்து , பார்த்த
போதே பிணிகளைப் போக்கு மருந்து
புத்தரருந்துமருந்து , அனு
பான மும்தானம் பரம மருந்து.
- வள்ளலார்

ஒரு காந்தம் ஏற்றப்பட்ட இருமபுத்துண்டு அதன் எடையை விட 12 மடங்கு கவர்ந்து இழுக்கும் சக்தி பெறுகிறது. ஆனால் காந்தசக்தி இழந்த இரும்பால் பறவையின் சிறகு எடையைக் கூட தூக்க இயலாது.
அது போல நம்மிடையே இருநிலை மனிதர்கள் ,
காந்த சக்தி பெற்ற மனிதர்கள் மன உறுதி, நம்பிக்கை, அன்பு இவற்றை வாழ்வின் மூலதனமாக்கி வெற்றிக்கனியை பறிப்பவர்கள் (Magnetized man)
சந்தேகம், மன உளைச்சல், மன அழுத்தம் இவற்றினால் இழுத்துச் செல்லப்படும் மனிதர்கள் அநேகம். (Demagnetized man) இவர்கள் காந்த சக்தி அற்றவர்களுக்கு நிகரானவர்கள். சாதா இரும்புத்துண்டைப் போன்றவர்கள்.

அதிக சக்தி, அதிக ஆற்றல், ஆரோக்கியம், மகிழ்ச்சி, ஆனந்தக் கோட்டையின் இருப்பிட பொக்கிஷம் நமது ஆழ்மனது ,அடிமனது Super Conscioicus mind னீவீஸீபீ , அகமானது (subconscious mind) இங்கே நமது அற்புத சக்திஇடி, மின்னலுக்கு இணையான ஆற்றல்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளது & மாயப்பெட்டியாக உள்ளது. மந்திர சக்திகளின் சங்கமாக உள்ளது.
அதை திறக்கும் மந்திர சாவியே பயன்படுத்தும் கலையே அற்புத வாழக்கை கலை.
நீங்கள் உள்மனது. அகமானது, சூப்பர் மனதில் பயணம் செல்லும் சமயம் வாழ்வின் புதிய ஒளியை, மின்னல் கீற்றை புதிய சக்தியை அறிந்திடுகிறீர்கள். உணர்ந்து அனுபவம் செய்கிறீர்கள்.
அகமனது, ஆழ்மனது விழித்தெழந்து செயல்படும் சமயம் உங்களிடம் புதிய அற்புத சிந்தனைகள், கண்டுபிடிப்புகள், அறிவுமாற்றம், ஆரோக்கியம், புதிய உத்வேகம், உன்னத எழுச்சி. அன்பின் ஆளுமை உருவாகும்.

இச்சக்தியை அறியலாம். உணரலாம். பார்க்க இயலாது. அனுபவிக்கலாம். அற்புத குணப்படுத்தும் சக்தி உங்கள் மனது, உடல் திசுக்களைச் செம்மைப்படுத்துவதுடன் உடைந்த உள்ளத்திற்கு மருந்திட்டு எழுச்சியடையச் செய்திடுகிறது. பிறருக்கும் நன்மைகள் புரிகின்றன.
கணிதி விதி: 2+2= 4
இரசாயன விதி : பி2+ளி = பி2ளி
கணிதம், இரசாயனம், பௌதிகம் விதிகள் (Principles) கொள்கைகள் போல் அகமனதும் ஒருவித கோட்பாட்டில், கொள்கையில் மிக இயல்பாக தெளிவாக நேர்த்தியாக இனிமையாக வெளிப்பட்டு இயங்கும்.
தண்ணீர் உயரத்தில் இருந்து கீழே பாயும்.
வெப்பத்தால் கனிமப் பொருட்கள், திரவங்கள் விரிவடையும் இதுபொது விதி & எல்லா நாடுகளுக்கும், எல்லா இடத்திற்கும் ஏற்புடைய விதி அதைப்போல உங்கள் ஆழ்மனது அகமனது (Sub Conscious mind) பொக்கிஷத்தை திறக்க அற்புத மந்திர சாவி தியானம், ஜபம், பிரேயர் அல்லது நம்பிக்கை விதி ((Law of Nature) (Law of faith) (Law of Life) இயற்கை விதி & வாழ்க்கை விதி உள்ளன.

நமது ஆழ்மனதும் செயல்விதி, எதிர் செயல்விதி என்ற தத்துவத்தில் இயங்குகிறது. அதை இயக்கும் கலையை அடைய இயற்கை விதிகளை உணர்ந்து, கடைப்பிடித்திட வேண்டும்.
உய¢அழுத்தத்தில் இருந்து குறைந்த அழுத்தத்தில் மின்சக்தி பாய்வது போல் நமது மனசக்தியும் ஆழ்மனதில் இருந்து நமது வாழ்வின் செயல்கள் வெளிப்பட வேண்டும். அச்சமயம் மேல் மனது, புறமனத தேவையற்ற சக்திகள் குறைந்து அற்புத ஆற்றல் கிட்டிடும்.

புறமனது என்பது கடல் மேல் அலை போல் அலைபாயும். ஆழ்மனது அமைதி கடலாக இருக்கும். கடலின் அடிவாரம் போல் அமைதியாக அலையற்று இருக்கும்.
மனம் இருநிலையில் உள்ளது இருகுணங்களில் உள்ளது.

Objective Conscious Waking Subjective Subconscious Sleeping Mind
மேல் மனது ஆழ்மனது
அலையும் மனது அமைதி மனது
காரண மனது இயல்பு மனது
இச்சை மனது அனிச்சை மனது
Voluntary involuntry
நமது மனதை ஒரு தோட்டத்திற்கு ஒப்பிடலாம். நாம் அதன் தோட்டக்காரர்.

நாம் எதை விதைக்கிறோமோ, எதைப் பற்றிய எண்ணங்களைச் சிந்திக்கிறோமோ அவைகள் விளையும், பெருகும் &அமைதி, சந்தோஷம், மகிழ்ச்சி, கருணை, அன்பு விதைகளை விதைக்க ஆழ்மனது அருமையான அற்புத நிலைக்கு உயருகின்றது. மாயசக்தியாக நமக்கு பிறருக்கும் ஒளிபிரவாசகமாய் பிரகாசிக்க ஆரம்பிக்கிறது. நமது பிராண சக்தி, உள் ஒளி சக்தி, காந்த சக்தி அபரிதமாக ஜொலிக்க ஆரம்பிக்கிறது.
எனவே வாழ்க்கை சூத்திரம் நம்பிக்கையில் தொடங்குகிறது. ஆழ்மனது வழி நடத்தும் சமயம் நாட்ம இயல்பாக, இனிமையாக, சுகமாக வாழ்க்கையை அனுபவிக்கிறோம். அதற்கான எளிய வழி தியானம், இயற்கை உணவுகள், இயற்கை சூழல் வாழ்வு.

‘அன்னை இலாச் சேய் போல் அலக்கண் உற்றேன் கண் ஆரஎன் அகத்தில் தாய்போல் இருக்கும் பராபரமே.
- தாயுமானவர்

மன அழுத்தத்தை குறைக்கும் தியானம்
By Aatika Ashreen

மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி, தியானம் மற்றும் சரியான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் படிப்பின் மீது கவனத்தைத் திருப்பலாம். தேர்வு நேரத்தில் உண்டாகும் உடல் பிரச்னைகளுக்கு உடனடியாக சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
நேரம் கிடைக்கும் போது மனதுக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடலாம். தொடர்ந்து பல மணி நேரம் படிப்பதற்கு பதிலாக இடையில் ரிலாக்ஸ் செய்யலாம்.
பாதுகாப்பு முறை:
கடினமான பாடங்களை முதலில் படித்தல், மனதில் பதியும்படி குறிப்பெடுத்தல், கேள்விகளை வரைபடம் வரைந்து நினைவில் வைத்துக் கொள்ளுதல் போன்ற யுக்திகள் உதவும். படித்தவற்றை நண்பர்களிடம் சொல்லிப் பார்த்து தவறைத் திருத்தலாம். நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தினால் டென்ஷனை பெரிதளவில் குறைக்க முடியும். முக்கிய கேள்விகளை முதலில் படித்து முடிக்கலாம்.
படம் மற்றும் பாடங்களை கற்பனை மூலம் மனதில் நிறுத்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். படித்த விஷயங்களை குழுவாக விவாதிக்கும் போது அந்த கருத்துகள் மறக்காத வண்ணம் மனதில் பதிந்து விடும்.
சோர்வை நீக்கி மனதை உற்சாகமாக வைத்திருக்க சிறிய உடற்பயிற்சிகள் செய்யலாம். படிக்க நேரம் ஒதுக்குதல், எளிய யுக்திகள் மூலம் படித்தவற்றை மனதில் வைத்துக் கொள்வது மற்றும் முழுமையாக வெளிப்படுத்துவது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் தேர்வை எந்த பயமும் இன்றி எதிர்கொள்ள முடியும். சத்தான உணவும், தன்னம்பிக்கையும் சாதனைக்கான சாவிகள்.

No comments:

Post a Comment