For Read Your Language click Translate

30 December 2014

ஒதிமலை----> சுப்பிரமணியர்

அந்த மலை சுமார் மூவாயிரம் அடிக்கும் மேல் இருக்கும்.  பக்கத்தில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் எங்கும் ஒரு வீடோ, மனிதர் வசிக்கும் இடமோ இல்லை.  எங்கும் விளை நிலங்கள்.  எல்லா மறைவிலிருந்தும் விலகி தனித்து நின்றது.  அடிவாரத்தில் ஒரு சிறிய விநாயகர் சந்நிதி.  அவருக்கு பின்னால் இருந்து மேல் நோக்கி செல்லும் படிகள், சுமார் ஒரு ஆயிரத்து எண்ணூறு இருக்கும். மலையின் உடலெங்கும் முள் செடிகளும், மூலிகை செடிகளும் இன்னும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத சிறிய மரங்களும்.  அமைதியாக சிறிது தூரம் நடந்தவுடன் களைப்பு மேலிட ஒரு இடத்தில் அமர்ந்து எங்கிருந்தோ வரும் காற்றும் அதில் கலந்து வந்த மலையின் பச்சை இலை வாசனையும் உடலுக்குள் புகுந்து புது தெம்பை கொடுக்க, அதுவரை அமைதியாக இருந்த பக்தர் அந்த மலையை பற்றி விளக்கினார்.

இந்த மலை போகர் சித்தருக்கு சொந்தமானது.  அவர் பல காலங்களாக இங்கு தங்கி இருந்து இங்கு உறையும் இறைவனை பூசித்து வந்தார்.  இங்கு இருக்கும் போது தான் இறைவன் உத்தரவால் பழனி மலையில் நவ பாஷாண முருகர் விக்ரகம் செய்ய கிளம்பினார்.  அதற்கு முன் இந்த மலையின் நான்கு திசைகளிலும் யாகம் வளர்த்து பூசை செய்தார்.  அதோ ஒரு ஐந்து பனை மரங்கள் சேர்ந்தால் போல் தெரிகிறதே,  அந்த பூமி தான் ஈசான மூலையில் யாகம் வளர்த்த இடம்.  பாருங்கள், அந்த பூமி பக்கத்தில் இருக்கும் மற்ற நிலங்களை விட சற்று வெளுப்பாக இருக்கும்.  இன்றும் அந்த பூமியை விவசாயத்துக்கு உபயோகிப்பதில்லை.  அந்த பூமியில் எங்கு தோண்டினாலும் உள்ளிருந்து மண் சாம்பல் நிறத்தில் வெளி வரும்.  அது யாக சிஷ்டம் என்கின்றனர்.  அரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.  அந்த இடத்தை "பூதிக்காடு"  என்று அழைக்கின்றனர்.  கீழே இறங்கி செல்லும் போது நாம் அங்கு செல்லலாம்.

போகர் பூசை செய்த காலங்களில், இங்கு உறையும் பெருமானுக்கு பன்னிரண்டு கரங்களும், ஆறு முகமும் இருந்ததாக தகவல்.  இங்கிருந்து இறங்கி சென்ற சித்தருக்கு சற்று தூரம் சென்றதும், பழனி செல்லும் வழி தெரியாமல் தடுமாறவே, இறைவனை கூப்பிட்டாராம்.  இறைவனும், ஒரு முகம், நான்கு கரங்களுடன் இறங்கி வந்து ஒரு எல்லை வரை சென்று வழி காட்டிவிட்டு, "இதற்கு மேல் நான் வர முடியாது, இனிமேல் நீ விசாரித்து சென்று விடு" என்று கூறி அங்கேயே தங்கி விட்டாராம். அதனால், அந்த இடத்தில் உறையும் இறைவன் நான்கு கரங்களும், ஒரு முகமும் கொண்டு அருள் பாலிக்கிறார்.  அந்த இடம் "வேலாயுதம் பாளையம்" என்று தற்போது அழைக்கப்படுகிறது.  வழி தெரியாமல் தடுமாறும் அனைவருக்கும், வழி காட்டும் இறையாக அங்கு குடிகொண்டுள்ளார்.

இங்கு மலை மேல் மீதும் உள்ள ஐந்து முகம், எட்டு கரங்களுடன் அபயம் என்று வருபவர்களை காத்து அருள் புரிந்து, வழி காட்டுகிறார்.  இந்த கோவிலில் ஒரு வித்யாசமான முறை ஒன்று கடை பிடிக்க படுகிறது.  இங்கு உறையும் இறைவனுக்கு அபிஷேக,  ஆராதனை, நிவேதனம், கற்பூர ஆரத்தி எடுத்த பின், பூசாரி "யாருக்காவது உத்தரவு கேட்க வேண்டுமா" என்று கேட்பார்.  அனேகமாக வந்தவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து உத்தரவு கேட்பார்கள். அவரவர் செய்த கர்மா வினைபடியும், நேரப்படியும், கேட்கப்படும் விஷயத்தின் தன்மையை பொருத்தும் முருகர் உத்தரவு கொடுப்பார்.  நீங்களே அதை பார்க்கலாம்.  நேரம் வரும்போது சொல்கிறேன்.  போய் அமருங்கள்.  உங்களுக்கு என்ன கேட்கவேண்டுமோ கேளுங்கள். என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம்", என்று சற்று அர்த்த புஷ்டியுடன் சொன்னார்.

மனம் பிரச்சினைகளில் தவித்துக்கொண்டு எங்கெல்லாமோ அலைந்து கொண்டிருந்ததால் அத்தனை தகவலையும் உள் வாங்கி "சரி! நேரம் வரட்டும்! பார்க்கலாம்" என்று அமைதியானான்.

யாகத்துக்கான சாமான்களை தலையில் சுமந்து கொண்டு நான்கு பேர் மலை ஏறி சென்றனர்.  போகும் வழயில் பக்தரிடம் "வணக்கம்" சொல்லி சிறிது நேரம் பேசிவிட்டு அதில் இருந்த ஒருவர் மட்டும் தள்ளி அமர்ந்திருந்த அவனை பார்த்து "வணக்கம் சாமி!" என்று சொன்னார்.  "யார் என்றே தெரியாது! நமக்கு ஏன் வணக்கம் சொல்கிறார்" என்று யோசித்து, மரியாதை நிமித்தமாக "வணக்கம் ஐயா!" என்று பதிலுரைத்தான்.

அவர்கள் சென்ற பின் பக்தர் "உங்களுக்கு வணக்கம் சொன்னாரே, அவரை யார் என்று நினைத்தீர்கள்? பார்க்க கூலி வேலை செய்வதாகத்தான் தோன்றும்! இங்கு உறையும் இறைவனின் அடியார்.  பல முறை அந்த இறைவனை பாலகனாக இந்த படிகளில் அமர்ந்திருக்க பார்த்துள்ளார்.  நடு இரவில், அதிகாலை பூசைக்கு சாமான்களை கொண்டு ஏறும் போது "முருகா காப்பாற்று" என்ற ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு ஏறுகிற நாட்களில், ஒரு பத்து வயது பையன் ரூபத்தில் இந்த படிகள் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து இருந்து கடக்கும் போது "நிதானமா பார்த்து போ" என்று குரல் கொடுப்பான்.  இதை பல முறை அனுபவித்துள்ளவர் அவர்.  அவனை பார்ப்பதற்கென்றே யார் நடு நிசியில் கூப்பிட்டு மலை மேல் சாமான்களை ஏற்றவேண்டும் என்றாலும், எத்தனை அசதியிலும் ஓடி வருபவர்.  இன்னும் எத்தனையோ அதிசயங்கள் இங்கு உண்டு.  போக போக புரியும்.  வாருங்கள் மலை ஏறலாம்" என்று சொல்லி அழைத்துக்கொண்டு நடந்தார்.

பாதி தூரத்தில் ஒரு பிள்ளையார் சன்னதி.  வெளியே வெயில் கொளுத்தினாலும், அவர் சன்னதியில் நல்ல குளிர்ச்சி.  ஒரே ஆச்சரியம்.  அந்த மலையில் காலடி எடுத்து வைத்த பின் முதன் முறையாக அந்த பிள்ளையாரிடம் "இறைவா! அனைத்து விக்னங்களையும் விலக்கி எல்லாம் சுபமாக முடிய உன் அருள் வேண்டும்" என்று பொதுவாக வேண்டிக்கொண்டான்.  பார்த்துக்கொண்டிருந்த பக்தர், வெளியே வந்ததும், அந்த சன்னதிக்கு பக்கத்தில் கீழ் நோக்கி ஓடி செல்லும் ஒரு ஒற்றை அடிப்பாதையை காட்டி, "இது போகர் குகைக்கு செல்லும் வழி, மனதுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.  பின்னர் போய் பார்க்கலாம்"  என்று கூறி செங்குத்தான மலை படிகளில் ஏறத்தொடங்கினார்.

இத்தனை நேரம் நடந்த நிகழ்ச்சிகளை, தெரிவிக்கப்பட்ட விஷயங்களை மனதுள் அசை போட, இந்த மலையில் அதிசயமான நிறைய விஷயங்கள் இருக்கும் போலிருக்கே என்று அவன் மனம் ஆராய்ச்சியில் இறங்கியது.  "போதும், ஆராய்ச்சியில் இறங்கி ஒரு முறை பிரச்சினையில் மாட்டிகொண்டது போதும்" என்று மனது சொல்லியதினால், உடனே அந்த எண்ணத்தை விலக்கினான்.

மலை உச்சியை அடைந்த போது அவனுக்குள் மிச்சம் இருந்த சக்தியும் வற்றி விட்டது.  கோவில் வளாகத்துக்குள் சென்று கை கால் கழுவி சுத்தம் செய்துகொண்டு சன்னதியின் முன் சென்று நின்றவனுக்கு ஆனந்த அதிர்ச்சி.  உலகத்தில் உள்ள மொத்த அழகையும் எடுத்து தன்னுள் அணிந்து கொண்டு சிரித்த முகத்துடன், அபய கரத்துடன் "வா பக்தனே" என்று வரவேற்பதுபோல் நின்று கொண்டிருந்தார், அங்கு உறையும் எம்பெருமானார் சுப்பிரமணியர்.  அபிஷேகம் முடிந்து, செய்திருந்த அலங்காரம் அவர் அழகை மேலும் மெருகூட்டியது.  அதில் பூசாரியின் கை வண்ணம் தெரிந்தது.

(ஒதிமலை சுப்பிரமணியர்) (நன்றி திரு வேல்முருகன் என்கிற அடியவருக்கு)

உள் சென்று, சாஷ்டாங்கமாக இறையின் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்ய, பக்தர், பூசாரியிடம் அவனை காட்டி "இவர் தான் யாகம் செய்ய ஏற்பாடு செய்ய சொன்னார்.  பூசையை முடித்துவிட்டு நாம் அதை பற்றி பேசலாம்.  எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டதா?" என்றார்.

அந்த பூசாரி பொதுவாகவே ரொம்ப அமைதியானவர்.  இவனை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, "எல்லாம் வந்து விட்டது.  அபிஷேகத்துக்கான பால் மட்டும் இரவில் வரும்.  நாம் எல்லாரும் சேர்ந்து அமர்ந்து, மற்ற ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும்" என்றார்.

"முதலில் ஹோம குண்டத்தை தயார் பண்ணுங்கள்" என்று பக்தரிடம் சொல்ல, அவர் இவனை அழைத்து சென்று, அங்கு குவித்து வைக்கபட்டிருந்த கற்களை எடுத்து இவன் கையில் கொடுத்து "அதோ அங்கே பசுஞ்சாணம் தெளித்து இருக்கும் இடத்தில், உங்கள் கையால் வையுங்கள்" என்று கூறி கொடுத்தார்.
அதை வாங்கியவன் "இந்த முதற் கல் நல்ல தடுப்புக்கும், கவசத்துக்கும் தொடக்கமாக இருக்கட்டும்" என்று பிரார்த்தித்துவிட்டு  இறைவன் நேர் பார்வை படும் இடத்தில் கொண்டு வைத்தான், யாகம் ஓதிமலையப்பர் மேற்பார்வையில் நடக்க போகிறதென்று அறியாமலே.

சித்தன் அருள் ....................... தொடரும்!

வீட்டில் அளவில் பெரியதான தெய்வ விக்கிரகங்களை வதை்துப் பூஜை செய்யலாமா


வீட்டில் அளவில் பெரியதான தெய்வ விக்கிரகங்களை வதை்துப் பூஜை செய்யலாமா 
பெதுவாக ஒவ்வொரு வீட்டிலும் கண்டகீ நர்மதா ஸ்வர்ணமுகீ கோதாவரீ போன்ற நதிகளின் சாரமாக அமைந்துள்ள பஞ்சாயதன ஐந்து சிலைகளை வைத்து பூஜை செய்வது சிறந்தது அத்துடன் விக்கிகங்களையும் பூஜை செய்ய வேண்டும் என்று விரும்பினால் 
அங்குஷ்ட பர்வாதாரப்ய விதஸ்திம் யாவதேவது
க்ருஹேஷு ப்ரதிமா கார்யா நாதிகா ஷஸ்யதே புதை ்்
என்பதாக பூஜை செய்பவரின் வலதுகை கட்டை விரலில் அமைந்துள்ள கணு அளவு முதல் விவஸ்தி எனப்படும் பன்னிரன்டு அங்குலம் வரையிலான விக்கிகத்தினை வைத்துப் பூஜை செய்யலாம்

** பஞ்சாங்கத்தில் இஷ்டி என்று குறிப்பிடுகிறார்களே அது என்ன?

"இஷ்டி' என்றால் பூஜை. அன்று சஷ்டி, சந்திர தரிசனம் போன்றவை கூடியிருக்கும். அதற்கான பூஜையைச் செய்யலாம் என்பதற்கு அடையாளமாக அப்படி போடுவார்கள்.

* திருநீறு பூசும்போது எத்திசை நோக்கி இருந்தால் நல்லது?

காலையில் கிழக்கு நோக்கியும், மதியம் வடக்கு நோக்கியும், மாலை மேற்கு நோக்கியும் பூசிக் கொள்ள வேண்டும். இது அனுஷ்டானத்திற்கும், வீட்டில் இட்டுக் கொள்வதற்கும் பொதுவானது. கோயிலில் பிரசாதமாகப் பெறும் பொழுது சுவாமியைப் பார்த்துப் பூசிக் கொள்ள வேண்டும்.

* வாழைமரத்திற்கும் செவ்வாய் தோஷத்திற்கும் என்ன சம்பந்தம்? ஜோதிடர் பரிந்துரைக்கும் இவ்வழிபாட்டை கோயில்களில் ஏன் நடைமுறைப்படுத்துகிறாõர்கள்?

எந்த மாதிரி வழிபாடு என்று தாங்கள் குறிப்பிடவில்லை. நான் அறிந்தவரை அந்த மாதிரி எதுவும் வழக்கில் இல்லை. கோயில்களில் நடைமுறைப்படுத்துவதைப் பற்றி கூறியுள்ளீர்கள். ஜோதிடர்கள் கூறும் குறிப்பிட்ட பரிகாரங்களைத் தவிர, மற்றவற்றை கோயில்களில் தவிர்ப்பது நல்லது. இதனை ஜோதிடர்களே கூட அறிவுறுத்தலாம்.

* தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை இதில் முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த நாள் எது?

எல்லா அமாவாசைகளுமே முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்தவை தான். அன்று அவசியம் வழிபாடு செய்து தான் ஆகவேண்டும். ஒன்று சிறந்தது என்றால் கண்டிப்பாக மற்றதை விட்டு விட வேண்டிய சூழல் வரும். உத்தராயணத்தில் முதலில் வருவதால் தை அமாவாசையும், தக்ஷிணாயனத்தில் முதலில் வருவதால் ஆடி அமாவாசை என்பது அந்த அமாவாசைக்கு முன்னதான பிரதமையிலிருந்து விரதம் இருந்து, தர்ப்பணம் செய்ய வேண்டும். இது மற்ற திதிகளில் விடுபடும் பிதுர்க்களையும் திருப்திபடுத்த செய்யப்படுகிறது. எனவே அமாவாசை தர்ப்பணத்தைப் பொறுத்த வரை ஒன்று சிறந்தது. மற்றது தாழ்ந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை.

* விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றது என்று கேள்விப்பட்டேன். அதற்கான விளக்கம் அளிக்கவும்.
அது தவறான தகவல். பூஜை விஷயங்களில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளக்கூடாது. அது சமையலுக்கு மட்டும் தான்.

*அமாவாசை நாளில் விரதமிருந்து காகத்திற்கு சோறு வைத்தேன், நீண்ட நேரமாகியும் காகம் சோற்றை எடுக்கவில்லை. பரிகாரம் இருந்தால் கூறுங்கள்

உங்களுக்கு சாப்பாடு போட்டுவிட்டு உங்களையே பார்த்துக் கொண்டிருந்தால் நிம்மதியாக சாப்பிடுவீர்களா? வெட்கப்பட்டுக் கொண்டு யோசிப்பீர்கள். காகத்திற்கு சோற்றை வைத்துவிட்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தால் பயப்படாதா? பிறகு சோற்றை எடுக்கவில்லை. பரிகாரம் கூறுங்கள் என்றால் என்ன சொல்வது. வேறு யாரிடமாவது இதை கேள்வியைக் கேட்டால், வெள்ளியில் காக்கை செய்து தானமாகக் கேட்டிருப்பார்கள். காக்கை உருவில் முன்னோர் வந்து சாப்பிடுகிறார்கள் என்ற நம்பிக்கையோடு அடுத்த முறை சோற்றை வைத்துவிட்டு வந்து விடுங்கள். தானாக எடுத்துக் கொள்ளும்.




** வாஸ்து சாஸ்திரத்தை ஆன்மிகம் ஏற்றுக் கொள்கிறதா? அதை எந்த அளவிற்குக் கடைப்பிடிப்பது என்பதைக் கூறுங்கள்.

சாஸ்திரம் என்று சொல்லிவிட்டாலே அது ஆன்மிகம் தானே. இறைவழிபாட்டிற்காக கூறப்பட்டுள்ள சாஸ்திரங்களில் ஒரு பிரிவு - சிற்பசாஸ்திரம். இதன் உட்பிரிவுகளில் ஒன்று வாஸ்து சாஸ்திரம். ஒருவீட்டைக் கட்டத் துவங்குவதற்கு முன் வாஸ்து சாஸ்திரத்தைக் கடைபிடிக்கலாம். கட்டி முடித்தபின் வீண் வதந்திகளை நம்பி குழப்பிக் கொண்டு வீட்டை இடிக்க வேண்டாம்.

* பூஜை அறையில் கடவுள் திருஉருவப்படங்களை எத்திசை நோக்கி வைப்பது சிறந்தது?

கிழக்கு நோக்கி வைப்பது சிறந்தது. மேற்கு நோக்கியும் வைக்கலாம்.

* இறந்த பெற்றோருக்கு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அவர்கள் கொடுக்கும் சிரார்த்தம் ஏற்புடையதுதானா? விளக்கம் தேவை.

பெண்கள் நேரடியாக இதை செய்யக்கூடாது. யாராவது ஒரு ஆணிடம் தர்ப்பையைக் கொடுத்து அவர் மூலமாக செய்ய வைக்கலாம். திருமணமான பெண்கள் கணவன் வீட்டைச் சார்ந்து விடுவதால், பெற்றோருக்காக தர்ப்பை கொடுக்கக் கூட அதிகாரம் கிடையாது. பெற்றோரின் பங்காளிகளைச் செய்யச் சொல்லி பொருளுதவி மட்டும் செய்யலாம்.

* விரதநாட்களில் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது என்று சொல்கிறார்களே உண்மையா?

"விரதம்' என்ற சொல்லுக்கு "கஷ்டப்பட்டு இருத்தல்' என்று பொருள். விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். சாப்பிட்டால் மலஜலம் கழிக்க நேரிடுமே என்பதால் தண்ணீர் கூட குடிக்காமல் பசித்திருந்து, சிந்தனை மாறாமல் இருப்பதையே உபவாசம் என்ற நிலையில் முதன்மையாகக் கூறியுள்ளனர். "உபவாசம்' என்றால் "இறைவனுக்கு அருகில் இருத்தல்' என்று பொருள். முறையாக இருக்க இயலாதவர்கள் கூட அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

* பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவத்தைக் கூறுங்கள்.

காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை "சிருஷ்டி' (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை "பிரம்ம முகூர்த்தம்' என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.

* ஹோமம் நடத்தும் போது குண்டத்தில் போட்ட நாணயங்களை வீட்டில் வைத்திருந்தால் நல்லது என்று சொல்கிறார்களே? விளக்கம் அளிக்கவும்.

ஹோமம் முடிந்து அதில் போட்ட எல்லா திரவியங்களும் சாம்பலாகும் வரை குண்டத்திலிருந்து எதையும் எடுக்கக்கூடாது. சில இடங்களில் ஹோமம் முடிந்து, யாகசாலைகளில் இருந்து கடம் புறப்பட்டவுடனேயே மக்கள் உள்ளே புகுந்து குண்டங்களை அணைத்தும், கலைத்தும் நாணயங்களையும் சாம்பல் பிரசாதமும் எடுக்கிறார்கள். இது மிகவும் பாவம். எல்லாம் சாம்பல் ஆன பிறகு நாணயங்களையும், சாம்பல் விபூதி பிரசாதத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இதை வீட்டில் வைத்துக் கொண்டால் லட்சுமி கடாட்சம் பெறுவதுடன், நோய் நொடியும் வராது.


* குலதெய்வம் கோயிலுக்கு அகல் விளக்குகள் வாங்கிச் சென்ற பொழுது ஒரு சில உடைந்து விட்டன. இது நன்மையா கெடுதலா?

விளக்கேற்றி சுவாமி வழிபாடு செய்யும் பொழுது அதுவே தானாக விழுந்து உடைந்தால் தான் பரிகார தீபம் ஏற்ற வேண்டும். வாங்கிச் செல்லும் பொழுது கவனக்குறைவால் உடைந்ததற்கெல்லாம் பயப்பட வேண்டாம். எல்லாம் நன்மைக்கே.

* கிரகண வேளையில் கோயில் நடை சாத்துவது ஏன்?

