For Read Your Language click Translate

11 June 2014

மாந்திரீக தாந்திரீகம்

தாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள்[1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர்[3]மற்றும் சுவேதாம்பர சமண சமயத்தினர் கடைப்பிடிக்கின்றனர்.

இந்து சமயத்தில் தாந்த்திரீக முறையில் வழிபட மந்திரங்கள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த தாந்திரீக மந்திரங்களில் மற்ற சமயத்தவர்களின் மந்திரங்களைவிட இரண்டு முக்கியமான அம்சங்கள் உண்டு. அவை ”பீஜ மந்திரம்” (விதை போன்றது) என்றும் ”சக்தி மந்திரம்” என்றும் கூறப்படும். பீஜ மந்திரம் ஒரே ஓர் அசை மட்டும் கொண்ட சிறப்பான ஆன்மீக சக்தி கொண்டது. வெவ்வேறு வகையான கடவுளைக் குறிக்க வெவ்வேறு வகையான பீஜ மந்திரங்கள் உண்டு. தந்திர மார்க்கத்தில் ஒவ்வொரு மந்திரமுமே ஒர் பீஜ மந்திரத்துடன்தான் தொடங்கும்.

பீஜ மந்திரத்துடன் தொடர்புடைய மந்திரங்களே அதிக சக்தி உடையதாக கருதப்படுகிறது. ஒரு குருவின் மூலம் பெறப்பட்ட மந்திரத்தைத் திரும்பத் திரும்பக் கூறுவதால் இறைக்காட்சி கிட்டுவது எளிதாகும். அத்தோடு இத்தகைய மந்திர உச்சரிப்புக்களோடு இறைவனுக்குப் படைக்கப்படும் பொருள்களையும் இறைவன் உடனேயே ஏற்றுக் கொண்டுவிடுவதாகவும் நம்பப்படுகிறது.

யந்திரங்கள்[4] [5] தாந்திரீக வழிப்பாட்டோடு தொடர்புடையவை. அவை புனிதம் மிக்கதும் யோக சக்தி வாய்ந்தது. சில யந்திரங்கள் கடவுளின் அடையாளமாகக் குறிக்கப்பட்டு வழிப்படப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஸ்ரீசக்கரம் (தேவி யந்திரம்).



மாந்திரீகம்

மாந்திரீகம்                                                                                       .

பலர் மாந்திரிகம் என்ற பெயரில் ஏமாற்றப்படுகின்றனர். யாறும் கடவுளுக் இடைத் தரகராக இருக்க முடியாது. ஏன் நீங்களே முயற்சி செய்து பார்க்க கூடாது?.    கடவுளை பணத்தாலோபொருள்களை கொடுத்தோ ஏமாற்ற முடியாது. மாந்திரீகத்தை விற்கவும் முடியாது,வாங்கவும் முடியாது.   
                    
     மாந்திரீகம் என்ற பெயரில் ஒரு தகவல் பரிமாற்ற பகுதியாஇந்த பரிமாற்ற பகுதியை பார்த்த உடன் உங்களுக்கு வியப்பு ஏற்படலாம். இந்த தகவல் பரிமாற்றம் உங்களை ஒரு மந்திரவாதி ஆக்கவேண்டும் என்பது நோக்கமல்ல. இங்கு கொடுக்கப்பட்ட பல காரியங்கள்  உங்களுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    ஆன்மீகமும். மாந்திரீகமும் ஒரு மதத்தின் இரு பகுதிகள் ஆகும். எல்லா மதங்களிலும் மாந்திரீக பகுதி உள்ளது. மாந்திரீகம் என்றதும் மூன்று  தன்மையை அடிப்படையாக கொண்டது. 
    1.      மனதிரத்தால் செய்யப்படும் மந்திரங்கள் சார்ந்தது,  
        2.  எந்திரம் சார்ந்த தாந்திரீக வேலைகள்.
       3.  தனது திறத்தால் செய்யப்படும் தாந்திரம் கைப் பிறட்டு வேலை
                                         
           
           மாந்திரீகத்தில் வெள்ளை மாந்திரீகம்கருப்பு மாந்திரீகம்  என்ற இரு வகை உள்ளது. உலகெங்கிலும் மாந்திரீகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. டிவி சேனல்களில் மாந்திரீகம் உண்டாஇல்லையாஎன்ற சர்ச்சைகள் உருவாகி மாந்திரீகம் இல்லை என்ற தீர்ப்போடு முடித்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
               அறியாமை,  இயலாமை,  பய உணர்வுகள், பேராசை ஆகியவைகள்
மனிதன் கடவுளைத் தேடும் காரணங்களாக அமைந்துள்ளது.
இதேக் காரணங்கள் மாந்திரீகத்தின் மீதும் நாட்டம் அடையச்
செய்கிறது. ஆன்மிகம் என்பது ஒரு சரியானத் தேர்வு.
மாந்திரீகம் கூட ஆன்மீகத்தின் ஒரு அங்கம் என்று கூறலாம்.
இத்தகைய மாந்திரீகத்தில் மூன்று வகையான வேண்டுதல்கள்
உள்ளன. 
            
