For Read Your Language click Translate

04 June 2014

கலியுகம் 5000 ஆண்டுகளுக்கு பிறகு – கோரக்கர்

கலியான ஆண்டு ஐயா யிரம்பின்
கருத்துடனே சாதி மத பேதம் ஒன்று
நலியாது சந்திரகலை ஐயாயிரம் மட்
டானதப்பால் ரவியோட்ட மதிக மாகிப்
பொலிவாகப் பூலோகந் திரண்டே நிற்கும்
பொய்யான அந்தணரின் கொட்டம் போகும்
வலியுடனே சத்தியத்தான் நிலையே யோங்கி
வழுவாது மனுக்கள் ஞானி யாமே. — கோரக்கர்
கலிகாலம் 5000 ஆண்டுகளுக்குப்பின் நல்ல எண்ணங்கள் உண்டாகி சாதி மதங்கள் எல்லம் ஒழிந்து மனிதகுலம் யாவும் ஒன்றே என்ற நிலை உருவாகும். சந்திரன் தேய்வதோ வளர்வதோ இன்றி முழு நிலவாகவே ஒளி வீசும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் சூரியன் வெப்பம் அதிகமாகி பகல் பொழுது அதிகரித்து இப்பூலோகம் முழுவதும் சூரிய ஒளி பொலிவாக திரண்டு நிற்கும். பொய்களை மெய்யாக்கும் மனிதர்களின் அகங்காரம் அழிந்துபோகும். தர்ம நெறிகளுடன் நன்மக்கள் வாழ்ந்து சித்தனாகவும் ஞானியாகவும் விளங்குவர்.
தான தரும தத்துவ யோகம் அதிகம் ஆகும்
தாரணியில் மாந்தர் பல வருண மாவர்
ஈனமின்றி யோக சக்கி ராதி பத்தியம்
இனமுடனே ஆண்டென் பத்தீ ராயிரம்
மோனமுடன் இருந்தாண்டு வசிப்பார் நாடு
முகமினிய நவரத் தின விளைவுண் டாகும்
போனகமாய்க் குளிகையிட்டுப் பறப்பார் விண்ணில்
பூரணமாய் ஆயுளுற்று வாழ்கு வாரே. — கோரக்கர்
இவ்வுலகில் தானங்களும் தர்மங்களும் சிறப்புடன் நடைபெறும் தத்தவ ஞானங்களும் விஞ்ஞானங்களும் யோகமும் நிறைந்து விளங்கும். இத்தரணியில் மாந்தர்கள் பல வர்ணமாக இருப்பர். ஏக சக்கிராதிபத்தியம் ஏற்பட்டு குறைவின்றி இருந்து எண்பத்திரண்டாயிரம் ஆண்டுகள் வரை நடக்கும். நவரத்தினங்கள் விளைந்து நாட்டில் செல்வங்கள். உண்டாகும்.குளிகையான கற்பங்களை உண்பார்ள். விண்ணில் பறப்பார்கள். பூரணமாய் ஆயுளுடன் வாழ்வார்கள்.

கலியுகம் பற்றி – கோரக்க சித்தர்



கலியுகம் துவங்கிய நாள் முதல், இறுதி நாள் வரையிலான விவரங்களை கோரக்கர் தனது ”சந்திரரேகை” நூலில் விவரித்திருக்கிறார். கலியுலத்தின் அரசியல், சமூகம், வாழும் மனிதர்களின் குண நலன்கள் பற்றிய தகவல்களும் இந்த நூலில் காணக் கிடைக்கின்றன.


மனிதர்களின் குண நலன்களை பற்றி பின்வருமாறு கூறுகிறார்.


"சின்னம் மிக ஆகிடுமே செகம் பிறந்து
சீரியதோர் நாகம்போல மாந்தரெல்லாம்
பின்னமுற்றும் பேதமையால் மயக்கம் கொள்வார்
பிரபலமாம் அரசர்கட்கும் ஆனிமெத்த
இந்நிலத்தில் எங்கெங்கும் சங்கம் கூட்டி
இதமுடனே நிலைநாட்டி ஈசன்தன்னை
நன்னயமாய் வழிபடுவர் நாட்டில் எங்கும்
நற்சமய வாதிகளும் அநேகம் உண்டே "


- சந்திர ரேகை -


உலகமே மாற்றங்களுக்கு உள்ளாகி, மக்கள் நாகம் போல் சீறிக் கொண்டு, ஏற்றத்தாழ்வு பேசி, ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள முற்படுவர். இந்த நிலத்தில் அரசர்களுக்கு இடையில் சங்கங்களும் பிரிவினைகளும் உண்டாகும். ஈசனை வழிபடுபவர்களும், நற்சமய வாதிகளும் அதிகம் இருப்பார்கள் என்கிறார்.




