For Read Your Language click Translate

31 October 2014

வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்

வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. 

உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம். இந்த பக்கம் தலை வைக்கும் விதத்தில் உங்கள் கட்டிலை திருப்பி வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவுதான் கஸ்டப்பட்டு வேலை செய்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் பணம் கிடைக்காமல் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை நிறையவே பயன்தரும். எக்காரணம் கொண்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப்படுக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சோம்பேறிகளாகி விடுவீர்கள்.

பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள் சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும். இதேபோல், வீட்டினுள் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள்.  

உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். இதற்காக சிறுவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் பானை ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதுதான் சிறப்பு. இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது. அதாவது, யாருடைய பார்வையிலும் படாத ஓர் இடத்தில் தான் இந்தப் பானையை வைக்க வேண்டும். சாதாரண அறைகளில் குடியிருப்பவர்கள் கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் இந்தப் பானையை வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு மேலதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள் அனுபவ ரீதியாக பார்த்துக் கொள்ளலாம். 

உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அதாவது, சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். 

உங்கள் வீட்டுக்குள் தென்கிழக்குப் பகுதி எது என்பதைக் கண்டுபிடித்து அந்தப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும். அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்டும்

Posted by narayanasamy jagadeesan at 19:22

உயர் கல்வியை தேர்ந்தெடுத்து படிக்க .............

..

தங்கள் குழந்தைகளின் தேர்வுகள் முடிவு தெரிந்தவுடன், பெற்றோர்கள் அனைவருக்கும் அடுத்ததாகவரும் கேள்வி தங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற மேல்நிலை கல்வியை தேர்ந்தெடுப்பது பற்றியதாகஇருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , இதில் ஒருவரது ஜாதக அமைப்பிற்கு எந்தவகையான உயர் கல்வியை தேர்ந்தெடுத்து படிக்க வைத்தால் , அவர்கள் அதில் சிறந்து விளங்குவார்கள்.

அவர்களுக்கு அதிக ஆர்வம் உள்ள உயர் கல்வி எது ? வாழ்க்கையில் பொருளாதார ரீதியாகமுன்னேற்றம் தரும் உயர் கல்வி எது ? படித்து முடித்தவுடன் நல்ல வேலை வாய்ப்பினை பெற்று தரும்உயர் கல்வியை ஜாதகரீதியாக தேர்ந்தெடுப்பது எப்படி ? என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம் !

ஒரு ஜாதகருக்கு உயர் கல்வியை தேர்ந்தெடுக்கும் பொழுது , அவரது சுயஜாதகத்தில் நாம் கவனிக்கவேண்டிய பாவகங்கள் , உயர் கல்வி மற்றும் சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடும், ஜீவன ஸ்தானம்எனும் பத்தாம் வீடும் மட்டுமே , சுய ஜாதகத்தில் இந்த இரண்டு வீடுகளும் மிகவும் சிறப்பாக அமைந்து ,அந்த வீடுகளின் ராசி மற்றும் தத்துவம் என்னவோ அதை அறிந்து , அது சம்பந்தபட்ட மேல்நிலைகல்வியை ஜாதகர் தேர்ந்தெடுத்து படிப்பாரே ஆயின் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவார் என்பதில்சந்தேகம் இல்லை .

உதாரணமாக :

ஒருவருக்கு லக்கினத்திற்கு நான்காம் வீடு அல்லது பத்தாம் வீடு மேஷ ராசியாக வருமாயின் , ஜாதகர்பெறியியல் துறை சார்ந்த கல்வியினை கற்று கொள்வாரே ஆயின் நிச்சயம் கல்வியிலும், தொழிலும்சிறந்து விளங்கும் தன்மையும் , சிறப்பான வேலை வாய்ப்பினையும் பெற முடியும் .

நான்காம் வீடு அல்லது பத்தாம் வீடு சுய ஜாதகத்தில் நன்றாக இருப்பின் ஜாதகர் கீழ்க்காணும் அமைப்பில், உயர் கல்வியை தேர்ந்தெடுக்கலாம் .