  1)   ஒருவர் சுகமடைய வேண்டும் என்று வேண்டுதல். இது   நன்மையைச் சார்ந்த வேண்டுதல் ஆகும்.
 2) ஒருவர் நோய்வாய்ப்பட வேண்டும்அல்லது வறுமை அடைய  
 வேண்டும் என தீமையான காரியங்களைச் சார்ந்த வேண்டுதல் 
 ஒரு  வகையாகும்.
3)   தான் விரும்பியதைஅடைய வேண்டும் போன்ற காரியங்களை அடைய  விரும்புவது மூன்றாவது வகையாகும் சுயநலம் காரியங்களைச் சார்ந்த  வேண்டுதல்.
     
  பொதுவாக மாந்திரீகம் என்பது ஒருவரின் விருப்பு
    வெறுப்பைச்   சார்ந்தே இருக்கும்.  
   
   ஒரு அமெரிக்க யூதர் முனைவர் பட்டத்திற்க்காக மாந்திரீகத்தை கரு பொருளாக எடுத்து ஆய்வு (P.hd) செய்து கொண்டிருந்தார். அவர் உலகின் பல பாகங்களுக்கு மாந்திரீகம் பற்றி தெரிய சென்றிந்தார். அவ்வாறு தமிழ்நாடு வரும் பொழுது என்னிடம் நான்கு நாட்கள் தங்கி இருந்தார். நானும்அவரும் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பல மந்திரவாதிகளை சென்று பார்த்தோம். அவர்களிடம் இருந்து பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். அவரிடம் எனது நண்பர் மாந்திரீகம் என்ற ஒரு கலை உண்டாஎன்று கேட்டார். அதற்கு அவர் தற்பொழுது இது ஒரு அழிந்து வரும் கலை. இந்த யுகத்திற்கு ஏற்புடையது அல்ல. மாந்திரீகம் என்பது மனிதன் தன் மனதில் உள்ள அதி தீவிர சக்தியால் செயல்படுவது ஆகும். அதற்கு அதிக உடல்உள்ள பயிற்சிகள் தேவை என்று கூறினார். இப்பொழுது கூட சிலர் வாம சார தெய்வங்களை வழிப்பட்டு மனசக்தியுடன் நெருப்பில் இறங்குவது ஏன் ஒருவித மாந்திரீகம் என்று எடுக்கக் கூடாது?என்று கூறினார்  இன்று   அறிவியலாக     இறுப்பது   நாளை        அறிவியலாக  
      இருப்பதில்லை.  அணுவைப் பிரிக்க முடியது என்று கூறிய  அறிவியல் என்ன ஆகிவிட்டது?.  நிருபிக்க பட்ட பல உண்மைகள் தோல்வியைச்  சந்தித்து உள்ளன. அதேபோல் ஆன்மீகமும் பல இடங்களில் ஆன்மீகமாக இருப்பதில்லை. ஒரு மனிதன் இறக்கிறான் என்றால்" அங்கு அறிவியலும் ஆன்மீகமும் தோல்வி அடைகிறது. உண்மையில் ஆன்மீகமும்,  அறிவியலும் எப்பொழுது ஒரு தேடலாகவே அமைகிறது..  

   வாருங்கள்  தேடுவோம்" கடவுள் யார்கடவுளின் பரிமானம் என்னஎன்பதைப் பற்றி எங்களின் வெப்சைட்டில் பார்க்கலாம்.

     
   வாமசார தெய்வங்களுக்கு படைக்கப்படும் பூஜை, பூஜைப் பொருள்கள் ஆகியவைகள் வேண்டுதல் செய்பவரின் நம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு வைதீகக் கருமமாகும். வாமசார தெய்வங்கள் சக்தி உள்ளவை என்று கருதப்படுகிறது. அப்படி இருக்க அவர்களுக்கு அடிபணிய வைக்க பூஜை பொருள் கொடுப்பது என்பது ஒரு வேடிக்கையின் வினோதமான நிகழ்வாக தெரிகிறது. 
       கடவுளை பணத்தாலோ, பொருள்களை கொடுத்தோ ஏமாற்ற முடியாது. மாந்திரீகத்தில் உயிர் பலி என்பது ஒரு சர்வ சாதாரண காரியமாகி விட்டது. சிறு பையன்கள்,பிள்ளைகளை பலி இடுவது என்பது கண்கூடாக பார்க்கின்றோம். இப்படி இருக்க சிறு குழந்தைகளை நரபலி இடுதல் போன்றவைகளை தெய்வங்கள் ஏற்றுக் கொள்ளாது. தெய்வங்கள்   அவ்வளவு   கொடூரமானவர்கள்   அல்ல. 
      பொதுவாக மாந்திரீகம் என்பது மந்திர உச்சாடனங்கள் கொண்டதாக உள்ளது.  

 
காளி,  சாமுண்டி,  துர்க்கை, முருகன் போன்ற எல்லா தெய்வங்களும் தீமை செய்யும் அரக்கர்களையும், அசூரர்களையும் சூரர்களையும்,              அழித்துள்ளதாக    கூறப்படுகிறது. இந்த தத்துவத்தை மேல் நோட்டமாக பார்க்கக்கூடாது. அசூரர்,  அரக்கர்,  சூரர்,  எல்லோரும் மனிதனுக்குள்ளே இருக்கும் தீய குணங்களாம். இவற்றை ஒழிக்க வேண்டும் என்பதைத்தான் தத்துவார்த்தமாக கூறுகின்றனர். எங்கேயாவது நரபலியை ஆதரித்து இந்து மதத்தில் காண முடியுமா?  மக்களை காக்க வேண்டிய கடவுள் யாரையாவது நரபலி கேட்குமா? அப்படி கேட்டால் அவைகள் தெய்வமே அல்ல.
    
