For Read Your Language click Translate

02 January 2015

உணவின்றி நீரின்றி எழுபது ஆண்டுகள்!



‘83 வயதான ஒரு முதியவர் சுமார் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக உணவோ, நீரோ உட்கொள்ளாமல் நம் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்’ என்று யாராவது சொன்னால், நமக்கு அது அண்டப் புளுகாகவே தோன்றும்.

ஆனால் அவர் பற்றிய தகவல்கள் மேலை நாடுகளையும் எட்டி, 2006–ம் ஆண்டு டிஸ்கவரி சேனலில் ‘தெய்வீக சக்திகளுள்ள சிறுவன்’ (The Boy with Divine Powers) என்ற ஒரு ஆவணப்படத்தில், அவரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா?. அது மட்டுமல்ல. Independent Television Network (ITN ) என்ற தொலைக்காட்சி 2010–ம் ஆண்டில், அவரை வைத்து நடத்திய ஆராய்ச்சிகள் பற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதே ஆண்டு ‘ஆரம்பத்தில் ஒளி இருந்தது’ ( In the Beginning There Was Light ) என்ற ஆஸ்திரிய நாட்டு ஆவணப்படத்தில் அவரைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். யாரவர்?

அவர் பெயர் பிரஹலாத் ஞானி (Prahlad Jani ) . ராஜஸ்தானில் பிறந்த அவர் சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடி காடுகளில் வசித்தவர். அவருடைய எட்டாம் வயதில் ஒரு தெய்வீக சக்தியுடைய பெண் (அவர் அம்பாள் என்று கூறுகிறார்), நேரில் வந்து அவர் நாக்கைத் தொட்டுப் போனதாகவும், அதற்குப் பின் அவருக்கு உணவோ, நீரோ தேவைப்படவில்லை என்றும் கூறுகிறார். அதற்குப் பிறகு அவர் ஒரு பெண்ணைப் போலவே சிவப்பு சேலை உடுத்திக் கொண்டு, பெரிய மூக்குத்தி குத்திக் கொண்டு, வளையல் அணிந்து கொண்டு வாழ ஆரம்பித்திருக்கிறார்.

1970–ம் ஆண்டு முதல், குஜராத் காட்டுப்பகுதியில் உள்ள அம்பாள் கோவில் ஒன்றின் அருகே பிரஹலாத் ஞானி வசித்து வருகிறார். அவரை அந்தப் பகுதியினர் மாதாஜி என்றழைக்கிறார்கள்.

அவர் தொண்டைப் பகுதியில் ஒரு துளை இருக்கிறது. ‘அது அம்பாள் ஏற்படுத்தியது என்றும், அதன் மூலம் உடல் தனக்கு வேண்டிய சக்தியை உள்ளே ஈர்த்துக் கொள்கிறது என்றும்’ பிரஹலாத் ஞானி கூறுகிறார். ‘முக்கியமாக சூரிய ஒளியில் உள்ள சக்தியை ஈர்த்துக் கொள்வதால் தான், தன்னால் எந்த பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடிகிறது’ என்று அவர் சொல்கிறார்.

‘உணவின்றி மனிதன் ஒருசில வாரங்கள் உயிர்வாழ முடியும். நீரின்றி ஒருசில நாட்கள் உயிர்வாழ முடியும்’ என்று விஞ்ஞானம் கூறுகிறது. அதற்கு மேல் மனிதன் உயிர் வாழ்வதென்பது முடியவே முடியாது என்று உடலியல் மருத்துவ சாஸ்திரம் கூறுகிறது. ஏனென்றால் மூளை இயங்கத் தேவைப் படும் குளுக்கோஸ், உணவில் இருந்தே கிடைக்கிறது. குளுக்கோஸ் மூளைக்குக் கிடைக்க சில வினாடிகள் தடைப்பட்டாலும், அது உடலுக்கும் உயிருக்கும் அபாயத்தை ஏற்படுத்திவிடும் என்பது அனுபவ உண்மை.