நெருப்பு தத்துவ ராசியாக அமைந்தால் :

பெறியியல் கல்வி , கட்டுமான கல்வி , அரசு நிர்வாக கல்வி , காவல் துறை சார்ந்த படிப்புகள் , மக்கள்மேலாண்மை சம்பந்தபட்ட கல்வி , உணவு மேலாண்மை , ஹோட்டேல் மேலாண்மை , அரசியல்ஆளுமை சார்ந்த கல்வி , விரைவான வளர்ச்சியினை பெரும் துறை சார்ந்த கல்வி , மின் துறை சார்ந்தகல்வி , கணினி கல்வி ,வெளிநாடுகளில் அதிக வேலை வாய்ப்பினை தரும் கல்விகள், ஏற்றுமதிஇறக்குமதி மேலாண்மை சார்ந்த கல்வி , சாலை வசதி சார்ந்த கல்வி என ஜாதகர் விரும்பும் கல்வியைதேர்ந்தெடுக்கலாம் .

நில தத்துவ ராசியாக அமைந்தால் :

மருத்துவ கல்வி , உடல் கூறு சம்பந்தபட்ட கல்வி , கலைத்துறை சம்பந்தபட்ட கல்வி , விவசாயம்மற்றும் இயற்க்கை வாழ்வை அடிப்படையாக கொண்ட கல்வி, மோட்டார் வாகனம் சம்பந்தபட்ட கல்வி ,மண் வளம் சம்பந்தபட்ட கல்வி , இயற்க்கை எரிவாயு ,வாகன எரிபொருள் சார்ந்த கல்விகள் , மருந்துகையாளும் துறை சார்ந்த கல்வி , மக்களுக்கு சேவை செய்யும் துறை சார்ந்த கல்வி , அறிவியல்தொழினுட்பம் சார்ந்த கல்வி , என ஜாதகர் விரும்பும் கல்வியை தேர்ந்தெடுக்கலாம் .

காற்று தத்துவ ராசியாக அமைந்தால் :

வக்கீல் மற்றும் சட்ட துறை கல்வி , புல்லியல் துறை சார்ந்த கல்வி , மக்கள் மேலாண்மை கல்வி ,கணித மேலாண்மை கல்வி , வானவியல் மற்றும் ஜோதிட துறை சார்ந்த கல்வி , ஆடிடிங் துறை சார்ந்தகல்வி , புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கல்வி , புதிய அணுகுமுறை கொண்டகல்விகள் , மக்களிடம் தொடர்பு துறை சார்ந்த கல்வி , இயற்க்கை வளங்கள் மேம்படுத்துதல் சார்ந்தகல்வி என ஜாதகர் விரும்பும் கல்வியை தேர்ந்தெடுக்கலாம் .

நீர் தத்துவ ராசியாக அமைந்தால் :

அழகு கலை துறை சார்ந்த கல்வி , கலை துறை சார்ந்த கல்வி , இயல் இசை நாடக துறை கல்வி , ஆடைஏற்றுமதி , ஆடை வடிவமைப்பு துறை சார்ந்த கல்வி , வங்கி மேலாண்மை , அலுவலக மேலாண்மைசார்ந்த கல்வி , உளவியல் துறை சார்ந்த கல்வி , மனநல மருத்துவம் சார்ந்த கல்வி , விளையாட்டுதுறை சார்ந்த கல்வி , நீர் மற்றும் நுண் உயிரி சார்ந்த கல்வி , பொருளாதாரம் சார்ந்த கல்வி என ஜாதகர்விரும்பும் கல்வியை தேர்ந்தெடுக்கலாம் .

கோள் Vs காந்த அலைகள்

கோள்களிலிருந்து  வருகின்ற காந்த அலைகள் மனிதனுடைய எந்தப்பகுதியோடு அதிகம் தொடர்புகொள்கின்றன.?

சூரியனிலிருந்து வருகின்ற அலை = எலும்புகளோடும்;

.