நடை சாத்த வேண்டிய அவசியமில்லை. இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்றே புரியவில்லை.
கிரகண காலத்தில் புண்ய கால தீர்த்தம் கொடுத்துச் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்யச் சொல்லி சாஸ்திரங்கள் கூறுகின்றன. சில கோயில்களில் இது வழக்கத்திலும் உள்ளது.

* எங்கள் வீட்டில் துளசியுடன் வில்வமும் சேர்ந்து வளருகிறது. இரண்டையும் சேர்த்து வணங்கலாமா? அல்லது கோயிலில் நடலாமா?

இரண்டும் உங்கள் வீட்டில் நன்றாக வளருவதே பெரிய பாக்கியம். தினமும் விளக்கேற்றி நன்றாக வழிபடுங்கள். உங்கள் வீடு மங்களகரமாக இருக்கும்.

** வீட்டில் சிலை வைத்து வழிபாடு செய்து வருகிறேன். அதனால் குறை ஏதுமில்லை. ஆனால், சிலை வழிபாடு கூடாது என்று சிலர் கூறுகின்றனர். விளக்கம் தேவை.

வீட்டில் சாமி சிலைகளை ஆறு அங்குல உயரத்திற்கு மேல் இல்லாமல் வைத்து தாராளமாக பூஜை செய்யலாம்.

* பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கூடாதா?

பிறந்த நட்சத்திரத்தில் மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. கிழமை பார்க்க வேண்டாம். தீபாவளியன்று ஜென்மநட்சத்திரம் வந்தால் சும்மா இருந்து விடாதீர்கள். அது விதி விலக்கு.

* வீடு, தீர்த்தக்கரை, கடற்கரை இம்மூன்றில் பிதுர்தர்ப்பணத்தை எங்கு செய்வது சிறப்பானது?

கடற்கரையில் செய்வது முதன்மையானது. நதி, குளக்கரைகளில் செய்வது விசேஷமானது. வீட்டில் செய்வது மத்திமம் தான். அவசர கதியில் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கைச் சூழலில், ஏதாவது ஓரிடத்தில் விட்டுவிடாமல் செய்வதே மிக மிக உத்தமமானது தான்.

* பஞ்சாட்சர மந்திரம் (நமசிவாய, சிவாயநம)சொல்லித்தான் திருநீறு பூச வேண்டும் என்பது உண்மையா?

பஞ்சாட்சரம் (நமசிவாய) சொல்லி திருநீறும், அஷ்டாக்ஷரம் (ஓம் நமோ நாராயணாய)சொல்லி திருமண்ணும் இட்டுக் கொள்வதைப் போன்ற புண்ணியச் செயல் இவ்வுலகில் வேறு கிடையாது.

* கருவறையில் திரைபோடும் போது சந்நிதியை தரிசனம் செய்வதோ சுற்றி வலம் வருவதோ கூடாது என்கிறார்களே? உண்மைதானா?

உண்மைதான். ஒருவரை சந்திக்கச் செல்கிறோம். அவர் நம்மை சந்தித்துப்பேசும் நிலையில் விழித்துக் கொண்டிருந்தால் தானே சந்திப்பு என்பது நிகழும். அதுபோலத் தான் திரைப்போடப்பட்ட சந்நிதியும்! அப்போது தரிசிப்பது வலம் வருவது போன்றவை செய்யக்கூடாது. இது போன்ற சமயங்களில் விமான கோபுரங்கள் உள்ளன. அவற்றை தரிசித்தாலே சுவாமி தரிசன பலம் கிட்டும்.


* கோயில்களில் கொடுத்த பூமாலையை வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு போடுவது சரிதானா?

ஒருமுறை சுவாமிக்கு சாத்தப்பட்டு பிறகு எடுக்கப்படும் மாலைக்கு "நிர்மால்யம்' என்று பெயர். நிர்மால்ய மாலைகளை வேறு தெய்வத்திற்குச் சாத்துதல் கூடாது.

* பூஜை அறையில் சுவாமி படங்களுடன் மறைந்த பெரியவர்களின் படங்களை வைக்கலாமா?

சுவாமி படங்களுடன் சேர்த்து வைப்பது கூடாது. சற்று தள்ளி தனியாக வைத்து வழிபடலாம். மறைந்த பெரியவர்கள், பிதுர்கள் என்று அழைக்கப்படுவர். தெய்வநிலை வேறு. பிதுர்நிலை வேறு.

* அசைவம் சாப்பிடும் நாட்களில் கோயிலுக்கு செல்வது தவறுதானா?

கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டிருக்கும் நீங்கள் அந்த கருமத்தை விட்டுவிடக்கூடாதா? உலகிலேயே அதிகமாக அசைவம் சாப்பிடும் சீனர்கள் கூட இன்று சைவத்திற்கு மாறி வருகிறார்கள். உலகிற்கே எடுத்துக்காட்டாக இருக்கும் இந்து தர்மம் புலால் சாப்பிடுவதை அனுமதிப்பதில்லை. எனவே இந்தக் கேள்வி தள்ளுபடி செய்யப்படுகிறது.

* என் தாய் பூஜை செய்து வந்த விக்ரஹங்களுக்கு என்னால் சரிவர பூஜை செய்ய முடிவதில்லை பூ, பால் வைத்து வணங்கினால் போதுமா?

தாய் தந்தை விட்டுச் சென்ற மற்ற எல்லாவற்றையும் பராமரிக்கிறோம். பூஜை மட்டும் சரிவர செய்யமுடியவில்லை என்றால் எப்படிப் பொருந்தும்? நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே உங்கள் தாய் பூஜை செய்து வந்திருக்கிறார்கள். உங்கள் வாரிசுகளும் நன்றாக இருக்க, நீங்களும் முடிந்த வரை நன்றாகவே பூஜை செய்யுங்கள்.

** வேண்டுதல் நிறைவேறிய பின்னும் நேர்த்திக் கடனை செலுத்த என்னால் இயலவில்லை. இதனால் ஏதேனும் பாதிப்பு நேருமா?

வேண்டுதல் நிறைவேறிய பின்னும் நேர்த்திக் கடனை செலுத்தவில்லையே என உங்கள் மனம் உறுத்துகிறது. இதுவே பெரிய பாதிப்பு தானே! சீக்கிரம் நிறைவேற்றிவிடுங்கள்.

* திருமணம், காதுகுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் முன்னதாக குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார்களே ஏன்?

திருமணம், காதுகுத்தல் போன்றவை நம் குலம் அபிவிருத்தியடைவதற்காகச் செய்யப்படும் சுபநிகழ்ச்சிகளாகும். இவை நல்ல முறையில் நடந்து நம் குலம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக முதலில் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

* இரண்டு மாத இடைவெளியில் இறந்த பெற்றோருக்கு ஒரே நாளில் திவசம் பண்ணலாமா?

தாயின் சிராத்தம் முறை வேறு. தந்தையின் சிராத்தம் முறை வேறு. இரண்டையும் அவரவர்கள் திதியில் செய்தால் தான் பித்ருக்கள் திருப்தியடைவார்கள். ஒன்றாக செய்யக் கூடாது.

* திருமாங்கல்யத்தில் "சிவாயநம' என எழுதி வழங்கலாமா?

திருமாங்கல்யம் என்பது பரம்பரை பரம்பரையாக பழக்கத்தில் செய்து வருகிற ஒன்று. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதிரி அமைந்துள்ளது. நம் குடும்பத்துப் பெரியவர்கள் கூறும் முறைப்படி செய்வது தான் நல்லது. சுவாமி அம்பாள் உருவங்கள் பொறிப்பது தான் வழக்கம். எழுத்துக்கள் எழுதுவது இல்லை.

** கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று பயமுறுத்துகிறார்களே! விளக்கம் அளிக்கவும்.

நம் ஊர்க்காரர்கள் சொன்னால் சும்மா பயமுறுத்துகிறார்கள் என்பீர்கள். மேலை நாட்டார் எதைக் கூறினாலும் ஏற்றுக்கொள்வீர்கள். ஒரு அமெரிக்கர் இந்த விஷயத்தை ஆராய்ச்சி செய்துள்ளார். ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதே கண்திருஷ்டி ஆகும். அப்படி பார்க்கும்போது, கண்களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் நம் மனம் மற்றும் உடல்நிலையில் பாதிப்பு உண்டாக்குவதை விஞ்ஞானப்பூர்வமாக கண்டறிந்திருக்கிறார். இதற்காகவே நம் முன்னோர் அறிந்து "கண்ணூறு கழித்தல்' என்ற பரிகாரத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

* வீட்டில் மருமகள் கர்ப்பிணியாக இருக்கும்போது புதுவீடு கட்டத் தொடங்கக்கூடாது என்கிறார்களே! விளக்கம் அளியுங்கள்.

கர்ப்பிணி பெண்கள் வசிக்கும் வீட்டை இடிக்கவோ, புதுப்பித்துக் கட்டவோ கூடாது. வேறு புது இடத்தில் புதுவீடு கட்டலாம். கிரகப்பிரவேசமும் செய்யலாம்.

* கிரகப்பிரவேசம் செய்யும்போது முதலில் பசுவையும், கன்றையும் அழைத்து வந்து கோபூஜை செய்வதன் நோக்கம் என்ன?

பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். நான்கு வேதங்களும் நான்கு கால்களாக உள்ளன. கன்றுக்காக சுரக்கும் பாலை நமக்கும் கொடுக்கும் பசுவை "கோமாதா' என அழைக்கிறோம். இதன் காலடி பட்ட இடத்தில் மங்களம் உண்டாகும். கன்றுடன் கூடிய பசுவை பூஜிப்பதால், லட்சுமியின் அருள்கடாட்சம் நிலைத்திருக்கும். கன்று இல்லாமல் பசுவை தனித்து அழைத்து செல்லவோ, பூஜை செய்யவோ கூடாது.

* சில கோயில்களில் கரன்சி நோட்டுகளால் தெய்வத்தின் திருவுருவத்தை அலங்காரம் செய்கிறார்களே! இது முறைதானா?

காய், கனிகள், பட்சணங்கள் இவற்றினால் அலங்காரம் செய்தல் உண்டு. கரன்சிகளால் செய்யும் பழக்கம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதை சாஸ்திர ரீதியாக மறுக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ இயலாது. அந்தக்காலத்தில் பணப்பரிமாற்றத்திற்கு தங்கநாணயங்களை உபயோகித்தனர். மதிப்புள்ள பொருட்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் எண்ணத்தில் தங்கக்காசு மாலையை அணிவித்தனர். அதற்கு ஈடாக இன்று கரன்சி இருக்கிறது. எண்ணெய் விளக்குக்குப் பதிலாக மின்விளக்குகளை கோயில்களில் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இறைவனுக்கு கரன்சி நோட்டுகளை அர்ப்பணிக்கலாம் என்பதே என் கருத்து.
** திருமணத்திற்கு சிலர் ஜாதகப் பொருத்தம் தான் தேவை என்றும், சிலர் கோயிலில் பூக்கட்டிப் பார்த்தால் போதும் என்றும் சொல்கின்றனர். எது சிறந்தவழி என்பதைச் சொல்லுங்கள்.

கோவையில் இருந்து மதுரைக்கு பழநி, திருச்சி வழியாகச் செல்லலாம். மதுரைக்குச் செல்வது தான் முக்கியமே தவிர, பாதையைப் பற்றி யோசிக்கக் கூடாது. ஜாதகம் பார்த்தல், தெய்வ உத்தரவு கேட்டல் இரண்டும் சிறந்தவை தான். மனம் எதில் திருப்திபடுகிறதோ, அதை தேர்வு செய்து திருமணத்தை இனிதாக நடத்துங்கள்.