அப்படி இருக்கையில், வருடக்கணக்கில் ஒருவரால் உணவு, நீர் இல்லாமல் இருக்க முடிகிறது என்பதைக் கேள்விப்பட்ட போது, அது உண்மை தானா?, இல்லை இதில் பித்தலாட்டம் ஏதாவது இருக்கிறதா? என்பதை அறிய சில மருத்துவர்கள் முன்வந்தார்கள். அவர்கள் பிரஹலாத் ஞானியை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார்கள்.

Defense Institute of Physiology and Allied Sciences ( DIPAS ) என்கிற மருத்துவ அமைப்பு, அகமதாபாத்தில் உள்ள ஸ்டெர்லிங் ஆஸ்பத்திரியில் (Sterling Hospital in Ahmedabad ) 2003–ம் ஆண்டு சுதிர் ஷா (Sudhir Shah ) என்ற மருத்துவர் தலைமையில் அவரைப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். இந்தக் குழுவில் சில மருத்துவ நிபுணர்களும் இருந்தார்கள்.

மருத்துவ பரிசோதனை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்றது. ஒரு மூடப்பட்ட அறையில் பிரஹலாத் ஞானியை தங்க வைத்தனர். பின்னர் முழு கண்காணிப்பில் வைத்து நடத்திய பரிசோதனையின் முடிவில், அவருடைய எடை சற்று குறைந்ததே ஒழிய மற்றபடி எல்லா விதங்களிலும் அவர் ஆரோக்கியமாகவே இருந்தார்.

இந்த செய்தி வெளியான பின்னர் தான் 2006–ம் ஆண்டு டிஸ்கவரி சேனலில், அவர் பற்றிய செய்தி வெளியாகியது. சில மருத்துவ நிபுணர்கள் இந்த பத்து நாள் பரிசோதனை முழுமையானது அல்ல என்றும், அவருடைய எடை குறைந்தது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்றும் கூற ஆரம்பித்தார்கள்

அதனால் DIPAS அமைப்பு 2010–ம் ஆண்டு, அதே மருத்துவர் சுதிர் ஷா தலைமையில் 35 ஆராய்ச்சியாளர்கள் கொண்ட ஒரு பெரிய குழு மூலம் மறு பரிசோதனை செய்ய முடிவெடுத்தது. அதற்கு பிரஹலாத் ஞானியும் ஒத்துக் கொண்டார். 2010–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22–ந் தேதியில் இருந்து மே மாதம் 6–ந் தேதி வரை பரிசோதனை நடைபெற்றது.

இந்த பரிசோதனை முறை முழுமையான விஞ்ஞான பூர்வமாக இருந்தது. அவர் தங்கி இருந்த அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவரை தினமும் ரத்த பரிசோதனை, ஸ்கேன் முதலான எல்லா பரிசோதனைகளும் செய்தார்கள். அவர் தன் உடலுக்குத் தேவை என்று சொன்ன சூரிய ஒளியில் அவரை இருக்க வைத்த சமயத்தில் கூட கேமரா அவரை விட்டு விலகவில்லை. எல்லாம் வீடியோவில் பதிவானது. சிறுநீர், மலம் கழிக்கத் தேவை இருக்காத காரணத்தால், பரிசோதனை நாட்களில் அவருடைய அறையை ஒட்டி இருந்த கழிவறையையும் பூட்டி வைத்திருந்தார்கள். அத்தனையும் அனில் குப்தா என்ற வேறொரு அமைப்பைச் சேர்ந்த ஒரு மருத்துவ பேராசிரியர் கண்காணிப்பில் நடைபெற்றது.

பதினைந்து நாட்கள் பரிசோதனை முடிவில், உடலின் முக்கிய உறுப்புகளான மூளை, சிறுநீரகம், இதயம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. மற்ற உடல்நலப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பரிசோதனைகளில் பிரஹலாத் ஞானியின் உடல் நலம், ‘அவர் வயதில் பாதி மட்டுமே உள்ள, தினசரி உண்டு, நீரருந்தி வாழும் சராசரி மனிதனின் உடல்நலத்தை விட பல மடங்கு ஆரோக்கியமாக இருக்கிறது’ என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

ஆனால் அந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது என்பதை, அந்த மருத்துவ ஆராய்ச்சிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. DIPAS அமைப்பு அந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முக்கியமான காரணம் பிரஹலாத் ஞானி உண்மையா போலியா என்பது மட்டுமல்ல. அதையும் தாண்டிய விரிந்த பார்வை ஒன்று இருந்தது.

உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது எப்படி என்று அறிந்தால், பல நாள் உணவு உட்கொள்ள முடியாத நிலைமையில் இருக்கும் விண்வெளி வீரர்கள், இயற்கை சீற்றங்களால் சில இடங்களில் சிக்கிக் கொள்ளும் மனிதர்கள், ராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு அதைப் பயன்படுத்தலாம் என்கிற காரணம் தான் அது. ஆனால் அந்த சக்தியை ஏற்படுத்திக் கொள்ளும் விதத்தை அவர்களால், பிரஹலாத் ஞானி மூலம் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த ஆராய்ச்சி முடிவுகளுக்குப் பிறகு தான் ITN தொலைக்காட்சியும், ஆஸ்திரிய ஆவணப்படமும் அவரைப்பற்றி விரிவாகச் சொல்லி பிரபலப்படுத்தின.

யோகக் கலையில் உண்மையாக தேர்ச்சி அடைந்த இந்திய யோகிகள், ‘காற்று மற்றும் சூரிய ஒளி ஆகிய இரண்டினால் மட்டுமே வாழ முடிந்தவர்கள்’ என்று கூறுவார்கள். அவர்களுடைய யோக சக்திகளின் சாத்தியக்கூறுகளை, பதஞ்சலியின் யோக சூத்திரங்களை படித்தவர்கள் மிகவும் நன்றாக அறியக்கூடும். அது விஞ்ஞான ஆராய்ச்சிகளின் பிடியில் அடங்கக்கூடியவை அல்ல. இங்கு நாம் குறிப்பிட்ட பிரஹலாத் ஞானி இந்த யோகசக்தி அல்லாமல், வேறெந்த அபூர்வ சக்தி படைத்தவராகவோ, மேலான ஆன்மிக ஞானம் பெற்றிருந்தவராகவோ நமக்குத் தெரியவில்லை.

ஆனால் ‘எல்லாமே ஒரு சாண் வயிற்றுக்குத் தானே’ என்று அடிக்கடி சொல்லும் நமக்கு, அந்த ஒரு சாண் வயிற்றின் தேவைகளில் இருந்து விடுபட்ட ஒருவரைப் பார்க்கையில் பிரமிப்பு ஏற்படுவது இயல்பே அல்லவா!

    –தொடரும்.

01 January 2015

கல்வியும், செல்வமும், வீரமும் தரும் மந்திரங்கள்


 

மந்திரங்கள் சூட்சும உருவாக்கம், அதற்கு பொருள் கிடையாது, ஒலிக்குறிப்புகள் உருவாக்கும் அதிர்வுகளை ஒட்டிய அறிவியல். புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இங்கே இடமில்லை. மிக நேர்த்தியாக உருவாக்கப் பட்ட எழுத்துக்களின் தொகுப்பு.அவை ஓரெழுத்தாகவும் இருக்கலாம், பல எழுத்துக்களின் தொகுப்பாயும் இருக்கலாம். அவற்றின் முறையான பிரயோகம் தரும் அல்லது உருவாக்கும் பலன் மட்டுமே சாதகனின் நோக்கமாய் இருத்தல் வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் கல்வி, செல்வம் மற்றும் வீரத்தை அருளக் கூடிய மந்திரங்களையும், அவற்றை செயலாக்கும் நுட்பத்தினையும் பார்ப்போம். அகத்தியரின், அகத்தியர்12000 என்ற் நூலில் இருந்து எடுக்கப் பட்டவை இந்த மந்திரங்கள்.

முதலில் கல்வியில் சிறக்க, கல்வியின் அதிதேவதையான சரஸ்வதியின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

"பாரப்பா சரஸ்வதியின் மந்திர பீஜம்
நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி என்று
லட்சமுரு செபித்தாயானால் காணப்பா
புத்திகூர்மையா ம்வாக்குவ ன்மைசித்தே"


- அகத்தியர் 12000 -
சரஸ்வதியின் பீஜ மந்திரமான " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாகும் எகிறார் அகத்தியர்.

இதில் மந்திரம் என்பது - " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.மந்திரசித்தி என்பது - புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாவது.