புதன் = தோல் மீதும்;

.
சுக்கிரன் = ஜீவ சக்தியோடும்;
.
சந்திரன் = இரத்த ஓட்டத்தோடும்;
.
செவ்வாய் = எலும்பிலுள்ள மஜ்ஜையோடும்;
.
குரு = மூளை செல்களோடும்;
.
சனி = நரம்புகளோடும்;
.
ராகு-கேது = ஓஜஸ்ஸோடும் தொடர்பு கொள்கின்றன.
.
-வேதாத்திரி மகரிஷி

Posted by narayanasamy jagadeesan at 05:32

உங்கள் பெயர் உங்களுக்கு அதிர்ஸ்டமானதா?

உங்கள் பெயர் உங்களுக்கு அதிர்ஸ்டமானதா?

உங்களுடைய பிறந்த தேதிக்கு ஏற்றது போல உங்களின் பெயர் எண்ணும் அமைய வேண்டும்.அப்போதுதான் அதிர்ஷ்டமானதாக உங்கள் வாழ்க்கை அமையும்.

1 – ந்தேதி பிறந்தவர்கள் 2, 4, 6, 7, 8 எண்களில் பெயர் வைக்கக்கூடாது.

2 – ந்தேதி பிறந்தவர்கள் 2, 4, 6, 7, 8 ,9 எண்களில் பெயர் வைக்கக்கூடாது.

3 – ந்தேதி பிறந்தவர்கள் 2, 4, 6, 8 எண்களில் பெயர் வைக்கக்கூடாது.

4 – ந்தேதி பிறந்தவர்கள் 2, 3, 7, 8 எண்களில் பெயர் வைக்கக்கூடாது.

5 – ந்தேதி பிறந்தவர்கள் 2, 4, 7, 8 எண்களில் பெயர் வைக்கக்கூடாது.

6 – ந்தேதி பிறந்தவர்கள் 1, 3, 7, 8 எண்களில் பெயர் வைக்கக்கூடாது.

7- ந்தேதி பிறந்தவர்கள் 2, 4, 6, 8, 9 எண்களில் பெயர் வைக்கக்கூடாது.

8 – ந்தேதி பிறந்தவர்கள் 5 தவிர வேறு எண்களில் பெயர் வைக்கக்கூடாது.

9 – ந்தேதி பிறந்தவர்கள் 1, 2, 4, 7, 8 எண்களில் பெயர் வைக்கக்கூடாது.

இவற்றை கருத்தில் கொண்டு உங்கள் பெயரை அமைத்துக் கொண்டீர்களானால் வாழ்வு சிறக்கும். 

Posted by narayanasamy jagadeesan at 20:49 No comments:

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: நேம் பலன்

தெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்!


தெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்!

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் உட்சபட்ச பரிகாரம் என்ன? 

ஹோமம் தான். 

கோவிலுக்கு போறது, சாமி கும்பிடுறது, அர்ச்சனை செய்றது,அபிழேகம் செய்றது, மொட்டை போடுறது, அலகுகுத்திக்கிறது, தீ மிதிக்கிறது எல்லாமே பரிகாரத்தின் ஒரு வடிவமாக இருந்தாலும் ஹோமம் தான் கடைசி. 

இதுக்கு மேலே பரிகாரம் செய்யணும்னா தவம்தான் செய்யணும்.  ஒரு மலை உச்சியா பார்த்து ஏறி உட்கார்ந்து தவம் செய்தால் பரசிவன் வந்து குழந்தாய் என்ன வரம் வேண்டும் என்று கேட்டாலும் கேட்கலாம். போகட்டும்.

சரி...சொல்லுங்க. 

ஒரு ஹோமம் செய்றிங்க. ஐயர் நெருப்பு வளர்க்கிறார். மந்திரம் சொல்றார். 

என்னென்னமோ காயி, வேரு,இல்லை, பட்டைன்னு அக்கினியில் போடுறார். அதை பற்றி கொஞ்சமாவது தெரியுமா? 

