For Read Your Language click Translate

31 May 2014

GBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது? ஏன்? எப்படி?

Nature writing in Tamil
Great Backyard Bird Count (GBBC) எனும் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு இந்தியாவில் இரண்டாவது ஆண்டாக நடைபெற உள்ளது. 2014 பிப்ரவரி மாதம் 14 முதல் 17 வரையில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும்.
காகம் House Crow
காகம் House Crow
இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமாக ஒரே வேளையில் நடைபெறும் ஒரு மாபெரும் நிகழ்ச்சி. சென்ற ஆண்டு (2013) இந்தியா முழுவதிலிருந்தும் 202 பேர் பங்கு பெற்றனர். 438 பறவைப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு இணையத்தில் உள்ளிடப்பட்டன, 537 பறவை வகைகள் கணக்கிடப்பட்டன. 80283 பறவைகள் எண்ணப்பட்டன. அதிகமாக பார்க்கப்பட்ட/கணக்கிடப்பட்ட பறவைகள்: மைனா, காகம், கரும்பருந்து, மாடப்புறா, கொண்டைக்குருவி, பச்சைக்கிளி, கரிச்சான் குருவி முதலியன (மேலும் விவரங்களுக்கு காண்க PDF).
மைனா (நாகணவாய்) Common Myna
மைனா (நாகணவாய்) Common Myna
உலக அளவில் 137998 பறவைப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு இணையத்தில் உள்ளிடப்பட்டன, 4258 பறவை வகைகள் அவதானிக்கப்பட்டன, எண்ணப்பட்ட மொத்தப் பறவைகள் 33464616! (மேலும் விவரங்களுக்கு இப்பக்கத்தைக் காண்க).
GBBC Countries 2013 (Source: http://gbbc.birdcount.org/)
GBBC Countries 2013 (Source: http://gbbc.birdcount.org/)
இதைச் செய்வது எதற்காக?
உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை வைத்து அதற்கான காரணங்களைக் கண்டறியவும் முடியும்.
இது போன்ற நீண்ட காலத் திட்டங்களின் முடிவுகள் பறவைகளின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. உதாரணமாக பூமிவெப்பமடைவதால் (Global Warming) எந்த அளவிற்கு பறவைகள் பாதிப்படைகின்றன என்பன போன்ற கேள்விகளுக்கு விடையறிய முடியும். பல்லுயிர் பாதுகாப்பிற்கு இத்தகைய நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகள் பேருதவியாக இருக்கும். இந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு ஏற்றவாறு நாம் உயிரினங்களின் வாழிடங்களுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
இதன் மூலம் நாம் வாழும் இப்பூமியின் சூழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக வலசை வரும் பறவைகளை ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை (climate change) கணிக்க முடியும்.
இது போன்ற உலகளாவிய, நாடுதழுவிய கணக்கெடுப்பின் மூலம் சில பறவைகளின் பரவலை வெகு விரைவில் அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக சிட்டுக் குருவிகள் அழிந்து வருகின்றன என்கிற ஒரு (தவறான) செய்தியை பலரும் சொல்லி வந்த நிலையில், நடத்தப்பட்ட நாடு தழுவிய citizensparrow எனும் திட்டத்தின் மூலம் (2012, 1 ஏப்ரல் -15 ஜூன் வரை) இணைய கணக்கெடுப்பு (online survey) நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சி முடிவின் வாயிலாக சிட்டுக்குருவிகள் இந்தியாவில் பல இடங்களிலும் பரவியிருப்பதும், பல இடங்களில் நல்ல எண்ணிக்கையில் இருப்பதும், குறிப்பிட்ட ஓரிரு மாநகரங்களில் அருகி வருவதும் தெரிய வந்தது. இந்தத் திட்டத்தின் ஆராய்ச்சி முடிவுகளை இங்கே காணலாம்.
See www.citizensparrow.in for more details
See http://www.citizensparrow.in for more details
மக்கள் அறிவியல் (citizenscience)
இது போன்ற நாடு தழுவிய கணக்கெடுப்பை ஓரிரு ஆராய்ச்சியாளர்களாலோ, பறவையியலாளர்களாலோ, விஞ்ஞானிகளாலோ நட்த்துவதென்பது முடியாத காரியம். ஆகவே தன்னார்வமுள்ள, இயற்கை பாதுகாப்பில் நாட்டமுள்ள பொதுமக்களின் உதவியும் அவசியம். இதுபோன்ற அறிவியல் துறைகளில் பொதுமக்களின் பங்களிப்பில் நடைபெறும் திட்டங்களை மக்கள் அறிவியல் (citizenscience) என்பர்.
மக்கள் விஞ்ஞானி (citizenscientist)
இந்தியாவில் இது போன்று சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை கணக்கெடுத்தல் 2012ல் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இன்னொரு திட்டம் வலசைவரும் பறவைகளின் அவதானிப்பு (migrantwatch.in). seasonwatch எனும் திட்டம் பல்வகையான மரங்கள் பூப்பூக்கும், காய்க்கும் வேளைகளை பதிவு செய்கிறது. தற்போது நடைபெறவுள்ளது ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC). இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவரும் மக்கள் விஞ்ஞானி (citizen scientist) ஆவர்.
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC)
இக்கணக்கெடுப்பிற்கு மக்கள் விஞ்ஞானியான நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1. இந்தக் கணக்கெடுப்பை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஓரிடத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்காவது பறவைகளைப் பார்த்து எண்ணி குறித்துக்கொள்ள வேண்டும்.
2. பார்க்கும் பறவைகளை அடையாளம் கண்டு அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடுங்கள். (எ.கா: 5-சிட்டுக்குருவி, 2-காகம், 3 – மைனா). மிகப் பெரிய பறவைக்கூட்டங்களை எண்ணுவது அவ்வளவு எளிதல்ல. எனினும், உங்களால் முடிந்த அளவிற்கு சரியாகக் கணிக்கவும் (எ.கா: சுமார் 20-30 உண்ணிக்கொக்கு, 10-15 தகைவிலான்கள்).
3. நீங்கள் ஒவ்வொரு நாளும் (14-17 பிப்ரவரி) கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பட்டியல், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்ட பட்டியல் மற்றும் ஒரு நாளில், ஒரே இடத்திலிருந்து, வெவ்வேறு நேரங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பறவை பட்டியல்  (அல்லது பட்டியல்களை) eBird இணையதளத்தில் சமர்ப்பிக்கவும்.
 பறவைகளை உங்கள் வசதிக்கு ஏற்ப எங்கு வேண்டுமானாலும் பார்த்து கணக்கிடலாம்
பறவைகளை உங்கள் வசதிக்கு ஏற்ப எங்கு வேண்டுமானாலும் பார்த்து கணக்கிடலாம்
eBird இணையதளம்
ஒரு வேளை ebird இணையத்தில் நீங்கள் பதிவு செய்யாமல் இருந்தால் உடனே உங்களது பெயரிலோ அல்லது உங்களது நிறுவனத்தின் பெயரிலோ அல்லது குழுவின் பெயரிலோ பதிவு செய்து கொள்ளுங்கள்.
பறவைப் பட்டியலை இணைய தளத்தில் உள்ளீடு செய்தல்
இணைய தளத்தில் உங்களை பதிவு செய்து கொண்டவுடன் நீங்கள் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்ட இடத்தை கூகுள் வரைபடத்தில் (Google Map or Google Earth) கண்டறியவும். ஒரு வேளை அந்த இடத்தின் அட்சரேகை/தீர்க்கரேகை (latitude/longitude) தெரிந்திருந்தால் அதன் மூலமாகவோ, ஊரின், தெருவின் அடையாளங்களை வைத்து கூகுள் வரைபடத்தில் பறவைகள் பார்த்த இடத்தைக் குறித்துக் கொள்ளவும்.
நேரமும், நாளும், பறவை கணக்கிடல் முறையும்
பறவைகளைக் கணக்கிட எடுத்துக் கொண்ட நேரத்தையும் குறித்தல் வேண்டும். பறவைகளை பார்க்க ஆரம்பித்த நேரம், அதை செய்து முடித்த நேரம், பறவைகள் கணக்கிடலில் பங்கு கொண்டது எத்தனை பேர் முதலிய விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பறவைகள் கணக்கிட்ட நாளையும், அதைச் செய்த முறையையும் பதிவு செய்தல் வேண்டும்.
நீங்கள் பறவைகளை பொதுவாக மூன்று வகைகளில் பார்த்து கணக்கிட்டிருக்கக்கூடும்.
பயணித்துக்கொண்டு (Travelling) – ஓரிடத்தில் நில்லாமல் நடந்து கொண்டோ, அல்லது வண்டியில் பயணித்துக் கொண்டோ பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ. கா: பூங்காவிலோ, காட்டுத் தடத்திலோ, ஏரி ஓரமாகவோ நடந்து சென்று அல்லது இரயிலில், பஸ்ஸில், காரில் பயணித்துக் கொண்டு பறவைகளை பார்த்து கணக்கிடுதல்). எவ்விதமாக பயணித்தாலும் பறவை பார்த்தலும், கணக்கிடுதலும் உங்கள் முக்கியப் பணியாக இருத்தல் வேண்டும்.
ஒரிடத்தில் நின்று கொண்டு (Stationary)- ஓரிடத்தில் நின்று கொண்டு உங்களைச் சுற்றியுள்ள பறவைகளைப் பார்த்து கணக்கிடுதல். (எ.கா: உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு, குளக்கரையில் நின்று கொண்டு, பேருந்திற்காகக் காத்திருக்கும் வேளையில்).
தற்செயல் நிகழ்வு (Incidental) – பறவை பார்த்தலும் அதைக் கணக்கிடுதலும் உங்கள் முக்கிய பணியாக இல்லாமல், வேறு வேலை செய்து கொண்டிருக்கும் போதோ, பயணித்துக் கொண்டிருக்கும் போதோ (வீட்டிலிருந்து பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ, நடைபழக பூங்காவிற்கோ செல்லும் போது), தற்செயலாக பார்த்த பறவைகளை தோராயமாகக் கணக்கிடல்.
உங்களது பறவைப் பட்டியலை உள்ளிடுதல்
நீங்கள் பார்த்து, கணக்கிட்ட பறவைகளை ebird வலைதளத்தில் உள்ளிட்டு பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் இப்போது ஒரு மக்கள் விஞ்ஞானி!
இயற்கையின் மீதும் பறவைகளின் மீதும் கரிசனம் கொண்ட நீங்கள் செய்யப்போகும் இந்த மகத்தான பணியினை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிந்துரைத்து அவர்களையும் பங்குபெறச் சொல்லுங்கள்.
———-
ஊர்புறப் பறவைகள் கணக்கெடுப்பிற்கு உதவும் சில ஆதார வளங்கள்:
2014GBBC_PPT_TAMIL
உங்கள் குழுவினருக்கும், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஊர்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC) பற்றிய இந்த காட்சியளிப்பை (Presentation) தரவிறக்கம் (PDF)செய்து கொண்டு அவர்களுக்கு விளக்கமளிக்கவும். Arial Unicode MS எழுத்துருவை (Font) பயன்படுத்தவும்.
இதே காட்சியளிப்பை படமாக (Image) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
eBird Introduction_Tamil
eBird இணையதளத்தில் உங்களது பறவைப்பட்டியலை உள்ளிடும் வழிமுறைகளை அறிந்து கொள்ள இந்த காட்சியளிப்பை தரவிறக்கம்  (PDF) செய்து கொள்ளவும். இதே காட்சியளிப்பை படமாக (Image) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
Some Tamil Nadu Birds
தமிழ்நாட்டில் பரவலாகத் தென்படும் சில பொதுப்பறவைகளை அறிந்து கொள்ள/அடையாளம் காண, பறவைகளைப் பற்றிய தமிழ் நூல்களைப் பற்றி அறிந்து கொள்ள, இந்த காட்சியளிப்பை தரவிறக்கம் (PDF)செய்து கொள்ளவும். இதே காட்சியளிப்பை படமாக (Image) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
 eBird ன் மொபைல் அப்ளிகேஷன் (Smart phone App)  http://bit.ly/1b9xcZ4 (2014 Feb 17 ம் தேதி வரை இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்)
eBird உதவிப் பக்கம் (http://help.ebird.org/).
eBird ஐ முகநூலிலும் (Facebook) ட்விட்டரிலும் (Twitter) கூட காணலாம்.
இந்தியப் பறவைகள கணக்கெடுப்புத் திட்டம் (BirdCount India) குறித்து மேலும் அறிந்து கொள்ள அதன் Google group, Facebook, Twitter பக்கங்களுக்குச் செல்லவும்.
இந்திய பறவை கணக்கெடுப்புத் திட்டம் பற்றிய கேள்விகள் ஏதுமிருப்பின் தொடர்பு கொள்க
Email: birdcountindia@gmail.com