"இன்றியமை யாதொரு இழிகுலத்தோர்
என உரைத்த பறையர்களும் பாக்கியம் பெற்று
நன்றெனவே வையகத்தில் நாளும் ஓங்க
நவிலொண்ணாப் புகழுடனே வாழப்போகும்
குண்றாதோர் முட்டையினில் இரெண்டு குஞ்சு
செனித்துவிடும் மிருகங்கள் வினோதம் காட்டும்
அன்றாகும் காலம் அந்தணர் கட்காகா
அறிகுறியாம் இவை எல்லாம் சின்னமாமே"


- சந்திர ரேகை -


இழிகுலத்தோர் என்று கூறப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் பாக்கியம் பெற்றுச் சிறப்பாக புகழுடன் வையகத்தில் வாழ்வார்கள் என்கிறார். ஒரு முட்டையில் இரண்டு குஞ்சுகள் பிறப்பதுடன், மிருகங்களில் வினோதமான பிறப்புக்கள் உருவாகும் இந்தக் கலியுகமானது, அந்தண குலத்தவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இவைகள் எல்லாமே கலியுகத்தின் அறிகுறிகளாவதுடன் சின்னமாகவும் விளங்கும் என்கிறார்.










யோகி பர மானந்த கலியின் தோற்றம்
உண்மை நிற சாதிமத பேதம் மெத்த
பாகிதமாய்ப் பிரபலங்கள் பெண்பால் விருத்திப்
பாருலகில் ஆண்மக்கள் குறைவுண்டாகும்
மோகித்தே முன்பின்னும் முறைமை கெட்ட
மூதரிய தாயினையே சேய்தான் சேர்ந்து
போகிதமாய் மதனையது பயில்வார் பங்கில்
பூவலகிற் கலியுனுட பான்மை கேளே – கோரக்கர்
உலகோருக்கு கலியுகத்தோற்றத்தின் உண்மையை கூறுகிறேன். நிற பேதங்களும் சாதி மத பேதங்களும் நிறைய உண்டாகும்.பெண் மக்களே நிறைய பிறப்பார்கள். ஆண் மக்கள் பெண் மக்களை விட குறைந்தே பிறப்பார்கள்.பெண்ணாசையால் முறைமை கெட்டு யாருடனும் யார் வேண்டுமானாலும் சேர்வார்கள் மூத்த பெண்களுடன் இளவயது ஆண்கள் சேர்வார்கள். இன்னும் இக்கலிகாலத்தில் நடக்கப்போகும் நிகழச்சிகளை சொல்கிறேன் கேளு.
கேளே நன்மனுக்கள் நூற்றுக் கொன்று
கெடியாகப் பிறந்திருத்தல் அரிதே யாகும்
நாளேமுன் கலியவனும் வளர்ந்து ஓங்க
நடுங்கிடுவர் மனிதர்களும் உயரங்கட்டை
வாளே முன் பின் வயது ஆண்டு நூறு
வயங்கிடுவேன் கலியுதிக்கு மிடத்தைத் தென்பா
சூளே மெய்ச் சும்பலப் பட்டன் வைணவ தத்தன்
கொல்லை புண்னை மரத்தின்கீழ்க் கலி செ னிப்பே – கோரக்கர்
இன்னும் சொல்கிறேன் கேளப்பா இப்பூமியில் நன் மக்கள் நூற்றுக்கு ஒன்று பிறப்பதே மிகவும் அரிதாக இருக்கும்.நாளாக நாளாக கலியின் கொடுமைகள் ஓங்கி வளர்ந்து நிற்க்கும்.மனிதர்களின் உயரம் குறைந்து குட்டையாக ஆவார்கள். மனிதர்களின் ஆயுளும் குறைந்து 100 ஆகிவிடுமாம்.
கமபலப்பட்டம் எனும் ஊரில் வைணவ தத்தன் எனும் அந்தணரின் வீட்டின் கொல்லை புரத்தில் உள்ள புன்னை மரத்தின் கீழே தான் கலி புருஷன் தோன்றுவானாம்.
கலியும் பிறந்து 5000 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வுலகம் எப்படி இருக்கும் என்பதையும் கூறுகிறார். நாளைய பதிவில் அதை பார்போம்.