அட ... மந்திரம் தெரியுமான்னு கேட்கலை. அங்கே என்ன செய்றாங்கன்னு தெரியுமா?

தெரியாதுல்ல. 

நீங்களும் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி, என்னமோ நடக்குதுன்னு  எதுவுமே புரியாம உட்கார்ந்து இருக்கீங்க.  

அதை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்களைன்னாலும், ஹோமம் செய்யும் போது செய்யப்படும் சடங்குகள் என்னென்ன?

அது எதற்காக செய்யப்படுகிறது, என்பதை இப்போ சொல்றேன். கொஞ்சமாவது அதை பற்றி தெரிஞ்சுக்கோங்க.

முதலில் கணபதி ஹோமம். 

எந்த  காரியம் செய்தாலும்  முதலில் கணபதியை வணங்கனும். செய்யும் காரியத்தில் விக்கினங்கள் வாராமல் இருக்க விநாயர் வழிபாடு.

அதிலும் ஹோமம் மாதிரி உயர்ந்த பரிகாரங்கள் செய்யும் போது, அரக்க சக்திகள் அதை தடுக்க பார்க்கும் என்கிறது புராணங்கள்.

உண்மைதான். ஹோமத்தின் வழி அந்த பலனை பெற வேண்டும் என்ற விதியமைப்பு இல்லைனா, பல தடைகள் வரும்.

நீங்களே பாருங்க. ஹோமத்திற்கு தேதி குறிச்சிருப்பாங்க. அந்த நாள் நெருங்கும் போது,வீட்டில் இருக்கும் பொம்பளைங்க யாரவது தீட்டுன்னு குண்டை தூக்கி போடும்.

வர்ற 20 ம் தேதிதான் குளிக்கிற கெடு. சனியன் இப்பவே வந்துட்டு என்பார்கள்.

ஹோமத்திற்கு நாள் குறித்திருப்பார்கள். அந்த நாள் நெருக்கும் போது நெருங்கின பங்காளி ஒருத்தர் சிவலோக பதவியை அடைஞ்சுடுவார்.

பங்காளி இறப்பு பதினாறு நாள்  சூதகம்ன்னு ஹோமத்தை ஒத்தி வைக்கிற மாதிரி வந்துடும்.

ஹோமத்திற்கு நாள் குறிச்சுருப்பங்க. அந்த நாள் நெருங்கும் போது கையிலே  பணமே இல்லாமே திண்டாட வேண்டிவரும்.

அட கடவுளே இவ்வளவு சோதனை வருமா?

எல்லாருக்கும் இல்லை ராஜா. ஒரு சிலருக்கு. சரி.. முதலில் கணபதி பூஜை. துர்தேவதைகலாலோ, துஷ்ட்ட சக்திகளாலோ எந்த இடையூறும் இல்லாமல் நடப்பதற்கு வினைகளை வேறறுக்கும் விநாயகர் பூஜை.



அடுத்து சங்கல்ப்பம்.

கோடான கோடி மக்கள் வாழக்கூடிய இந்த பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். சரியான முகவரி எழுதப்பட்ட தபால் எப்படி குறுப்பிட்ட நபரை சென்றடைகிறதோ, அதைபோல் செய்யகூடிய இந்த ஹோமங்கள் குறுப்பிட்ட இலக்குகளை சென்றடையக்கூடியதாக இருக்க வேண்டும்.

அந்த இலக்கு என்பது யாகத்தின் தலைவராக இருப்பவருக்கு, அதாவது யாருக்காக செய்கிறோமோ அவருக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக பிராத்தனை செய்யப்படுவது.

அடுத்து குலதெய்வ பூஜை. 

இது பெரும்பாலான ஹோமங்களில் செய்யபடுவதில்லை. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள். உலகத்தில் எத்தனை சாமிகள் இருந்தாலும் குலதெய்வம் முக்கியமானது.

நம் முன்னோர்கள் காலத்தில் குலதெய்வ பூஜை என்பதை குறையில்லாமல் செய்தார்கள்.