மரம் பார்ப்போம், மரம் காப்போம் !- JOIN US AT treesindia.in


campaing_banner
இந்தியா முழுவதும் ஏப்ரல் 22 முதல் (உலக பூமி தினத்தன்று) தொடங்கவுள்ளது இந்த மரம் பார்க்கும் திருவிழா. இதில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கு பெறலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1. உங்கள் வீட்டிலோ, வீட்டின் அருகிலோ, தெருவிலோ, நீங்கள் நடைபழகச் செல்லும் பூங்காவிலோ, பள்ளியிலோ உள்ள மரங்களைப் பாருங்கள். இந்த இடங்களில் தான் என்று இல்லை, உங்களுக்கு எங்கு விருப்பமோ, வசதியோ அங்கெல்லாம் கூட பார்க்கலாம்.
2. மரங்களின் இருப்பிடத்தை இடங்காட்டியிருந்தால் (Global Positioning System – GPS) அதன் மூலம் குறித்துக்கொள்ளவும். இல்லையெனில் கூகுள் வரைபடத்தில் (Google Earth or Wikimapia or Google Maps) உங்களது மரம் அல்லது மரங்களின் இருப்பிடத்தைக் குறித்து அந்த இடத்தின் அட்ச ரேகை/தீர்க்க ரேகையை (Latitude/Longitude) குறித்துக்கொள்ளவும். (தற்போது இடங்காட்டிகள் பல கைபேசிகளில் கூட உள்ளது)
3. உங்களிடம் கேமிரா இருந்தால் நீங்கள் பார்க்கும் மரத்தை புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். (மரத்தைப் புகைப்படமெடுக்கும் முறையை விரிவாகக் காண இங்கே சொடுக்கவும்)
4. ஒருவேளை உங்களிடம் காமிராவோ, இடங்காட்டியோ இல்லையென்றாலும் பரவாயில்லை. நீங்கள் மரம் பார்க்கும் இடத்திலுள்ள மரத்தின் வகைகளையும் அவற்றின் எண்ணிக்கையையும் பட்டியலிடவும்.
5. அதன் பின் இந்தியப் பல்லுயிரிய வலைவாசலின் (India Biodiveristy Portal) ஒரு பகுதியான இந்நிகழ்ச்சியில் பங்கு பெற இந்தியமரங்கள் பக்கத்திற்குச் சென்று உங்களைப் பதிவு செய்து கொண்டு நீங்கள் சேகரித்த தகவல்களை உள்ளீடு செய்யவும்.
6. உங்களது பதிவுகளை உள்ளீடு எப்படிச் செய்வதென்பதை விளக்கும் படக்காட்சிகளை இப்பக்கத்தில் காணலாம்
7. உங்களது மரத்தைப் பற்றிய ஏதேனும் சுவையான செய்தி இருந்தாலும் இந்த வலைவாசலில் உள்ள ஏனைய உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
8. இந்த மரம் பார்க்கும் நிகழ்ச்சியை நீங்கள் ஒருவர் மட்டுமே தனியாகவும் செய்யலாம், உங்கள் நண்பர்களுடன் ஒரு குழுவாகவோ, சக மாணவர்களுடனோ, உங்களது குடும்ப உறுப்பினர்களுடனோ சேர்ந்தும் செய்யலாம். நீங்கள் பள்ளி ஆசிரியராக இருந்தால் உங்கள் மாணவர்களுக்கு இந்நிகழ்வினைப் பற்றி எடுத்துச் சொல்லி பங்கு பெற ஊக்கப்படுத்தலாம். ஒரு வேளை நீங்கள் ஒரு தன்னார்வ அமைப்பின் அங்கத்தினராக இருந்தால் உங்களது உறுப்பினர்களுடன் சேர்ந்து மரம் பார்க்கும் நடை பயணத்தினை நடத்த ஏற்பாடு செய்யலாம். ஒருவேளை நீங்கள் மரங்களை அடையாளம் காணுவதில் தேர்ச்சி மிக்கவராக இருந்தாலும், உங்களை பதிவு செய்து கொண்டு மற்றவர்களுக்கு உதவலாம்.
இந்தத் திட்டத்தின் நோக்கம்
நிழலையும், உயிர் வளியையும் நமக்களிக்கும் மரங்களின் கொடையினை நாம் அனைவரும் உணர வைப்பதும், இந்தியா முழுவதிலும் உள்ள மரங்களை ஆவணப்படுத்துவதும், மரங்களைப் பற்றிய தரவுகளை அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் சேமித்து ஒரு பொதுத் தளத்தில் வைப்பதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மரம் பார்ப்போம், மரம் காப்போம் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதால் யாருக்கு என்ன பயன்?
ஒரு வேளை நீங்கள் பார்த்த மரத்தின் பெயர் உங்களுக்குத் தெரியவில்லையென்றாலும் நீங்கள் அம்மரத்தின் படத்தை உள்ளீடு செய்யலாம். வலைவாசலில் ஏற்கனவே பதிவு செய்துள்ள தாவரவியலாளர்கள், உறுப்பினர்கள் உங்களது மரத்தை அடையாளம் காண உதவுவார்கள். இதன் மூலம் நீங்களும் உங்களது மரங்களைப் பற்றி மேலும் பல சுவையான தகவல்களை அறிந்து பயனடைவீர்கள்.
இந்தியா முழுவதும் பலர் இதில் பங்கு பெற்றால் எந்தெந்த ஊர்களில் எவ்வகையான மரங்கள் உள்ளன, எத்தனை உள்ளன என்பதை அறிய முடியும். இது ஒரு முக்கியமான ஆவணமாக அமையும். இந்தியாவில் சுமார் 7500 வகையான மரங்கள் உள்ளன. இவையனைத்தின் பரவலையும், தற்போதைய நிலையையும் ஆவணப்படுத்துவது அவசியம்.
நீங்கள் தினமும் பார்க்கும் உங்களது மரங்களின் புகைப்படத்தையோ, அவற்றின் இருப்பிடத்தையோ, மரங்களின் பட்டியலையோ இந்த வலைவாசலில் உள்ளீடு செய்வதன் மூலம் உங்களது மரங்களின் பாதுகாப்பிற்கு உதவமுடியும்.
ஓரிடத்தில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை, பட்டியலை தயாரித்து அவற்றின் படங்களை, அமைவிடத்தை (location) பதிவு செய்து வைத்துக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் அந்த இடத்தில் மரங்கள் அதிகரித்துள்ளதா, குறைந்து போனதா என்பதை அறிய முடியும்.
நாளுக்கு நாள் ஊர்ப்புறங்களிலும், நகரங்களிலும் சாலை விரிவாக்கம் முதலிய காரணங்களால் மரங்கள் அருகி வரும் இந்நிலையில் இது போன்ற ஆவணப்படுத்தும் செயல்கள் மிகவும் அவசியம். இந்திய பல்லுயிரிய வலைவாசலில் உள்ள படங்கள், பட்டியல்கள் அனைத்தையும் பொதுமக்கள் அனைவரும் எளிதில் இலவசமாக தரவிரக்கம் செய்து கொள்ள முடியும். இது போன்ற ஆவணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் சேமித்து வைப்பதன் மூலம் இயற்கை ஆர்வலர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், ஆர்வமுள்ள பொதுமக்கள்  அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
ஒரு மரத்தின் பூ பூக்கும், காய் காய்க்கும் காலத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் கண்காணித்து ஆவணப்படுத்தி வருவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியிலும், உலக அளவிலும் ஏற்படும் கால நிலை மாற்றத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். மேலும் விவரங்களுக்கு seasonwatch எனும் இந்த திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்க.
இதையெல்லாம் ஓரிரு ஆர்வலர்களோ, ஆராய்ச்சியாளர்களோ மட்டுமே செய்து முடிக்கக்கூடிய காரியம் அல்ல. மரங்களின் பால் பற்று கொண்ட பொதுமக்களின் உதவியும் தேவை. இது போன்ற மக்கள் அறிவியல் (citizen science) திட்டங்களில் பங்கு கொள்வது விஞ்ஞானிகளுக்கும், அறிவியலுக்கும் பொது மக்களும் பங்களிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
மேலும் விவரங்கள் அறிய treesindia@indiabiodiversity.org க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
NeighborhoodTreesCampaign_700

மணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…


அண்மையில் மரங்கள்: நினைவிலும் புனைவிலும் எனும் நூலினை படித்தேன். தாம் கண்டு வியந்த, தம் வாழ்வில் ஒன்றிப்போன மரங்களைப் பற்றி பல எழுத்தாளார்கள் எழுதிய கட்டுரைத் தொகுப்பே இந்நூல். தொகுத்தவர் மதுமிதா. இந்நூலில் அவர் “மனோரஞ்சிதம்” எனும் கட்டுரையையும் எழுதியுள்ளார். இந்த நூலைப் படிக்கும் போது, மனிதனின் வாழ்வில் மரங்கள் பல வகையில், பல நிலைகளில் நிறைந்திருக்கிறது என்பது புலனாகும்.
இந்நூலில் இருந்த பல கட்டுரைகள் பிடித்திருந்தாலும், என்னைக் ஈர்த்தது “மனோரஞ்சிதம்”. இதைப்படித்தவுடன் இத்தாவரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. மதுமிதாவின் விளக்கத்தை படித்த போது இது மரமல்ல, ஒரு வகை புதர் அல்லது கொடி என்பது புரிந்தது. இத்தாவரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்க அப்பாவிடமும், பெரியப்பாவிடமும் மனோரஞ்சிதம் பற்றி கேட்டேன்.
உடனே அப்பா, மோகன் மாமாவிடம் அதை சொல்லியிருகிறார். தஞ்சாவூரில் இருக்கும் மோகன் மாமாவுக்கு பல வித தாவரங்களை வளர்ப்பதில் அதீத ஆர்வம். நான் சிறு வயதில் தஞ்சையில் இருந்த போது ஹவுசிங் யூனிட்டில் இருந்த விசாலமான தோட்டத்திற்கு மத்தியில் அமைந்திருந்திருக்கும் அவரது வீட்டிற்குப் போவதுண்டு. அழகான சிறிய ஓட்டு வீடு. சுற்றிலும் பல பூஞ்செடிகள், கொடிகள், மரங்கள், நிறைந்த அழகான தோட்டம். அவர் தோட்டக்கலையில் வல்லவர். அவரிடன் இச்செடி பற்றி கேட்டவுடனேயே அப்பாவை அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர் கொடுத்து நட்டு வைத்த மனோரஞ்சிதத்தை காட்டியிருக்கிறார். அப்பாவும் அவரது கேமிராவில் அத்தாவரத்தினை படமெடுத்து மின்னஞ்சலில் அனுப்பினார்.
மனோரஞ்சிதம் செடியும் இளம் மலர்: Photos M Panchapakesan
மனோரஞ்சிதம் செடியும், இளம் மலரும், காய்த்திரளும் : Photos: M. Panchapakesan
மரங்கள் நூலை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சென்னையில் வசிக்கும் எனது கார்த்தி பெரியப்பா. அண்மையில் அவரது வீட்டிற்குச் சென்றிருந்த போது எதிர்வீட்டில் மனோரஞ்சிதம் இருப்பதாகச் சொல்லி என்னை அங்கு கூட்டிச் சென்றார். மனோரஞ்சித்தை பார்க்க/நுகர வேண்டுமென எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தது அன்று நிறைவேறியது.
மனோரஞ்சிதம் சீதா மர இனத்தைச் சார்ந்தது (Annonaceae). சிறியதாய் இருக்கும் போது புதர்செடி போலவும் வளர வளர மேலேறும் கொடியாகப் போகும். இதன் தண்டில் முட்கள் போன்ற அமைப்பு இருக்கும். இலைகள் ஒன்று மாற்றி ஒன்றாக அமைந்திருக்கும் (Alternate leaves). மலரின் புற இதழ்கள் மூன்று (புல்லி வட்டம்- sepals). இவை ஒன்றன் மேல் ஒன்று அடுக்காக இல்லாமல் தனித்தனியாக அவற்றின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு – தொடு இதழ் ஒழுங்கில் – (Valvate) அமைந்திருக்கும். அகவிதழ்கள் (அல்லி வட்டம் – Petals) ஆறு. உள் புறம் மூன்றும் வெளிப்பக்கம் மூன்றும் வட்டமைவில் (whorled)இருக்கும். கொக்கி போன்று வளைந்த காம்பில் பூ அமைந்திருக்கும்.
மனோரஞ்சிதம் மலர்
மனோரஞ்சிதம் மலர் Photo: P. Jeganathan
இந்தப்பூவை பார்க்கும் போது எனக்கு இட்லித் தட்டுகளின் அமைவுதான் ஞாபகத்திற்கு வந்தது. இட்லித் தட்டை, மாவு ஊற்றியபின் ஒன்றன் மேல் ஒன்று வைக்கும் போது தட்டில் உள்ள குழியின் அடிப்புறம் அதன் கீழேயுள்ள குழியின் மேலே பட்டுவிடாத வண்ணம் வைப்போம் அல்லவா? அதுபோலத்தான் மனோரஞ்சிதத்தின் அகவிதழ் அமைவும். மனோரஞ்சித மலர் இளநிலையில் பச்சையாக இருக்கும். முதிர்ந்தவுடன் மஞ்சள் நிறமாகும். இதழ்கள் சதைப்பற்றுள்ளதாக இருக்கும். இதன் காய் கொத்தாக பச்சை நிறத்திலும் பழம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். உள்ளே ஒரே ஒரு (ஆமணக்கு விதை போன்ற) கொட்டை இருக்கும்.
மனோரஞ்சிதம் - காய்த்திரள்
மனோரஞ்சிதம் – காய்த்திரள் Photo: P. Jeganathan
மனோரஞ்சிதம் - கனியும் விதையும்
மனோரஞ்சிதம் – கனியும் விதையும் Photo: P. Jeganathan
மனோரஞ்சித மலர் நறுமணம் மிகுந்தது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு இம்மலரை அதில் மிதக்க விட்டால் அந்த அறைமுழுவதும் மனோரஞ்சிதத்தின் மணம் கமழுமாம். எந்தப் பழத்தை நினைத்துக்கொண்டு இம்மலரை முகர்கிறோமோ அப்பழத்தின் வாசனையை இம்மலர் தருவதாக நம்பப்படுகிறது. எனினும் எனக்கு அதில் உடன்பாடில்லை. நான் முதன் முதலில் முகர்ந்தபோது எதையும் நினைக்கவில்லை, மனோரஞ்சிதத்தைத் தவிர. ஆகவே எனக்கு நினைவில் உள்ளது மனோரஞ்சிதத்தின் மணம் தான். சிறுவயதில் சில வாசனையுள்ள பென்சில் அழிப்பான்களை – சென்ட் (ல)ரப்பர் – (eraser) வைத்துக்கொண்டு இப்படி நாங்கள் விளையாடுவதுண்டு. அதுபோலத்தான் இதுவும். மனோரஞ்சித பூவிதழைக் கொண்டு சீனர்கள் தேனீர் தயாரிப்பதாகவும் தெரிகிறது. மனோரஞ்சிதப் பழமும் நறுமணம் வீசும். இதனால் மணிப்பூரியில் மனோரஞ்சிதத்தின் பெயர் சீனி சம்ப்ரா (Chini Champra), அதாவது இனிக்கும் எலுமிச்சை என்று பொருள். இதன் அறிவியல் பெயர் Artabotrys hexapetalus  அதாவது Artabotrys = கொக்கி போன்ற அமைப்புள்ள, hexapetalus = ஆறு பூவிதழ்கள் கொண்ட (Gledhill 2008).
கொக்கி போன்று வளைந்த காம்பில் அமைந்த மலர்
கொக்கி போன்று வளைந்த காம்பில் அமைந்த மலர் Photo: P. Jeganathan
மனோரஞ்சிதத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள சில தாவரவியல் கையேடுகளை படித்தபோது இது பெரும்பாலும் இதன் மலருக்காகவே வீடுகளில் வளர்க்கப்படுவதாகத் தெரிகிறது (Matthew 1999, Pallithanam 2001). Flowers of India எனும் இணையத்தளம் இத்தாவரம் இந்தியாவிலும் ஆசியாவின் வெப்பமண்டலக்காடுகளிலும் தென்படுகிறது என்கிற தகவலை அளிக்கிறது. எனினும் எந்த நூலிலுமே இத்தாவரம் எவ்வகையான வனப்பகுதியில் தென்படுகிறது என்பதைப் பற்றிய விவரம் இல்லாதது ஆச்சர்யமளிக்கிறது.
கேம்பில் (J.S.Gamble) தனது நூலில் இத்தாவரம் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரம் வீட்டுத் தோட்டங்களில் இதன் மலருக்காக வளர்க்கப்படுவதாகவும், தாவரவியலாளர் George King ன் கூற்றுப்படி இத்தாவரம் தென்னிந்திய வனப்பகுதிகளில் இயற்கையாகவே தென்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் (Gamble 1995). மனோரஞ்சித வகையைச் சேர்ந்த மற்றுமொறு தாவரமும் மேற்குத்தொடர்ச்சிமலைகளிலும், இலங்கையிலும் தென்படுகிறது (Gamble 1995) இதன் ஆங்கிலப் பெயர் Ceylon Green Champa (Artabotrys zeylanicus).
மரங்கள் நூலின் தொகுப்பாசிரியர் மதுமிதா மனோரஞ்சிதம் முழுவதுமாக அற்றுபோய் விட்டதோ என வருத்தம் தெரிவித்திருந்தார். இனி அவருக்கு அந்தக் கவலை வேண்டாம். மனோரஞ்சிதம் நிச்சயமாக பலரது வீடுகளில் மணம் வீசிக் கொண்டிருக்கும். ஆனால் என் மனம் இப்போது வேறொன்றை அறிந்து கொள்ளத் துடிக்கிறது. மனோரஞ்சிதம் இந்தியாவில் இயற்கையாக வனப்பகுதிகளில் வளர்ந்திருப்பதை யாராவது பார்த்திருக்கிறார்களா? எனில் எங்கே? அறிந்தவர் யாரேனும் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.
குறிப்பெடுக்க உதவிய ஆதாரங்கள்:
Gamble, J. S. (1995). Flora of the Presidency of Madras. Vol.1. Bishen Singh Mahendra Pal Singh. Dehra Dun, India.
Gledhill, D. (2008). The names of plants. Cambridge University Press. New York.
Matthew, K.M. (1999). The flora of the Palni hills, South India (Part one). The Rapinat Herbarium, St. Joseph’s College, Tiruchirapalli. India.
Pallithanam, J.M. (2001). A Pocket lora of the Sirumalai hills, South India. The Rapinat Herbarium, St. Joseph’s College, Tiruchirapalli. India.
சொல்வனம் இணைய இதழில் (இதழ் 88) 29-6-2013 அன்று வெளியான எனது கட்டுரையின் மறுபதிப்பு. அதற்கான உரலி இதோ http://solvanam.com/?p=26881
Written by P Jeganathan
July 6, 2013 at 12:27 am
Posted in Books, Plants
Tagged with

