For Read Your Language click Translate

14 June 2014

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்1






கி.பி.2002 முதல் கி.பி.2020க்குள் நமது பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது.சித்தர்கள் பாரதத்தை மையமாகக் கொண்டு இந்த பூமியை ஆட்சி செய்யப்போகிறார்கள்.பழனி மலையில் இருக்கும் நவபாஷாணமுருகன் சிலை சிதைந்துவிட்டது நம் அனைவருக்கும் தெரியும்.இந்த சிலையை போகர் நிறுவினார்.அவர் இதே போல் ஒன்பது நவபாஷாணசிலைகளை உருவாக்கி பழனிமலையிலும்,அதைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் மறைத்து வைத்திருக்கிறார்.அதில் ஒன்று பழனி மலையிலிருந்து சபரி மலைக்குச் செல்லும் ஒரு இடத்தில் இருக்கிறது.அதை ஒரு நாகம் காவல் காக்கிறது.கிபி 2006 முதல் கிபி 2020 க்குள் போகர் விரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேறொரு சித்தரால் பழனி மலையில் புதிய நவபாஷாண சிலை நிறுவிவிடுவார்.அவ்வாறு நிறுவப்பட்டதும்,பாரதம் உலக வல்லரசு நாடாக மாறிவிடும்.


ஆதாரம்:பல ஜீவ நாடிகள்


தகவள்:சித்தர்களின் மகிமை,பக்கம்24




சித்தர்களின் மகிமை

சித்தர்களின் மகிமை

தமிழின் பழமைக்கு ஈடாக சொல்லக் கூடிய ஒரு விஷயம் இருக்குமானால் சித்தர்களின் இருப்பைச் சொல்லலாம். இவர்களின் தொன்மை நமது கலாச்சாரம், நம் தத்துவ விசாரம் குறித்த அறிவு, மருத்துவத் துறையில் மேதைமை, பல புதிய ஆராய்ச்சிகள் ஆகியவற்றோடு தொடர்புள்ளதாகவும் இருக்கிறது.

அவர்களின் இருப்பு, கடவுள் குறித்த தத்துவங்களையும், நமக்கு அருகிலேயே இருக்கும் மூலிகைகளைப் பற்றியும் ரசவாதம் எனப்படுகிற இரும்பைத் தங்கமாக மாற்றும் ஆராய்ச்சிகளையும், வெளிப்படையான தன்மை குறித்தும் தொடர்புடையதாக இருக்கிறது.

வழக்கமான வாழ்க்கை முறையைத் துறந்து தன்னை அறியும் தேடலில் அமைந்திருக்கிறது சித்தர்களின் வாழ்க்கை. இவர்களின் பார்வையும் பாதையும் அறிவால் அறியப்படும் பகுத்தறிவிற்கும் உணர்வால் உணரப்படும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்ட யாரும் அதிகம் பயணிக்க முயலாத வனங்களில் செல்கிறது.

இநது மத சன்யாசிகளைப் போல் தோற்றம் தரப்பட்டாலும் சமண புத்த மதத் தாக்கங்களும் இவர்களின் கருத்துக்களில் தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால் சித்தர்களில் மிகவும் பிரபலமான போகர் சீனாவைச் சேர்ந்தவர் என்ற ஆராய்ச்சிக்குட்பட்ட கருத்தும் உண்டு.

சித்தர்களின் இடைவிடாத ஆராயும் மனம் பல நாட்டின் அறிவு ஜீவிகளுக்கும் ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கை முறையாகவும் நம் நாட்டு மக்களுக்கு அபோரிஜின்ஸ் என்று ஒதுக்கக் கூடிய காட்டுமிராண்டி வாழ்க்கை முறையாகவும் தெரிவதில் வியப்பில்லை.

இந்தச் சித்தர்களின் கருத்துக்களின் தாக்கம் ஹிப்பி இயக்கங்களிலும் தென்பட்டது. சித்தர்களுக்கு மரணமில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்வது சாத்தியம் என்றும் அவர்களின் ஆராய்ச்சியில் குறிப்பிடுகிறார்கள். சித்தர்களின் கடும் உழைப்பால் கிடைத்த வாத வித்தையே இன்று பலவித அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக இருக்கிறது.

உலோகங்கள், பாஷாணங்கள், உப்பு, வேர்கள், பட்டை வகைகள், பிராணிகளின் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை, கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவற்றின் குணங்களை இவர்கள்தான் முதன் முதலில் வெளியே சொன்னவர்கள்.

காட்டிலும், மலையிலும், குகையிலும் வாழ்ந்த சித்தர்கள் பல கடினமான ஆராய்ச்சிகளையும் விடாமல் சாதித்திகுகிறார்கள். என்றோ செய்து முடித்த இவர்களின் பல ஆராய்ச்சிகளின் வாசலுக்கு வந்து இன்றைய விஞ்ஞானம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment