For Read Your Language click Translate

23 May 2015

ஜோதிடமுத்துக்கள்:

ஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தித்த பின்:   



ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு:

லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர். லக்னாதிபதி இருக்கும் இடம் அவர்மனப்பாங்கை தீர்மாணிக்கும்.
லக்னாதிபதி லக்னத்தில் பலம் பெற்றால் நேர்மறை மனப்பாங்கு உடையவர், 1,2,3,4,5,7,9,10,11 ல் இருப்பது நேர்மறை மனப்பாங்கைத் தரும்....
உச்சம், ஆட்சி, நட்பு, பகை, சமம், நீசம் பெறும் பலம் பொறுத்து நேர்மறை மனப்பாங்கை செயல்படுத்தும் நிலை தரும்.

லக்னாதிபதி 6,8,12ல் இருப்பது எதிர்மறை மனப்பாங்கை தரும். பெறும் பலம் பொறுத்து செயல்படும் நிலை இருக்கும்.
தீய திசை புத்திகளில் தொடர்ந்து வரும் பிரச்சினைகளால் நமது சூழ்நிலைகளால் எதிர்மறை மனப்பாங்கு ஏற்பட்டு எல்லா வகையிலும் பிரச்சினைகளை அதிகரிக்கும்.
நல்ல திசை புத்திகளால் உற்சாகமும் வெற்றி களிப்பும், மகிழ்ச்சியும் உருவதால், நேர்மறை மனப்பாங்கு ஏற்பட்டு சோதனைகளை சாதனைகளாக, எல்லோர்க்கும் நல்லவனாகும் நிலை ஏற்படும்.
6,8,12 , பாதகஸ்தானம், சனி , ராகு , கேது, இவற்றின் திசையில் சுய புத்தியில் மிகுதியான எதிர்மறை மன்பாங்கு அதிகரிக்கும். சனி ராகு கேது உபஜெய ஸ்தாணங்களில் இருந்தால் நேர்மறை மனப்பாங்கு தரும்
மற்ற நல் பாவங்களின் 1,2,3,4,5,7,9,10,11 மற்றும் சூரி, சந், செவ், குரு, சுக் திசா புத்திகளில் நேர்மறை மனப்பாங்கு தந்து வாழ்வில் வெற்றி தரும்.
சூரியன் சனி, சனி செவ்வாய் தொடர்பு , சேர்க்கை, சம்பந்தம் சந்தேகபுத்தியை தரும்

ஜோதிட முத்துக்கள் :

லக்னாதிபதி 8 -ல் இருந்தால் - ஜாதகன் கஞ்சனாகவும் செல்வத்தை சேமிப்பவனாகவும் இருப்பான். லக்கனாதிபதி சுபக்கோளாகில் நீண்ட ஆயுள் உடையவனாகவும், பாபராகில் குறைந்த ஆயுள் உடையவனாகவும் இருப்பான்.
2-ஆம் அதிபதி 8-ல் நின்றால் - ஜாதகன் தற்கொலை செய்து கொள்பவனாயும், கபாலத்தைக் கொள்பவனாயும் , உயர்ந்த குடியில் பிறந்தாலும் வெகு விரைவில் தாழ்ந்த நிலையை அடைவான்.
3 - ஆம் அதிபதி 8 -ல் நின்றால்- ஜாதகனின் சகோதரன் நோயாளியாவான். அசுபக்கிரகமானால் 8 - வது வயதில் ஜாதகனுக்கு நோ...ய் - கண்டத்தை ஏற்படுத்தும். சுபக்கிரகமாயின் நோயிலிருந்து விடுபடுவான்.
4 - ஆம் அதிபதி 8 -ல் நின்றால்- ஜாதகனுக்கு தீராத வியாதி இருந்து கொண்டேயிருக்கும். தீய செயல்களில் ஈடுபடுபவனாகவும் இருப்பான்.
5 - ஆம் அதிபதி 8 -ல் நின்றால்- ஜாதகனின் மனைவி ஒல்லியாகவும், வீட்டுச்செயல்களை முடிக்க இயலாதவளாகவும் இருப்பாள்.
6 - ஆம் அதிபதி 8 -ல் நின்றால்- ஜாதகன் எப்பொழுதும் கவலைப்பட்டவனாகவும், நண்பர்கள் அற்றவனாகவும், எதிரிகளால் ஆயுளுக்கு பங்கத்தை ஏற்படுத்திக் கொள்பவனாகவும் இருப்பான்.


ஜோதிடமுத்துக்கள் :

பிறப்பு ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்திருந்தால் இளம் வயதிலேயே வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும்

சுக்கிரன் + புதன் + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- பொன், ஆடை , ஆபரணங்கள், வீடு, வாகன வசதிகளை அடைவான்.
சுக்கிரன் + குரு + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- வாலிப வயதில் ஏராளமாக சம்பாதித்து மிகுதியான செலவு செய்வான்.
செவ்வாய் + சந்திரன் + சூரியன்- சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- கிராம தலைவனாகும் அமைப்பு உண்டு. பேச்சு திறமையின் காரணமாக புகழ் பெறுவான்....
சூரியன் + சந்திரன் + புதன் சேர்க்கை- சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- அரசனைப் போல செல்வமும் செல்வாக்கும் பெற்றவனாவான்


குரு + புதன் + சூரியன் சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்றால் ஜாதகன் செல்வந்தன் ஆவான். வீடு, நிலம் ஆகியன பெற்று சிறப்பான வாழ்க்கை அமையும்.
குரு + சுக்கிரன் + புதன் - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்றால் ஜாதகன் பாக்கியமுள்ளவன். இளம் வயதில் செல்வம் சேர்ப்பவன். குடும்பத்தாருடன் ஒற்றுமையாக வாழ்பவன்.

