For Read Your Language click Translate

07 June 2014

சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நாட்கள்


திங்கள் கிழமையில் மிருக சீரிஷம் நட்சத்திரமும், சஷ்டி திதியும் வந்தால் நல்ல காரியங்கள் செய்வதை தள்ளி வைப்பது நல்லது.

செவ்வாய்க்கிழமையில் அசுவதி நட்சத்திரமும், சப்தமி திதியும் வந்தால்,

புதன் கிழமையில் அனுஷம் நட்சத்திரமும், அஷ்டமி திதியும் வந்தால்,

வியாழக்கிழமையில் பூசம் நட்சத்திரமும், நவமி திதியும் வந்தால்,

வெள்ளிக்கிழமையில் ரேவதி நட்சத்திரமும், தசமி திதியும் வந்தால்,

சனிக்கிழமையில் ரோகிணி நட்சத்திரமும், ஏகாதசி திதியும் வந்தால் மற்றும்

 ஞாயிற்றுக் கிழமையில் ஹஸ்த நட்சத்திரமும், பஞ்சமி திதியும் வந்தால் அந்த நாட்களில் சுபகாரியங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. அன்றைய தினம் நல்ல காரியங்கள் செய்யத் தொடங்கினால் உடனடியாக காரியங்கள் முடிவடையாமல் அலைச்சல்களை உருவாக்கலாம். அமைதிக்குறைவும் ஏற்படலாம். 'நாள் செய்வதை நல்லவன் கூட செய்ய மாட்டான்' என்பது பழமொழி.

No comments:

Post a Comment