For Read Your Language click Translate

26 June 2014

இந்து வேத நூல்கள் :-



ஆதிசிவனார் தெய்வீகச் செம்மொழியுமான தமிழ் மொழியில் அருளிய இந்து வேதத்தில்
(108) நூற்றியெட்டுப் பூசை மொழி நூல்கள், ...
(48) நாற்பத்தியெட்டுப் பூசை விதி நூல்கள்,
(96) தொண்ணூற்றாறு தத்துவ நூல்கள்,
(144) நூற்று நாற்பத்து நான்கு செயல் சித்தாந்த நூல்கள்

என்று (108 +48 +96 +144 = 396) ஆக மொத்தம் முன்னூற்றுத் தொண்ணூற்றாறு நூல்கள் இருக்கின்றன.
இந்து வேதத்துக்குரிய 396 நூல்களிலுமுள்ள கருத்துக்களும், செய்திகளும்,
# இருக்கு வேதம், - (உரைக்கோவை வாசகங்களாக)
# அசுர வேதம், - (வாக்குகளாக)
# அதர்வான வேதம், - (வாக்கியங்களாக)
# யாம வேதம் - (வாசகங்களாக)
எனும் நான்கு வேதங்களில் சுருக்கமாக விளக்கியுரைக்கப் பட்டிருக்கின்றன.
இந்த நான்கு வேதங்களிலும் உள்ள உரைக்கோவை வாசகங்கள், வாக்குகள், வாக்கியங்கள், வாசகங்கள் அனைத்திலும் 'கருவாக உள்ள' அதாவது, 'சூல்' ஆக உள்ள (சூல் = கரு) மையக் கருத்துக்கள் ஒரு வரி முதல் பல வரிகள் வரை உள்ள சுருக்கமான வாசகங்கள் சூலகம் (சுலோகம்) என்ற பெயரில் எளிதில் மனப்பாடம் செய்து மனதில் நிலை நிறுத்திக் கொள்ளும் வண்ணம் 4,42,368 (நான்கு இலட்சத்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபத்தெட்டு) தனித்தனி கருத்துக்களாக, கருத்துச் சொற்றொடர்களாக எழுதப் பட்டிருக்கின்றன. இந்தச் 'சூலகம்' என்ற சொல்லே, நாளடைவில் பேச்சு வழக்கில் 'சுலோகம்' என்றாயிற்று.

No comments:

Post a Comment