* அன்னபூரணி விக்ரஹத்தை வீட்டில் வைத்து பூஜிக்கும் முறையைச் சொல்லுங்கள்.

பூஜை முறைகள் எல்லா தெய்வங்களுக்கும் ஒரே மாதிரி தான். மந்திரங்களும், ஸ்லோகங்களும் தான் மாறுபடும். அன்னபூரணி அஷ்டகம் மிக உயர்ந்தது. இதனை பூஜையின் போது பாராயணம் செய்து வாருங்கள்.

* காலையில் வாசலில் கோலம் போட என் மனைவி மறுக்கிறாள். இதை ஆண்கள் செய்வது சரியா தவறா?

மனைமங்கலமான கோலம் இடுதல், விளக்கேற்றுதல் போன்றவற்றைப் பெண்கள் செய்வது தான் முறை. இருந்தாலும், உங்கள் சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.

* வீட்டில் வில்வமரம் வளர்க்க நினைக்கிறேன். என் எண்ணம் சரியானதா?

சரியானதே. வில்வ மரத்தில் சிவபெருமானும், துளசியில் மகாவிஷ்ணுவும் வசிக்கின்றனர். எனவே, இவற்றை வளர்ப்பதால் நாம் அவர்களின் அருளைப் பெற்று மகிழலாம்.

* எமனுக்கு இரக்க சிந்தனை கிடையாது தானே! பின் ஏன் எம தர்மன் என்று குறிப்பிடுகிறோம்?

எமனுக்கு இரக்கம் இல்லை என்று நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. "யம' என்ற சொல்லுக்கு "கட்டுப்பாடு' என்று பொருள். நாம் கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமாக வாழ வேண்டும். இதைத் தான் "நியமம்' என்பார்கள். நியமத்துடன் வாழ்வதையே "அறநெறிப் பட்ட வாழ்க்கை' என்கிறோம். அறம் என்றால் தர்மம். கட்டுப்பாடும், தர்மமும் இணைந்தவர் தான் எமதர்மன். மனிதன் தர்மத்தை சரியான முறையில் கடைபிடிக்கிறானா என்பதைக் கண்காணிப்பது தான் எமனுடைய வேலை. ஆசிரியர் நன்றாகப் படித்தவனைத் தேர்ச்சி பெறச் செய்கிறார். அதே ஆசிரியர் படிக்காதவனை தோல்வி அடையச் செய்கிறார். அதற்காக அவரை இரக்கமற்றவர் என்று சொல்லலாமா?

* செம்பருத்திப் பூவை பெருமாளுக்குச் சாத்தக்கூடாது என்பதற்கு சாஸ்திர சம்மதம் உண்டா?

செம்பருத்திப்பூ விநாயகர், முருகன், பார்வதி போன்ற தெய்வங்களுக்குச் சிறப்பானவை. பெருமாளுக்குப் பவழமல்லி, துளசி சிறப்பானவை.

* "ஓம்' என்று சொல்வதற்குப் பதிலாக "ஸ்ரீ' என்று தான் மந்திரங்களைச் சொல்ல வேண்டும் என்பது உண்மைதானா?

"ஓம்' என்பதற்கும் "ஸ்ரீ ' என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று அவர்களிடமே கேட்டிருக்கலாமே! இது போன்ற விஷயங்களைக் கேட்டு உங்களைப் போன்றவர்கள் குழம்பிக் கொண்டிருக்கும் வரையில் குழப்புபவர்களுக்குப் பஞ்சமிருக்காது.


** பாதக ஸ்தானத்தில் இருந்தால் மட்டுமே சனீஸ்வரரை வழிபடவேண்டும் என்பது உண்மையா?

கிரகங்கள் ஒன்பதும் கடவுளின் அடியவர்களே. அவரவர் பாவபுண்ணிய பலன்களை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். சனி ராசிக்கு 3,6,11 ஆகிய மூன்று ஸ்தானங்களில் சுப பலன்களை வாரி வழங்குவார். மற்ற ஸ்தானங்களில் நன்மையும் தீமையும் கலந்தே உண்டாகும். எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் சனியை அனைவரும் வழிபடலாம். ஒருவரின் வாழ்நாளை நிர்ணயிக்கும் ஆயுள்காரகர், தொழிலை நிர்ணயிக்கும் ஜீவனகாரகர் என்னும் இருபெரும் விஷயங்கள் சனீஸ்வரரின் கட்டுப்பாட்டில் உள்ளன. சனி மட்டுமல்ல! கிரகம் ஒன்பதையும் வணங்கவேண்டியது மிக அவசியம்.

* கோயிலில் சிலர் பரிகாரம் என்ற பெயரில் சுண்டல், வாழைப்பழம் போன்றவைகளைத் தருகிறார்கள். அவற்றை பிரசாதமாக வாங்குவதா அல்லது தோஷம் என மறுப்பதா? கூறுங்கள்.

கோயிலில் கொடுக்கும் பொருள் எதுவானாலும், கடவுளின் அருட்பிரசாதமே. தயக்கமில்லாமல் வாங்கி, பக்தியுணர்வுடன் சாப்பிடுங்கள். நவக்கிரகத்தை பரிகாரமாக வழிபட்டு சுண்டல், பழம் கொடுத்தாலும் அதுவும் பிரசாதம் தான்.

* வீட்டில் சுவாமிக்கு சாத்திய பூமாலைகளை எங்கு சேர்ப்பது என விளக்கம் தேவை.

சுவாமிக்கு சாத்திய மாலைக்கு "நிர்மால்யம்' என்று பெயர். ஆறு,குளம், போன்ற நீர்நிலைகளில் சேர்க்கவேண்டும். பொதுவாக, கால்மிதி படாத இடத்தில் பூமாலைகளைச் சேர்ப்பது நல்லது.

* அமாவாசையை நாளில் சுபவிஷயம் கூடாது என்று சிலரும், சிலர் நிறைஅமாவாசை என்பதால் சுபம் நடத்தலாம் என்றும் சொல்கிறார்கள். இதில் எது சரி?

முன்னோர் வழிபாட்டுக்கு மட்டுமே அமாவாசை உரியது. அமாவாசையில் சுபவிஷயம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அமாவாசை, பிரதமை நாட்களை விடுத்து துவிதியை திதியில் இருந்தே எடுத்துக் கொள்வர்.

* ஈசானம், கன்னி மூலைகளில் எதில் பூஜை அறை அமைப்பது சிறப்பு?

வீட்டின் வடகிழக்கு (ஈசானம்), தென்மேற்கு(கன்னி) மூலைகள் இரண்டுமே தெய்வீகமானவையே. அவரவர் வசதிக்கேற்ப பூஜை அறையை அமைத்துக் கொள்ளலாம். கன்னிமூலையில் பணப்பெட்டியும் (பீரோ) வைக்கலாம்.

*முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டு வாசலில் வைப்பதன் நோக்கம் என்ன?

மங்கல பொருட்களில் கண்ணாடியும் ஒன்று. அதனால், மங்களகரமாக கண்ணாடியை வைப்பர். சிலர் கண்ணாடியை திருஷ்டிதோஷம் நீங்கவும் வாசலில் வைக்கிறார்கள்.

** வாசலில் சிலர் கடவுளின் உருவத்தையே கோலமாக இட்டு வருகின்றனர். இது சரியான முறையா?

மார்கழி நெருங்கும் சமயத்தில் இக்கேள்வி கேட்டிருப்பது பாராட்டுக்குரியது. கோலம் என்றால் "அழகு'. இதனை வடமொழியில் "ரங்கவல்லி' என்பர். ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்று வைத்துக் கொள்ளலாம். இதன் தரைப்பகுதியில் அழகுக்காக கொடிகள் போன்று வரையப்படுவது கோலமாகும். "வல்லீ' என்றால் கொடி. கொடிகளைப் போன்ற கோடுகளாலும், புள்ளிகளாலும் அழகாகப் போடப்பட வேண்டியவையே கோலங்கள். தெய்வங்களின் உருவங்கள் வீட்டு வாசலில் கோலமாகப் போடுவது, பிறகு அதன் மீது கால் பட நடப்பது இவற்றையெல்லாம் யோசிக்கவே கஷ்டமாகவே உள்ளது. எனவே இவற்றை நம் சகோதரர்களிடம் சொல்லி அழகான புள்ளி கோலங்கள், சிக்குக் கோலங்கள் முதலியவற்றின் மூலம் தங்களது கைவண்ணத்தை திறம்பட காண்பிக்குமாறு செய்ய வேண்டும்.

* பிறந்த குழந்தையின் ஜாதகத்தை எந்த வயதில் கணிக்க வேண்டும்?

ஒரு வயது முடிந்த பிறகு கணிக்க வேண்டும். 12 வயது வரை பலன் கணிக்கக் கூடாது. பலரும் பலவிதமாகப் பலன் கூறுகிற இக்கால சூழ்நிலையில் சிறுவயதிலேயே குழந்தைகள் குழப்பமான மனநிலைக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* அமாவாசை, திதி நாளில் வாசலில் கோலம் போடக் கூடாது என்பதற்கு காரணம் என்ன?

அமாவாசை, சிராத்தம் போன்ற நாட்கள் ""பிதுர் தினம்'' என்றழைக்கப்படுகின்றன. அன்று பிதுர் காரியத்தை முடித்து விட்டுத்தான் தெய்வ வழிபாடே செய்யப்பட வேண்டும். மங்களகரமான விஷயங்களில் பிதுர்களுக்கு விருப்பம் கிடையாது. எனவே, முன்னோர் காரியங்களில் கோலம் போடக்கூடாது.

* குலதெய்வம் எது என்று தெரியவில்லை. எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரம்பரை பரம்பரையாக குல தெய்வ வழிபாடு என்று ஒரு தெய்வத்தை வழக்கில் கொண்டிருப்பார்கள். அது மிக அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடாத விஷயம். இந்த வழிபாட்டில், அவரவர்கள் சில விதி முறைகளைப் பின்பற்றி வந்துள்ளனர். நம் சந்ததியைக் காப்பாற்றுவது குல தெய்வ வழிபாடு தான். குலதெய்வம் எது என்று தெரியவில்லையென்றால், உங்களுக்கு விருப்பமான தெய்வங்களின் பெயர்களை விநாயகர் முதல் அனுமன் வரை சீட்டுகளில் எழுதுங்கள். அருகில் உள்ள கோயிலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்த பிறகு எழுதி வைத்திருக்கும் சீட்டுகளை சுவாமி பாதத்தில் வைத்து, ஏதாவது ஒன்றினை எடுக்கச் சொல்லி, அதில் உள்ள தெய்வத்தை குலதெய்வமாக ஏற்று வழிபாட்டைத் துவக்குங்கள்.
பிரதோஷம் என்பதன் பொருள் என்ன? அதன் சரியான கால அளவு எவ்வளவு?