செவ்வாய் + சுக்கிரன் + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் நின்றால் , ஜாதகனுக்கு பிறக்கும் மகன் நற்பண்புகள் இல்லாதவனாக இருப்பான். அதனால் ஜாதகனுக்கு பொருள் நஷ்ட...மும் மான இழப்பும் ஏற்படும்.
குரு + சனி சேர்க்கை - வலிமை பெற்று சுப ஸ்தானங்களில் நிற்க - ஜாதகன், புகழ் உள்ளவன். செல்வம் சேர்ப்பவன். ஒழுக்கமுள்ளவன், கொடுத் வாக்கை காப்பபாற்றுபவன். பெரியோர்களை மதிக்கத் தெரிந்தவன்.
7-ல் சனி, லக்கனத்தில் - குரு இருக்க பிறந்த ஜாதகனுக்கு வாதநோய், பக்கவாதம் ஏற்படும்.
5, 9 -ல் சனி இருந்து -அந்த சனியை செவ்வாய் , சூரியன் பார்த்தால் பல் வியாதி.
லக்கனத்திற்கு 4 அல்லது 10 -ல் - சூரியன் + செவ்வாய் சேர்க்கை - மலை மீதிருந்து வீழ்ந்து சாவான் அல்லது உயரமான இடத்தில் இருந்து விழுந்து உயிர் துறப்பான்.
லக்னத்திற்கு 10 - ல் சந்திரன், 7 -ல் செவ்வாய், சூரியனுக்கு 2-ல் சனி இருக்க பிறந்தவன் - அங்க வீணணாக இருப்பான்.


லக்கனத்திற்கு 10 -ல் சந்திரன், 7 -ல் சுக்கிரன், 4-ல் பாவர்கள் இருக்கப் பிறந்த ஜாதகனுக்கு புத்திரர்கள் ( சந்ததி ) நசிந்து போகும்.
5- க்குடையவன் 10-லும் , 10 -க்குடையவன் 5-லும் பரிவர்த்தனைப் பெற்று இருப்பது , அல்லது
5- ல் 2 -ஆம் அதிபதி அல்லது புதன் + சனி + செவ்வாய் --- சேர்க்கைப் பெற்று பலம் பொருந்தி இருக்க பிறந்த ஜாதகர்- வைத்தியத்தில் வல்லுனர் + இரண சிகிச்சை புரிவதில் சமர்த்தர்.
1-5-9- க்குடையவர்வர் 6- ல் அமர்ந்து 12-ஆம் அதிபதி 5- அமர்ந்து இருக்கப் பிறந்த ஜாதகி- கர்ப்பச்சேதம் அல்லது வயிற்றிலேயே குழந்தை இறந்து பிறக்கும்.
5 - ஆம் வீட்டில் அல்லது 5 -ஆம் அதிபதியுடன் , அல்லது குரு - இவர்களை செவ்வாய் பார்கினும் அல்லது சேர - பிறந்த ஜாதகிக்கு கர்ப்பத்திலேயே குழந்தை இறந்து பிறக்கும்.
5 -ஆம் வீடு - கன்னி , கும்பமாகி அதில் புத்திர ஸ்தானாதிபதி + மாந்தி நிற்கினும், 5 -ஆம் வீட்டை 6-8-12- க்குடையவர்கள் பார்த்தால் தத்துபுத்திரர் உண்டு.







புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் அதிகமாக தூங்குவாள்
சுகமும், உணவும் அதிகமாக விரும்பமாட்டாள்
யாருக்கும் வஞ்சகம் செய்ய மாட்டாள்...
இவள் மனதில் ஆசையும் இருக்காது.,
பயமும் இருக்காது

கொண்ட கணவன் மீது குறை சொல்ல மாட்டாள்
கணவனே தனக்கு எல்லாம் என்று கருதுவாள்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் உருவான தொடையும்,
மெலிந்த காலும், கரிய கூந்தலும்,
பருத்த கண்ணும், அளவில்லாத தனங்களும், சிறு சொல் சொல்லுதலும்,
நல்ல அழகும் உடையவள் இவள்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் உச்சந்தலை சிறிது உயர்ந்திருக்கும்
பொய் பேசுவாள், ஆனால் அச்சம் இருக்கும்.
அன்பில்லாதவள் போல் காணப்படுவாள்...
அண்டியவருக்கு உதவி செய்வாள்
உறவினரைக் காப்பாற்றுவாள்
இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டுப் படுத்தால் தன் பெருமையை பற்றியே பேசிக் கொண்டிருப்பாள்

ஆண் ஜாதகத்தில களத்திரகாரகனான சுக்கிரன் கன்னியில் நின்று அந்த ஆணுக்கு வரும் மனைவியின் ஜாதகத்தில் கன்னி ராசியில் கேது கிரகம் இருக்கக்கூடாது. இந்நிலையில் உள்ள ஜாதகம் இணைந்தால் அந்த ஆணின் காமம் அந்த பெண்ணிடம் செல்லாது. காம விஷயத்தில் விரக்தியே மிஞ்சும். மற்ற கிரக நிலையை அனுசரித்து விவாகப்பிரிவினைக்கும் இட்டுச் செல்லும். பொருத்தம் பார்க்கும் போது இந்நிலையை கவனித்துச் சேர்க்க நலம்.