        பொதுவாக சுடுகாடு என்பதற்கு வெறுமை என்பதாகும். பொதுவாக கொலை செய்யும் குடும்ப வாரிசுகளும் சிறப்பாகவும், செழிப்பாகவும் இருந்தது இல்லை. ஆகவே இத்தகைய தீமையான காரியங்கள் எங்கும் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மாந்திரீகத்தை விற்கவும் முடியாது, வாங்கவும் முடியாது.

  ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருக்கு நன்மை செய்யும் கிரகங்களை செயல் படாதபடி ஆக்கி தனக்கும் எதிராளிக்கும் படுபச்சி நேரத்தை கணக்கிட்டு அஸ்டஅங்க இருதயத்தில் உள்ள பிரணவ சக்தியை எழுப்பி பஞ்ச காயம், பஞ்ச கவ்வியம், சுத்தி செய்து தனது பிராணனை கருவிற்கு கொடுத்து உயிரோட்டம் பெற வைத்து மந்திரங்களை உச்சாடனம் செய்து காரியத்தைச் சாதிக்கும் வாமசாரிகளாகிய மந்திரவாதிகளை இந்த யுகத்தில் காண்பது அரிதாகும். இவ்வாறு கூறிக் கொண்டு நான் சென்றால் முடிவில்லாத கதை ஆகிவிடும். ஆகவே மாந்திரீகம் என்று ஏமாறாதீர்கள். மாந்திரீகம் என்று ஏமாற்றாதீர்கள். நாம் அந்த யுகத்தைக் கடந்து அடுத்த யுகத்திற்கு வந்து விட்டோம். ஆகவே நாங்கள் மாந்திரீகத்தைப் பற்றி சுவையான தகவல்களுடன் இந்த வெப்சைட் ஆரம்பிக்க உள்ளோம். அதில் உலகளவில் மந்திரவாதிகளைப் பற்றியும், சில நல்ல காரியங்களைப் பற்றியும் காண்போமாக.
    
        மாந்திரீகம் பற்றிய  ஆய்வு  தான்  இந்த தளம்.  இதை வைத்து  என்னை
  மந்திரவாதி என்று  எண்ணி விடாதீர்கள். நான் ஒரு சாதாரண ஆன்மீகவாதிதான். மாந்திரீக கருத்துக்கள் வேறு ஏதும் இருப்பினும் கூறுங்கள். நாம் பரிமாறிக் கொள்வோம். இந்த பரிமாற்ற பகுதியில்  ஏதேனும் மாற்றங்கள் குறைகள் இருப்பின் கூறுங்கள். நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.

தகவல் அமைப்பு                                                ....
              பொதுவாக இந்த வெப்சைட்டை பார்க்கும் பொழுது படிப்படியாக ஒன்றுக்கு ஒன்றாக படியுங்கள். விளங்கவில்லை என்றால் ஒன்றுக்கு இரண்டு தடவை திரும்ப திரும்ப படியுங்கள். சந்தேகங்கள் இருப்பின் எங்களை அணுகுங்கள்.


           இங்குள்ள எல்லா பகுதிகளும் பெரிய மகான்கள் கூறிய கருத்தில் இருந்தும் இந்திய, மற்றும் வெளி நாட்டுச் சித்தர்கள் கூறிய கருத்துக்கள் மூலமாகவும் இந்த தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கருத்துக்கள் செவி வழியாகப் பெற்றவை பல. நூல் வழியாக பெற்றவை பல உள்ளன. இங்கு உள்ள கருத்து எனக்குரியதல்ல. இது எல்லோருக்கும் உரியது. அதற்காக இந்த கருத்துக்களை அப்படியே காப்பி செய்து உங்கள் தகவல் பகுதியில் உபயோகிக்காதீர்கள். ஏன் இந்தக் கருத்துக்களை வைத்து நீங்களே இதைக்காட்டிலும் சிறப்பாக ஏன் செய்யக்கூடாது. 

           சித்தர்கள் கருத்து, ஆகமங்கள் கூறும் கருத்து, உபநீதங்கள் கூறும் கருத்து, மகான்கள் கூறும் கருத்து, தெய்வீக நூல்களாகிய பைபிள், திருக்குரான், பகவத்கீதை, கூறும் கருத்துக்கள், உலகெங்கும் பொதுவானவை. அவற்றை உங்களுடையதாக்கி விட நினைக்காதீர்கள். எண்ணங்களை விலாசமாக்குங்கள். பலரிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய கருத்தை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். உங்கள் கருத்தைக் கூறுங்கள். தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினால் சீர்தூக்கி ஆய்ந்து முடிவெடுங்கள்.   
   தொடரும்...................
   இந்த பரிமாற்ற பகுதியில்  ஏதேனும் மாற்றங்கள் குறைகள் இருப்பின் கூறுங்கள். நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.
           
மாந்திரீக அடிப்படைத் தத்துவம்                                                                                              .
        