""ப்ரளீயந்தே அஸ்வின் தோஷா'' என்பது பிரதோஷம் என்ற சொல்லின் வடமொழி இலக்கணம். அதாவது அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள். பகல் முழுவதும் மனிதர்கள் எவ்வளவோ செயல்களைச் செய்கிறார்கள். அவற்றில் நல்லவை, கெட்டவை கலந்தே இருக்கின்றன. அறியாமல் செய்த தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதலும், நல்ல செயல்களுக்கு இறைவன் அருள் செய்தலும் இந்த பிரதோஷ காலத்தில் தான். தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ஒன்றரை மணி நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவபெருமானை தரிசிப்பது மிக விசேஷமானது. இதற்கு "நித்யபிரதோஷம்' என்று பெயர். வளர்பிறை திரயோதசிக்கு பக்ஷ பிரதோஷம், தேய்பிறை திரயோதசிக்கு மாத பிரதோஷம், தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை ஆகியவை கூடியிருந்தால் மகாபிரதோஷம் என்று பெயர்.

** வெள்ளிக்கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்க மறுப்பது ஏன்? வீட்டு வேலை செய்பவர்களுக்கு, மறுநாள் சம்பளம் தருவதாகச் சொல்வது சரியா?

ஒரு சிலர் தான் இப்படிக் கூறி வருகிறார்கள். வேலை செய்பவர்களுக்குக் கூலி கொடுக்கும் பொழுது இப்படிக் கூறுவது மிகவும் தவறு. பஸ், மருத்துவமனை, காய்கறி வாங்குதல் போன்ற அன்றாட அத்தியாவசிய செலவுகளுக்கு இப்படிக் கூற முடியுமா? வெள்ளிக்கிழமைகளில் பணப் பெட்டிக்கு பூஜை செய்பவர்கள் அன்றைய தினம் அதிலிருந்து பணம் எடுக்க மாட்டார்கள். முதல் நாளே எடுத்து வைத்து வெள்ளிக்கிழமை கொடுப்பதில் தவறில்லை.

* முடிவெட்டுவதையும், எண்ணெய் ஸ்நானத்தையும் ஒரே நாளில் செய்யக்கூடாது என்கிறார்கள். உண்மைதானா?

உண்மை தான். வீட்டிலேயே சவரம் செய்தாலும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தவறு தான். அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளிலும், செவ்வாய், சனிக்கிழமைகளிலும் முடி வெட்டுதல், சவரம் செய்தலைத் தவிர்க்க வேண்டும்.

* மதுரையில் உள்ள சிவாலயத்தை மீனாட்சி அம்மன் கோயில் என்று குறிப்பிடுகிறோம். சுவாமி பெயரால் வழங்கப்படாதது ஏன்?

திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்குச் சென்றிருக்கும் நம் பெண்ணைப் பார்க்கச் செல்கிறோம். அப்பொழுது ""என் பெண் வீட்டிற்குச் செல்கிறேன்,'' என்று தான் கூறுவோமே தவிர, ""மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறேன்,'' என்று கூறுவதில்லையே! மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு மகளாக அவதரித்து மதுரையின் அரசியாக மகுடம் சூடி, திக்விஜயமாக கைலாயத்துக்கே சென்றவள் மீனாட்சி. அந்த வீரத்திருமகளை திருமணம் செய்தவர் சிவன். எனவே, அம்பாளுக்கு இங்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.


** சமீப காலமாக மக்கள் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. உண்மை தானா?

ஆன்மிக ஈடுபாடு என்பது மக்களிடம் எப்பொழுதுமே குறைந்ததில்லை. இடைக்காலத்தில் கோயில்களுக்குச் செல்வதில் சிறிய சரிவு ஏற்பட்டிருந்தது. காரணம் கடின உழைப்பு, குழந்தைகளின் கல்விக்காக பெற்றோர் அதிகநேரம் செலவிடுதல், "டிவி' வரவு என்று எத்தனையோ சொல்லலாம். இப்போது "டிவி' மீதான மக்களின் கவர்ச்சி குறைந்து விட்டது. எத்தனை நாள் தான் ஒரே அழுகை தொடர்களை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்! அரைத்த மாவையே அரைக்கும் வேலையைத் தானே "டிவி' செய்கிறது! எனவே, தங்கள் மனஅமைதியைக் கெடுக்கும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கைவிட்டு, கோயில்களின் பக்கம் மக்கள் திரும்பியுள்ளனர்.

* வீட்டில் உள்ள சுவாமி சிலைக்கு அபிஷேகம் செய்யாவிட்டால் தோஷம் உண்டாகுமா?

பூஜை செய்ய வேண்டும் என்று விரும்பி தானே, சிலை வைத்திருக்கிறீர்கள்! அப்படி என்றால் அதற்கான அபிஷேகம், நைவேத்யம் இவைகளைச் செய்வதில் என்ன யோசனை? தினமும் செய்ய முடியாத பட்சத்தில் வாரம் ஒரு முறையாவது அபிஷேகம் செய்யுங்கள். மற்ற நாட்களில் புஷ்பம் சாத்தி பூஜை செய்யுங்கள்.

* மற்றவர் ஏற்றிய அகல் விளக்குகளில் நாம் தீபம் ஏற்றலாமா?

யார் ஏற்றினாலும் தீபம் ஒன்று தான். சுவாமி சந்நிதியில் தீபம் ஏற்றினால் நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கிறது. இது விளக்கேற்றினால் கிடைக்கும் பலன் தானே தவிர எரிகிற விளக்கில் ஒன்றுமில்லை. ஒருவர்
ஏற்றிய விளக்கில் நாம் மீண்டும் விளக்கேற்றினால் அவரது பாவம் நமக்கு வந்துவிடாது. நமது புண்ணியமும் அவருக்குப் போய் விடாது. சந்நிதியில் விளக்கேற்றுகிறோம் என்ற தூய சிந்தனையுடன் மட்டும் தீபம் ஏற்றுங்கள். அதிகமாக தீக்குச்சிகளை உபயோகிப்பதால் குச்சிகள் குவியும் தொந்தரவும் இருக்காது.

* நவக்கிரக படங்களை விட்டு பூஜையறையில் வைத்து வணங்கலாமா?

சுவாமி படங்கள் என்ற நிலையில் எல்லா படங்களையுமே வீட்டில் வைத்து பூஜிக்கலாம்.

* சில வீடுகளில் வாஸ்து புருஷன் படத்தை வாசலில் திருஷ்டிக்காக கட்டி தொங்க விட்டுள்ளனர். சில வீடுகளில் பூஜையறையிலேயே வைத்துள்ளார்கள். இது எந்த அளவுக்கு சரி?

சுவாமி படங்களைத் தான் வீட்டில் வைக்கலாம். வாஸ்து புருஷன் ஒரு அரக்கன். அவனுக்காகத்தான் வீடு கட்டத் துவங்கும் முன், பூசணிக்காய் வெட்டி பலி கொடுக்கிறோம். அவனது படம் வைக்கக்கூடாது.

 உற்சவர் புறப்பாட்டின் போது மூலவரை வணங்குவது சரிதானா?

மூலவரின் எழுந்தருளித் திருமேனி (விழாக்காலத்தில் பவனி வருபவர்) தான் உற்சவர். உற்சவமூர்த்தி புறப்பாடு என்பது மூலவருக்கு செய்யும் விழா. அந்நேரத்தில் நாமும் திருவீதியுலாவில் கலந்து கொண்டு தரிசிப்பது சிறப்பு. சில கோயில்களில் உற்சவர் புறப்பாடானதும், மூலவர் சந்நிதியை நடை சாத்தும் வழக்கமும் உண்டு.

* எனக்கு 84 வயது, தரையில் உட்கார்ந்து சந்தியா வந்தனம் செய்ய இயலவில்லை. நாற்காலி, ஊஞ்சலில் அமர்ந்து செய்யலாமா?

இத்தனை வயதிலும் அனுஷ்டா னங்களை விடாமல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களே! அதுவே, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமையட்டும். நாற்காலி, பெஞ்சில் அமர்ந்து செய்யலாம். ஊஞ்சல் வேண்டாம். ஜபம் செய்யும் போது நாம் அமரும் ஆசனம் ஆடக்கூடாது.

** நிஷ்டை என்பதன் பொருள் என்ன?

புலன்களின் இயக்கத்தை ஒடுக்கி தியானத்தில் அமர்வதே நிஷ்டை. ""ஷட்'' என்ற வேர்ச் சொல்லில் இருந்து வருவதே இந்தச் சொல். ""ஷ்ட கதி நிவ்ருத்தென'' என்பது இலக்கணம். அதாவது "இயக்கத்தை நிறுத்திக் கொள்வது' என்று பொருள். கண், காது, மூக்கு, வாய் உடல் ஆகியன இயங்குவதற்கு தகுந்தாற் போல் நம் மனமும் செயல்படுகிறது. கண் பார்ப்பதை காது கேட்பதை, மூக்கு நுகர்வதை, வாய் சுவைப்பதை உடல் இயங்குவதைப் பின்பற்றியே மனமும் செல்கிறது. இவற்றின் இயக்கம் அதிகமாகும் போது, மனம் நிலையில்லாமல் அலை பாய்கிறது. அமைதி குறைகிறது. மன அழுத்தம் கூடுகிறது. இந்நிலையில் மனதில் இறைவனை நிலை நிறுத்தி அமர்வது சாத்தியமில்லை. எனவே தான் முனிவர்கள் நிஷ்டை எனும் அரிய வழியைக் கையாண்டார்கள். கண்களை மூடி மனதில் இறைவனை நிலை நிறுத்தி மற்றைய புலன்களில் இயக்கத்தையும் நிறுத்திப் பழகி விட்டால் "ஏகாக்ர சித்தம்' என்னும் ஒருநிலைப்பட்ட மன அமைதி ஏற்பட்டு விடும்.

* கோயில் பிரகாரத்தில் சுற்றி வரும் பொழுது யாராவது இறந்துவிட்டால் கஜபூஜை செய்கிறார்கள். பிரேத தோஷத்திற்கு இது சரியான தீர்வா?

கஜபூஜை செய்வது விசேஷம் தான். ஆனால், அது பிரேத தோஷத்திற்கு தீர்வாகாது. பிரவேசபலி, ர÷க்ஷõக்ன ஹோமம். வாஸ்து சாந்தி ஆகிய பூஜை, ஹோமங்களைச் செய்ய வேண்டும்.

* இறைவனை எந்த வயதில் வழிபட்டால் மனம் பக்குவமடையும்?
-
இறைவழிபாட்டிற்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம்? பிரகலாதன் கருப்பையிலேயே பகவான் நாமம் ஜபம் செய்யத் துவங்கிவிட்டான். திருஞானசம்பந்தர் மூன்று வயதில் தேவாரம் பாடத் துவங்கிவிட்டார். இக்காலத்தில் கூட ஒரு சிலர் இளம் வயதிலேயே இறைவனை வழிபட்டு பக்குவம் அடைந்திருக்கிறார்கள். இறைவனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பக்தியை உண்டுபண்ண வேண்டும். அந்த பக்தி அவர்களைப் பக்குவப்படுத்தி விடும்.


* விநாயகருக்கு விடலைத் தேங்காய் உடைக்கிறார்கள். அதை எடுப்பது பாவமா?

விக்னம் போக்குபவர் விநாயகர். அவரை வழிபட்டால் காரியத்தடை நீங்கும். தொடங்கும் பணி குறைவின்றி நிறைவேற அவரை வேண்டி விடலை போடுவர். சுவாமிக்கு படைத்த பின் அதில் எப்படி பாவம் சேரும். தாராளமாக எடுத்து உண்ணலாம்.