மணவாழ்க்கை மகிழ்ச்சிக்கான விதிகள்

ஒருவரின் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய லக்கின ராசிக்கு 7ம் பாவமும், களத்திரகாரகன் சுக்கிரனும் லக்கின சுபர்களின் சம்பந்தம் பெறவேண்டும்.
இவர்கள் அம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்று எந்த வொரு பாவ கிரக தொடர்பு பெறாமல் இருந்தால் அச் ஜாதகரின் திருமண வாழ்க்கையானது மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை உறுதியாக கூறலாம். மேலும் 7ம் அதிபதி அம்சத்தில் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பின் திருமணத்திற்கு பிறகு முன்னேற்றம் பன்மடங்கு இருக்கும்....

லக்கினத்திற்கும் லக்கினாதிபதிக்கும் கேந்திர கோணங்களில் 7ம் அதிபதி சுபர் தொடர்பில் இருந்தால் அவரின் மணவாழ்க்கை பிரகாசிக்கும்.
தோஷம் இல்லாத் குருவின் பார்வை 7ம் அதிபதி மேல் இருப்பது யோகத்தை உறுதிசெய்யும். சுபரான சனியின் பார்வை 7ம் அதிபதி மேல் இருந்தால் திருமணத்திற்கு பின் யோகத்தை கொடுத்து நிம்மதியை பரித்துவிடுவார். அல்லது வாழ்க்கை துனைவிக்கு எதேனும் நிரந்தர நோயை தந்துவிடுவார்.
செவ்வாயின் பார்வை அதிகாரம் மிக்க துனைவி அமைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் உண்டு. பொதுவாக திரிகோணதிபதிகளின் பார்வை 7ம் அதிபதி அல்லது சுக்கிரன் மேல் இருப்பது நலம் பயக்கும்.

ஜென்ம லக்கினத்திற்கு 2, 7ம் அதிபதிகள் 6, 8, 12 ல் மறையாமல் இருப்பதும் 2, 7ம் அதிபதிகள் வக்ரம் பெறாமல் இருப்பதும். ஜென்ம லக்கினாதிபதியும் 7ம் அதிபதியும் ஒருவருக்கொருவர் மறையாமல் இருப்பதும் நல்லது. ஒற்றுமையை நிலை நிறுத்தும்.
மேலும் ஆண்களுக்கு 7ம் அதிபதி மற்றும் சுக்கிரனும், பெண்களுக்கு 7ம் அதிபதி செவ்வாயும் , குருவும் நல்ல நிலையில் இருப்பது அவசியம்.
இவர்கள் யாருடனும் சேர்ந்து கெட்டுவிட கூடாது. குறிப்பாக இவர்கள் நின்ற வீட்டதிபதிகள் ராசியிலோ அல்லது அம்சத்திலோ நீச்சம் பெறக்கூடாது. ராகு கேதுக்களுடன் சேரவும் கூடாது.
ஒருவரின் ஜாதகத்தில் திருமண பாவகங்களான 1,2,4,7,8,10,12 ல் பாவகிரகங்கள் ஏதும் இல்லாமல் பலமாக அமையப் பெற்றால் மண வாழ்க்கையானது மகிழ்சிகரமானதாக‌ இருக்கும்,.பொதுவாக 7ம் மிடம் சுத்தமாக இருப்பது அவசியம்.

சம்போக விஷயம்:

திருமணம் ஆன தம்பதியினரின்  தாம்பத்யம் (உடல் உறவு ) வைத்துக்கொள்ள கூடாத நாட்கள்...

ஏகாதசி , பவுர்ணமி , அமாவாசை ,மாதப் பிறப்பு ஆகும்.
இது தவிர மாதவிடாய் ஏற்பட்ட முதல் மூன்று நாட்களும் சேர்க்கைக்கு ஆகாத நாட்களாகும்.

பெண்ணானவள் மாதவிடாய் முடிந்த நான்காம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தை சிறந்த கல்வியாளனாக இருக்கும்

6ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தை சிறந்த தவ வலிமையும் ஞானமும் உடையதாக இருக்கும்
7,ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தை கொடைத் தன்மை மிகுந்ததாகவும், தயை தாட்சண்யம் கொண்டதாகவும் இருக்கும்
9ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தையானது செல்வச் செழிப்பு மிக்கதாக இருக்கும்
10ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையானது காமம் மிகுந்ததாகவும், பெண் மோகங் கொண்டதாகவும் இருக்கும்
12ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையானது சிறந்த பாண்டித்தியமுடைய நிபுணராகவும்
கல்வி , கேள்விகளில் வல்லவனாகவும் விளங்கும்

15,ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தையும்
16ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையும் சிறந்த யோகியாகவும், ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதாகவும் இருக்கும்
நல்ல நாட்கள் மட்டுமே பதிவிடப்பட்டு உள்ளது. நன்றி-காளிதாஸர், உத்தர காலாமிர்தம்
புகழ் உடைய குழந்தை பிறக்க. ஒருவருடைய சாதகத்தில் குரு,செவ்வாய்,சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் சேர்ந்து 1,2,5,9,11 ஆகிய ஜந்து வீட்டில் ஏதேனும் ஒரு வீட்டில் இருந்தால் இளமையிலே பேரும்,புகழும் அடைய கூடிய குழந்தை பிறப்பான்.