நம்மைச் சுற்றி காட்டுயிர் – புத்தக விமர்சனம்

தமிழில் சுற்றுச்சூழல், காட்டுயிர் பேணல் சார்ந்த எழுத்துக்களை பல காலமாக படைத்து வரும் அனுபவம் மிக்க இருவரின் கூட்டுமுயற்சியில் விளைந்தது இப்புத்தகம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்கை சார்ந்த கட்டுரைகளை எழுதி வரும் தியடோர் பாஸ்கரன், The Hindu தினசரியின் குழைந்தைகளுக்கான இணைப்பான Young World ல் எழுதிய 11 சிறு கட்டுரைகளின் மொழிபெயர்ப்பைக் கொண்டதே இந்நூல். தமிழில் மொழிபெயர்த்தது ஆதி. வள்ளியப்பன். இவர் தமிழில் சூழியல் சார்ந்த பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதிவருபவர். காட்டுயிர்களைப் பற்றி மட்டுமல்லாமல் செல்லப்பிராணிகளைப் பற்றியும் சில கட்டுரைகளை இந்நூலில் காணலாம். பல நூல்களை எழுதியிருந்தாலும் தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதியவைகளை ஏன் அவரே தமிழாக்கம் செய்து இருக்கலாமே என்ற கேள்வி எழலாம். ஆதி வள்ளியப்பன் குழந்தைகளுக்காகவே தமிழில் பல கட்டுரைகளை எழுதிவருபவர். சிறுவர்களுக்கான ‘துளிர்’ அறிவியல் மாத இதழின் ஆசிரியர்களில் ஒருவர். இந்நூல் பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கமான Books for Children ன் வெளியீடு. இதனாலேயே ஆதி வள்ளியப்பனின் பங்கை உணரலாம்.
குழந்தைகளுக்காக எழுதப்படும் அறிவியல், காட்டுயிர் சார்ந்த புத்தகங்களில் (உதாரணமாக ஆதிவள்ளியப்பனின் “மனிதர்க்கு தோழனடி”, ரேவதியின் “குருவி நடக்குமா” முதலிய அறிவியல் கதைகள்) யாவிலும் சொல்லப்படும் கருத்துகள் சிறுகதை அல்லது உரைநடை வடிவில் இருக்கும். இவை 10-15 வயதுள்ள குழந்தைகளுக்கானது எனலாம். ஆனால் இப்புத்தகத்தில் கட்டுரைகள் எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே பதினைந்து வயது குழந்தைகள் முதல், இளைஞர்கள், பெரியோர்கள் அனைவருக்குமானது இப்புத்தகம்.
அழகிய, பொருத்தமான, வண்ண வண்ண புகைப்படங்களும், ஓவியங்களும் எழுதப்பட்ட கருத்துகளை, விளக்கங்களை வாசகருக்கும் எளிதில் தெளிவுபடுத்தும். அதிலும் குழந்தைகள் புத்தகங்களில் வண்ண ஓவியங்களும், புகைப்படங்களும் அதிகம் இருக்கவேண்டும் என்பது என் அவா. ஆனால் இதில், ஒரு சில புகைப்படங்களை மட்டுமே உள்ளது. அட்டைப்படத்தில் அழகான ஆண் வெளிமானின் (ஆங்கிலத்தில் Blackbuck ஆனால் ஓரிடத்தில் Black buck என இரு வார்த்தைகளாக்கப்பட்டிருந்தது) புகைப்படமும், உள்ளே இரு இடங்களில் பட்டைத்தலை வாத்தின் (புகைப்படக்காரர் யார் என்பது குறிப்பிடப்படவில்லை) கருப்பு வெள்ளை படமும் தான் இருக்கிறது. பல கோட்டோவியங்களில் சில அழாகாவே உள்ளன. இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து வரைந்திருக்கலாம். கலர் படங்கள் கொண்ட புத்தகங்களை அச்சடிக்க நிறைய செலவாகும். புத்தகத்தின் விலையும் கூடும். எனினும் இந்த நிலை மாற வேண்டும்.
ஆண் வெளிமான் (Blackbuck Male). Photo: Kalyan Varma
ஆண் வெளிமான் (Blackbuck Male). Photo: Kalyan Varma
இயற்கையும் காட்டுயிர்களும் கட்டுரையில் பழந்திண்ணி வெளவால் பறக்கும் போது உண்டாக்கும் ஒலியின் எதிரொலி மூலம் வழி கண்டறியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பழந்திண்ணி வெளவால்கள் அப்படிச் செய்வதில்லை. அதற்குக் கண்கள் பெரியவை. பூச்சியுண்ணும் சிறிய  வெளவால்கள் (microchiroptera) தான் எதிரொலியை ஏற்படுத்திப் பறக்கவும், அவற்றின் இரையைப் பிடிக்கவும் செய்கின்றன. வானம்பாடியை தரையில் வாழும் பறவை என குறிப்பிடப்பட்டுள்ளது (தரையில் வாழும் வானம்பாடி எனும் கட்டுரை), எனினும் வெட்ட வெளியில், அடர்த்தியில்லாத புதர்க்காடுகளில் வாழும் என்பதே பெருத்தமாக இருக்கும். தரையில் கூடமைத்தாலும் இவை கவுதாரி, காட்டுக்கோழி, மயில் போன்ற தரைவாழ் பறவைகள் (Terrestrial) அல்ல.  வெளிமான்களின் வாழிடம் எனும் தலைப்பிலமைந்த கட்டுரையின் இறுதியில் இரைக்கொல்லிப் பறவைகளைப் பற்றிய குறிப்பு உள்ளது. விளக்கத்தை வைத்துப் பார்க்கும் பார்த்தால் அது பூனைப்பருந்தாக (Harrier) இருக்கவேண்டும், வல்லூறு (Falcon) அல்ல. தாமரைக்கோழி கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் பூனைப்பருந்து Marsh Harrier என ஆங்கிலத்தில் அறியப்படுகிறது. பறவைகளுக்கு ஒரு விடுதி கட்டுரையில் சொல்லப்படும் கொம்பன் ஆந்தை/கோட்டான் Barn Owl எனும் பறவை. இதை கூகை என்றும் கூறுவர். Horned owl ஐ தான் கொம்பன் ஆந்தை என்பர். பறவைகளின் தமிழ்ப் பெயர்களுடன் ஆங்கிலப் பெயர்களையும் கொடுத்திருக்கலாம். தமிழ்பெயர்கள் மாறி வருவதை கவனித்து திருத்தி அமைத்திருக்கலாம். இது ஆசிரியரின்/மொழிபெயர்ப்பாளரின் தவறில்லை. தமிழ்நாட்டில் ஒரு பறவைக்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொர் பெயரிட்டு அழைப்பார்கள். க. ரத்னம் எழுதிய தமிழில் பறவைப் பெயர்கள் எனும் புத்தகத்தில் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து வழங்கியுள்ளார். இப்பெயர்களையெல்லாம் ஒருங்கே நெறிப்படுத்த வேண்டிய தருணம் இது.
ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அதன் ஆங்கில மூலத்தின் தலைப்பையும், வெளிவந்த நாளையும் மேற்கோள் காட்டியிருக்கலாம். இதில் உள்ளது மொத்த பக்கங்களே நாற்பத்தி எட்டுத்தான். விலை ரூபாய் 25 தான். நாம் செய்யும் பல தேவையில்லாத செலவுகளைக் குறைத்துக்கொண்டால் நிச்சயமாக ஒரு புத்தகமாவது வாங்க முடியும். இது போன்ற புத்தகங்களை அல்லது இதிலுள்ள கட்டுரைகளை பள்ளிப் பாடத்திட்டங்களில் சேர்க்கலாம். அல்லது துணைப் பாடநூலாக (Non-detail) வைக்கலாம். எல்லா பள்ளி நூலகங்களிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. சுற்றுச்சூழல், காட்டுயிர் பேணல் சார்ந்த கல்வி என்பதே இல்லாத இச்சூழலில் இது போன்ற புத்தகங்கள் அதன் குறையைப் போக்கும். இது போன்ற புத்தகங்களே பொதுமக்கள் மத்தியில் காட்டுயிர் பேணல் விழிப்புணர்வு, இயற்கையின் பால் நாட்டம், அக்கறை ஏற்படுத்தக்கூடியவை. இப்புத்தகத்தின் நேக்கமும் அதுதான்.
********
நம்மைச் சுற்றி காட்டுயிர்பூவுலகு.  ஜனவரி-பிப்ரவரி (2013)ல் வெளியான நூல் மதிப்புரை. இதன் PDF இதோ.
********
இந்நூலின் சில பக்கங்களை இங்கே காணலாம்.
வெளியீடு: Books for Children, பாரதி புத்தகாலாயத்தின் ஓர் அங்கம், சென்னை – 18.  விலை Rs. 25/-
********
Written by P Jeganathan
March 7, 2013 at 9:28 pm

House Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்குக் காரணம் செல்போன் டவர்கள் எனச் சொல்ல முடியாது


இப்படி நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த சிட்டுக்குருவி சில இடங்களில் இருந்து காணாமல் போனது. இவை திடீரென ஒரே நாளில் அவை இருந்த இடத்தை காலி செய்துவிட்டுப் போகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறைந்து பின்பு முற்றிலுமாக அற்றுப்போயின. முக்கியாமாக நகரங்களின் சில  பகுதிகளில். ஏன் குறைந்து போயின என்பதை கண்டறிவதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பின்னரே தெளிவான காரணத்தை அறிந்து கொள்ள முடியும். ஒரு உயிரினம் குறைந்து போய்விட்டது என எப்போது சொல்ல முடியும்? பலகாலமாக, அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு நடத்தி, முன்னொரு காலத்தில் அவ்வளவு இருந்தன, தற்போது இவ்வளவாகக் குறைந்து போய் விட்டன என்று சொல்ல முடியும். ஆனால், நம் வீட்டுக்கு அருகில் சிட்டுக்குருவிகள் தென்படவில்லையெனில் அந்தப் பகுதியிலிருந்தே அது முற்றிலுமாக அழிந்து விட்டது என்று சொல்லமுடியாது. நாமாக ஒரு காரணத்தையும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதும் கூடாது. ஆனால் இங்கு நடந்ததென்னவோ அதுதான்.