அந்தநாள் அக்காலம் நமது நாட்டில்
அநேகவிதப் பஞ்சங்கள் அவத்தை மெத்த
சந்தேக மில்லாமல் சாட்சி யப்போ
சாற்றிடுவே னாகாயந் தனிற் களாங்கம்
விந்தையுடன் நட்சத்திரம் ஒன்று தோன்றி
வெட்டவெளி பிரகாசம் வெகு வாஞ் சோதி
மந்தமின்றி வால் நீண்டு மதிமேல் நிற்கும்
மானிடர்கள் பிணிபலவால் மாள்வார் கதிரே.
கலியுகம் முற்றிடும் அந்த நாட்களில் நமது நாட்டில் அநேக விதமான பஞ்சங்களும் துன்பங்களும் பெருகி நடக்கும் அதற்கான அறிகுறிகளை சொல்கிறேன். ஆகாயத்தில் பற்பல களங்கங்கள் உண்டாவதை காணலாம்.  மிக அதிசயமான வால் நட்சத்திரம் தோன்றி வெட்ட வெளியில் பிரகாசிக்கும். அதிலிருந்து கிளம்பும் ஒளி வால் போல் நீண்டு சந்திரன் மேல் நிற்கும். சூரியனின் வெப்பம் மிக அதிகமாகி புதுப்புது நோய்கள் உண்டாகி மனிதர்கள் மாள்வர்.
கதிரவணுங் கடும்பனியுங் காருங் கோடைக்
கற்பனைகள் மெத்தவுண்டு ஆகாயத்தில்
மதி தாழ்ந்து கரியினுட மண்டை போல
மகாரூப ரூப வெளி மதி மேற் காணும்
துதியாக நாழி இரு இருபத் தைந்தில்
தோற்றிடுமே மாத்திரைதான் மூன்று மட்டும்
சதியாக வடதேசம் தன்னி லோர்பால்
கடல்போங்கி நெருப்பு ரத்த மழையுடண் டங்கே.
கதிரவனிடமிருந்து கொடும் வெப்பமும் இரவில் கொடும் பனியும் கொட்டிதீற்கும். கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்கள் வானில் நடக்கும். சந்திரன் பூமிக்கு மிக தாழ்ந்து நிற்கும். யானை மண்டை ஓடு போல் மிக பெரிய உருவங்களும் அரூபங்களும் சந்திரன் மேல் தோன்றும். கால நேரங்கள் மாறி ஒரு நாள் பொழுது மூன்று மாத்திரை அளவே ஆகி எப்பொழுதும் இருள் சூழ்ந்து இருக்கும். வடதேசங்களில் கடல் பொங்கி அழிவுகள் ஏற்படும். மேலும் நெருப்பு வெடிகளால் ரத்த மழை கொட்டி நாடே சீரழியும்.
எங்கெங்கும் சாதுக்கள் ஏகக் கூட்டம்
ஏழைகளுக் குதவியாய் எய்தி நிற்பார்
பங்கமுடன் பாவி வெள்ளை பாத கன்றான்
பக்தர்களை சிறை கொள்வன் பட்ச மின்றி
மங்கி செக தீசனையே பூஜிப்பார் கூவி
மாநிலந்தான் பிரளயம்போல் மயங்கிக் காணும்
சங்கையுடன் சண்டாளர் சமரை நீத்துச்
சடுதியினில் வருவேவென் றறைந்து போனார்.
எங்கெங்கும் மக்கள் துன்புறுதலைக்கண்டு சாதுக்கள் கூட்டம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் மீது வெள்ளையர்கள் கோபம் கொண்டு பக்தர்களை சிறைக்கொள்வான். பக்தர்கள் செகதீசனை பூஜித்து கூவி அழைப்பார்கள். பிரளயம் காலம் போல் பூமி பிளந்து பூகம்பங்கள் ஏற்பட்டு மக்கள்  மயங்கி மடிவார்கள். சந்தேகம்மின்றி இந்த சண்டாளப்போரை நீக்கி உலக மக்களை காக்க உடனே நான் வருவேன் என்று என்னிடத்தில் சொல்லி மறைந்து போனார் போகர்.
சந்திரரேகை 200 என்ற நூலில் போகரின் சீடரான கோரக்கர் இவ்வாறு கூறி இருக்கிறார்




கலியுகம் எப்படி இருக்கும்?