புத்திர தோஷம்

ஒரு ஜாதகத்தில் புத்திர ஸ்தானம்என்பது ஜந்தாமிடம் அதேபோல்
ஜந்தாமிட அதிபதி புத்திரஸ்தானாதிபதி,குரு புத்திரகாரகன்....
ஒருவருக்கு குழந்தை பாக்கியம் குறைவின்றி கிடைக்க மேற்கண்ட மூன்று ஸ்தானங்களும் பாதிப்படைய கூடாது.


மேற்கண்ட மூன்று ஸ்தானங்களுடன் பாவிகள்( ராகு,கேது,சனி) சேர்க்கை, பார்வை, நட்சததிர சாரம் பெற்று,சுபர் பார்வையின்றி இருந்தாலும்,
இதேபோல் குரு, புத்திர ஸ்தானதிபதி நீசம்,அஸ்தங்கம்,பகை மற்றும் மறைவு ஸ்தானங்களிலிருந்து பாவிகள் பார்வை பெற்று,சுபர் பார்வையின்றி இருந்தாலும் புத்திர தோஷம்

பரிகாரம் :ராகு,கேது ஸ்தலங்களுக்கு சென்று சர்ப்ப சாந்தி பரிகாரம் செய்து கொள்ளவும்.
குரு ஸ்தலத்திற்கு வியாழக்கிழமை சென்று வழிபடவும்.
அரச மரம் சுற்றி வந்து சுமங்கலி பெண்களுக்கு பூ,பொட்டு,மஞ்சள்,துணி தாணம் செய்யவும்

1.ஜந்துக்குசடையவர் புதன் வீட்டில் ஏறி ஏகனாய் தனித்து நின்றால்குழந்தை இல்லை.கூட்டு கிரகம் இருந்தால் அல்லது பார்வை பெற்றால் மறுதாரம் செய்து 7 ஆண்டுக்கு பிறகு ஆண்குழந்தை பிறக்கும்
2.குருவோடு,சூரியன் அவருக்கு ஏழில் சனியும்,செவ்வாயும் சேர புத்திர வம்சம் நிற்காது.சந்திரன் கூடியிருக்கில் தாய்க்கு தோஷம்....
நன்றி கேரள சோதிடம்


திருவாதிரை நட்சத்திரத்திலாவது,அஸ்த்த நட்சத்திரத்திலாவது புத்திர ஸ்தானதிபதி இருந்தால் புத்திரன் இல்லை.

புத்திர ஸ்தானதிபதி புதனாகி சனி வீடு ஏறினாலும், புத்திரஸ்தானாதிபதி சனியாக அமைந்து புதன் வீடு ஏறினாலும் புத்திரம் இல்லை என பிரஹத் சோதிடம் கூறுகிறது.

அதிமதுரம் :
மாதவிடாய் காலத்தில் இதை உட்கொண்டு, பின் கணவனுடன் இணையும் பெண், கருத்தரிப்ப‍து நிச்ச‍யம்!!!
ம‌ணமாகியும் இன்னும் குழந்தை பேறு கிட்ட‍வில்லையே என்று ஏங்கும் கணவன் மனைவிகளை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அவர் களுக்கு ஓர் இனிப்பான
செய்தி...
அதிமதுரம், உலர் திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 – 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாத விடாய் தொட ங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், 6 ஆவது நாளில் கணவனுடன் தாம்பத் தியம் கொள்ளும் பெண்ணுக்குக் கருத்தரிக்கும். சில பெண்களுக்கு இது தாமதப்படலாம். அவர் கள் சோர்ந்து போகாமல் கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள்வரை இதுபோன்றே சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை கூடிய விரைவில் எதிர்நோக்க‍லாம்.
 

புதன் அஸ்தங்கம் ஒருவரை கல்வியில் சிறந்தவர் ஆக்கும். புதன் வக்கிர அஸ்தங்கம் ஒருவரை மிக சிறந்த அறிவாளியாக்கும். எனினும் சந்திரனின் நிலை கொண்டே அவர்களின் புத்திசாலிதனத்தை (நல்ல வழி/தீய வழி ) செயல்படுத்தும் என்ற நிலை அமையும். ஏனெனில் புதனின் இயக்கம் சந்திரனின் நிலை பொருத்தது.
இங்கே சந்திர நிலை என்பது
1. சந்திரனுடன் சேர்க்கை பெற்ற கிரகம்,
2. சந்திரனை பார்க்கும் கிரகம்
3. சந்திரன் அமர்ந்த நட்சத்திர அதிபதி....
4. சந்திரன் உச்சம் மற்றும் நீசம்
5. சந்திரன் இருக்கும் ராசி
Note: சந்திரனுடன் குரு சேர்க்கை இதில் சிறப்பு மிக்கது

சந்திரன், சுக்ரன் , ராகு ஆகியவை பெண் கிரகங்கள்சூரியன், செவ்வாய், குரு ஆகியவை ஆண் கிரகங்கள்.புதன், சனி, கேது ஆகியவை அலி கிரகங்கள்.