மேலை நாட்டின் மீது உள்ள மோகத்தினால் அவர்களைப் போல உடையணிந்து கொண்டோம். அவர்கள் சாப்பிடுவதையும், குடிப்பதையும் இங்கே கொண்டு வந்து நாமும் சுவைக்க ஆரம்பித்தோம். பரவாயில்லை. ஆனால் அவர்கள் நாட்டில் நடைபெற்ற நீண்ட கால பறவைகள் ஆராய்ச்சியின் அடிப்படையில் வெளிவந்த முடிவுகளை நம் நாட்டில் உள்ள பறவைகளுக்கும் பொருந்தும் எனக் கருதுவது முட்டாள்தனமான ஒன்று. இதற்குச் சிறந்த உதாரணம் இந்தியாவில் சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்குக் காரணம் செல்போன் டவர்கள் எனச் சொல்வது. ஸ்பெயினில் சில காலம் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில்,  செல்போன் டவர்களிலிருந்து வெளிவரும் மின்காந்த அலைகளும் கூட அங்குள்ள சிட்டுக்குருவிகளில் எண்ணிக்கை வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்காலாம் என்று சொல்லப்பட்ட ஒரு ஆராய்ச்சிக் குறிப்பை வைத்துக்கொண்டு, அது நம் நாட்டுக்கும் பொருந்தும் எனச் சொல்ல முடியாது. உணவையும் உடையையும் அவர்களைப் பார்த்து “காப்பி அடித்ததைப்” போல இதையும் செய்ய முடியாது.
ஆனால், இந்தியாவில் சிட்டுக்குருவியின் வீழ்ச்சிக்கு சில அரைவேக்காட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்தக்காரணத்தையே கற்பித்தனர், அவர்களின் கூற்றை நம்பிய பல வெகுசன ஊடகங்களும், இந்தக்காரணத்தையே பிரபலப்படுத்தியதால், இப்போது யாரைக்கேட்டாலும் “சிட்டுக்குருவி குறைந்து விட்டதா? அதற்குக் காரணம் செல்போன் டவர்கள் தான்” சொல்லுகின்றனர். இது நமது அறிவியல் மனப்பான்மையின்மையையே காட்டுகிறது. இதைப்போன்ற அறிவியல் ஆதாரமற்ற செய்திகள் பரவாமல் இருக்க வேண்டுமானால், உண்மையான காரணங்களை அலசி ஆராய்ந்து எடுத்துரைப்பது மிகவும் இன்றியமையாதது. அதைத்தான் திரு ஆதி. வள்ளியப்பன் இந்நூலில் செய்துள்ளார். சிட்டுக்குருவிகளின் வாழ்க்கை முறை, அவை நமது பண்பாட்டில் எப்படி இரண்டறக் கலந்திருக்கின்றன என்பதைப் பற்றிய சுவாரசியமான செய்திகளை இந்நூலில் தருகிறார். அதுவும், குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் புரிந்துகொள்ளும் எளிய நடையில்.
chittu-kuruvigalin-vazhvum-veezhchiyum
மேலைநாடுகளில் ஏற்பட்ட சிட்டுக்குருவியின் வீழ்ச்சியால் இங்கு இந்தியாவில் நாம் பெற்ற படிப்பினை என்ன? நம் நாட்டில் சுமார் 1300 பறவையினங்கள் உள்ளன. அவற்றினைப் பற்றிய நீண்டகால ஆராய்ச்சி, கணக்கெடுப்புப் பணி முதலிய அறிவியல் பூர்வமாக தகவல் சேகரிக்கும் திட்டங்களை வெகுவளவில் ஊக்குவிக்க வேண்டும். அவற்றின் வாழிடங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும். கானமயில் (Great Indian Bustard) என்ற ஒரு பறவையினம் ஒரு காலத்தில் தமிழகத்தில் வெட்டவெளிகளிலும், பரந்த புல்வெளிகளிலும் திரிந்து கொண்டிருந்தன. ஆனால் வேட்டையாடப்பட்டதாலும், மக்கள் தொகை பெருக்கத்தால் அவற்றின் வாழிடம் இல்லாமல் போனதாலும், இன்று அப்படி ஒரு பறவை இங்கு இருந்தது என்பதே பலருக்கு தெரியாமல் போய்விட்டது. ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்த பிணந்திண்ணிக்கழுகுகள் (Vultures) இன்று ஓரிரண்டாகக் குறைந்து, காண்பதற்கு அரிதான ஒன்றாகிவிட்டன. இன்று நம் கண்களுக்கெதிரே சில இடங்களிலிருந்து காணாமல் போன சிட்டுக்குருவியை முன்னுதாரனமாகக் காட்டி, பல இடங்களில் அற்றுப்போய்க்கொண்டிருக்கிற பல அரிய பறவையினங்களை காப்பாற்றும் எண்ணத்தை பொதுமக்களுக்கு ஊட்டவேண்டும்.
புறவுலகின் பால் நாட்டம் ஏற்பட, மனிதனையல்லாத உயிரினங்களின் மேலும், அவை வாழுமிடங்களின் மீதும் கரிசனம் ஏற்பட, அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்க, வித்தாக அமைவது பறவைகளைப் பார்ப்பது (Birdwatching) போன்ற செயல்கள். அதுவும் சிறு வயது முதலே இவ்வகையான இயற்கையை ரசித்துப் போற்றும் செயல்களில் ஈடுபடுவது புறவுலககினை மதிக்கும் தலைமுறையினை உருவாக்கும். புறவுலகின் பால் நமக்கு உள்ள ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள சிட்டுக்குருவி போன்ற மனிதர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சுற்றித்திரியும் பறவைகளைப் பார்ப்பதிலிருந்து தொடங்கலாம். அவற்றின் எண்ணிக்கை குறையாமலிருக்க செய்ய வேண்டிய காரியங்களில் ஈடுபடலாம். அதற்கான ஆர்வத்தையும், ஊக்கத்தையும் இந்நூல் நிச்சயமாக ஊட்டும்.
ஆதி வள்ளியப்பன் எழுதிய “சிட்டு, குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்” நூலுக்கு நான் எழுதிய அணிந்துரை. இதன் PDF இதோ.
நூல் விவரம்:
ஆதி வள்ளியப்பன் (2012). சிட்டு, குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும். தடாகம் & பூவுலகின் நண்பர்கள் வெளியீடு. பக்கங்கள் 88. விலை ரூ. 70. இந்நூலை வாங்க தொடர்பு கொள்க: தடாகம். தொலைபேசி எண் +91-89399-67179
இணைய வழியில் வாங்க உரலி இதோ
Written by P Jeganathan
December 30, 2012 at 12:23 am
Posted in Birds, Books
Tagged with