                                                                           .                                                            
மாந்திரீகம் என்பது எண்ணங்களின் வலிமையைக் கொண்டும் மனதின் திறமாகிய மந்திரங்கள் வைத்தும் செய்யப்படும் ஒரு அபூர்வக்கலையாகும். அவ்வாறு செய்ய விரும்புபவர் ஒரு சக்தி வாய்ந்த இருக்கவேண்டும்.  இந்த அறிய சக்தியை அவர் பிரபஞ்சத்தில் இருந்து பெறுவதற்கு சில பயிற்சிகள் தேவை. அத்தகைய பயிற்சி இல்லாதவர் ஒன்றும் சாதித்து விடமுடியாது.  
  மாந்திரிகம் அடிப்படைத் தத்துவத்தை நம் புரிந்து கொள்ளவேண்டும் என்றால் ஆன்மீகத்தை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். நாம் எல்லாம் உயிர் உள்ள அதாவது ஜீவனுள்ள ஆத்துமா இந்த ஜீவ ஆத்துமா இந்த யுகத்தில் இந்த பூமியில் வசிக்கிறது. இந்த பிரபஞ்சம் சமநிலையில் இயங்குகிறது. நன்மையும் உள்ளது தீமையும் உள்ளது. இந்த அறிய முடியாத சக்தியை அறிய ஜீவாத்துமாகிய நாம் விரும்புகிறோம். அதன் அடிப்படையில் தான் பரத்தில் (மேலே) உள்ள ஆத்துமா என்று பரமாத்துமா என்று கூறுகின்றோம். இந்த பரமாத்துமாவைத் தான் கடவுள் என்கிறோம். இந்த பரமாத்துமாவின் தேடலின் விளைவாக உருவானது தான் பற்பல கடவுள்கள். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு ஊரிலும் அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்ப தெய்வங்கள் தோன்றின. முதுமை, நோய், இறப்பு ஆகியவைகளுக்கு உட்பட்ட சில மனிதர்கள் கூட தங்களை கடவுள் என்று கூறிக்கொள்வதை பார்க்கின்றோம். அத்தகைய மனிதர்களை கடவுளாக எண்ணி வணங்கும் விந்தைக்குரிய மனிதர்களைக் கூட இன்று நாம் காண்கிறோம். பொதுவாக கடவுள் உருவாக்குதல், நடத்துதல், முடிவுக்கு கொண்டு வருதல் ஆகிய மூன்று தொழில்களைச் செய்வதை பார்க்கின்றோம். இதை இந்து மதம் முத்தொழில் என்றும், கிறிஸ்துவ மதம் திரித்துவம் என்றும் கூறுகின்றது. நாம் பயத்தின் போதும், இயலாமையின் போதும், அறியாமையின் போதும் கடவுளைத் தேடுகிறோம்.

  பொதுவாக மாந்திரீகத்தை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

  ஆன்மிகம் என்பது ஒரு தேடல் ஆகும். எல்லா மதங்களும் அந்தந்த நாட்டின் கலாச்சாரத்திற்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்ப உறுவானதாகும். எல்லா மதங்களிலும் பல ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் இருப்பினும் சில ஒவ்வாத கருத்துக்கள் உண்டு என்பதில் மாற்றம் இல்லை.

 ஆன்மீகத்தை ஆச்சாரம் என்றும் வாமச்சாரம் என்று இரு வகையாகப் பிரிக்கின்றனர். ஆச்சார தியானம் என்பது யோகிகளாலும், முனிவர்களாலும் கடைபிடிக்கப்படும் ஒரு வழியாகும். இவர்கள் பூர்வபுண்ணிய கர்மாவின் பலனையும், பிரபஞ்ச இயக்கத்தின் பலனையும் ஏற்று வாழ்பவர்கள். இவர்களுக்கு விருப்பு, வெறுப்பு கிடையாது. இவர்கள் சமநிலைவாதிகள்.

  வாமச்சாரிகள். இவர்கள் எல்லாவற்றையும் வேண்டுதல் மூலம் பிரபஞ்ச உயர் சக்தியாகிய கடவுளின் மூலம் பெற நினைப்பவர்கள். இவர்கள் வேண்டுதல் தங்கள் சுயநலத்தின் அடிப்படையில் இருக்கும். இவர்களின் வேண்டுதலை இருவகையாகப் பிரிக்கலாம். தங்களுக்கோ, மற்றவர்களுக்கோ நன்மை பெறும் பொருட்டு வேண்டுவதாகும். இவற்றை வெளிநாட்டினர் வெள்ளை மாந்திரீகம் என்பர். மற்றொன்று மற்றவர்கள் தனக்கு தீங்கு செய்பவர்களை அழிக்கும் பொருட்டு செய்யும் வேண்டுதல் மற்றும் கிரிகைகள் ஆகும். இவற்றை வெளிநாட்டினர்  கருப்பு  மாந்திரீகம் என்பர்.  இந்த இருவகை வேண்டுதலைத்தான் மாந்திரீகம் என்கிறோம்.