எந்த காரியமாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தை வேண்டினார்கள். வருடத்திற்கு ஒரு முறை விழாஎடுத்தார்கள்  .

வீட்டில் ஒரு சுபகாரியம் நடந்தாலும் முதல் பத்திரிகை சாமிக்கு வைத்தார்கள். ஆக குலதெய்வத்தோடு  அவர்களுக்கு இருந்த நெருக்கம் அதிகம்.

இது எந்திர யுகம். காரில் போகும்போது ஹாய் முருகா என்று ஒரு கை தூக்கிவிட்டு போகுற அளவிற்குத்தான் நேரம் இருக்கிறது.

என்ன செய்ய..... எப்படி இருப்பினும் , அடுத்து செய்ய வேண்டியது குலதெய்வ பூஜை.  குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு செய்யப்படும் பூஜை.

ஆகமத்தில் இடம் இல்லையே என்று அலச்சியம் செய்யக்கூடாது.

அடுத்து செய்யப்படுவது பிதிர் பூஜை. 

இது ஒன்னும் அமாவாசை தர்ப்பணம் இல்லை. தெய்வமாகி போன நம் முன்னோர்களை தேடிபிடித்து வணங்குவது.

நீத்தார் உலகம் என்று சொல்லக்கூடிய இடத்தில் நம் மூன்று தலைமுறையை  சேர்ந்த முன்னோர்கள் இருப்பார்களாம்.

வருடத்தில் ஒரு நாள் மட்டும் வெளியே வருவதற்கு அனுமதி உண்டு. அது திதி நாள். அன்று அவர்களுக்கு உரிய திதி கடமைகளை சரிவர செய்தால் மகிழ்ந்து வாழ்த்திவிட்டு செல்வார்களாம்.

ஒன்றுமே செய்யவில்லை என்றால், வந்தவர்கள் நல்ல மனது உள்ளவராக இருந்தால் மனக்குறையோடும், கெட்ட மனது உள்ளவராக இருந்தால் சபித்து விட்டும் போய்விடுவார்களாம்.

அது போன்ற குறைகள் இருந்தால் அவற்றை நீக்கி அவர்கள் ஆசியை பெறுவதற்காக செய்யப்படுவது பிதிர்பூஜை.

இதுவும் பெரும்பாலான ஹோமத்தில் தவிர்க்க படுகிறது. இது முறையல்ல.

எந்த தேவதையை குறித்து ஹோமம் செய்கிறோமோ அந்த தேவதையை கும்பத்தில் நிலைநிறுத்தல்.

கும்ப ஸ்தாபனம்

கும்பம்  என்பது உடல். அதன் மேல் வைக்கப்படும் தேங்காய் என்பது தலை. கும்பத்தில் சுட்டப்படும் நூல் நாடி நரம்புகளை குறிக்கும். உள்ளே இருக்கும் தண்ணீர் ரத்தத்தை குறிக்கும். 

தர்ப்பை என்பது ஆகர்ஷ்சன சக்தி நிறைந்தது. காந்தத்தை எப்படி இரும்பு கவர்ந்து இழுக்கிறதோ, அதைபோல் தெய்வீக சக்தியை கவர்ந்து இழுக்கும் தர்ப்பையை கலசத்தில் வைக்கிறார்கள். 

ஆக கலசத்தில் நம் பிரதான தேவதை பிரச்சனமாக இருக்கிறார் என்பதை சொல்வதுதான் அதன் தாத்பரியம். 

என்ன ஹோமம் செய்கிறோம்? அதாவது எந்த தெய்வத்தை நினைத்து செய்கிறோமோ, அந்த தெய்வத்தை கும்பத்தில் நிலை நிறுத்துவதுதான் ஆஹாவனம் என்று பெயர்.

அடுத்து செய்யப்படுவது நவக்கிரக தோஷ பரிகாராம். 

ஜெனனி ஜென்ம சௌக்கியனாம்
வர்த்தினி குல சம்பதாம்
பதவி பூர்வ புண்ணியனாம்
லிக்கியதே ஜென்ம பத்திரிகா என்பது ஜோதிட வாக்கு.

நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் காரணம் நவகிரகங்கள். நம்புகிறமோ இல்லையோ, ஏற்றுக் கொள்கிறோமோ  இல்லையோ, அவர்கள் தங்கள் பணியை செய்கிறார்கள்.

இதைதான் வாங்கி வந்த வரம் என்கிறார்கள். இவர்கள் நம் வாழ்க்கையில் புகுந்து விளையாடுவதால் தான் நாம் பரிகாரம் செய்கிறோம். அதனால் நவகிரங்களை வணங்கி பூஜிக்க வேண்டும்.

இதை ஹோம நிறைவுக்கு முன் செய்வதும் உண்டு. இனி ஹோமம் ஆரம்பம்



இந்த நடைபெறும் போதுதான் வேத பாராயணங்கள் செய்யப்படுகிறது. வேத பாராயணங்கள் என்பது இறைவனை ஆராதிப்பது என்று பொருள்.

பொதுவாக பாராயணங்கள் என்பதே இறைவனை புகழ்ந்து பாடி, அவர் அருளை பெறுவதுதான்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் மூலமந்திரம், வேதமந்திரம், காயத்திரி மந்திரம், பிராத்தனை மந்திரம் என்ற நான்கு உண்டு.

உதாரணமாக மூல மந்திரம் என்பது பீஜாச்சரம் கொண்டு சொல்வது. அது ஓம் ஸ்ரீம் ரீம் என்று வரும். வேத மந்திரம் என்பது ஒலி அலைகளால் நன்மை பெறுவது.

காயத்திரி மந்திரம் என்பது எந்த தெய்வத்தை நோக்கி ஹோமம் செய்கிறோமோ அவரின் புகழுரைகளை சொல்வது.

பிராத்தனை மந்திரம் என்பது நம் வேண்டுதல் பலிப்பதர்க்காக சிரம் தாழ்த்தி, கை கூப்பி, மனதார பிராத்திப்பது என்று பொருள்.

பாராயண முடிவில் சமகம் சொல்லப்படுகிறது. இதை பற்றி தனியே ஒரு கட்டுரை எழுதுகிறேன். இப்போதைக்கு படம் மட்டும். வசுவதாரா கொண்டு நெய் ஊற்றும் போது சொல்லப்படும் மந்திரம் சமகம்.

கடைசியாக பூர்ணாஹுதி 

இது ஹோமத்தின் நிறைவு பகுதி. பட்டு துணியில் வாசானாதி திரவியங்கள் சேர்த்து, எட்டு கண் விட்டெரிக்கும் அக்னி  தேவனுக்கு சமர்ப்பணம் செய்வதுதான் பூர்ணாஹுதி எனப்படுவது. 

இந்த அவிர் பாகத்தை பெற்று கொள்ள தேவலோக தேவேந்திரனே வருவாராம். இதை செய்து முடித்ததும் ஹோமம் நிறைவு பெறுகிறது.

சுபம் 

Posted by narayanasamy jagadeesan at 19:56 No comments:

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: jothidam, medical, sastharam, பலன்கள், ஹோமம்

சந்திராஷ்டமம்

மனநிலை மாற்றத்திற்குக் காரணம் என்ன(சந்திராஷ்டமம்)

ஒரு திசையில் ஒரு புக்தியில் இன்னன்ன நடக்கும் என்று ஜோதிட அலங்காரம், சர்வார்த்த சிலங்காரம் போன்ற நூல்கள் எடுத்துச் சொல்கின்றன.

தசா புக்திகளைக் காட்டிலும் கோச்சார கிரக நிலைகளை, இன்றைய கிரக நிலைகள்தான் - அதாவது சுக்கிரன் புக்தி நடக்கிறது என்றால் அது மிக யோகமான நிலை. மிதுனம் அல்லது ரிஷப லக்னத்திற்கு எடுத்துக் கொண்டால் புதன் தசையில் சுக்கிர தசை ராஜ யோகத்தைத் தரக் கூடியது.