அமாவாசையில் பிறந்தவர்களிடம் ரகசியம் அறிய முடியாது.பௌர்ணமியில் பிறந்தவரின் ரகசியம் உடன் அறியலாம்.

சுகத்திலும்(4),விரயத்திலும்(12) பாவியிருக்க(பாவ கிரகங்கள்) பஞ்சம ஸ்தானாதிபதியுடன்(%) கதிரோன் மைந்தன்(சனி) கூட பெற்ற தாய் இட்ட சாபத்தால் பிள்ளை இல்லாமல் போகும்.

ஆறுமி ஆறுதன்னில் அம்புலி கதிரோன் சேர
கூறுவார் ஈனம் என்று கொடும் பிணி விரோதன்
சீருள அன்னை தந்தை செல்வமும் விரயமாவதுடன்
வேறு வேறு ஆவார் என்பது வேதியர் உரைத்த வாக்கு."
பலன்: சூரியனும்,சநதிரனும் 12_ல் கூடினால் தாய்,தந்தை செல்வம் குறைவதோடு தனித்தனியாக வாழ்வார்கள்.


பேசிடும் நாலாமாதி பலத் திரி கேண மேறில்
காசி யாத்திரையே போவான் கணக்கனும் பார்வை
யுற்றால்
தேசமும்சுற்றி மன்னன் திசையெட்டும் பேரு மோங்க
வாசமாயிருக்கப் பூவியில் வணங்கு வாரிவரைத்தானே
...
நான்காம் அதிபதி பலம் பெற்று 1-5-9-ல் இருந்தால் பல புண்னிய திர்த்த யாத்திரைகள் செல்வார்கள். புதனும் நான்காம் அதிபதியை பார்த்தால் பல நாடுகள் சுற்றி வருவர்கள். எட்டு திசையிலும் மன்னனைப்போல் புகழ் பெறுவர்கள். உலகில் அனைவரும் இவரை வணங்குவர்கள்.
பிரபல சாமிஜி சர்சைக்குரீய ஒருவர் ஜாதகத்தில் இந்த அமைப்புள்ளது.

நவக்கிரக காரகத்துவங்கள் :

சூரியன்: தந்தை, மகன், வலது கண்,அரசாங்கம், அமைச்சர், ஆத்மா, புகழ்,கீர்த்தி, மாநகரம், நிர்வாகப்
பொறுப்பில் உள்ளவர், சிவன்,...அரசியல்வாதி, வீட்டின் வலது ஜன்னல்,சந்தன மரம், தேக்கு, பொன் ஆபரணம்,மண், அணுத் தொழில், அறுவைசிகிச்சை நிபுணர், துப்பறிதல்,தந்தையின் தொழில்.

சந்திரன்: மனம், ஆழம், அறிவு, தாய்,மாமியார், திரவப் பொருள், பயணம்,உணவுப்பொருள், இடது கண்,
இடமாற்றம், கற்பனை, பால், நதி,கள்ளக்காதல், வீட்டின் இடப்புற ஜன்னல்,துர்நடத்தை, குளிர்ச்சி, தாய்மாமன்மனைவி, சோதிடம், அரிசிவியாபாரம், பழ வியாபாரம், கவிதை,ஓவியம், நீர் தொடர்பான தொழில்,பார்வதி.

செவ்வாய்: சகோதரன், கணவன், பழி வாங்குதல், மனவலிமை,காவல்துறை, இராணுவம், வெட்டுக்
காயம், வீரம், பூமி, ரத்தம், பல்,முருகன், எதிரிகள், கூர்மையான ஆயுதம், திருமணம், விவசாயம்,
அடுப்பு, மின் கருவி, பாறை, வீட்டு உத்திரம், தீயணைப்புத் துறை,செங்கல் சூளை, தாதுப் பொருட்கள்,
பொறியியல் துறை, சுரங்கத் துறை, அறுவை சிகிச்சை.

 செவ்வாய் காரகத்துவம் : { ஆண்கள் }

கட்டுக்கோப்பான உடல், குறையில்லாத ரத்த ஓட்டம், சுகபோகம் தரும் வீரியம், ஆகிய தன்மைகள், செவ்வாய் நல்ல முறையில் ஒரு ஆண் ஜாதகத்திலிருந்தால் அமையக்கூடியனவாகும்.
 செவ்வாய் காரகத்துவம்: { பெண்கள் }
காலத்தே பூப்பெய்துதல், முறையான மாத விடாய் ஆகியன, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் நல்ல முறையில் இருந்தால் அமையக்கூடியனவாகும்.


புதன்: கல்வி, அறிவு, வணிகம்,பேச்சுத்திறன், நிலபுலன், கணக்கர்,கணிதம், பத்திரிகைத் தொழில்,
நண்பன், இளைய சகோதரி, சகோதரன், தாய் மாமன், காதலி, காதலன், சட்டம்,கைகள், கழுத்து, வரவேற்பு அறை,உள்ளங்கை, சோதிடம், தொலை பேசி,புலனாய்வுத் துறை, தரகு,
மஹாவிஷ்ணு, தூதரகப்பணி.

குரு: ஜீவன், வேதம், பக்தி, ஞானம்,ஒழுக்கம், கோவில், வழக்கறிஞர்,நீதிபதி, உயர்குலம், ஆசிரியர்
கௌரவம், சாந்த குணம், தெற்கு,சதை, தொடை, பூஜை அறை, பசு,அமைச்சர், நிர்வாகி, மூக்கு,
கரும்பு, வாழை, சோதிடம்,நீதித்துறை, தட்சணாமூர்த்தி.