   ஆன்மீகத்தில் ஆச்சாரமும், மாந்திரீகமும் ஒரு காசில் உள்ள தலையும், பூவும் போன்றது. பொதுவாக மனிதன் தனக்கு நன்மை பெரும் பொருட்டு தீமை அகலவும் ஆன்மீகத்தை நாடுகிறான். ஒருவனுக்கு ஒருவர் செய்த தீமையை எதிர்க்கும் சக்தி இருந்தால் அதை எதிர்த்துப் போராடி வெற்றி அடைகிறான். அவ்வாறு இயலாதபொழுது தான் ஆன்மீகத்தை நாடுகிறான். இயலாமையும், அறியாமையும் ஒன்று சேரும் பொழுது தான் ஆன்மீக நாட்டம் உருவாகிறது. மாந்திரீகம் என்பதை இயலாமை மற்றும் அறியாமையால் வரும் பிரச்சனைகளை சீர் சீய்யவும், பாதிப்பை உருவாக்குபவர்களை பழிவாங்கவும் துடிக்கும் காரணத்தால் மாந்திரீகத்தின் கருப்பான பகுதியை நாடுகிறான். ஒருவர் தனது வசதி குறைவின்மை, நோய்நொடி களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள மாந்திரீகத்தின் வெண்மையான பகுதியை நாடுகின்றான். நாங்கள் இந்த வலைத்தளத்தில் இத்தகைய நன்மை மற்றும் தீமை செய்யும் பகுதிகளை கொடுத்துள்ளோம்.

  ஆச்சார முறை:-
இதில் தியானம், மந்திர உச்சாடானம், பூஜை, சைவ படையல் முதலியவை இருக்கும்.பொதுவாக இத்தகைய மாந்திரீகத்திற்க்கு சிவமுறைகள், சக்தி முறைகள், முருகனின் சரவண பவ மந்திர முறைகளுடன் கூடிய கோரைப்பல் இல்லாத சாந்த தெய்வத்தின் மூலம் செயல்படுத்துவது ஆகும்.
  வாமச்சாரம் முறை:-
         வாமச்சாரம் (அனுச்சார) மாந்திரீகம் என்பது ஓரிடத்திலோ, சுடுகாட்டிலோ, மந்திர உச்சாடனம் கூடியதாக இருக்கும். அங்கு அசைவ பொருள்கள் தெய்வங்களுக்கு படையலாகப் படைக்கப்பட்டு இருக்கும். கோழி, ஆடு போன்றவைகள் பலியாக கொடுக்கப்படுவது உண்டு. இத்தகைய வழிபாட்டிற்கு உக்ர தெய்வங்களான காலி, பைரவர், மாடசாமி, போன்ற பல்லுள்ள வாமசார தெய்வங்கள் மூலம் நிகழ்த்தப்படுவதாகும்.  பொதுவாக இந்த ஆச்சார வழிபாடும், வாமசார வழிபாடும் எல்லா மதங்களிலும் உள்ளது. இந்து மதத்தில் ஆச்சாரத்திற்கு என்று தெய்வங்கள் உள்ளன. உதாரணமாக பிள்ளையார், இராஜ இராஜேஸ்வரி போன்றவர்கள் ஆகும். அதே போல் துர்க்கை, வராகி, பைரவர் ஆகியவர்கள் வாமசார தெய்வங்கள் ஆகும். வாமசார தெய்வங்களுக்கு பொதுவாக கோரைப்பல் உண்டு. இத்தகைய வாமசார தெய்வங்களின் மூலம் தான் மாந்திரியங்கள் செய்யப்படுகின்றன. ஆச்சார தெய்வங்களின் மூலம் மாந்திரிகத்தால் நன்மைகள் செய்யலாம் என்று கருதப்படுகிறது. பொதுவாக இத்தகைய மாந்திரிகத்திற்க்கு கரு என்று ஒன்று தேவை. இது போன்ற விசயங்களை அடுத்துப் பார்ப்போம்.

  பில்லி:- 
     ஒருவரை உடல் ரீதியிலும் உள்ள ரீதியிலும் செயல் ரீதியிலும் ஈர்த்து மந்திரவாதி தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தனது விருப்பப்படி செயலாற்ற வைப்பதே பில்லி ஆகும்.
  சூனியம்:-
     சூனியம் என்றாலே வெறுமை என்று அர்த்தம்.அதாவது ஒருவனை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல்பாட்டிலும், பொருளாதாரத்திலும் ஒன்றும் இல்லாமல் ஆக்குவதற்கு சூனியம் என்று பெயர். சூனியத்தின் மூலம் எவருக்கும் எத்தகைய கெடுதியையும் செய்துவிடலாம், எவரை வேண்டுமானாலும் அழித்து விடலாம், கை, கால்களை முடக்கி விடலாம், சம்மந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவர் வயிற்றில் மருந்தை செலுத்தி விடலாம், கருவில் வளரும் குழந்தையை கொன்று விடலாம், கர்ப்பத்தை கலைத்து விடலாம், நோய் பிடிக்க செய்து விடலாம்... இப்படியே ஏராளமான கெடுதிகளை சூனியத்தின் மூலம் செய்து விட முடியும்.
  ஏவல்:-
      ஏவல் என்பதற்கு கட்டளை இடுதல் என்று அர்த்தமாகும். தனது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும்படி கட்டளை இடுவதற்கு ஏவல் என்று பெயர்.
  செய்வினை:-
தனது சொந்த வினையின்படி செயலாற்றும் ஒருவனை மாந்திரீக முறையில் பலவழிகளில் திசைதிருப்பி கேட்டு, அழிந்து போக வைப்பதாகும். இந்த செய்வினை பொருளாதார ரீதியிலும், உடல் ஆரோக்கிய ரீதியிலும் கஷ்டங்கள் கொடுப்பதாகும்.
  வைப்பு:-
மாந்த்ரீக ரீதியிலோ, மருத்துவ ரீதியிலோ, ஒரு பொருளைக் கொடுத்து உன்ன வைத்தோ உடலில் தடவியோ, அவர்களுக்கு உடல் ரீதியிலும்,உள்ள ரீதியிலும்,பொருளாதார ரீதியிலும் கெடுதல் செய்வதையே வைப்பு என்கிறோம். 