ஆனால் அது போல இருக்கும்போது நடுவில் அஷ்டம சனி, ஏழரை சனி, சகட குரு போன்றவை வரும்போது அந்த யோகப் பலன் ஒரு பக்கம் கொடுக்கப்பட்டாலும், அதை அனுபவிக்க முடியாத சில நிகழ்வுகளைக் கொடுக்கும்.

அதுதான் கோபத்தைக் கொடுக்கிறது. அதாவது நல்ல யோகம் இருந்தும் அதனை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. 

அதனால்தான் பிறக்கும்போது இருக்கும் கோள்களின் கிரக அமைப்பு யோகமானதா அல்லது தற்கால கிரக அமைப்பு நல்லதா என்பதை பார்த்து பலன் சொல்கிறோம்.

சிலருக்குப் பிறக்கும் போது இருக்கும் கிரக அமைப்பைக் காட்டிலும் தற்கால கிரக அமைப்பு வலுவாக இருப்பதால் அதன் பலன்கள்தான் அவர்களுக்கு நடக்கும்.

அதனால்தான் நல்ல தசாபுக்தி நடந்தாலும் திடீரென உணர்ச்சி வசப்படுதல், கோபப்படுதல் போன்றவைக்கு காரணம் அஷ்டமத்து சனி, ஏழரை சனி போன்றவை நடப்பதுதான். 

சந்திராஷ்டமம் என்று இரண்டரை நாள் நடக்கும். அந்த நாட்களிலும் கோபப்படுதல், எடுத்தெறிந்து பேசுதல், கையில் கிடைத்ததை எடுத்து அடித்தல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக் கொள்வது போன்றவையும் நடக்கும், அதாவது ஒரு இரண்டரை ஆண்டுகளுக்கு பட வேண்டிய கஷ்டம் அனைத்தையும் இந்த இரண்டரை நாட்களில் நாம் பட்டுவிடுவோம். 

தசா புக்தி மோசமாக நடப்பவர்களுக்கு, சந்திராஷ்டமம் மிக மோசமாக இருக்கும். எனவே அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொதுவாக விவாகரத்தை எடுத்துக் கொண்டால் ஒரே நாள் இரவில் சண்டை போட்டு கைகலப்பாகி, சூட்டோடு சூடாக வழக்கறிஞரைப் பார்த்து விவாகரத்திற்கு பதிவு செய்து விடுகிறார்கள்.

நமக்கு சந்திராஷ்டமம் நடக்கிறது. கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும் என்று நிதானித்து இருந்தால் அவர்கள் தப்பித்துவிடுவார்கள். 

அதேப்போன்றுதான், கொலைகள் நடப்பதையும் எடுத்துக் கொண்டால் ஒன்று கொலையுண்டவனுக்கு சந்திராஷ்டமமாக இருக்கும் அல்லது கொலை செய்தவனுக்கு சந்திராஷ்டமமாக இருக்கும். 

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம், அதாவது ரிஷப ராசிக்கு எட்டாம் ராசி தனுசு ராசி. தனுசு ராசியில் மூலம், உத்திராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகிய 3 நட்சத்திரங்களும் இருக்கும். 

அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொரு மாதமும் வரும். அந்த நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் மன உளைச்சல், கோபம் போன்றவை அதிகம் ஏற்படும்.

சந்திரன்தான் எல்லாவற்றிற்கும் உரியவன். மனசுக்கு உரியவன். செயல்பாடுகளை கட்டுப்படுத்துபவன். எனவே மனோகாரகன் எட்டில் மறையும்போது எதிர்மறையான செயல்கள் அதிகரிக்கும். 

அதனால்தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தை இயக்கும்போது பொறுமையை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்துகிறோம்.

ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதே லக்னத்திற்கு 8, 6, 12இல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.

Posted by narayanasamy jagadeesan at 18:43

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: jothidam