For Read Your Language click Translate

14 June 2014

இந்தியர்களின் அறிவுசார் சொத்துக்களை திருடும் பன்னாட்டு நிறுவனங்களும்,அந்தத் திருட்டை தடுத்து நிறுத்தும் பாரத அரசும்

இந்தியர்களின் அறிவுசார் சொத்துக்களை திருடும் பன்னாட்டு நிறுவனங்களும்,அந்தத் திருட்டை தடுத்து நிறுத்தும் பாரத அரசும்
காப்புரிமை மீட்புப்போரில் வென்றுவரும் பாரதம்

சீனா புதினாவின் உற்பத்திக்கு காப்புரிமை கொண்டாடியதனை முறியடித்தப்பின்,இந்திய அரசு டென்மார்க் நிறுவனம் ஒன்று மஞ்சள்,சீரகம்,இஞ்சி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் உடல் கொழுப்பைக் கரைக்கும் திறனைக் கண்டுபிடித்ததற்காக காப்புரிமை கொண்டாடி மனுசெய்ததையும் எதிர்த்து முறியடித்துள்ளது.

நமது பாரம்பரிய தாவரங்கள் மற்றும் மூலிகைகளின் மருத்துவ குணங்களையெல்லாம் தாங்கள் தான் கண்டுபிடித்ததுபோல் காப்புரிமை கொண்டாடும் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் முயற்சிகளை முறியடிக்க ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையமும் பாரம்பரிய அறிவு நூலகமும் சேர்ந்து 5 ஆம் நூற்றாண்டு காலத்தில் எழுதப்பட்ட ஆயுர்வேத நூல்களில் விளக்கப்பட்டுள்ள மருத்துவத் தயாரிப்பு முறைகளை ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

No comments:

Post a Comment