சுக்கிரன்: மனைவி, சகோதரி,காமம், காதல், பாடகன், நடிகன், வீடுசுகம், வாசனைத் திரவியங்கள்,
ருப்பை, கன்னம், வட்டித் தொழில், மதுபானம், ஆடை ஆபரணங்கள், மலர்,வேசி, திருமணம், பிந்து, பணம்,இனிப்பு, சிறுநீரகம், கேளிக்கை விடுதி, துணிமணிகள், பிரம்மா,மஹாலட்சுமி, மூத்த சகோதரி,
மூத்த மரு மகள்.

சனி: மூத்த சகோதரன், சேவகன்,கழுதை, எருமை, தொழில்காரகன்,தாடை, பிட்டம், பூட்டு, ஜீரண
உறுப்பு, சேமிப்பு அறை,சாப்பாட்டு அறை, சாலை, வாயுசம்பந்தமான நோய், நிலக்கரி,
சோம்பேறித்தனம், பிச்சை எடுத்தல்,தொழிற்சாலையில் எடுபிடிவேலை, ஹோட்டல் சுத்தம் செய்யும்
வேலை, பழைய பொருள் விற்பனை,துப்புறவுத் தொழில், கால்நடைவளர்த்தல், லட்சுமி, பரமசிவன், கர்மா,அரசு தூதுவர்.

ராகு: வாய், உதடு, காது, முஸ்லீம்,கோபுரம், அகலமான வீதி, தகப்பன்வழிப் பாட்டன், தலை, நிழல், மாயை,குடை, பாம்பின் தலை, கடத்தல்தொழில், உலர்ந்த தோல், பிளாஸ்டிக்,இரசாயனம், மொட்டை மாடி,சேமிப்புக் கிடங்கு, விதவை,தொழுநோய், மருத்துவம்,வெளிநாட்டு வர்த்தகம், விபசாரம்
செய்தல், வாகனம் ஓட்டுதல், சினிமாத்தொழில், போகக்காரகன்.

கேது: சாயா கிரகம், மோட்ச காரகன்,கயிறு, நூல், கூந்தல், மூலிகை,பாம்பின் வால், குறுகிய சந்து,
மருத்துவம், சோதிடம், ஆன்மீகம்,சட்டத்துறை, துறவறம், தாய்வழிப்பாட்டன், நரம்பு, குளியல் அறை,
ஞானம், தவம், மனவெறுப்பு,கொலை செய்தல்.



பாதகாதிபதி யார் ??
=======================

சரத்திற்கு (மேசம், கடகம், துலாம், மகரம்) லாப ஸ்தானமும்
ஸ்திர ராசிக்கு (ரிஷபம், சிம்மம், விருச்சகம்) பாக்ய ஸ்தானமும்
உபயதிற்க்கு (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) களத்திர ஸ்தானமும்...
பாதக ஸ்தனங்கள் மற்றும் அதன் அதிபதிகள் பாதகாதிபதிகள்.

சர லக்னத்து பாதகாதிபதிகள் - கால புருஷ சக்கரத்திற்கு பண பர கேந்திரங்களையும் (2, 5, 8, 11) பாதிப்பதை காணவும்
ஸ்திர லக்ன பாதகாதிபதிகள் - கால புருசனின் லக்ன கேந்திரங்களையும் (1, 4, 7, 10) பாதிப்பதை காணவும்
உபய லக்ன பாதகாதிபதிகள் - கால புருசனின் அசுப கேந்திரம் என்னும் அபோலீகதையும் (3, 6, 9, 12) பாதிப்பதை காணவும்.


இதன் மூலம் சர லக்ன பாதகாதிபதி பலம் பெற, பாதகாதிபதி தன் காரகத்துவ மூலம் பணவரவை தடுக்கும், பணம் தேவையற்ற வழிகளில் செலவழியும் அல்லது சேர்த்துவைத்த பணத்தால் அவமானம் ஏற்படும்.
இதன் மூலம் ஸ்திர லக்ன பாதகாதிபதி பலம் பெற, கேந்திரத்தில் இருக்க, பாதகாதிபதி காரகதுவதில் தொழில், மனைவி மற்றும் ஆரோக்கியம் மூலம் அவமானம், இழப்பு ஏற்படும்.
இதன் மூலம் உபய லக்ன பாதகாதிபதி பலம் பெற, கேந்திரத்தில் இருக்க, பாதகாதிபதி காரகதுவதில் வீரிய இழப்பு, எதிரிகளால் தொல்லை மற்றும் காம எண்ணங்களால் பாதிப்பு போன்றவைகள் ஏற்படும்.


ரிஷிபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய நான்கு லக்னங்களும் ஸ்திர லக்னங்கள்.இந்த லக்னங்களில் பிறந்த பெரும்பாலான ஜாதகர்கள் ஜோதிட கலையில் ஆர்வம் உள்ளவர்களாவும் மற்றும் சிறந்த ஜோதிடர்களாவும் திகழ்கிறார்கள்
பாதகாதிபதி எப்போது நன்மை செய்வார்
====================================

1. பாதகாதிபதி லக்ன திரிகோணத்தில் இருந்து, திரிகோண அதிபதி பலம் பெற நற்பலன்கள் உண்டாகும். முன்னோர்கள் செய்த புண்ணிய காரியங்கள் ஜாதகனை காக்கும்.
2. பாதகாதிபதி லக்ன தொடர்பு கொள்ளாமல், லக்னத்துக்கு மறைவு பெறும் போது நன்மை செய்வார்கள். கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
3. பாதகாதிபதி நீச பங்கம் பெற்று இருக்க நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
4. தன் சுய வீட்டிற்க்கு மறைந்திருந்தால் நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
5. பாதகாதிபதி திரிகோனாதிபதிகள் நட்சத்திரத்தில் இருக்க பலன் உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
6. பாதகாதிபதி வக்கிரம் பெற நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
7. பாதகாதிபதியை சனி பார்க்க நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
8. பாதகாதிபதி ராகு மற்றும் கேதுகளின் சமந்தம் பெற நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
9. பாதகாதிபதி பலம் இழந்தால் பாதக ஸ்தானமும் பலம் இழக்கும் என்ற கூற்றுபடி, பாதகாதிபதியால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.
10. பாதகாதிபதி திரிகோண அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றால் நற்பலன்கள் உண்டு.
11. பாதகாதிபதி அஸ்தங்கம் பெற, அந்த கிரக காரகத்துவம் பாதிக்கபட்டு, பாதகா ஸ்தனம் பலம் இழக்கும்.
12. பாதகாதிபதி ராசியதிபதியாக வரும்போது தீமைகள் செய்வதில்லை.


குறிப்பு: குரு பாதகாதிபதி வரும் கன்னி மற்றும் மிதுன லக்ன ஜாதகத்தில், குருவின் பார்வை நமையே செய்யும். ஏனெனில் பார்வை என்பது ஒரு கிரகத்தின் காரகத்துவ வெளிபாடு என்பதே. அது பாவஆதிபத்திய வெளிபாடு அல்ல.


பாவம்
6,8,12 அதிபதிகள் லக்கின அசுபர்கள் இல்லை. லக்கின அசுபர்கள் 3,6,11 ஸ்தானாதிபதிகள் தான். மேச லக்கினம் 1,8க்கு அதிபதி செவ்வாய் லக்கின அசுபர் இல்லை, ரிஷப லக்கினம் 1,6 க்கு அதிபதி சுக்கிரன் அசுபர் இல்லை, கும்ப லக்கினம் 1,12 அதிபதி சனி அசுபர் இல்லை. எந்த பாவமும் நல்ல பாவம் இல்லை, எந்த பாவமும் கெட்டபாவமும் இல்லை. எந்தக் கோளும் நல்வர்கள் இல்லை எந்தக் கோளும் கெட்டவர்கள் இல்லை. அந்த அந்த பாவங்களும் அதன் வேலையை செய்கிறது. இதெபோல் கோள்களும். 6,8,12 ல் நல்ல காரகத்துவங்களும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணம். 6 - உப ஜெயம். 8 - பணபரம் (பணம் வரும் வழி). 12 - வெளி நாட்டு வாசம் / படுக்கை சுகம்.
 
 ராகு
உயிர்யுள்ள தன்மைகளை அழிக்கும்...உயிர் அற்ற தன்மைகளை பெருக்கும்
கேது
உயிர்யுள்ள தன்மைகளை பிரிக்கும்...உயிர் அற்ற தன்மைகளை அழிக்கும்

கிரக நீச்சம் யாரைபாதிக்காது?
*********************************************

சூரியன் - வேளாளர்,முதலியார்,வேடர்கள்,மலைவாசிகள்
சந்திரன்-
வன்னார்,செம்படவர் செவ்வாய்...
குயவர்,கருமன்
புதன் ,செட்டியார்,வாணியர்,கோமுட்டி
குரு
பிராமணர்,சேட்டு,ஜனர்கள்,
சுக்கிரன் வேசிகள்,நட்டுவனர்,கோனார்,மந்திரி,இடையர்
சனி
அரிஜனம்
ராகு
முகமதியர்கள் கேது
கிருஸ்துவர்கள், மேற்கண்டவர்களுக்கு கிரகநீசத்தினால்பாதிப்புஇல்லை


திதி சூன்ய ராசிகள்:

திதி - சூன்ய ராசிகள் -அதிபதிகள்
பிரதமை - மகரம், துலாம் - சனி ...
சுக்கிரன்

துதியை - தனுசு, மகரம் - குரு சனி
திருதியை - மகரம், சிம்மம் - சனி
சூரியன்
சதுர்த்தி - கும்பம்,ரிஷபம் - சனி
சுக்கிரன்
பஞ்சமி - மிதுனம், கன்னி - புதன்
சஷ்டி - மேஷம், சிம்மம் - செவ்,
சூரியன்
சப்தமி - தனுசு, கடகம் - குரு , சந்திரன்
அஷ்டமி - மிதுனம், கன்னி - புதன்
நவமி - சிம்மம் - சூரியன்
தசமி - விருச்சிகம் - செவ்வாய்
ஏகாதசி - மகரம்,துலாம் - சனி
சுக்கிரன்
திரயோதசி - ரிஷபம் , சிம்மம் - சுக்கிரன்,
சூரியன்
சதுர்தசி - மிதுனம், கன்னி,
் - புதன்
துவாதசி - துலாம் மகரம் - சுக சனி
# பௌர்ணமி, அமாவாசை திதி சூன்ய ராசிகள் இல்லை.
# ராகு, கேது சூன்ய ராசிகளில் இருந்தால் அதன் தசாபுத்திகளில் நன்மை தரும்.
# ஒருவர் துதியை திதியில் பிறந்தவரானால் தனுசு, மகரம் சூன்ய ராசிகளாகிறது. அதன் அதிபதிகள் குரு , சனியின் தசாபுத்திகளில் நன்மையான பலன்கள் நடைபெறுவதில்லை.
# சூன்யமடைந்த கிரகங்கங்கள் நலம் தரும் பாவங்களான, 1,2,4,5,7,9,10,11 இல் இருந்தால் நன்மை தருவதில்லை.
# அவை லக்கினத்திற்கு மறைவு ஸ்தானங்களான 3,6,8,12 இல் இருந்தால் நலம் தரும்.
# கேந்திர ஸ்தானங்களில் ஒரு கிரகம் சூன்யம் பெற்றால் தோஷம் நீங்கி நன்மை தரும்.
# சூன்ய ராசிக்குரிய கிரகம் வக்கிரம் நீசம் பெற்றால் நன்மையே தரும்.
# திதி சூன்யம் பெறும் கிரகங்கள் தன் காரக பலத்தை இழந்துவிடும். அதன் காரகத்துவத்தால் பாதிப்பு ஏற்படுத்தும்
# செவ்வாய் திதி சூன்யம் பெற்றால் உடன் பிறப்புகளால் நன்மை இல்லை.
# சந்திரன் திதி சூன்யம் பெற்றால் தாயாரின் அன்பை பெற மாட்டார்.
# சூரியன் திதி சூன்யம் பெற்றால் தந்தை பாசம் குறையும்
# புதன் திதி சூன்யம் பெற்றால் கல்வியில் தடங்கல் ஏற்படும்
# சுக்கிரன் திதி சூன்யம் பெற்றால் திருமணம் தாமதப்படும்
# குரு திதி சூன்யம் பெற்றால் புதல்வர்களால் நன்மை இல்லை
# சனி திதி சூன்யம் பெற்றால் தொழிலாளர்களால் பாதிப்பு ஏற்படும்

சகல தேவதை வசிய அஞ்சனம் :
இதனை நெற்றியில் திலகம் இட்டுக் கொண்டு எந்த மந்திரம் ஜெபம் செய்தாலும் அந்த தேவதை பிரசன்னமாகி நமக்கு வசம் ஆகும்
தொட்டால் சுருங்கி வேர் பேய்தும்பை வேர் சிருமுன்னை வேர் வெண்குன்றி வேர் வெள்ளெருக்கன் வேர் பேய்தேத்தான் வேர் புன்னை வேர் சந்தனவேர்
இவைகளை முறையாகக் காப்பு கட்டி சாபம் நிவர்த்தி செய்து ஹோமத் தீயில் கறுக்கி எடுத்து வைத்துக் கொண்டு பச்சை கற்பூரம் புனுகு கொரோசம் கும்குமப்பு கஸ்துரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி பிரமாணம் சேர்த்து ஒரு ஜாமம் அரைத்து மை...யை எடுத்து வெள்ளி சிமிழில் பத்திரம் செய்யவும்.


சத்துரு வசிய அஞ்சனம்:
வெள்ளைக் காக்கரட்டைவேர் வெள்ளெருக்கன் வேர் வெண் குன்றிவேர் வெள்ளை விஷ்ணு காந்தி வேர் வெண்கொழிஞ்சிவேர் ஆனைவணங்கி வேர்
இவைகளை முறைப்படி காப்பு கட்டி சாபம் பொக்கி ஆணிவேர் அறாமல் வெட்டி எடுத்து தீயில் கறுக்கி எடுத்துக் கொண்டு பச்சைக் கற்பூரம் கொரோசனம் புனுகு குங்குமப்பூ கஸ்துரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி எடை வீதம் மேல்கண்ட வேருடன் சேர்த்து கலுவத்திலிட்டு காராம்பசு நேய் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து கொம்பு சிமிழில் பத்திரம் செய...்யவும்
இதற்கு பூஜை மந்திரம்
ஒம் க்லீம் ஸெளம் ஸ்ரீம் நமோ பகவதி ராஜமோகினி க்லீம் க்லீம் சகல ஸ்தாவர ஜங்கமம் மமவசம் ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா
இந்த மந்திரத்தை பத்தொன்பது தினம் ஜெபம் செய்ய வேண்டும் தினம் 1008உருவு வீதம் ஜெபம் செய்தால் மை உயிர்பெறும் இதன் பின் தான் இதைக் கொஞ்சம் எடுத்து நெற்றியில் அணிந்து சென்றால் பகையாளி கிடையாது எதிரி நம்மை காணும் போது வணங்கி மரியாதை செய்வான் இந்த சத்ரு வசியம் மட்டுமின்றி சத்துரு இல்லாமல் எல்லா நன்மையும் கூட அடையலாம்! பெண்களும் இது பயன்படுத்தலாம் ! சத்துருயாராயினும் நமக்கு நண்பராவது உறுதி !
 ஆன்மாவைப் பற்றி அறியும் கலைக்குப்பெயர் ஆன்மீகம்