ஒருவருக்கு பில்லி, சூன்யம், வைப்பு, செய்வினை,  வைக்க வேண்டும் என்றால் அவருடைய ஜதகமோ புகைப்படமோ, வியர்வை நனைந்த அல்லது ரத்தம் நனைந்த துணியோ, தலை முடி, காலடி மண்ணோ, விந்தணு பட்ட துணியோ தேவைப்படும்.




 தொடரும்...................
   இந்த பரிமாற்ற பகுதியில்  ஏதேனும் மாற்றங்கள் குறைகள் இருப்பின் கூறுங்கள். நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.
           
மாந்திரீக கோட்பாடு          
                                                                                                  .

      
  மாந்திரீகத்திற்கு என்று அடிப்படை கோட்பாடுகள் உள்ளது. மாந்திரீகத்தில் மந்திரம், தந்திரம், எந்திரம் என்ற மூன்று அடிப்படையைச் சார்ந்ததாக உள்ளது. மந்திரம் என்பதை மந்திரம் என்ற பகுதியில் சிறப்பாக விளக்கியுள்ளோம். இந்திய மாந்திரீகத்தில் பில்லி, சூனியம், ஏவல், மறைப்பு, வைப்பு மற்றும் அஸ்டகர்மங்கள் கூடிய அங்கமாக உள்ளது. தற்கால அறிவியல் இவற்றை மூடத்தனம் என்று கூறினாலும் உலகால் அறியப்படாத பல விசயங்களை அறிவியல் கண்பிடிக்க முடியாமல் இருக்கிறது.

           இன்று அறிவியலாக இருப்பது நாளை அறிவியலாக இருப்பதில்லை. அதேபோல் ஆன்மீகமும் பல இடங்களில் ஆன்மீகமாக இருப்பதில்லை.  உண்மையில் ஆன்மீகமும்,அறிவியலும் எப்பொழுது ஒரு தேடலாகவே அமைகிறது. இத்தகைய மாந்திரீகத்திற்கு என்று தனிக்கோட்பாடுகள் உள்ளது. இத்தகைய கோட்பாடுகளை இங்கு பார்ப்போம். 

     மாந்திரீகம் என்பது எண்ணங்களின் வலிமையைக் கொண்டும் மனதின் திறமாகிய மந்திரங்கள் வைத்தும் செய்யப்படும் ஒரு அபூர்வக்கலையாகும். அவ்வாறு செய்ய விரும்புபவர் ஒரு சக்தி வாய்ந்த இருக்கவேண்டும்.  இந்த அறிய சக்தியை அவர் பிரபஞ்சத்தில் இருந்து பெறுவதற்கு சில பயிற்சிகள் தேவை. அத்தகைய பயிற்சி இல்லாதவர் ஒன்றும் சாதித்து விடமுடியாது.  உடலில் இயங்குதசை,இயக்குதசை, இயங்காதசை, இயங்கிஇயக்குதசை என்று  நான்கு வகையுண்டு. இந்த நான்கையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர் தான் பிரபஞ்ச சக்தியை பெறமுடியும்.

  இயங்குதசை:- இருதயம் ஒரு இயங்குதசையாகும். அது எப்பொழுதும் துடித்துக் கொண்டே இருக்கும். அதன் வேகத்தை இயற்கைக்கு ஏற்ப கட்டுப்படுத்துவது தியானமாகும்.

  இயக்குதசை:- கை, கால், கண், வாய் ஆகியவைகள் இயக்குதசையாகும். இவைகள் நமது எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படுபவை. கால்களை ஆசனங்கள் மூலம் ஒருமைப்படுத்துவதும், கைகளை முத்திரைகள் மூலம் ஒருமைப்படுத்துவதும் வேண்டும்.

  இயங்கி இயக்கு தசை:- நம் உடம்பில் உள்ள சில தசைகள் இயங்கவும் செய்யும், நம் இயக்கத்திற்கும் கட்டுப்படும். உதாரணமாக  நம் மூளையை சொல்லலாம்.