செல்வத்தின் அதி தேவதையான இலக்குமியின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

"சித்தியாம் இலக்குமியின் மந்திர பீஜமப்பா
சிறப்பாக இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்
கென்று பத்தியாய் லட்சமுரு ஓது ஓது
சகலசெல்வமும் கூடிவரும் தரணியிலேபகராதே"


- அகத்தியர் 12000 -


இலக்குமியின் பீஜ மந்திரமான "இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் சகல செல்வங்களும் சேரும் எகிறார் அகத்தியர்.

இதில் மந்திரம் என்பது - "இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - சகல செல்வங்களும் சேருவது.

வீரத்தின் அதி தேவதையான வீரபத்திரரின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

"ஆச்சப்பா வீரபத்திர மந்திர பீஜம் கேளு
அகோராயா வீரவீரபுரபுர அரிஅரிஎன்றுலட்சம்
மாச்சலிலா செபித்துவந்தால் மைந்தா
வீரபத்திரர் வீரமய் வருவார் சார்ந்தே"


- அகத்தியர் 12000 -
வீரபத்திரரின் பீஜ மந்திரமான "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் வீரபத்திரர் வீரமாய் துணை வருவார் எகிறார் அகத்தியர்.

இதில் மந்திரம் என்பது - "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - வீரபத்திரர் வீரமாய் துணை வருவது.

இந்த மந்திரங்களை குருமுகமாய் உபதேசம் பெற்று, விநாயக மந்திரஞ் சொல்லி மனதை ஒருமுகப் படுத்தி செயல்படுத்தும் எவரும் முறையான பலன்களை பெறலாம் என்கிறார் அகத்தியர். நம்பிக்கை இருக்கிற எவரும் இதை பயன்படுத்தி பலனடையலாம்.

THANK YOU SIDDHARKAL RAJYAM THOZHI


 

சனீஸ்வரனின்பிடியிலிருந்து தப்பிக்க ஆன்மீக ஆலோசனை !

சனீஸ்வரனின்பிடியிலிருந்து தப்பிக்க ,நெனைச்சது நடக்க,ஜெயிச்சது நிலைக்க –எளிய ஆன்மீக ஆலோசனை !


ஏழரைசனி, அஷ்டம சனி – நடக்கும்போது ,

தலை குப்புற விழுந்த ஒரு உணர்வு எல்லோருக்கும் ஏற்படும்.அதற்கு முந்தைய காலம்வரை ,

வெற்றிமேல் வெற்றி ,

அதனால் ஏற்பட்ட புகழ்போதை, கர்வம்,

ஆணவம் என்று இருக்கும் ஒருவரது ஆட்டத்திற்கு –

டபுள்செக் – வைக்கும் நேரம்தான் ,

இந்த காலகட்டம். இந்த கால கட்டத்தில் நமக்கு என்ன செய்தால் ,

இதை தாங்கும் சக்தி வரும் தெரியுமா?


திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.

நீங்கள் எத்தனை கோடி ,

கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,

நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.

தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?

அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.

இதை தவறாது செய்து முடித்தால் ,

உங்களுக்கு அந்த சனிபகவான் —

முழு அருள் கடாட்சம் வழங்கி ,

உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி. அப்படிப்பட்ட ,

ஒரு தேவரகசியம் போன்ற தகவலை ,

நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்

மட்டற்றமகிழ்ச்சி…….

அவர் கூறிய வழி :

தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல்வைக்கஉபயோகிக்கிறோமே  )

ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.

உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் ,

அதையே மாற்றக்கூடிய

சக்தி இதற்கு உண்டு என்கிறார்.

 இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,

வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும்,

சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்

படித்தாலும்,

ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.

காகம் பற்றி சில அபூர்வதகவல்கள் :

1.அதிகாலையில் எழுந்துகரைதல்.

2.உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல்.

3.உணவு உண்ணும் போதே சுற்றும் முற்றும் பார்த்தல்.

4.பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல்.

5.மாலையிலும் குளித்தல்,

பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக்கொண்டவை.

6. தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காக்கைகளும் ஒன்று கூடி கரையும் தன்மையையும் காணலாம்.