பாம்புக்கடியும் அதற்கான முதலுதவியும்

பாம்புக்கடியும் அதற்கான முதலுதவியும்

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் மனிதனையே கொல்லக்கூடிய அதன் விசம்தான். இந்த விசகடிக்கு சரியான சிகிச்சை, உரிய நேரத்தில் செய்தால் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
இலங்கையில் பாம்புக்கடியினால் வருடந்தோறும் அதிகளவான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். யாழ்ப்பாணத்திலும் அதே நிலைமையே காணப்படுகிறது. மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுமிடத்து தேவையற்ற மரணங்ககையும், உபாதைகளையும் தவிர்க்கமுடியும்.
இலங்கையிலும் சரி யாழ்ப்பாணத்திலும் சரி இங்கு காணப்படுகின்ற அனைத்துப்பாம்புகளும் கொடிய விஷம் உள்ள பாம்புகள் என எண்ணுவது தவறானது. அவ்வாறு கடிக்கும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதன் மூலம் அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும். தேவையற்ற தவறான முதலுதவிகள் செய்யப்படுமிடத்து விஷம் உடலில் அகத்துறிஞ்சும் தன்மையானது அதிகரிக்கப்படுகிறது.
உதாரணமாக, கடிபட்ட  இடத்தை கத்தியாலோ அல்லது ஏதாவது கூரான ஆயுதத்தாலோ வெட்டும் போது விஷமானது உடலில் அகத்துறிஞ்சும் தன்மை அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் தோலில் காயத்தை ஏற்படுத்தும் ஏதாவது திராவகத்தாலோ கழுவும் போது absorption அதிகரிக்கப்படலாம்.
அத்துடன் அல்ககோல்(மது) உட்கொண்டாலோ அகத்துறிஞ்சல் வீதமானது அதிகரிக்கப்படும். எனவே முறைதவறிய முதலுதவிகளும் தேவையற்ற பழக்கவழக்கங்களும் உயிரிழப்புக்களை அதிகரிக்க காரணமாக அமைகின்றன.
உலகில் சுமார் 3500 வகை பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றில்  250 வகை பாம்புகள்தான் விசத்தன்மையுள்ளவை. இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் சுமார் 216 வகைப்பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 வகையான்வை விஷத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய இரண்டு லட்சம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள். அவர்களில் 15,000-20,000 பேர் விசத்தால் இறக்கிறார்கள்.
விசப்பாம்புகளில் நம் நாட்டில் முக்கியமானது நல்லபாம்பு. இது படமெடுத்து ஆடும். இதன் படத்தில் இரண்டு கருப்பான கண் போன்ற அமைப்பு இருக்கும். கண் போன்ற அமைப்பில் சிறு தங்கநிற செதில்கள் காணப்படும். சில பாம்புகளில் ஒற்றைக்கண் கூட உண்டு. கருநாகத்தின் படத்தில் கண் இருக்காது.
இறந்த பாம்பில் படம் விரிந்து இருக்காது. இதற்கு அந்தக் கழுத்துப்பகுதி இணைப்புகள் இறுகி விடுவதே காரணம். நல்லபாம்பின் தாடையில் விசப்பற்கள் இரண்டு உண்டு. அதனருகில் ஒன்று அல்லது இரண்டு சிறு பற்கள் காணப்படலாம்.
ஆபத்தான சில இந்தியப் பாம்புகள்.
இந்திய கோப்ரா
ராஜ நாகம் (King cobra)
Banded krait
Slender coral snakeRussell viper
Saw- scaled viper
Common krait
நல்ல பாம்பின் விசக்கடி பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
நல்லபாம்பு விசமானது பொதுவாக நரம்புமண்டலத்தைத் தாக்கக்கூடிய விசமாகும்.
  1.  கடித்த 6-8 நிமிடத்தில் கடிவாயைச் சுற்றியுள்ள பகுதி சிவந்துவிடும்.
  2.  கடிவாயிலிருந்து இரத்தத்துடன் நீர் கசியும்.
  3.  30 நிமிடத்தில் கடிபட்ட நபருக்கு தூக்கம் வருதல், கால்கள் சுரணைக்குறைவு, நிற்க நடக்க இயலாமை ஆகியவை ஏற்படும்.
  4.  சிலருக்கு உமட்டல், வாந்தி வரலாம்.
  5.  நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் கால் தசைககள் செயலிழந்து போய்விடும். இதனால் நிற்க முடியாது.
  6.  கண் இமைகள் செயலிழந்து கண்ணைத் திறக்க முடியாது.
  7.  கடித்த அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்தில் எச்சில் அதிகம் ஊறும். வாந்தி, நாக்குத் தடித்தல், குரல்வளை தடித்து செயல் இழத்தல் ஆகியவை ஏற்பட்டுப் பேசவும், விழுங்கவும் இயலாது.
  8.  சுமார் இரண்டு மணி நேரத்தில் உடல் தசைகள் முழுவதும் செயலிழப்பதால் மூச்சு விடுதல் (Respiratory Paralysis) ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். கடிபட்டவர் சுய நினைவிலிருந்தாலும் பேசமுடியாது.
  9. அதன் பின் வலிப்பு வரலாம். நுரையீரல் செயலிழந்து மூச்சு நின்று விடும். பின் இதயத்துடிப்பும் நின்று போகும்.
மருந்துகள்:
விச முறிவு மருந்தை அனைத்து அரசு மருத்தவ மனைகளிலும் உள்ளது. இது நல்லபாம்பு மற்றும் அனைத்துவிதப் பாம்பு விசத்தையும் குணப்படுத்தும்.
நல்லபாம்புக் கடியால் இறப்பதற்கு முக்கிய காரணங்கள் :
1. அதிக அளவு விசத்தை பாம்பு கடித்து உடலுக்குள் செலுத்துதல்.
2. கடிபட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லாமை, தகுந்த சிகிச்சை அளிக்காமை ஆகியவையே.
3. உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்து இன்னுயிர் காப்போம்.
பாம்பில் இருந்து நஞ்சு எப்படி பாய்கின்றது? அதில் என்ன உண்டு
பாம்பின் வாய்
நச்சுத் தன்மையான பாம்புகள் பெரிய நீண்ட இரு பற்களைக் தமது மேல் தாடையில் கொண்டுள்ளன. இப் பற்கள் நஞ்சை பாச்சுவதற்காக துவார்ங்களைக் கொண்டுள்ளன. இதன் மூலம் உடலிலன் ஆழமான பகுதிகளுக்கு நஞ்சு பாச்சப்படுகின்றது.
பாம்பு மனிதனைக் கடிக்கும்போது நஞ்சானது தோலிக்கு கீழான கொழுப்பு கலங்கள் கொண்ட பகுதிக்கும், தசைகளை கொண்ட பகுதிக்கும் பாச்சப்ப்டுகின்றது.
சில பாம்புகள் மனிதனிம் கண்களை நோக்கி விஷத்தை பாச்சவல்லன.
பாம்பின் விஷத்தில் என்ன உண்டு?
இதில் 20 க்கு மேற்பட்ட பதார்த்தங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அதிகளவானவை புரத மூலக்கூறுகள்.
1. இரத்தத்தை உறைய வைக்கக்கூடிய புரதங்கள்
2. குருதிக் குளாய்களை பாதிப்படையச் செய்யும் பதார்த்தங்கள்
3. உடற்கலங்களை இறக்கச் செய்யும் பதார்த்தங்கள்
4. குருதிக் கலங்கள், தசைக் கலனங்கள் போன்றவறை அழிவடையச் செய்யும் பதார்த்தங்கள்
5. உடல் நரபு கணத்தாக்க கடத்தலை பாதிக்கும் பதார்த்தங்கள்
பாம்பு கடிக்கும் போது எவ்வளவு நஞ்சு பாசய்ச்சுகின்றது?
இது பல காரணிகளில் தங்கியுள்ளது
*  வேறுபட்ட இன பாம்புகள் வேறுபட்ட அளவில் விஷத்தை கக்குகின்றன
*  பாம்புக்கடி ஆழம்
*  கடிகளின் எண்ணிக்கை
*  பாம்பின் பருமன் (ஒரே இனத்தில் பெரிய பாம்புகள் கூடிய விஷத்தை பாய்ச்சுகின்றன)
பாம்புகள் கடிப்பது தமை பாதுகாத்துக் கொள்வதற்கே. அவைகளை சீண்டாமல் விட்டால் அவை ஒன்றும் செய்யாது.
பாம்பு கடிப்பதற்கான காரணங்கள் சில:
*  பாம்புகள் இரவு வேளைகளில் அல்லது புதர்களில் இருக்கும்போது வெறும் காலோ அல்லது பாதுகாப்பற்ற காலணிகளால் மிதிக்கப்படும் போது
*  பாம்புகளை கையாளும்போது
*  வீட்டிற்கு இரவில் இரைதேடிவரும் பாம்புகள் மீது படுக்கையில் இருக்கும்போது கை கால் படும் போது
யார் பொதுவாக பாம்புக்கடிக்கு உள்ளாகின்றனர்?
*  வேட்டையாடுவோர்
*  விலங்குகளை பராமரிப்போர்
*  விவசாயிகள்
*  இறப்பர், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள்
*  மீன்பிடிப்போர்
*  பாம்புகளை கையாளுவோர்
பாம்புக் கடியில் இருந்து எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம்?
1. உள்ளூர் பாம்புகள் பற்றிய அறிவை வளர்த்தல் (அதாவது மக்கள் வசிக்கும் பிரதேசத்தில் என்னென்ன பாம்பு வகைகள் இருக்கின்றன?, அவை எந்தக்காலப்பகுதியில் என்ன நேரத்தில் அதிக நடமாட்டம் செய்கின்றன, எப்படிப்பட்ட இடத்தில் மறைந்து வாழ்கின்றன என்ற தகவல்களாகும்.)
* பாம்புகளின் வகைகள் (பாம்பைப்பற்றிய கல்வியறிவு மக்களுக்கு புகட்டப்பட வேண்டும்)
* பொதுவான வாழிடங்கள் (கல் குவியல்கள், விறகுகள், மரங்கள் குவித்து வைத்துள்ள இடங்கள்)
* இரைதேடும் காலம் பகல்/இரவு
* அதிகமாக வெளியே உலாவும் காலம்
2. அதிகமாக பம்புக்கடி ஏற்படும் சந்தற்பங்களை மக்களுக்கு தெரியப்படுத்துதல்
* மழைக் காலத்திற்குப் பின்னர்
* வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது
* அறுவடைக் காலம்
* இரவு வேளை (இரவில் நடந்து செல்லும் போது போதியளவு வெளிச்சத்துடன்(Torch light) செல்வது விரும்பத்தக்கது)
3. இரவில் புதர்களுக்கருகில் நடக்கும்போது பாம்புக்கடியில் இருந்து தப்புவதற்காக பாதணிகள் மற்றும் நீள காற்சட்டைகளை குறிப்பாக இரவில் பாம்பு நடமாட்டம் உள்ள இடத்தில் செல்வதாயின் அணிந்து செல்வது
4. நிலத்தில் படுத்து உறங்குவதை தவித்தல்
5. இறந்த பாம்புகளை கவனமாக கையாளுதல்
6. வீட்டையும் அதன் சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்திருத்தல் (வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் குறுகிய கால இடைவெளிகளில் தூய்மையாக்குவதன் மூலமும் பாம்புகள் வருவதை தவிர்க்க முடியும்)
முதலுதவி:
முதலுதவியின் நோக்கங்கள்
1. நஞ்சு குருதிக்குள் உள்ளெடுக்கப்பட்டு உடலெங்கும் பரவுவதை தடுத்தல்
2. மருத்துவ உதவியை நாடும்வரை பாம்பு கடித்தவரை பாதுகாத்தல்
3. பாம்பு கடியில்  உடனடியாக உடலில் ஏற்படும் அறிகுறிகளை தடுத்தல்
4. வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல ஒழுங்குகள் செய்தல்
தவிக்க வேண்டிய தவறான செயல்பாடுகள்
1. பாம்புக் கடி ஏற்பட்ட இடத்தை வெட்டி குருதியை வெளியேற்றுதல்
2. காயத்திலிருந்து விஷத்தை வாயால் உறுஞ்சி எடுத்தல்
3. கடிபட்ட இடத்தை இறுக்கி துணியால் கட்டுதல்
4. மின் அதிர்ச்சி வழங்கல்
5. இரசாயனப் பதார்த்தங்களை காயத்தில் பூசுதல்/விடுதல் அல்லது குளிர் கட்டிகளை காயத்தில் வைத்தல்
(இவை சில சமயங்க்களில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இவை கூடுதலக தீமையே விளைவிக்கின்றன.)
ஏற்றுக் கொள்ளப்பட்ட முதலுதவி முறைகள்:
1.  கடிபட்டவரின் பயத்தைப் போக்குதல். பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கலாம்
*  பெரும்பாலான் பாம்புகள் விஷமற்றவை
*  பாம்புக் கடி எல்லாவற்றிலும் விஷம் பாச்சப்படுவதில்லை
*  பாய்ச்சப்படும் நஞ்சு சில வேளைகளில் போதுமானதாக இருப்பதில்லை
*  இதற்கு எதிர் மருந்து வைத்தியசாலையில் உண்டு
2. கடிபட்ட பகுதியை அசையாமல் பாதுகாத்தல். ( அசைவு நஞ்சின் அகத்துறுஞ்சலை அதிகரிக்கும்)
3. பண்டேஜ் மூலம் காயப்பட்ட இடத்தை இறுக்கிக் கட்டல்
அதிக இறுக்கததை தவிர்க்க வேண்டும். இதை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கும்வரை கழற்றக் கூடாது (சில பாம்பு கடிகளுக்கு இவ்வாறு செவதால் அது கடிக்கப்பட்ட பகுதியில் கலங்களின் அழிவை தூண்டும்)
4. கடிபட்ட அங்கத்தில் நகைகள் அல்லது நூல்கள் கட்டப்பெற்றிந்தால் அவற்றை கழற்றுதல்
5. கடி காயத்தை சீண்டாமல் இருத்தல் (சீண்டுவதால் தொற்றுக்கள் அதிகரிப்பதுடன் நஞ்சின் அகத்துறிஞ்ச்சல்லும் அதிகரிக்கும்)
6. வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லல்
செல்லும்போது
*  உடனடியாக வைத்தியசாலையை நாடுவது முக்கியமாகும்.
*  கடிபட்ட அங்கத்தை கூடியளவு அசைக்காது பார்த்துக் கொள்ளல்
*  வாகனங்களை உபயோகித்தல் அல்லது நோயாளியை தூக்கொச் செல்லல்
*  அத்துடன் கடித்த பாம்பினை உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது விரும்பத்தக்கது.
- See more at: http://chittarkottai.com/wp/2012/12/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9/#sthash.Kbwizfl7.dpuf