    பொதுவாக ஒரு மனிதன் தன் முயற்சியால் ஒரு நிலத்தை தோண்டி அதில் விதையை விதைக்கிறான். அந்த விதை முளைப்பதற்கு அவனுடைய சக்தியோ, அல்லது அறிவியல் சக்தியோ உபயோகப்படாது. அதற்கு ஒரு மறைமுக பிரபஞ்ச சக்தி தேவை. அந்த மறைமுக உயர் பிரபஞ்ச சக்தியை தான் கடவுள் என்கிறோம். கடவுளின் தன்மையை முப்பரிமாணத்தில் காணப்படுகிறது. கடவுள் உருவாக்குகிறார்,நடத்துகிறார். முடிவிற்கு கொண்டு வருகிறார். இம்மூன்றும் கடவுளின் வேலையாக கூறப்படுகிறது. இம்மூன்று தொழிலைச் சார்ந்து மனிதனின் வேண்டுதல் அமைகிறது. அந்த வேண்டுதல் நன்மையைக் கொடுப்பதாகவும், தீமையை உருவாக்குவதாகவும் அமையலாம்.

   மாந்திரீக தாந்திரியங்கள்:-
           தாந்திரியங்கள் என்ற உடன் இரண்டு நிகழ்வுகள் உள்ளன. அவற்றில் ஒன்று கைபிரட்டு வேலை அடுத்தது தாந்திரிக வழிபாட்டு மூலம் தெய்வங்களை தன் வழிக்கு கொண்டு வந்து செயல்படுத்த வைக்கும் விதமாகும்.

  தந்திர கைபிரட்டு வேலை:-
           ஒரு மந்திரவாதி தன்னை நம்புவதற்காக அவர்கள் செய்யும் தந்திர ஜாலங்கள் ஆகும். இவை தனது கூறிய அறிவின் மூலமாக அடுத்தவர்களை ஏமாற்றும் ஜாலமாகும். வாயில் லிங்கம் வரவழைப்பதில் இருந்து ரோட்டில் வித்தை காட்டும் தந்திரவாதி செய்யும் பல காரியங்கள் இந்த கைபிரட்டைச் சார்ந்ததாக அமைகிறது. சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் இத்தகைய கைபிரட்டுகள் ஒரு பயத்துடன் கூடிய நம்பிக்கையை உருவாக்குகிறது. உதாரணமாக ஒருவர் மந்திரவாதி கொடுத்த பழத்தை உரித்த பொழுது அந்த பழம் துண்டுதுண்டாக பிரிந்து விழுந்ததை கண்டு ஆச்சரியப்பட்டார். அதை உருவாக்க அந்த மந்திரவாதி அந்த முழு பழத்தை முன்னாலே ஒரு ஊசியைப் பழத்தில் குத்தி அந்த பழத்தை முழுசாக வைத்தே அறுத்துவிட்டார். இதேபோன்று பல வித்தைகள் உண்டு. திருநீர் வரவழைப்பது, வாயிலிருந்து இரத்தம் கக்க வைப்பது,கையில் பூ வரவழைப்பது போன்றவையாகும்.
  
  தந்திரயோகம்:- 
         தந்திர யோகத்தின் மூலம் தெய்வீக சக்தியை எளிதில் அடைவதற்கு உரிய தந்திரமுறைகள் ஆகும். சிவ அம்சத்தில் திரு மந்திரம் என்ற தமிழ் நூலில் பஞ்ச அச்சரங்களைக் கொண்டு எவ்வாறு ஆன்மீக சக்தியைப் பெறலாம் என்று 24வகை தந்திர முறைகள் உள்ளன. மகாமேரு உபாசனையும் ஒரு தந்திர முறையாகும். குலத்தந்திரம், ஊதாபுத்தர் தந்திரம் போன்ற பல தந்திர முறைகள் உள்ளன. இவைகளில் சிறந்தது சிவ அச்சர தந்திரமும், மகாமேரு தந்திரமும் ஆகும். சிவ அச்சர தந்திரமாகிய சிவாயநம என்ற ஐந்து அச்சரங்களும் நமது உடலில் உள்ள ஐந்து விதமான சக்தியின் கேந்திரமாகும். 

   கடவுள் உருவாக்குகிறார்:-
         மனிதன் தனக்கு வாரிசாக ஒரு குழந்தை உருவாக வேண்டும் என்று எண்ணுகின்றான். அதே நேரத்தில் அதிகம் குழந்தை உள்ளவனோ தனக்கு குழந்தை தேவை இல்லை என்று எண்ணுகின்றான்.

கடவுள் வழி நடத்துகிறார்:
        கடவுள் வழி நடத்துவது தனக்கு பொருளாதாரத்தில் சிறப்பான வழி  நடத்தல் தேவை என்று நினைக்கின்றான். வேறு சிலரோ அமைதியான மன நிறைவான வாழ்க்கை தேவை என்று நினைக்கின்றான்.

முடிவிற்கு கொண்டு வருகிறவர்:
         பல நல்ல காரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியவேண்டும் என்று எண்ணுகிறவர்கள் உண்டு. அதே நேரத்தில் தீய காரியங்கள் தீமையாக முடிவிற்கு வராமல் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறவர்களும் உண்டு.
    
  அறியாமை,இயலாமை, பய உணர்வுகள், பேராசை ஆகியவைகள்மனிதன் கடவுளைத் தேடும் காரணங்களாக அமைந்துள்ளது.
  