ஒரு வரி உண்மைகள்:
நவம்பர் 2009 முதல் நமது இந்தியா வினை ஒரு சர்வதிகாரி ஆட்சி செய்யப்போகிறார்.
கி.பி.2011 முதல் இந்தியாவினை சித்தர்கள் ஆளப் போகிறார்கள்.


2009-2015 வரை உலகத்தின் பெரும் பகுதிகள் அழியப் போகிறது.
2009 முதல் 300 வருடங்களுக்கு உலகம் முழுக்க இந்து சமயம் பரவப் போகிறது.அதே சமயம்,நமது நாட்டில் ஒழுக்கம் அழிந்து விடும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது இனிமேல் இருப்பது சந்தேகம் தான். இப்பவே அப்படித்தான்னு சொல்றீங்களா?
பொறுப்பற்ற- மக்களைப்பற்றி சிறிதும் கவலைப்படாத அரசுகளால் விலைவாசி படுவேகமாக உயர்ந்துவருகிறது.சம்பளம் அதே வேகத்திற்கு உயரவில்லை.நேர்மையாக வாழ்பவர்கள் ஒரு வேளை கூட சாப்பிட முடியாத அளவிற்கு நிலை மோசமாகப் போகிறது.குழந்தைகளைப் பெற்றவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?


விரைவில் தங்கம் விலை படுபாதளத்தில் விழும்.

2010 முதல் ஒரு ருபாய் யினை 50 டாலர் கொடுத்து உலகம் வாங்கப்போகிறது.உலகத்திற்கு நமது இந்தியா உணவு தந்து கொண்டே இருக்கும்.
2100 க்குள் பாகிஸ்தான் இந்தியாவுடன் இணயும்.
2010 முதல் வெளி நாட்டினர் இந்தியா வந்து தியானம்,யோகா,சோதிடம்,மந்திரம்,சிலம்பம்,சிற்பக் கலை கற்கப் போகிறார்கள்.
பணக்காரனுக்கும் ஏழ்மைக்கும் இடைவெளி அதிகரிக்கத் துவங்கி விட்டது.எனவே,விபச்சாரம் இந்தியா வின் ஒரு சமுக அங்கமாகிவிடும்.
ஓரின சேர்க்கைத் திருமணங்கள் இந்தியாவில் சகஜமாகப்போகிறது.
கலியுகத்தின் முடிவில் 10 வயதிற்குள் பேரன் பேத்தி எடுக்குமளவிற்கு ஒழுக்கம் அழிந்துவிட்ட ஒரு மரபாகிவிடும்.
காமரீதியான துணைகள் மட்டுமே ஆபத்திலிருந்து பாதுகாக்கும்.



5 comments:

  1. Thanks for the wonderful information

    ReplyDelete
  2. ஒரு வரி உண்மைகள்..... 2010 முதல் ஒரு ருபாய் யினை 50 டாலர் கொடுத்து உலகம் வாங்கப்போகிறது.உலகத்திற்கு நமது இந்தியா உணவு தந்து கொண்டே இருக்கும்.... ஹா ஹா ஹா....... நல்ல இருக்கு சார் உங்கள் ஒரு வரி உண்மை. சித்தர் என்ன சொன்னார்களோ அதை மட்டும் போடுங்கள். உங்கள் அறிவு இங்கு வேண்டாம். நாடு நாஷமா போச்சு... ஒரு வரி உண்மையாம்?

    ReplyDelete
    Replies
    1. சும்மா அடிச்சு விடறாரு......காசா பணமா?
      கேக்கறவன் கேனயனா இருப்பான்னு நெனச்சுக்குவாங்க போல!

      Delete