பாம்புகள் பல விதம் 21st February, 2011 ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் பாம்பு தைப்பான் (inland taipan) ஆகும். நச்சுப்பாம்புகளுள் மிகக் கொடியது இது. இந்தப் பாம்பின் நச்சுச் சுரப்பியில் எப்போதும் மிகக் குறைந்த அளவு நஞ்சுதான் (0.1 g) இருக்கும். ஆனால் இந்தக் குறைந்த அளவு நஞ்சு மனிதர்கள் ஐம்பது பேரைக் கொல்லப் போதுமானது ஆகும். (இரண்டு நூறாயிரம் எலிகளைக் கொல்ல வல்லது இந்த அளவு நஞ்சு.) ஆப்பிரிக்கப் புல்வெளிகளில் வாழும் கறுப்பு மம்பா (black mamba) உலகின் மிக விரைவான பாம்பு. இந்தப் பாம்பின் விரைவு மணிக்குப் பன்னிரண்டு கல் (12 mph; 19 km/h) ஆகும். இது 11 அடி நீளம் வளரும். மலைப்பாம்புதான் (Asian reticulated python) உலகின் மிக நீளமான பாம்பு. இந்தோனேசியாவின் சுலாவெசித் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மலைப்பாம்பின் நீளம் முப்பத்து மூன்று அடி (10 m) ஆகும். அமேசன் ஆற்றுப்பகுதியில் உள்ள சதுப்புநிலத்தில் உயிர்வாழும் பாம்பு அனாகொண்டா (anaconda). பாம்புகளுள் மிகுந்த எடைகொண்டது இது. பிடிபட்ட 27 அடி 9 அங்குலம் நீளமுள்ள ஓர் அனாகொண்டாவின் எடை ஏறத்தாழ 227 கிலோகிராம் (500 பவுண்டு) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நச்சுப் பாம்புகளுள் மிகச் சிறியது தெற்கு ஆப்பிரிக்காவில் நமிபியா நாட்டில் காணப்படும் நமாகுவா குறும்பாம்பு (Namaqua dwarf adder) ஆகும். முழு வளர்ச்சி அடைந்த பாம்பு எட்டு அங்குல (20 cm) நீளம் மட்டுமே இருக்கும். மூன்று கரீபியன் தீவுகளில் மட்டும் காணப்படும் இந்தப் பாம்பு நூல் பாம்பு (thread snake) எனப்படுகிறது. பாம்புகளுள் மிகச் சிறியது இது. இந்தப் பாம்பினத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறிய பாம்பின் நீளம் நாலேகால் அங்குலம் (10.8 cm) ஆகும். மேலும் ஒரு செய்தி: மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒருவகை விரியன் பாம்புதான் ( Gaboon viper) பாம்புகளுள் மிக நீளமான நச்சுப் பற்களைக் கொண்டது. இதன் நச்சுப் பற்களின் நீளம் இரண்டு அங்குலம் (5 cm) ஆகும். - See more at: http://chittarkottai.com/wp/2011/02/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/#sthash.kjU7QSpD.dpuf





கவிகளின் வகைகள்


6.3 சித்திரகவிகளின் வகைகள் - முதற்பகுதி

இப்பகுதியில் கோமூத்திரி, கூடச் சதுக்கம், மாலைமாற்று,
எழுத்து வருத்தனம், நாக பந்தம் ஆகியவை பற்றிய செய்திகள்
இடம் பெற்றுள்ளன.


6.3.1 கோமூத்திரி
பசுமாடு ஒன்று     சாலையில் நடந்து செல்வதைப்
பார்த்திருக்கிறீர்களா; இனிமேல் அதனைக் கூர்ந்து கவனியுங்கள்.
அப்பசுமாடு நடந்து போகும் போது கோமயம் விடுவதாக,
அதாவது இயற்கைக் கழிவான சிறுநீர் கழிப்பதாக இருந்தால்
அந்நீர் வளைவு வளைவாக தரையில் பட்டிருக்கும். அதாவது
மேல் மேடு ஒன்று - கீழ்ப்பள்ளம் ஒன்று என அவ்வளைவு
அமையும். அதுவே இரண்டு மாடுகள் கழிப்பதாக இருந்தால் இரு
எதிர் எதிர் வளைவுகள் கிடைக்கும். அவ்வமைப்பைச் செய்யுளில்
அமைப்பது கோமூத்திரி என்னும் சித்திரகவியாகும். (கோ =
பசுமாடு ; மூத்ரி = மூத்திரம்)
ஒரு செய்யுளின் முதலடியில் உள்ள
எழுத்துகளும், இரண்டாம் அடியில்
உள்ள எழுத்துகளும் ஒன்று இடையிட்டு
ஒன்று நேர் எதிர் இணைப்பினவாக
அமையும் முறை கோமூத்திரி என்னும்
சித்திர கவியாகும்.
பின்வரும் பாடலை ஒருமுறை படியுங்கள்.

பருவ மாகவி தோகன மாலையே
பொருவிலாவுழை மேவன கானமே - (முதல் அடி)

மருவு மாசைவி டாகன மாலையே
வெருவ லாயிழை பூவணி காலமே - (இரண்டாம் அடி)
  • பாடலின் பொருள் “தலைவியே ! தலைவன் வருவதாகச் சொன்ன கார்காலம்
    இதுதான். எல்லாத் திசைகளிலும் மேகங்கள் காணப் பெறுகின்றன.
    மாலைப் பொழுதில் இம்மேகங்கள் தொடர்ந்து மழையைத் தந்து
    கொண்டே இருக்கப் போகின்றன. காட்டிலே மான்கள்
    இக்காலத்தின் வருகையால் மகிழ்ந்து விளையாடுகின்றன. உயர்ந்த
    அணிகலன்களை அணிந்தவளே ! தலைவன் மலர்களால்
    உன்னை அழகு செய்ய வரப்போகிறான் கலங்காதே” எனத்
    தோழி கூறுவதாக இப்பாடலின் பொருள் அமைகிறது.

    இப்போது இப்பாடலைச் சித்திரமாக வரைந்து காணப்
    போகிறோம்.
    (1)
    முதல் அடி
    இரண்டாம்அடி

    (2)
    முதல் அடி
    இரண்டாம்அடி

    (3)
    முதல் அடி
    இரண்டாம்
    அடி
    முதலடியையும், இரண்டாம் அடியையும் இவ்வாறு கோமூத்திரிச்
    சித்திரமாக அமைத்துப் பாடுவது இவ்வகைச் சித்திரக்கவியாகும்.
    இரு அடிகளிலும் 2, 4, 8,... என்ற இரட்டைப்படை இடங்களில்
    இடம் பெறும் எழுத்துகள் ஒன்றாய் அமைத்துப்பாட
    இச்சித்திரகவி அமைப்பை எளிதாய்ப் படைக்க இயலும்.
    6.3.2 கூடச் சதுக்கம்
    ஒரு செய்யுளின் இறுதி அடியில் இடம் பெறும் எழுத்துகள்
    அனைத்தும், முன்னுள்ள அடியில் (அல்லது) அடிகளில் இருந்து
    பெறப்படுவனவாகப் பாடப் பெற்றால் அது இவ்வகைச்
    சித்திரகவியாகும்.

    (கூடம் = மறைவு; சதுக்கம் = மறைவான நிறைவு அடியை
    உடையது)

    எடுத்துக்காட்டிற்காக, ஒரு திருக்குறளைக் காண்போம்.
    2345678910111
    முக/ட்து/ட்புன்று/நெஞ்த்து

    க/ட்து/ட்பு
    1234567891011
    கீழடியில் உள்ள 11 எழுத்துகளும் முன்னடியில் இருந்து
    பெறப்பட்ட எழுத்துகளால் பாடப் பெற்றுள்ளது.
    6.3.3 மாலைமாற்று
    ஒரு செய்யுளை ஒவ்வோர் எழுத்தாகத் தொடக்கம் முதல்
    இறுதி வரை படித்தாலும், இறுதியிலிருந்து ஒவ்வோர் எழுத்தாகத்
    தொடக்கம் வரை படித்தாலும் மாறாமல் அமைவது மாலைமாற்று
    என்னும் சித்திரகவியாகும். (முந்தைய பாடத்தில் கண்ட விகடகவிபோல)எடுத்துக்காட்டு :
    பூவாளை நாறுநீ பூமேக லோகமே
    பூ நீறு நாளைவா பூ
    பாடலின் பொருள் :

    தலைவியைக் கூடி மகிழ வந்த தலைவனைத் தோழி
    தடுத்ததாக இப்பாடல் அமைகிறது.

    “ பூப்பு அடையாதவளை அடைய விரும்பிய மேகமே ! நீ
    பூமழை பொழிய வந்தாயோ ! பூவும் நீறும் கொண்டு நாளை
    வா ! இன்று அவள் பூப்பு அடைந்திருக்கிறாள்.”

    இப்பாடல் தலைவி கூடி மகிழும் அளவிற்கு உடல் அளவில்
    உரியவளாக இல்லை. அதனை மறைமுகமாகத் தலைவனுக்கு
    உணர்த்த மேகத்தை அழைத்துச் சொல்வதாகத் தோழி
    பேசுகிறாள்.
    6.3.4 எழுத்து வருத்தனம்
    வருத்தனம் என்பதற்கு வளருதல் என்பது பொருளாகும். ஒரு
    செய்யுளில் பல கருத்துகள் கூறப் பெற்றிருப்பதாகக் கொள்வோம்.
    அதில் முதற்கருத்து ஒரு சொல்லின் அடிப்படையாய் அமைகிறது
    என்று கொண்டால், அந்தச் சொல்லில் சில எழுத்துகளை மேலும்
    மேலும் சேர்த்துப் பொருள் பெறுவது எழுத்து வருத்தனம்(எழுத்து வளர்த்தல்) என்னும் சித்திரகவியாகும்.எடுத்துக்காட்டு :

    மதுரை என்பது ஓர் ஊரின் பெயர்.