   இதேக் காரணங்கள் மாந்திரீகத்தின் மீதும் நாட்டம் அடையச் செய்கிறது. ஆன்மிகம் என்பது ஒரு சரியானத் தேர்வு. மாந்திரீகம் கூட ஆன்மீகத்தின் ஒரு அங்கம் என்று கூறலாம். இத்தகைய மாந்திரீகத்தில் இரண்டு வகையான வேண்டுதல்கள் உள்ளன. ஒன்று ஒருவர் சுகமடைய வேண்டும் என்று வேண்டுதல். இது நன்மையைச் சார்ந்த வேண்டுதல் ஆகும். ஒருவர் நோய்வாய்ப்பட வேண்டும் அல்லது வறுமை அடைய வேண்டும் என்ற தீமையான காரியங்களைச் செய்வது ஒரு வகையாகும். தான் விரும்பியப் பெண்ணை அடைய வேண்டும் போன்ற காரியங்களை அடைய விரும்புவது மூன்றாவது வகையாகும். பொதுவாக மாந்திரீகம் என்பது ஒருவரின் விருப்பு வெறுப்பைச் சார்ந்தே இருக்கும்.
   

        தொடரும்...................




 தாந்திரீகம் என்பது ஆன்மீக அருளை எளியமுறையில் பெறுவதற்காக செய்யப்படும் தாந்திரீக முறைகளாகும். பொதுவாக இந்த முறை இந்தியாவில் தோன்றினாலும் உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. இந்து மதத்திலிருந்து பௌத்தமதத்திலும் தாந்திரீக முறை கையாளப்படுகிறது. இது முற்றிலும் மாறுபட்ட ஒரு முறையாகும். இது கூர்மையான கத்தியில் நடப்பதற்கு சமமாகும். இந்த தாந்திரீக முறையில் காமம் ஒரு அடிப்படைக் கருவாக வைத்து செயல்படுவதாகும். இதில் பஞ்ச மகரங்கள் அடிப்படையாகக் கொண்டவை. 1-வது ம, மது, 2-வது ம், மாமிசம். 3-வது ம, முத்திரை, 4-வது ம, மைதுனம், 5-வது ம, மச்சமாகும்.
      இந்த வழிப்பாட்டில் பெண் தெய்வங்களையே அடிப்படை தெய்வங்களாக கொண்டுள்ளனர். இந்த தாந்திரீக யோகத்தை பற்றி நான் அதிகம் கூற விரும்பவில்லை. ஏனெனில் இதை அரைகுறையாக தெரிந்து தங்களின் ஆன்மீக அருள் உணர்வை இழந்துள்ளனர். சிலர் சித்தத்தை பிரம்மத்தில் வைக்காது பிரம்மையில் வைத்து சித்த பிரமையாகி உள்ளனர். இந்த தாந்திரிக முறையானது உணர்வு பூர்வமாக செய்யும் முறை, மற்றொன்று செயலாக்கும் முறையில் செயல்படுவதாகும்.
     உணர்வு பூர்வமாக செய்வதில் குலத் தந்திரம், சக்தி தந்திரம்,  குண்டலனி தந்திரம், லெட்சுமி தந்திரம், போன்றவை முக்கியமானவையாகும். இதைப்பற்றி சிறிது காமமும், மாந்திரிகமும், என்ற பகுதியில் கூறியுள்ளோம். உணர்வு பூர்வமாக பிந்து கோணத்தை மந்திர சக்தியின் மூலம் விழிப்படையச் செய்து சக்தியைப் பெறும் முறையாகும். இது பொதுவாக எல்லோரும் தன்னம்பிக்கையுடன் செய்து வெற்றி பெறலாம்.
     இருப்பினும் தாந்திரீக செயலாக்கம் முறையில் ஆண், பெண் கலவியல் சார்ந்ததாக உள்ளது. இதைப் திருமூலர் தமிழில் பரியங்கயோகம் என்று கூறுவர். வடநாட்டில் இத்தகைய தாந்திரீக முறை அதிகம் கையாளப்படுகிறது. இத்தகைய ஆண்,பெண் செயற்கையுடன் கூடிய சக்தியை முதுகுத் தண்டின் வழியாக ஆக்கினைக்கு கொண்டு வந்து அதி தீவிர சக்தியைப் பெறுவதற்கு வழியுண்டு. இதற்கு என்று ஆண்,பெண் கலவையுடன் கூடிய ஆசனங்கள் உள்ளன. மந்திரங்கள் உள்ளன. கிரிகைகள் உள்ளன. முத்திரைகள் உள்ளன.
           ஆகவே இவற்றை அரைகுறையாக தெரிந்து கொண்டு பயிற்சியில் ஈடுபடாதீர்கள். அரைகுறை பயிற்சியால் சர்வ நாசம் உண்டாகும். வெளி நாட்டினர் கூறும் பல முறைகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. பௌத்த மதத்திலும் இத்தகைய வழிமுறைகள் பின் தோன்றி உள்ளன. சிவப்பு புத்த தந்திரம், மஞ்சள் புத்த தந்திரம் என்று பல தந்திரங்கள் உள்ளன. இத்தகைய தந்திரங்களை ஒதுக்கி உணர்வு பூர்வமான மகாமேரு தந்திரங்கள் போன்ற உணர்வு பூர்வ தந்திரங்களைச் செய்து வெற்றி பெறுவதே சிறப்பாகும். 

   தொடரும்...................
   இந்த பரிமாற்ற பகுதியில்  ஏதேனும் மாற்றங்கள் குறைகள் இருப்பின் கூறுங்கள். நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.
           

                                    .
    

                                                     
                          ..

No comments:

Post a Comment