For Read Your Language click Translate

09 June 2014

சிவனை எப்படி வணங்க வேண்டும்........


சிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபுறம், கிழக்குப்புறம் கால் நீட்டக்கூடாது. ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும். கிழக்கு நோக்கிய சன்னதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் சிரம் வைத்து நமஸ்கரிக்க வேண்டும்.
தெற்கு, மேற்கு நோக்கிய சன்னதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் சிரம் வைத்து நமஸ்கரிக்க வேண்டும். வடக்கு நோக்கிய சன்னதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் சிரம் வைத்து நமஸ்கரிக்க வேண்டும். சூரிய கிரகணத்தின் போதும், சங்கராந்தி காலத்திலும் மேற்கே கால் நீட்டி நமஸ்கரிக்கலாகாது.
அதே சமயம் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும். பிராகாரத்தில் பிரதக்ஷிணம் செய்யும்பொழுது மிகவும் நிதானமாகச் செய்யவேண்டும். உட்பிராகார பிரதக்ஷிணத்தைவிட வெளிப்பிரகார பிரதக்ஷிணமே சாலச் சிறந்தது. 3,5,7,7,15,21 என்ற எண்ணிக்கையில் ஒன்றினை மேற்கொண்டு செய்யலாம்.


பஞ்சாட்சர மந்திரமே மிகவும் சக்தி வாய்ந்தது
.
சிவ மந்திரங்களை நீங்கள் பாராயணம் செய்யும் போது வாழ்வின் எல்லா இன்பங்களையும் பெறுவீர்கள். சிவ மந்திரங்களுள் "நம சிவாய'' என்னும் பஞ்சாட்சர மந்திரமே மிகவும் சக்தி வாய்ந்தது. பிறர் காது கேட்க மந்திரத்தை உரக்கக் கூறுவது கூடாது.
தனக்கு மட்டும் கேட்கும் அளவு உதட்டசைவில் கூறுவது மத்திமம். மானசீகமாக மந்திரத்தை மனத்திற்குள் சிந்தனை செய்து ஜபிப்பதே உத்தமம். மந்திரங்களைப் பொருள் அறியாமல் ஜபித்தாலும் பலன் உண்டு.

சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை'' (பூரணத்துவம்), "மங்களமானது'' என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இந்து சமயக் கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவை:- காலையில் தரிசிக்க நோய்கள் நீங்கும்.
நண்பகலில் தரிசிக்க தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க பாவம் அகலும்
அர்த்த சாமத்தில் தரிசிக்க வீடுபேறு கிடைக்கும்.

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது.சிவனின் ஐந்து முகங்கள் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம். இம்முகத்தின் மூலம் ஆகம ரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.

அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. உருவ வழிபாட்டில் சிவனை, லிங்கம், மகேசுவர மூர்த்தங்கள், சிவ உருவத்திருமேனிகள் ஆகிய சிவ வடிவங்களாக சைவர்களால் வணங்குகிறார்கள். இந்த வடிவங்களை சிவ ரூபங்கள் என்றும், சிவ சொருபங்கள் என்றும் குறிப்பிடலாம்.

மகேசுவ மூர்த்தங்கள் என்று இருபத்து ஐந்து வடிவங்களும், உருவத்திருமேனிகள் என்று அறுபத்து நான்கு வடிவங்களும் குறிப்பிடப்படுகின்றன.சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதைவிட லிங்க வழிபாடு செய்வதே சிறந்தது என வியாசர் மகாபாரதத்தில் கூறி இருக்கிறார்.

`லிங்கம்' என்னும் சொல்லுக்கு எல்லாம் தோன்றி மறையும் மூலம் எனவும் `மங்கலத்தைத் தரும் பரம்பொருள்' எனவும், `அண்ட சராசரங்கள் யாவும் ஒடுங்குவதும் மீண்டும் உற்பத்தியாகி வெளிப்படும் தன்மை கொண்டது' என்றும் சிவாகமங்கள் விளக்குகின்றன.ஆலயங்களில் ஸ்தாபித்த லிங்கம் அசலம், இல்லங்களில் வைத்துப் பூஜிக்கும் லிங்கம் சலம்.

ஈசன் கருணைப் பெருக்கால் தோன்றியது சுயம்புலிங்கம்.சிவ வடிவங்கள் மொத்தம் 64 ஆகும். அவை போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என மூன்று வகைக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. போக வடிவம் என்பது உமாமகேஸ்வரர், சந்திரசேகரர், ரிஷபாரூடர் முதலானவற்றை குறிக்கும்.

யோக வடிவம் என்பது தட்சிணாமூர்த்தி சுகாசனர் முதலானவற்றை குறிக்கும். வேக வடிவம் என்பது கங்காளர், வீரபத்திரர் முதலானவற்றை குறிக்கும். இவை முறையே உயிர்களுக்கு போகத்தை அருளுவதற்கும், யோகத்தை அருள்வதற்கும், வினைகளை நீக்கி அருள்வதற்கும் ஏற்பட்டவை
சிவலிங்கம்
தேவர்கள் சிவலிங்க வழிபாடு செய்வதற்காகவே விசுவ கர்மாவிடம் பற்பல சாந்தித்யங்களோடு கூடிய சிவலிங்கங்களைப் பெற்றனர். அவை :

அசுவினி தேவர்கள் - மண்ணாலான லிங்கம்
இந்திரன் - பதுமராக லிங்கம்
எமதர்மன் - கோமேதக லிங்கம்
சந்திரன் - முத்து லிங்கம்
சரஸ்வதி - சொர்ண லிங்கம்
வருணன் - நீல லிங்கம்
வாயுதேவன் - பித்தளை லிங்கம்
விஷ்ணு - இந்திர லிங்கம்
நாகர்கள் - பவள லிங்கம்
பிரம்மன் - சொர்ண லிங்கம்
ருத்திரர்கள் - திருவெண்ணீற்று லிங்கம்
குபேரன் - சொர்ண லிங்கம்
மகாலட்சுமி - நெய்யினாலான லிங்கம்

நைவைத்தியமும் பலன்களும்.............

சிவபெருமானுக்கு நாம் படைக்கும் நைவேத்திய பொருட்களால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:-

1. தயிர் சாதம், நீர் மோர் - மூல பவுத்திரம், எலும்புருக்கி நோய் தீரும்.

2. பால், சர்க்கரைப் பொங்கல் - வயிற்று கோளாறு தீரும்.

3. தேன், திணை மாவு - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

4. தயிர் சாதம் - காரியத் தடை நீங்கும்.

5. எலுமிச்சை, தேங்காய் சாதம் - அடிவயிற்றில் இருந்து தொடை வரை உள்ள நோய்கள் தீரும்.

6. வெண்பொங்கல், கடலை, சுண்டல்-ஆஸ்துமா, மூச்சு சம்மந்தமான நோய் தீரும்.

7. பங்குனி மாத பிரதோஷத்தன்று தேங்காய் சாதம், தக்காளி சாதம்- மணக்கிலேசம், பித்தம், பைத்தியம் தீரும்.


சிவலிங்க வழிபாடும், பலன்களும்
தர்ப்பைப் புல் லிங்கம் - லட்சுமி கடாட்சம்
ஆற்றுமணல் லிங்கம் - மோட்சம்
வெண்ணெய் லிங்கம் - நல்வாழ்வு
அரிசிமாவு லிங்கம் - சிறப்புகள் சேரும்
அன்ன லிங்கம் - தீர்க்காயுள்
களிமண் லிங்கம் - மனச்சாந்தி
பசுஞ்சாண லிங்கம் - ஆரோக்கியம்

சிவபூஜைக்குரிய மலர்கள்- பலன்கள்
செந்தாமரை- தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி

* மனோரஞ்சிதம், பாரிஜாதம்-பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி

* வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி-மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.