    அதில் ரை எழுத்து மறைந்தால் குடிக்கும் கள் கிடைக்கும்.
    அதனோடு என்ற எழுத்து
    சேர்ந்தால் நமது என்ற உடமைச்
    சொல் கிடைக்கும். இவ்வகையில்
    கிடைத்த சொற்கள் மதுரை, மது,
    நமது
    என்பனவாகும்.
    மேலே சில தொடர்கள் உள்ளன. இவற்றுள் மூன்றாவது
    தொடரான நமது என்பதில் உள்ள ‘ந’ எழுத்து வருத்தனம்ஆகும்.

    செய்யுள் எடுத்துக்காட்டு:

    இதற்கான செய்யுள் எடுத்துக்காட்டு பின்வருமாறு :
    ஏந்திய வெண்படையு முன்னால் எடுத்ததுவும்
    பூந்துகிலு மால்உந்தி பூத்ததுவும் - வாய்ந்த
    உலைவில் எழுத்தடைவே யோரொன்றாச் சேர்க்கத்
    தலைமலைபொன் தாமரையென் றாம்.
    பொருள் :திருமால் சங்கு ஆயுதத்தை உடையவர். அவர் முன்னொரு
    காலத்தில் கோவராத்தன மலையை கைவிரலால் தூக்கினார்.
    அவர் பொன்னாடை அணிபவர், அவரின் தொப்புழ்க் கொடியில்
    பிரம்மா இருக்கிறார்.
    வ.எண்
    செய்யுள் அடி
    சொல் வளருதல்
    (1)ஏந்திய வெண்படை(திருமாலின் வெள்ளை
    ஆயுதம்)
    கம்பு (சங்கு)
    (2)(கம்பு என்பதில் ஒரு எழுத்து
    நீங்க கம் (தலை) என்பது
    கிடைக்கும்.
    கம்
    (3)முன்னால் எடுத்தது(கோவர்த்தன மலையைத்
    திருமால் குடையாகப்
    பிடித்தார்)

    ( என்ற எழுத்து வர நகம்
    (மலை)
    கிடைத்தது.)
    (ந) கம் (மலை)
    (4)பூந்துகில்(திருமால் உடுத்தும் ஆடை)

    ( என்ற எழுத்து மேலும்
    இணைய கநகம் (பொன்) கிடைத்தது.)
    கநகம் (பொன்னாடை)
    (5)மால் உந்தி பூத்தது (திருமால் தொப்பூழ்க்
    கொடியில் தாமரை பூக்க
    அதில் பிரம்மா இருப்பார்)
    (கோ என்ற எழுத்து மேலும்
    வர கோகநகம் (தாமரை) கிடைத்தது.)
    கோகநகம்
    கம்பு (சங்கு)
    (ந) கம் (மலை)
    கநகம் (பொன்னாடை)
    கோகநகம்
    (தாமரை)
  • எழுத்து வளருதல்
  • எழுத்து வளருதலாக வந்த தலை, மலை, பொன், தாமரை
    ஆகியன செய்யுளின் இறுதியடியில் சொல்லப் பெற்றுள்ளன.
    இறுதியடியில் சொல்லப் பெற்ற இவற்றை எழுத்தடைவாக -
    எழுத்துப் பெறுதலாக - எழுத்து வருத்தனமாகக் கொண்டு
    சித்திரகவியாகக் காண முடிகிறது.
    6.3.5 நாக பந்தம்
    இது இரண்டு பாம்புகள் இணையும் அமைப்பில்
    பாடப்படுவதாகும். இது வெண்பா யாப்பில்
    அமைக்கப் பெறவேண்டும்; அறம் உரைப்பதாக
    அமைய வேண்டும்; ஒரு பாடலில் இடம் பெறும்
    ஒவ்வொரு சொல் முடிவில் உள்ள எழுத்தும்,
    மற்றொரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு
    சொல் முடிவில் உள்ள எழுத்தும் ஒன்றாக
    இருக்கும் அமைப்பில் பாடுவது இக்கவியாகும்.

    எனவே நாகபந்தம் என்பது இரண்டு வெண்பாக்களின்
    இணைப்பால் அமைவது என்பது பெறத்தக்கது. (நாகம் = பாம்பு ;
    பந்தம் = கட்டுதல்)

    எடுத்துக்காட்டு :

    வெண்பா - 1
    அருளின் றிருவுருவே அம்பலத்தா யும்பர்
    தெருளின் மருவாரு சிர்ச்சீரே - பொருவிலா
    வொன்றே யுமையா ளுடனே யுறுதிதரு
    குன்றே தெருள வருள்.
  • பாடலின் பொருள்
  • அருளின் திருவுருவாகவும், அம்பலத்தில்
    ஆடுபவராகவும், தேவரின் துயர்
    தீர்ப்பவராகவும்,     உமையாளுடன்
    இருப்பவராகவும், உறுதிதரும் குன்றாக
    இருப்பவராகவும் சிவபெருமான்
    விளங்குகிறார்.

    வெண்பா - 2
    மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு
    பெருகொளியான் றேயபெருஞ்சோதி - திருவிலா
    வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த
    மயரு மளவை யொழி.

  • பாடலின் பொருள்
  • சுடராகவும், நஞ்சை உண்டவரே! என் சித்தம் அயரும்
    நிலையை ஒழிக்க
    இவை இரண்டும் இணைந்து, நாகபந்தமாக அமைந்த முறையைக் காண்க
    1. கோமூத்திரி - சித்திரகவியின் இலக்கணம் தருக.
    2. எழுத்து வருத்தனம் - இலக்கணம் தருக.
    3. நாகபந்தம் சித்திரகவி பாடப்படத் தேவையான ஒழுங்கு முறைகள் யாவை?

    30 May 2014

    இடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்

    இடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்

    இடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்
    *****************************************
    விட்டை சுற்றிய வைக்க ஏற்ற  மரங்கள்:
    ++++++++++++++++++++++++++++++++++++++
    தென்னை ,சவுண்டல் ,சீத்தா ,வேப்பமரம் ,முருங்கை ,பப்பாளி ,நெல்லி மரம் ,கொய்யா மரம் ,மாதுளை ,அகத்தி ,பலா மரம் ,வாழை ,மருதாணி செடி , வாத நாராயண மரம் , தேக்கு , முள்ளிலாமுங்கில்
    வறட்சி நிலத்திற்கான மரங்கள் :
    +++++++++++++++++++++++++++++
    மா ,வாகை ,வேம்பு , கொடுக்காபுளி ,சீத்தா ,உசிலை , நாவல் ,பனை ,நெல்லி ,சவுண்டல் ,புளியன் ,முருங்கை
    உயிர் வேலி மரங்கள் :
    ++++++++++++++++++++
    ஓதியன் ,பூவரசு ,கிளுவை ,கொடுக்காபுளி ,இலந்தை ,பனை ,பதிமுகம்,குமிழ் ,மலைவேம்பு , ,வெள்வேல் ,முள்ளிலாமுங்கில் ,
    சாலை ஓரத்திருக்கான மரங்கள் :
    ++++++++++++++++++++++++++++
    இலுப்பை ,வாகை ,நாவல் ,புளியமரம் ,புங்கமரம் ,வேப்பமரம் ,மருதமரம் ,புரசமரம் ,அத்திமரம் ,இச்சிமரம், தீக்குச்சிமரம்,பனை ,அரசமரம் ,ஆலமரம்,துங்குமுஞ்சிமரம் .

    அகர் மரம் வளர்ப்பு!!!

    Agar Tree 


    அகர் மரம்(Agar tree,Agarwood) என்பது புதிய வகை மரம் அல்ல,நமது நாட்டில் பல ஆண்டு காலமாக  சித்த ,ஆயுர்வேத மருந்துகள்  மற்றும் வாசனை பொருட்கள் தயாரிக்க   உபயோகிக்க பட்டு வந்த மரம் தான்.ஆனால்  தற்போது  இந்த மரம் அழிந்து வரும் மர வகைகளில் வரிசையில் உள்ளது..இந்த மரத்தில் இருந்து தான் உலகிலேயே மிக அதிக மதிப்புடைய அகர் ஆயில் எடுக்க படுகிறது,ஒரு கிலோ  ஆயில் இன் விலை அதிக பட்சம ஒரு லட்சம் வரைக்கும் விற்க படுகிறது.ஒரு கிலோ மர கட்டையின் விலை 30000 இல் இருந்து 60000 ஆயிரம் வரைக்கும் விற்க படுகிறது.

    இதன் நன்மைகள்
    -------------------------------
    1 . மிகவும் வேகமாக  வளரகுடியது.
    2 . சந்தன மரம் போல அல்லாமல்  7  அவது  வருடத்தில்  இருந்தே அறுவடை செய்யலாம்.
    3 . ஓரளவு வறட்சியை தாங்ககுடியது. ( ஆனால் மிக வறண்ட நிலங்களுக்கு அகர் உகந்தது  அல்ல,வறண்ட நிலங்களுக்கு சந்தன மர சாகுபடி  உகந்தது,சந்தன மர வளர்ப்பு கட்டுரையை பார்க்கவும்)

    4 . உலக அளவில் அகர் மரங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

    7  வருடம்  நன்கு வளந்த ஒரு மரத்தில் முலம் 2 லட்சம் ருபாய் வரைக்கும் மிக எளிதாக பெறலாம்.3  மிட்டர் இடைவெளியில்  ஏக்கருக்கு  சுமார் 300  மர கன்றுகள்  நடலாம்.பொதுவாக அகர் இந்தியாவில் அஸ்ஸாமில்  அதிகமாக வளர்க்கபடுகிறது,தற்போது கர்நாடகாவில்  அதிக விவாசாயிகள் அகர்  வளர்ப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில்  சில தனியார் வேளாண்மை  பண்ணைகள் , அகர் நாற்றுகள் மற்றும் தேவையான உரங்களை வழங்கி ,அவர்களே நல்ல விலைக்கு  மரங்களை வெட்டி கொள்கிறார்கள்...

    இது போன்ற தகவல்கள் நான் ஒரு விவசாய இதழிலும் சில விளம்பரங்களிலும் பார்த்தவை.உண்மையான தகவல் அறிய "அகர் வளர்ப்பில் உள்ள பிரச்சனைகள் " என்ற பதிப்பை படிக்கவும் . 

    மேலும் விவரங்கள் பெற  தொடர்பு கொள்ளவும்: ஆனந்தபிரபு,ச  9886650235,anandhaprabhu@gmail.com