* வீட்டில் கணபதி ஹோமத்தை நடத்துவதாக இருந்தால் எப்போது செய்வது நல்லது?

பிரம்ம முகூர்த்தம் என்னும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடத்துவது நல்லது. விநாயகருக்குரிய சதுர்த்தி திதி, அஸ்தம் நட்சத்திர நாளில் நடத்துவது இன்னும் சிறப்பு.

* கிரகப்பிரவேசத்தின் போது முதலில் பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருவது ஏன்?

பசு லட்சுமியின் அம்சம். தர்ம தேவதையின் அடையாளம். பால் தருவதால் "கோமாதா' என்று தாயாகப் போற்றுவர். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கவும், தர்மம் தழைக்கவும் பசுவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.

* பவுர்ணமி பூஜையை பகலில் செய்யலாமா?

பவுர்ணமியன்று வீட்டில் செய்யும் பூஜையை பகல் அல்லது மாலையிலும், கோயில்களில் இரவிலும் செய்வது சிறந்தது. பவுர்ணமி நிலவு உதயமான பிறகு கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வெளிபிரகாரத்தை வலம்வருவது ஆரோக்கியத்துக்கு நல்லது. மனதைரியமும் வளரும்.

** திருநீறு இடுவதற்கு எந்த விரலைப் பயன்படுத்த வேண்டும்?
.
திருநீறு இடுவதற்கு வலக்கையில் ஆள்காட்டிவிரல், சுண்டுவிரலை கொம்பு போல நீட்டியபடி மற்ற மூன்று விரல்களைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு ரிஷப முத்திரை என்று பெயர். பூசும்போது ஓம் சிவாயநம, ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ போன்ற மந்திரங்களைச் ஜெபிக்க வேண்டும். சிந்தாமல் சற்று நிமிர்ந்தபடி பூச வேண்டும்.

*பரிகாரத்திற்கு கட்டுப்படாத பாவம் இருக்கிறதா?

உடலில் நோய் ஏற்பட்டால் தான் மருந்து சாப்பிட வேண்டும். பரிகாரமும் அதுபோலத்தான். அறியாமையால் ஏற்படும் தவறுகளுக்கு, அதாவது தெரியாமல் செய்துவிட்ட பாவத்திற்கு பிராயச்சித்தம் தான் பரிகாரம். தெரிந்தே செய்யும் பாவங்களுக்கு பரிகாரம் செய்து பயனென்ன! பாவமே செய்யாமல் வாழ முயல்வது தான் சிறந்தது.

கருட புராணத்தை வீட்டில் படிக்கக் கூடாது என்கிறார்களே ஏன்?

ஒருவர் இறந்த பிறகு அவரது ஆவியின் பயணம் பற்றிக் கூறும் நூல் கருட புராணம். இறப்பதற்கு முன் செய்த பாவ புண்ணிய பலனை உயிர் அனுபவிப்பதை அது விளக்குகிறது. இறந்தவரின் பிள்ளைகள் செய்யும் கர்மாக்களினால் துன்பத்திலிருந்து விடுபட்டு பிதுர் உலகம் செல்வதையும் கூறுகிறது. இதனால் சாதாரண நாட்களில் இதனைப் படிக்க கூடாது என்பர். ஆனால், இந்நூலில் உள்ள விஷயங்களை தெரிந்து கொண்டால் நம்மிடம் தவறுகள் குறையும். புத்தகம் என்பது மற்றவர் படிக்கத் தான். இறந்த வீட்டில் பத்து நாளுக்குள், இந்நூலை ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்பர். கோயில், மடங்களில் தகுதியான ஒருவர் படிக்க மற்றவர் கேட்கலாம்.

* திருப்பாவையை மார்கழியில் மட்டும் தான் பாடவேண்டுமா?

ஆண்டாள் கொண்டிருந்த கிருஷ்ண பக்தியை வெளிப்படுத்தும் நூல் இதுவாகும். இதைப் பாடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும். நீங்காத செல்வம் கிடைக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் மணவாழ்வு கைகூடும்.எந்த மாதத்திலும் படிக்கலாம்.

*வீட்டில் ஆண்டுக்கொரு முறை கணபதி ஹோமம் செய்ய நினைக்கிறேன். என் எண்ணம் சரியானது தானா?

மிக சரியானது. நீங்கள் ஹோமம் செய்வதோடு பிறரையும் செய்யச் சொல்லுங்கள். ஹோமப்புகையும் மந்திரங்களும் உங்கள் வீட்டை மட்டுமல்ல! உங்கள் ஊரையே காப்பாற்றும். இப்படி எல்லோரும் செய்து வந்தால் காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படும். நன்கு மழை பெய்யும். இயற்கை சீற்றம் ஏற்படாது. ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும். கடந்த சில ஆண்டுக்கு முன் நிகழ்ந்த போபால் விஷவாயு, தினமும் ஹோமம் செய்த ஒருவர் வீட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* * சனி பகவானின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

சனீஸ்வரரையும் ஈஸ்வர பட்டத்தோடு பகவான் என்று தான் குறிப்பிடுகிறோம். அவர் இறைவனின் பிரதிநிதியாக இருந்து நம் பாவபுண்ணியத்திற்கு ஏற்ப பலன்களை நமக்கு வழங்குகிறார். அவரைக் கண்டு அஞ்சத் தேவை யில்லை. விரும்பினால், அனுகிரக சனீஸ்வரராக சாந்த கோலத்தில் வைத்து வழிபடுங்கள்.

* மாலையில் தீபமேற்றி வழிபட்ட பின், கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடலாமா?

சந்தேகமே வேண்டாம். தாராளமாக வீட்டில் தீபமேற்றிய பின் கோயிலிலும் தீபமேற்றி வழிபடுங்கள். அதனால், உங்களுக்குப் புண்ணியம் பன்மடங்கு சேரும்.

புலிப்பாணி ஜோதிட பாடல்களும்- விளக்கங்களும்

பதிவு: 012 :: புலிப்பாணி ஜோதிட பாடல்களும்- விளக்கங்களும்

புலிப்பாணி ஜோதிட பாடல்களும் - விளக்கங்களும் 
இணைப்பைச் சொடுக்கி  300 பாடல்களையும், விளக்கங்களையும் காண்க:-