* மாசிப்பச்சை, மரிக்கொழுந்து-நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும்.

* மஞ்சள் அரளி, தங்க அரளி, செவ்வந்தி-கடன் நீங்கும் கன்னியருக்கு திருமண பாக்கியம் ஏற்படும்.

* செம்பருத்தி, அடுக்கு அரளி- புகழ், தொழில் விருத்தி.

* நீலச்சங்கு-அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.

* வில்வம் கருந்துளசி, மகிழம்பூ- சங்கடங்கள் நீங்கி, சகலகாரியமும் கைக்கூடும்.

தாமரை, செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம். ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும்.குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்க கூடாது.

சிவபூஜைக்கான மாதங்களும், மலர்களும்
சித்திரை-பலாசம்,
வைகாசி-புன்னை,
ஆனி- வெள்ளெருக்கு,
ஆடி-அரளி,
ஆவணி-செண்பகம்,
புரட்டாசி- கொன்றை,
ஐப்பசி-தும்பை,
கார்த்திகை-கத்திரி,
மார்கழி-பட்டி,
தை- தாமரை,
மாசி- நீலோத்பலம்,
பங்குனி-மல்லிகை.

மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம்.

சித்திரை-மரிக்கொழுந்து.
வைகாசி-சந்தனம்,
ஆனி-முக்கனிகள்,
ஆடி-பால்,
ஆவணி-நாட்டுச்சர்க்கரை,
புரட்டாசி- அப்பம்,
ஐப்பசி-அன்னம்,
கார்த்திகை-தீபவரிசை,
மார்கழி-நெய்,
தை-கருப்பஞ்சாறு,
மாசி-நெய்யில் நனைந்த கம்பளம்,
பங்குனி-கெட்டித்தயிர்

சிவாலய பிரதட்சிண பலன்கள்
நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதனால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:-

3 முறை செய்தால் - நினைத்தது நடக்கும்.
5 முறை செய்தால் - வெற்றி உண்டாகும்.
7 முறை செய்தால் - நல்ல குணம் ஏற்படும்.
9 முறை செய்தால் - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
11 முறை செய்தால் - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
13 முறை செய்தால் - வேண்டுதல் நிறைவேறும்.
15 முறை செய்தால் - செல்வம் கிடைக்கும்.
17 முறை செய்தால் - செல்வம் பெருகும்.
108 முறை செய்தால் - அஸ்வமேத யாகப் பலன்.
1008 முறை செய்தால் -ஒருவருட தீட்சை யாகப்பலன்

சிவலிங்க பூஜையால் நன்மை அடைந்தவர்கள்
சிவலிங்க பூஜையால் நன்மை அடைந்தவர்கள்

1. வெள்ளை யானை, சிலந்தி, பாம்பு, முக்தி நிலை பெற்றன-ஸ்ரீகாளஹஸ்தி இராகு, கேது கிரகங்கள்.

2. கண்ணப்பார் முக்தி அடைந்தார்-ஸ்ரீ காளஹஸ்தி.

3. மார்க்கண்டேயர் நீண்ட ஆயுளைப் பெற்றார்-திருக்கடையூர்.

4. அம்பிகை வழிபட்ட தலம் - காஞ்சிபுரம்.

5. விநாயகர் வழிபட்ட தலம் - திருச்செங்கோடு.

6. முருகன் வழிபட்ட தலம் - திருமுருகன் பூண்டி.

7. திருமால் வழிபட்ட தலம் - திருவீழிமிழலை.

8. பிரம்மன் வழிபட்ட தலம் - சீர்காழி.9. இந்திரன் வழிபட்ட தலம் - மதுரை.

10. யானை வழிபட்ட தலம் - திருவானைக்காவல்.

11. எறும்பு வழிபட்ட தலம் - திருவெறும்பூர்.

12. பார்வதிதேவி மயிலாக வழிபட்ட தலம் - மயிலாப்பூர்.

ஊமத்தம் பூ பூஜை.........

எல்லோராலும் ஏற்கப்படாத ஊமத்தம் பூவை தனது பூஜைக்கு உகந்ததாகக் கொள்ளும் கருணைக்கடல் சிவபெருமான் ஆவார். அதிலும் குறிப்பாக ஸ்ரீ அக்னீஸ்வரரை ஊமத்தம் பூ கொண்டு வழிபடுகிறவர்களுக்கு மனக்கவலைகள் தீரும். பில்லி, சூனியங்கள் அகலும். சித்தம் தெளியும்.

சிவலிங்க தத்துவம்
சிவலிங்கத்தின் அடிப்பாகம் பிரம்ம பாகமாகும். இது, மனிதனின் உயிர் மூச்சுக்குரியது. நடுப்பாகம் மனிதனின் தசை, ரத்தம் ஆகியவற்றிற்கு பாதுகாப்பானது. மேல்பாகம் மனிதனின் எலும்பு, நரம்பு ஆகியவற்றை குறிக்கிறது.இப்படிப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்தால் மும்மூர்த்திகளை பூஜை செய்த பலனை பெறலாம்.

சிவன் கோவில் திசைகளின் பலன்கள்.........

வடகிழக்கு பார்வை - வாதநோய் தீரும்
தெற்கு பார்வை - அகால மரணம் நீங்கும்.
மேற்கு பார்வை - திருமண தடை நீங்கும், பிரிந்த தம்பதிகள் சேரும்.வடமேற்கு - பொன்னும்,பொருளும் சேரும்
தென்மேற்கு - தெய்வீக அருள் உண்டாகும்
வடக்கு - வேலை வெற்றியடையும்.

எந்தெந்த கிழமையில் என்னென்ன நைவேத்யம்?

ஞாயிறு-சர்க்கரைப்பொங்கல்
திங்கள்-பால் (அ)தயிர் அன்னம்
செவ்வாய்-வெண்பொங்கல்
புதன்-கதம்பசாதம்
வியாழன்-சித்ரான்னம்
வெள்ளி-பால் பாயசம்
சனி-புளிசாதம்,

சிவபூஜைக்கு கத்தரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.சிவபூஜைக்கு பின்னர் இருபது சிவபக்தர்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் விசேஷம். 108 ருத்ர காயத்ரி ஜபிப்பது விசேஷம்.
சிவபெருமான் ஆடிய 7 வகை தாண்டவங்களும் அவை ஆடப்பட்ட இடங்களும் வருமாறு:-

1. படைத்தல் செயலாகிய காளிகா தாண்டவம் (திருவாலங்காடு)
2. காத்தலுக்குரிய கவுரி தாண்டவம் (திருப்பத்தூர்)
3. காத்தல் செயலுக்கு சந்தியா தாண்டவம் (மதுரை)
4. அழித்தலுக்குரிய சங்கார தாண்டவம் (ஆதாரமில்லை)
5. மறைத்தலுக்கு திரிபுர தாண்டவம் (குற்றாலம்)
6. அருளலுக்கு ஊர்த்தவ தாண்டவம் (திருநெல்வேலி)
7. ஐந்தொழிலுக்கு ஆனந்த தாண்டவம் (சிதம்பரம)

பஞ்சபூத தலங்கள்............

1. காஞ்சீபுரம் - பிருத்வி (நிலம்)மூலாதாரம்
2. திருவானைக்காவல் - அப்பு (நீர்)சுவாதிஷ்டானம்
3. திருவண்ணாமலை - தேயு (தீ)மணிபூராகம்
4. காளஹஸ்தி - வாயு (காற்று)அனாகதம்
5. சிதம்பரம் - ஆகாயம் (வான்)விசுத்தி

No comments:

Post a Comment