இது அஞ்சலி செய்வதற்குச்சமமாகக்கருதப்படுகிறது….

மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள்தான்..

ஆனால் மெல்ல,

மெல்ல இதை நாமே பெரிதுபடுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது… !!

காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..

இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….

தெரியவில்லை!.. ஆனால்,

உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,

விபத்துக்கள்,

வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..

செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.

தீராத கடன் தொல்லைகள், புத்திர

சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான

பலன்களையும், உங்கள் நியாயமான

அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்

– மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்

வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்

உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான

சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான

ஜீவ ராசி – காக்கை இனம்.

குடும்பஒற்றுமைவேண்டும்என்றுநினைக்கும்சுமங்கலிப்பெண்கள்காக்கைகளைவழிபடுவதுவழக்கம்.

தன்உடன்பிறந்தவர்கள்ஆரோக்கியமாகவும்மகிழ்ச்சியாகவும்இருக்க,

தங்களிடம்பாசம்உள்ளவர்களாகத்திகழஇந்தக்காணுப்பிடிபூஜையைச்செய்கிறார்கள்.

திறந்தவெளியில்தரையைத்தூய்மையாகமெழுகிக்கோலமிடுவார்கள்.

அங்கேவாழைஇலையைப்பரப்பிஅதில்வண்ணவண்ணசித்ரான்னங்களைஐந்து,

ஏழு,

ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து,

காக்கைகளை “கா…கா…’

என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.

அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும்பறந்துவரும்.

அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.

வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.

அப்படிச்சுவைக்கும்போதுஅந்தக்காக்கைகள் “கா…

கா…’

என்றுகூவிதன்கூட்டத்தினரைஅடிக்கடிஅழைக்கும்.

அந்தக்காக்கைகள்உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,

அந்தவாழை இலையில் பொரி,

பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,

வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.

இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.

மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)

காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.

இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.

மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்திருப்திப்படுத்தியதாவு ம் கருதுகிறார்கள்.

காக்கை சனிபகவானின்வாகனம்.

காக்கைக்குஉணவுஅளிப்பதுசனிக்குமகிழ்ச்சிதருமாம்.காக்கைகளில்நூபூரம்,

பரிமளம், மணிக்காக்கை,

அண்டங்காக்கைஎனசிலவகைகள்உண்டு.

காக்கையிடம்உள்ளதந்திரம்வேறுஎந்தப்பறவைகளிடமும்காணமுடியாது.

எமதர்மராஜன்காக்கைவடிவம்எடுத்துமனிதர்கள்வாழுமிடம்சென்றுஅவர்களின்நிலையைஅறிவாராம்.

அதனால்காக்கைக்குஉணவுஅளித்தால்எமன்மகிழ்வாராம்.

எமனும்சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,

காக்கைக்குஉணவிடுவதால்ஒரேசமயத்தில்எமனும்சனியும்திருப்தியடைவதாகக்கருதப்படுகிறது.தந்திரமானகுணம்கொண்டகா

யாராவதுவிருந்தினர்வருவதாகஇருந்தாலும்நல்லசெய்திகள்வருவதாகஇருந்தாலும்முன்கூட்டியேகாகம்நம்வீட்டின்முன்உள்ள

“கா…கா…’

என்றுபலமுறைகுரல்கொடுக்கும்.

இந்தப்பழக்கம்இன்றும்உண்டு.

காலையில்நாம்எழுவதற்குமுன்,

காக்கையின்சத்தம்கேட்டால்நினைத்தகாரியம்வெற்றிபெறும்.

நமக்குஅருகில்அல்லதுவீட்டின்வாசலைநோக்கிக்கரைந்தால்நல்லபலன்உண்டு.வீடுதேடிகாகங்கள்வந்துகரைந்தால்அதற்குஉடனேஉணவிடவே

எனவே,

காக்கைவழிபாடுசெய்வதால்சனிபகவான்,

எமன்மற்றும்முன்னோர்களின்ஆசீர்வாதத்தினைப்பெற்றுமகிழ்வுடன்வாழலாம்!

Posted by RAVI CHANDRAN M at 05:06

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest