For Read Your Language click Translate

28 June 2016

பலாபழத்துக்குள்ள எத்தனை சுளைகள் இருக்குதுன்னு கண்டு பிடிக்க வழி சொல்லுது தமிழ் பாட்டு..

ஒரு பழைய தமிழ் பாட்டு கிடைச்சது..
அது ஒரு பலாபழத்துக்குள்ள எத்தனை சுளைகள் இருக்குதுன்னு கண்டு பிடிக்க வழி சொல்லுது..
அந்த பாட்டு –
” பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி – வருவதை
ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை”
அர்த்தமென்னான்னா
பலாப்பழத்தோட காம்பச் சுத்தி எத்தன முள்ளு இருக்குன்னு எண்ணி அத ஆறால பெருக்கி அஞ்சால வகுத்தா வர்றதுதான் பழத்துக்குள்ளே இருக்குற சுளைகள்.. i.e., No of சுளைகள் = No of முள்ளுகள் around காம்பு X 6 /5
இந்த மாதிரி ரிசர்ச் ஏன் பண்ணுனாங்க – பொழுது போகலையா இல்ல வேற ஏதாவது
ட்ரை பண்ணுனாங்களா…?
என்னைப் பொருத்தவரையில இந்த பாட்டுல தப்பு இருக்குற மாதிரி தெரியுது..
இந்த formula வ இதுவரைக்கும் செக் பண்ணல…
இந்த வருசம் சரியா இருக்கான்னு பாக்கணும்..

22/7 என்பது எப்படி வந்தது -கணித சூத்திரத்தின் விளக்கம்

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது
வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D - விட்டம். R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.
சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)
நான் கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே...
நான்: இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன? ஐயா.
ஆசிரியர் : அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே?
நான்: சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே.
ஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன் நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய்.
நான்: ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள்.அது போல Pi என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்.
ஆசிரியர்: அதுவா, Pi is a constant value.
இருப்பினும் நான் கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை. எனக்கும் விளங்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இரு தினங்கள் வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இது போன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன் என்ற உத்தர வாதம் தந்து உள்சென்றேன்.
இச்சம்பவத்தை மறந்து சிலநாள் கடந்த பின்பு எதேட்சயாக இதன் விளக்கம் கிடைத்தது.
எனது தாத்தா எங்கள் ஊரின் மிகச்சிறந்த தச்சர் எனும் பெயர் பெற்றவர். எங்கள் ஊர் கோயிலின் தேர் சக்கரங்கள் பழுதுபட்ட காரணத்தினால் அச்சகரங்களை மாற்றும் பணி எனது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவருக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தினால் தேவையான சாமான்களை பட்டியலிடும் பணிஎன்னிடம் வழங்கப்பட்டது.(உண்மையில் தினிக்கப்பட்டது). தாத்தா ஒவ்வொன்றாக கூற நான் எழுத வேண்டும்.
அப்படி அவர் கூறி வரும் போது வந்த ஒரு வாக்கியம் என்னை நெருடியது. அவ்வாக்கியம்,
ஐந்தடி உயர சக்கரத்திற்கு 15அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை, (இரும்பு பட்டை என்பது மரக்கட்டை தேயாமல் இருக்க சக்கரத்தில் ஒட்டப்படும் இரும்பு ). 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி நீள இரும்பு பட்டை.
இதில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக நினைவுக்கு வர, என் தாத்தாவிடம் எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள் என்று வினவினேன்.
பழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக்கொண்டு, சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தொலைவை அளந்தால் சரியாக 22 அடி வந்தது.
அதாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (3.142) என விளக்கினார்.
இந்த விளக்கம் என் தாத்தாவுக்கு எப்படி தெரிந்தது? அவருடைய அப்பா சொல்லிக்கொடுத்தார். நானும் சிலவற்றை தெரிந்துகொள்ள அவரிடம் சில விளக்கங்கள் கேட்டேன். அதற்கு என் தாத்தா கூறிய வார்த்தைகள் தான் என்னை மிகவும் பாதித்தது.
அவ்வார்தைகள்.....
உனக்கெதற்கு சாமி இந்த பொழப்பு நல்லா படிச்சு பெரிய ( கஞ்சிக்கு கையேந்து) உத்யோகத்துக்கு போ....
ஆண்டாண்டு காலமாக செய்து வந்த குலத்தொழிலை கேவலமாக நினைக்கும் தலைமுறையில் பிறந்ததை என்னி வெட்கமும் வேதனையும் அடைந்தேன்..
ஆனாலும் ஒரு தச்சு தொழிலாளியிடமிருந்து இத்தகைய கணித சூத்திரத்தின் விளக்கம் கிடைக்குமானால், மற்ற மரபு வழி தொழிளாலர்களிடம் இருந்து ரகசியங்களும் நுணுக்கங்களும் எவ்வள்வு கிடைக்கும்??? தற்காலத்தில் அவை என்ன ஆனது???
எதனால் பள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்????
உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவு சுய தொழில் மூலம் உண்டு வாழ்ந்து வந்த சமூகம் ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்க வெளிநாடுகளுக்கு ஓடுவதன் காரணம் என்ன???

26 June 2016

பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம்

பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம்


பங்கு சந்தை தான் இன்று வீட்டுப்பெண்கள் கூட ஆர்வம் காட்டும் முக்கிய தொழிலாக மாறிக்கொண்டிருக்கிறது...10 வருசத்துக்கு முன்னாடி காசில்லைன்னு ஒரு கம்பெனிக்காரன் 200 ஷேரை கொடுத்தான்..இன்னிக்கு அது கோடிக்கணக்குல மதிப்புக்கு போயிருச்சு என சிலர் சொல்லும்போது பங்கு சந்தையின் வீரியம் உணரலாம்...

ஒருவருக்கு திடீர்னு அதிகளவில் பணம் சம்பாதிக்கனும்னா அது புதையல் யோகம் மாதிரி ந்னு சொல்வாங்க...ஜாதகத்தில் யோகாதிபதிகள் திசை ஆரம்பிச்சா திடீர்னு பல வழிகளிலும் பணம் வரவு ஆரம்பிச்சு திக்குமுக்காட வைத்துவிடும்..அல்லதுஒரு நல்லநாளில் ஒரு தொழிலை தொடங்கினால் அது நல்லபடியா படிப்படியா உயர்வு உண்டாக்கும்..

பணம் நிறைய சம்பாதிக்க ,நிறைய வருமானம் உண்டாக சிலர் பங்கு சந்தையில் தினசரி சந்தையில் முதலீடு செய்வர் சிலர் கம்மாடிட்டி சந்தையில் முதலீடு செய்வர்...சிலர் சம்பாதிக்கிறார்கள்..பலர் கடனாளி ஆகிறார்கள்...மத்தவங்க கிட்ட கடன் வாங்கி முதல் போட்டு இழந்தவர்கள் நாடு முழுக்க லட்சக்கணக்கில் இருப்பர்..சில நிமிடங்களில் லட்சத்தை இழப்போர் அநேகம்..இப்படி பல ஆயிரங்களை லட்சங்களை தொலைக்கும் நீங்கள் ,ஏன் நல்ல நேரம்,நல்ல நாள்,நல்ல நட்சத்திரம்,நல்ல யோகம் பார்த்து முதலீடு செய்வதில்லை என சிலரை கேட்டிருக்கிறேன் இதுல திறமை அறிவுதான் சார் முக்கியம்..அதைவிட பங்கு சந்தை துவங்குற நேரத்துல எப்படி நல்ல நேரம் பார்க்குறது என்பார்கள் ஆனா..ஏன் திறமையானவர்களும்,அறிவு நிறைந்தவர்ளும் லட்சக்கணக்கில் இழந்து மூலையில் முடங்கி கிடக்கிறார்கள்..? இதற்கு என்ன காரணம்..?


நம் ராசிக்கு என்று யோகமான நாளோ,நம் நட்சத்திரத்துக்கு எதிரிடை நட்சத்திரம் இல்லாத நாளோ ,அன்று இதை செய்ய வேண்டும்..நம் திசாபுத்தி வரவை சொல்கிறதா இழப்பை சொல்கிறதா...என கவனித்து இறங்க வேண்டும்...6,8,12 ஆம் அதிபதி திசாபுத்தி நடப்பவர் நிச்சயம் சம்பாதிப்பதில்லை..பாதகாதிபதி புத்தி நடந்தாலும் ஆபத்துதான்...

நீங்கள் பங்கு சந்தையில் ஆர்வம் உடையவரா...அதில் முதலீடு செய்ய போகிறீர்களா...? எப்போது முதலீடு செய்யலாம்..கம்மாடிட்டியில் என்ன பொருள் உங்களுக்கு யோகம்.. ? உங்கள் திசாபுத்தி லாபத்தை தரும்படி இருக்கிறதா..? உங்கள் நட்சத்திரப்படி எப்போதெல்லாம் யோகமான நாட்கள் என தெளிவாக என்னிடம் தெரிந்து கொண்டு இறங்குங்கள் வெற்றி உங்களுக்கே..
 
 
 
THANK YOU :Mr.sathish
 
இதற்கான கட்டணம் ரூ 1500..
வங்கி விபரம்;.k.sathishkumar 20010801181  State bank of India ,bhavani  Ifsc;sbin0000971  
 sathishastro77@gmail.com எனும் மெயிலுக்கு பிறந்த தேதி,பெயர்,பிறந்த நேரம்,பிறந்த ஊர் விபரங்கள் எழுதி அனுப்பவும்..கட்டணம் அனுப்பியபின் அனுப்பினால் போதுமானது..