http://psssrf.org.in/Pulippani/Pulippani.aspx
எண்பாடல் ஆரம்பம்UPDATE-DATE
1விருச்சிகம் மேலும் படிக்க...29-06-2011
2தனுசு மேலும் படிக்க...29-06-2011
3மகரம் மேலும் படிக்க...29-06-2011
4கும்பம் மேலும் படிக்க...29-06-2011
5மீனம் மேலும் படிக்க...29-06-2011
6குளிகன் நிலமை மேலும் படிக்க...29-06-2011
7குளிகன் நிலமை1 மேலும் படிக்க...29-06-2011
8குளிகன் நிலமை2 மேலும் படிக்க...29-06-2011
9குளிகன் நிலமை3 மேலும் படிக்க...29-06-2011
10குளிகன் நிலமை4 மேலும் படிக்க...29-06-2011
11குளிகன் நிலமை5 மேலும் படிக்க...29-06-2011
12சூரியன் நிலைமை மேலும் படிக்க...29-06-2011
13சூரியன் நிலைமை1 மேலும் படிக்க...29-06-2011
14சந்திரன் நிலைமை மேலும் படிக்க...29-06-2011
15சந்திரன் நிலைமை1 மேலும் படிக்க...29-06-2011
16செவ்வாய் நிலைமை மேலும் படிக்க...29-06-2011
17செவ்வாய் நிலைமை1 மேலும் படிக்க...29-06-2011
18வியாழன் நிலைமை மேலும் படிக்க...29-06-2011
19வியாழன் நிலைமை1 மேலும் படிக்க...29-06-2011
20சுக்கிரன் நிலைமை மேலும் படிக்க...29-06-2011
21சுக்கிரன் நிலைமை1 மேலும் படிக்க...29-06-2011
22சனி நிலைமை மேலும் படிக்க...29-06-2011
23சனி நிலைமை தோஷநிவர்த்தி மேலும் படிக்க...29-06-2011
24சரலெக்கின பலன் மேலும் படிக்க...29-06-2011
25ஸ்திர லெக்கின பலன் மேலும் படிக்க...29-06-2011
26உபய லெக்கின பலன் மேலும் படிக்க...29-06-2011
27கொடிமாலை மச்சம் மேலும் படிக்க...29-06-2011
28கேளப்பா குடினாதன் ஆட்சிஉச்சம் மேலும் படிக்க...29-06-2011
29சகடயோகம் மேலும் படிக்க...29-06-2011
30அன்னியபீசம் மேலும் படிக்க...29-06-2011
31தாரையோகம் மேலும் படிக்க...29-06-2011
32தாரையோகம்1 மேலும் படிக்க...29-06-2011
33தேவன் முனி மேலும் படிக்க...29-06-2011
34தேவதை வசியன் மேலும் படிக்க...29-06-2011
35காப்பு மேலும் படிக்க...29-06-2011
36காப்பு தொடர்ச்சி மேலும் படிக்க...29-06-2011
37நட்பு ஆட்சி உச்சம் பகை நீச்சம் சூரியன் மேலும் படிக்க...29-06-2011
38ஆட்சி உச்சம் பகை நீச்சம் சந்திரன் மேலும் படிக்க...29-06-2011
39நட்பு ஆட்சி உச்சம் பகை நீச்சம் செவ்வாய் மேலும் படிக்க...29-06-2011
40நட்பு ஆட்சி உச்சம் பகை நீச்சம் புதன் மேலும் படிக்க...29-06-2011
41நட்பு ஆட்சி உச்சம் பகை நீச்சம்வியாழன் மேலும் படிக்க...29-06-2011
42நட்பு ஆட்சி உச்சம் பகை நீச்சம் சுக்கிரன் மேலும் படிக்க...29-06-2011
43நட்பு ஆட்சி உச்சம் பகை நீச்சம் சனி மேலும் படிக்க...29-06-2011
44நட்பு ஆட்சி உச்சம் பகை நீச்சம் ராகு கேது மேலும் படிக்க...29-06-2011
451ஆம் பாவம் - முதல் பாவம் - துவாதச லக்கினப் பெயர் மேலும் படிக்க...29-06-2011
462-அம் பாவம் மேலும் படிக்க...29-06-2011
473-ஆம் பாவம் மேலும் படிக்க...29-06-2011
484,5-ஆம் பாவம் மேலும் படிக்க...29-06-2011
496-ஆம் பாவம் மேலும் படிக்க...29-06-2011
507-ஆம் பாவம் மேலும் படிக்க...29-06-2011
518-ஆம் பாவம் மேலும் படிக்க...29-06-2011
529-ஆம் பாவம் மேலும் படிக்க...29-06-2011
5310-ஆம் பாவம் மேலும் படிக்க...29-06-2011
5411-ஆம் பாவம் மேலும் படிக்க...29-06-2011
5512-ஆம் பாவம் மேலும் படிக்க...29-06-2011
56வேறு மேலும் படிக்க...29-06-2011
57நூல் மேலும் படிக்க...29-06-2011
58ரிஷப, மிதுன லெக்கினபலன் மேலும் படிக்க...29-06-2011
59கடகம் மேலும் படிக்க...29-06-2011
60சிம்மம் மேலும் படிக்க...29-06-2011
61கன்னி மேலும் படிக்க...29-06-2011
62துலாம் மேலும் படிக்க...29-06-2011
63தேவதை வசியன்1 மேலும் படிக்க...29-06-2011
64கேளப்பா ஈரைந்தில் முகோள் நிற்க மேலும் படிக்க...29-06-2011
65ஸ்திரீகளால் பொருள் சேருதல் மேலும் படிக்க...29-06-2011
66தேசாந்தரம் போகுதல் மேலும் படிக்க...29-06-2011
67பரதேசம் போகுதல் மேலும் படிக்க...29-06-2011
68கைம்பெண் சேர மேலும் படிக்க...29-06-2011
69மகாராஜ யோகம் மேலும் படிக்க...29-06-2011
70மகாராஜ யோகம்1 மேலும் படிக்க...29-06-2011
71மகாராஜ யோகம்2 மேலும் படிக்க...29-06-2011
72மகாராஜ யோகம்3 மேலும் படிக்க...29-06-2011
73மகாராஜ யோகம்4 மேலும் படிக்க...29-06-2011
74மகாராஜ யோகம்5 மேலும் படிக்க...29-06-2011
75மகாராஜ யோகம்6 மேலும் படிக்க...29-06-2011
76மகாராஜ யோகம்7 மேலும் படிக்க...29-06-2011
77மகாராஜ யோகம்8 மேலும் படிக்க...29-06-2011
78மகாராஜ யோகம்9 மேலும் படிக்க...29-06-2011
79மகாராஜ யோகம்10 மேலும் படிக்க...29-06-2011
80புதையல் போன்ற தனம் மேலும் படிக்க...29-06-2011
81புதையல் போன்ற தனம்1 மேலும் படிக்க...29-06-2011
82மருந்தால் கண்டம் மேலும் படிக்க...29-06-2011
83அட்டமன் விதி மேலும் படிக்க...29-06-2011
84அட்டமன் விதி1 மேலும் படிக்க...29-06-2011
85அட்டமன் நிலைமை மேலும் படிக்க...29-06-2011
86அட்டமன் நிலைமை1 மேலும் படிக்க...29-06-2011
87அட்டமன் நிலைமை2 மேலும் படிக்க...29-06-2011
88அட்டமன் நிலைமை2 மேலும் படிக்க...29-06-2011
89அட்டமன் நிலைமை3 மேலும் படிக்க...29-06-2011
90அட்டமன் நிலைமை4 மேலும் படிக்க...29-06-2011
91அட்டமன் நிலைமை5 மேலும் படிக்க...29-06-2011
92அட்டமன் நிலைமை6 மேலும் படிக்க...29-06-2011
93அட்டமன் நிலைமை மேலும் படிக்க...29-06-2011
94பிதுருக்குக் கண்டம் மேலும் படிக்க...29-06-2011
95பிதுருக்கு இருபக்கம் கோள்கள் மேலும் படிக்க...29-06-2011
96பிதுருக்கு இருபக்கம் கோள்கள்1 மேலும் படிக்க...29-06-2011
97நேத்திர ஊனம் மேலும் படிக்க...29-06-2011
98கிரகமாரி யோகம் மேலும் படிக்க...29-06-2011
99நாலோன் கருமன் சேர மேலும் படிக்க...29-06-2011
100நாலோன் கருமன் சேர1 மேலும் படிக்க...29-06-2011
101சந்திரன் 1-6-8-இல் நின்ற பலன் மேலும் படிக்க...29-06-2011
102சூரியனுக்கு 5-9-இல் மதி மேலும் படிக்க...29-06-2011
1032-இல் செவ்வாய் நிற்க மேலும் படிக்க...29-06-2011
1044-இல் பாவர் நிற்க மேலும் படிக்க...29-06-2011
1054-இல் கேது நிற்க மேலும் படிக்க...29-06-2011
106தன - கர்மாதிபதி யோகம் மேலும் படிக்க...29-06-2011
1073-6க்குடையவர் சேர மேலும் படிக்க...29-06-2011
10812 க்குடையவனும் குடும்பியும்-7இல் நிற்க மேலும் படிக்க...29-06-2011
109மந்திரவாதி மேலும் படிக்க...29-06-2011
110சந்திரனும் 12-5-க்குடையவர்களும் சேர மேலும் படிக்க...29-06-2011
111ஆறுக்குடையவனும் இலக்கினாதிபதியும் மேலும் படிக்க...29-06-2011
112சூரியனுக்கு முன்பின் புந்தி நிற்பது மேலும் படிக்க...29-06-2011
113சூரியனுக்குப்பின் சனி மேலும் படிக்க...29-06-2011
1147இல் மதி சுக்கிரன் மேலும் படிக்க...29-06-2011
1155இல் குரு, சந்திரன், சுக்கிரன் மேலும் படிக்க...29-06-2011
116கண்ணப்பா யின்னமொரு கருத்தைக்கேளூ மேலும் படிக்க...29-06-2011
1177-இல் குரு சந்திரன் மேலும் படிக்க...29-06-2011
1184-இல் புதன், சுக்கிரன் மேலும் படிக்க...29-06-2011
1196 க்குடையவன் கேந்திரத்தில் நிற்க மேலும் படிக்க...29-06-2011
1204-இல் சுக்கிரன் மேலும் படிக்க...29-06-2011
121மதிக்கு 6-7-8இல் சுபர் மேலும் படிக்க...29-06-2011
122குரு சந்திரயோகம் மேலும் படிக்க...29-06-2011
1234இல்-மதி-செவ்வாய் 9க்குடையவன் மேலும் படிக்க...29-06-2011
124குரு.சுக்கிரன்.சனி.செவ்வாய் புதன் கூடினால்... மேலும் படிக்க...29-06-2011
125பாக்கியாதிபதி - திரிகோணம் மேலும் படிக்க...29-06-2011
126சேய்க்கு 9-8-12இல் சுக்கிரன் மேலும் படிக்க...29-06-2011
127நாலுபேர் மறைந்ததும் யோகம் வருவது மேலும் படிக்க...29-06-2011
128ஆறாமிடம் தீயர் நிற்க மேலும் படிக்க...29-06-2011
129இராசியாதிபதி கொடியோரைச் சேர்ந்தது மேலும் படிக்க...29-06-2011
130கூட்டக்கிரகம் மேலும் படிக்க...29-06-2011
1315-6க்குடையவர் சேர மேலும் படிக்க...29-06-2011
1329-6இல் சனி சூரியன் சேர மேலும் படிக்க...29-06-2011
133குரு - புதன்; சுக்கரன் - புதன்; சனி - புதன் மேலும் படிக்க...29-06-2011
134மதி - புதன்; சனி -செவ்வாய் மேலும் படிக்க...29-06-2011
1354-8-1இல் சூரியனும் புதனும் சேர மேலும் படிக்க...29-06-2011
136ச-சூ, வி-சூ. சு-சூ. சு-சனி மேலும் படிக்க...29-06-2011
137செ-பு-வெ மேலும் படிக்க...29-06-2011
138விரையாதி யிரண்டாமிடம் நிற்க மேலும் படிக்க...29-06-2011
139சூ-ச-செ-பு-வி, சூ-செ-சு-சனி மேலும் படிக்க...29-06-2011
140ச-வி-பு. ச-பு-சு மேலும் படிக்க...29-06-2011
141சூ-பு-வி-வெ மேலும் படிக்க...29-06-2011
142பு-ச-வ, வி-சனி-செ, வி-சனி-செ-பு-ச மேலும் படிக்க...29-06-2011
143சேய்க்கு 4-7இல் வெள்ளி மேலும் படிக்க...29-06-2011
144வி-சு-சனி-பு-ச மேலும் படிக்க...29-06-2011
145ச-செ-பு-வி-வெ மேலும் படிக்க...29-06-2011
146வி-சு, வி-சனி, ப-சனி, பு-சனி மேலும் படிக்க...29-06-2011
1476-க்குடையவன் 2லும், 2-க்குடையவன் 6-லும் மேலும் படிக்க...29-06-2011
148ஏழரை நாட்டுச்சனி மேலும் படிக்க...29-06-2011
149ஏழரை நாட்டுச்சனி1 மேலும் படிக்க...29-06-2011
150வாக்கில் சனி மேலும் படிக்க...29-06-2011
151பாரப்பா இன்னமொன்று பகரக்கேளு மேலும் படிக்க...29-06-2011
1525-க்குடையவன் பாம்பைச்சேர மேலும் படிக்க...29-06-2011
1533-க்குடையவனும் பாம்பைச் சேர மேலும் படிக்க...29-06-2011
1545-இல் இராகு நிற்க மேலும் படிக்க...29-06-2011
155இராகு கேந்திரகோணம் மேலும் படிக்க...29-06-2011
156பாம்பு மேலும் படிக்க...29-06-2011
157நாலுக்குடையவன் நின்ற பதிக்கு பத்துக்குடையவன் சேர மேலும் படிக்க...29-06-2011
15812-9-7-இல் பாம்பு தோன்ற மேலும் படிக்க...29-06-2011
159சூரியனுக்கு 5-8-9-இல் சுபர் நிற்க மேலும் படிக்க...29-06-2011
160சூ-ச மேலும் படிக்க...29-06-2011
161சூ-ச1 மேலும் படிக்க...29-06-2011
162மதி 9-8-12-இல் நின்ற பலன் மேலும் படிக்க...29-06-2011
163சேய் சுக்கிரன் மேலும் படிக்க...29-06-2011
164அஞ்சில் தீயர்நின்றி பலன் மேலும் படிக்க...29-06-2011
165அஞ்சில் சனி நின்ற பலன் மேலும் படிக்க...29-06-2011
166லெக்கினத்தில் சனி மேலும் படிக்க...29-06-2011
16712-8-7-2-4-இல் சனி மேலும் படிக்க...29-06-2011
168கோசாரம் மேலும் படிக்க...29-06-2011
169பொது மேலும் படிக்க...29-06-2011
170பொது 1 மேலும் படிக்க...29-06-2011
171வாரே நீ யின்னமொன்று வழுந்தக்கேளு மேலும் படிக்க...29-06-2011
172காணப்பா இன்னமொரு கருத்துக்கேளு மேலும் படிக்க...29-06-2011
173சாற்றினேனின்ன மொன்று செப்பக்கேளு மேலும் படிக்க...29-06-2011
174இடித்திட்டே னின்னமொன்று யியம்பக்கேளு மேலும் படிக்க...29-06-2011
175நடித்திட்டேனின்னமொன்று நாட்டக்கேளு மேலும் படிக்க...29-06-2011
176கிரகநாடி மேலும் படிக்க...29-06-2011
177கேளப்பா பண்டிதனே குறிப்புசொல்வேன் மேலும் படிக்க...29-06-2011
178குரித்திட்டே நட்டமத்தின் செயலேயானால் மேலும் படிக்க...29-06-2011
179சாற்றினேன் கும்பத்தில் பிறந்தோன்ஞானி மேலும் படிக்க...29-06-2011
180பாக்கியத்தில் வீரியத்தோனிருக்கத்தன்னை மேலும் படிக்க...29-06-2011
181உடலுயிர்க்கு மூன்றாமிடத் ததிபன் மந்தன் மேலும் படிக்க...29-06-2011
182பாரப்பா வீரியத்தோன் குருவும், லக்கினத்திலேறில் மேலும் படிக்க...29-06-2011
183தானான் யின்னமொரு சேதிகேளு மேலும் படிக்க...29-06-2011
184பாடினே னின்னமொன்று ஆறோனோடே மேலும் படிக்க...29-06-2011
185பாரப்பா யின்னமொரு செயலைக்கேளு மேலும் படிக்க...29-06-2011
186புதன் நிலமை மேலும் படிக்க...29-06-2011
187குரு கோசாரபலன் -ஜென்மத்தில் மேலும் படிக்க...29-06-2011
188முன்றில் குரு மேலும் படிக்க...29-06-2011
189ஆறில் குரு மேலும் படிக்க...29-06-2011
190நான்கில் குரு மேலும் படிக்க...29-06-2011
191எட்டில் குரு மேலும் படிக்க...29-06-2011
192பத்தில் குரு வந்த பலன் மேலும் படிக்க...29-06-2011
19312-இல் குரு வந்த பலன் மேலும் படிக்க...29-06-2011
194நீசபங்க ராஜ யோகம் மேலும் படிக்க...29-06-2011
195நீசபங்க ராஜ யோகம்1 மேலும் படிக்க...29-06-2011
196திசாபுத்தி பலன் மேலும் படிக்க...29-06-2011
197சூரிய திசை மேலும் படிக்க...29-06-2011
198ரவிதிசையில் சந்திரபுத்தி மேலும் படிக்க...29-06-2011
199ரவிதிசையில் செவ்வாய்புத்தி மேலும் படிக்க...29-06-2011
200ரவிதிசையில் ராகுபுத்தி மேலும் படிக்க...29-06-2011
201ரவிதிசையில் வியாழன்புத்தி மேலும் படிக்க...29-06-2011
202ரவிதிசையில் சனிபுத்திகேளு மேலும் படிக்க...29-06-2011
203ரவிதிசையில் புதனார் புத்தி மேலும் படிக்க...29-06-2011
204ரவிதிசையில் கேதுபுத்தி மேலும் படிக்க...29-06-2011
205ரவி திசையில் சுக்கிரபுத்தி மேலும் படிக்க...29-06-2011
206சந்திர திசை மேலும் படிக்க...29-06-2011
207சந்திர திசை செவ்வாய்புத்தி மேலும் படிக்க...29-06-2011
208சந்திரதிசை ராகுபுத்தி மேலும் படிக்க...29-06-2011
209சந்திரதிசை வியாழபுத்தி மேலும் படிக்க...29-06-2011
210சந்திர திசை சனியன்புத்தி மேலும் படிக்க...29-06-2011
211சந்திரன் திசை புதனின் புத்தி மேலும் படிக்க...29-06-2011
212சந்திர திசை கேதுபுத்தி மேலும் படிக்க...29-06-2011
213சந்திரதிசை சுக்கிரபுத்தி மேலும் படிக்க...29-06-2011
214சந்திரதிசை சூரியபுத்தி மேலும் படிக்க...29-06-2011
215செவ்வாய் மகாதிசை மேலும் படிக்க...29-06-2011
216சேய்திசை ராகுபுத்தி மேலும் படிக்க...29-06-2011
217சேய்திசை வியாழபுத்தி மேலும் படிக்க...29-06-2011
218சேய்திசை சனியன்புத்தி மேலும் படிக்க...29-06-2011
219சேய்திசையில் புதனார்புத்தி மேலும் படிக்க...29-06-2011
220செவ்வாயில் கேதுபுத்தி மேலும் படிக்க...29-06-2011
221சேய் திசையில் சுக்கிரபுத்தி மேலும் படிக்க...29-06-2011
222செவ்வாயில் சூரிய புத்தி மேலும் படிக்க...29-06-2011
223செவ்வாயில் சந்திரபுத்தி மேலும் படிக்க...29-06-2011
224இராகு மகாதிசை மேலும் படிக்க...29-06-2011
225ராகுதிசை வியாழபுத்தி மேலும் படிக்க...29-06-2011
226ராகுதிசை சனிபுத்திகேளு மேலும் படிக்க...29-06-2011
227ராகுதிசை புதனார் பத்து மேலும் படிக்க...29-06-2011
228ராகுதிசை கேதுபுத்தி மேலும் படிக்க...29-06-2011
229ராகுதிசை சுக்கிரபுத்தி மேலும் படிக்க...29-06-2011
230ராகுதிசை சூரியபுத்தி மேலும் படிக்க...29-06-2011
231ராகுதிசை சந்திரபுத்தி மேலும் படிக்க...29-06-2011
232ராகுதிசை செவ்வாய்புத்தி மேலும் படிக்க...29-06-2011
233வியாழமகா திசைபலன் மேலும் படிக்க...29-06-2011
234வியாழதிசை சனியின்புத்தி மேலும் படிக்க...29-06-2011
235வியாழதிசை புதனார்புத்தி மேலும் படிக்க...29-06-2011
236வியாழதிசை கேது புத்தி மேலும் படிக்க...29-06-2011
237வியாழதிசை சுக்கிரபுத்தி மேலும் படிக்க...29-06-2011
238வியாழதிசை சூரியபுத்தி மேலும் படிக்க...29-06-2011
239வியாழதிசை சந்திர புத்தி மேலும் படிக்க...29-06-2011
240வியாழதிசை செவ்வாய்புத்தி மேலும் படிக்க...29-06-2011
241வியாழ திசை ராகுபுத்தி மேலும் படிக்க...29-06-2011
242சனி மகாதிசைபலன் மேலும் படிக்க...29-06-2011
243காரிதிசை புதன்புத்திகேளு மேலும் படிக்க...29-06-2011
244காரிதிசை கேதுபுத்தி மேலும் படிக்க...29-06-2011
245காரிதிசை சுக்கிரபுத்தி மேலும் படிக்க...29-06-2011
246காரிதிசை கதிரோன்புத்தி மேலும் படிக்க...29-06-2011
247காரிதிசை சந்திரபுத்தி மேலும் படிக்க...29-06-2011
248காரிதிசை செவ்வாய்புத்தி மேலும் படிக்க...29-06-2011
249காரிதிசை ராகுபுத்தி மேலும் படிக்க...29-06-2011
250காரிதிசை வியாழபுத்தி மேலும் படிக்க...29-06-2011
251புதன் மகாதிசை மேலும் படிக்க...29-06-2011
252புதன் திசையில் கேதுபுத்தி மேலும் படிக்க...29-06-2011
253புதன் திசையில் சுக்கிரபுத்தி மேலும் படிக்க...29-06-2011
254புதன் திசையில் சூரியபுத்தி மேலும் படிக்க...29-06-2011
255புதன் திசையில் சந்திரபுத்தி மேலும் படிக்க...29-06-2011
256புதன் திசையில் செவ்வாய்புத்தி மேலும் படிக்க...29-06-2011
257புதன் திசையில் ராகுபுத்தி மேலும் படிக்க...29-06-2011
258புதன் திசையில் வியாழபுத்தி மேலும் படிக்க...29-06-2011
259புதன் திசையில் சனியின்புத்தி மேலும் படிக்க...29-06-2011
260கேது மகாதிசை மேலும் படிக்க...29-06-2011
261கேதுதிசை சுக்கிரபுத்தி மேலும் படிக்க...29-06-2011
262கேது திசை சூரியபுத்தி மேலும் படிக்க...29-06-2011
263கேதுதிசை சந்திரபுத்தி மேலும் படிக்க...29-06-2011
264கேதுதிசை செவ்வாய்புத்தி மேலும் படிக்க...29-06-2011
265கேதுதிசை ராகுபுத்தி மேலும் படிக்க...29-06-2011
266கேதுதிசை வியாழபுத்தி மேலும் படிக்க...29-06-2011
267கேதுதிசை சனியின்புத்தி மேலும் படிக்க...29-06-2011
268கேதுதிசை புதனார்புத்தி மேலும் படிக்க...29-06-2011
269சுக்கிர மகாதிசை மேலும் படிக்க...29-06-2011
270சுக்கிரதிசை சூரியபுத்தி மேலும் படிக்க...29-06-2011
271சுக்கிரதிசை சந்திர புத்தி மேலும் படிக்க...29-06-2011
272சுக்கிரதிசை செவ்வாய்புத்தி மேலும் படிக்க...29-06-2011
273சுக்கிரதிசை ராகுபுத்தி மேலும் படிக்க...29-06-2011
274சுக்கிரதிசை வியாழபுத்தி மேலும் படிக்க...29-06-2011
275சுக்கிர தசை சனியன்புத்தி மேலும் படிக்க...29-06-2011
276சுக்கிரதிசை புதனார்புத்தி மேலும் படிக்க...29-06-2011
277சுக்கிரனில் கேதுபுத்தி மேலும் படிக்க...29-06-2011
278நவக்கிரகந் திசைபுத்திபலனை மேலும் படிக்க...29-06-2011
279பாடினே னின்ன மொன்று பகரக்கேளு மேலும் படிக்க...29-06-2011
280பாரப்பா யின்னமொரு புதுமைகேளு மேலும் படிக்க...29-06-2011
281திசாபாக உடற்கூற்று வண்ணம் மேலும் படிக்க...29-06-2011
282ஒண்ணவன் சுபனுமேயாகி -மாதே மேலும் படிக்க...29-06-2011
283ஒண்ணவன் விரயத்திலேற - மாதே மேலும் படிக்க...29-06-2011
284ஒண்ணவன் விரயமுமாகி - மாதே மேலும் படிக்க...29-06-2011
285ரெண்டவன் திசையைக்கேளு-அவன் மேலும் படிக்க...29-06-2011
286மூன்றவன் திசை நீகேளு --மாதே மேலும் படிக்க...29-06-2011
287நாலவன் திசையை நீகேளு---மாதே மேலும் படிக்க...29-06-2011
288அஞ்சவன் திசையை நீகேளு--மாதே மேலும் படிக்க...29-06-2011
289ஆறவன் திசையை நீபாரு--மாதே மேலும் படிக்க...29-06-2011
290ஏழவன் திசையை நீகேளு--மாதே மேலும் படிக்க...29-06-2011
291எட்டவன் திசையை நீபாரு--மாதே மேலும் படிக்க...29-06-2011
292பாக்கியன் திசையை நீகேளு--மாதே மேலும் படிக்க...29-06-2011
293பத்தோன் திசையை நீபாரு--மாதே மேலும் படிக்க...29-06-2011
294லாபத்தில் குருவுமிருக்க--மாதே மேலும் படிக்க...29-06-2011
295வெய்யோனிருபக்கம் பாரு--மாதே மேலும் படிக்க...29-06-2011
296நொண்டி வண்ணம்--நாலவன் திசைக்கு மேலும் படிக்க...29-06-2011
297எட்டுக்குடையவன் திசைக்கு மேலும் படிக்க...29-06-2011
298இலக்கினங்களின் வேளைக்குத் தகுந்த அமிர்தயோகம் சித்தயோகம், மரணயோகம் முதலியவை அறிய. மேலும் படிக்க...29-06-2011
299இடமறிந்துரைத்தல் மேலும் படிக்க...29-06-2011
300இடமறிந்துரைத்தல்1 மேலும் படிக்க...29-06-2011
1