For Read Your Language click Translate

17 May 2014

குமரிக்கண்டம் - லெமூரியா ஆராச்சிக்கட்டுரை

“மூ” கண்டமும் “குமரிக்கண்டமும்” ஒன்றா? – Lemuria 01


ORIGINALLY POSTED BY TAMIL GENIUS
THANK YOU Mr. Chandran Pirabu
:http://edu.tamilclone.com/?p=228
09/04/2012 by Prabu in குமரிக்கண்டம், வரலாறுகள் with 7 Comments

ஆரம்பத்தில் லெமூரியா (lemuria) தொடர்பான தகவல்களை ஒரு ஆராச்சிக்கட்டுரை போன்று எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால், லெமூரியா பற்றி முரண்பாடு மிக்க பல தகவல்கள் காணப்படுகின்றமையால் ஓர் சிறந்த உண்மைத்தன்மை மிக்க ஆராச்சிக்கட்டுரையாக என்னால் அதைகொண்டுசெல்வது கடினமான காரியம். அதேவேளை இப் பதிவினை வாசிக்க வந்திருக்கும் அனைவருக்கும் எதோ ஒரு வகையில் லெமூரியா கண்டம் பற்றி தெரிந்திருக்கும். எனவே அவர்களும் தமக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டாக வழங்கும் பட்சத்தில் இத்தொடரானது பயன் மிக்கதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
——————————————————————————————–
“லெமூரியா” என கூகிலில் தேட ஆரம்பித்ததுமே லெமூரியாவின் இருப்பிடம்( இருந்த இடம்) தொடர்பான முரண்பாடுமிக்க தகவல்கள் வர ஆரம்பிக்கின்றன. அதாவது “மூ (mu)” எனும் பெயருடன் பசுபிக் சமுத்திரத்தில் காணப்பட்ட கண்டமே லெமூரியா என பொருள்படும் வகையில் தகவல்கள் காணப்படுகின்றன. அதே வேளை சில படங்கள் இந்து சமுத்திரத்தில் இருந்த கண்டம்தான் “லெமூரியா” என கூறுகின்றன. இங்கு நானும் இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய கண்டம் பற்றியே எழுதவுள்ளேன். காரணம், உலக வரைபடத்தில் காணப்படும் வடஅமெரிக்க தென்னமெரிக்க கண்டங்கள் இலகுவாக அப்பிரிக்க ஐரொப்பிய கண்டங்களுடன் இனைக்க கூடிய வாறு காணப்படுகின்றன. (கற்பனை செய்து பாருங்கள், தென் அமெரிக்காவின் வலப்பக்கத்திலுள்ள கூர்ப்பகுதி ஆபிரிக்காவின் இடப்பக்கத்திலுள்ள குழிந்த பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும். அதே வேளை ஆபிரிக்காவின் இடப்பக்க முனைப்பகுதி வட தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும்.) ஆகவே, என்னை பொறுத்த வரையில் இவ் இடைப்பட்ட பகுதியில் கண்டம் இருந்திருக்க சாத்தியமில்லை. ( அவுஸ்ரேலியாக்கண்டத்தை ஆபிரிக்கா அல்லது ஆசியா கண்டத்துடன் பொருத்தி பார்ப்பது கச்சிதமானதாக இல்லை)

இன்னொரு காரணமாக, பூமியுடன் ஒரு பாரிய விண்கல் மோதிய போது பசுபிக் சமுத்திரத்தில் இருந்து பிளவுபட்டு போன ஒரு பகுதியே காலப்போக்கில் ஈர்ப்பு விசையின் காரண‌மாக சந்திரனாக உரு மாறியதாக விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு கருத்து நிலவிவருகிறது. சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் சில கணிமங்கள் பசுபிக் சமுத்திரத்திலும் உள்ளனவாம். ( இது பூமியில் உயிரினம் தோன்ற முன்னர் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இன்னொரு சாரார் இவ் மோதலே டைனோசரின் அழிவுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் மனித சமுதாயம் அப்போது தோன்றி இருக்கவில்லை என்பது தெளிவு.) பதிவு நீளமாகுகிறது மற்றைய ஆச்சரிய தகவல்களை பின்னர் பார்க்கலாம்…. இது ஒரு கலந்துரையாடல்…. உங்களது கருத்துக்கள் எதிர் பார்க்கப்படுகின்றன
By : Chandran Pirabu (3478)


கண்ட நகர்வும் லெமூரியாவும்! – Lemuria 02


PART 01
போனபதிவில், மூ மற்றும் லெமூரியா பற்றி பேசிய அதேவேளை லெமூரியா இந்து சமுத்திரத்தில் தான் இருந்தது என்பதற்கு சில சான்றுகள்(!) கூறியிருந்தேன். முக்கியமான ஒரு காரணத்தை கூற மறந்துவிட்டேன்.
ஆபிரிக்கா கண்டத்தில் மேற்கே காணப்படும் மலைத்தொடரானது தென்னமெரிக்கா கண்டத்தில் கிழக்கே காணப்படும் மலைகளுடன் ஒத்து போகக்கூடியதாக இருக்கிறதாம்.( அதாவது இரண்டினதும் சமுத்திரத்தை நோக்கிய பக்கங்களிலுள்ள சரிவுகள் ஒன்றை ஒன்றுடன் இணைக்க கூடியதாக இருக்கின்றதாம்.) இது நிகழ்காலத்தில் பார்த்தறியக்கூடிய ஒரு விடையம்.

ஆகவே, இந்து சமுத்திரத்தில் தான் லெமூரியா இருந்திருக்கும் என்பது தெளிவாகுகிறது. (மாற்றுக்கருத்துக்கள் அல்லது இந்து சமுத்திரத்தில் இருந்தமைக்கான வெறு சான்றுகள் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.)
இனி “லெமூரியா” எப்படி அழிந்திருக்கும் என பார்க்கப்போனால் எனக்கு பல காரண்ங்கள் தோன்றுகின்றன…
அவ‌ற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம். (இத்தொடரை நான் உடனுக்குடன் ரைப் பண்ணுவதால் சில சமையங்களில் ஒரு ஒழுங்குமுறை காணப்படாது. அதையெல்லாம் பெரிய விடையமாக எடுக்காதீர்கள்!(???))

கண்ட நகர்வு இதை பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள்…
அதாவது பூமியில் பல தட்டுக்கள் காணப்படுகின்றன (அந்த தட்டுக்களின் மேல் தான் நாம் வாழும் நாடுகள், கடல்கள் என்ப இருக்கின்றன.) அந்த தட்டுக்கள் நிலையாக இல்லாமல் நகர்ந்து கொண்டுள்ளன. என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒரு விடையம். ஆனால் இன்னொரு முக்கியமான விஷையம் என்னவென்றால்… அத்தட்டுக்கள் சாதாரண‌மாக நகராமல் ஒரு சிறிய(!!!???) மேல் கீழான அசைவினையும் கொண்டுள்ளன. ( நாங்கள் விளையாடிய “ஸீஸோ” விளையாட்டுமாதிரி) அத்தோடு ஒவ்வொரு தட்டிற்கும் இந்த நகர்வுவேகம்,அசைவு வேகம் என்பன மாறுபட்டிருக்கின்றது.
(மேற் கூறியதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்)
இந்த தட்டுக்களின் நகர்வினாலேயே இமைய மலையின் உயரம் வருடா வருடம் ஒரு சிறிய அதிகரிப்பை காட்டுகிறது. (என்னை பொறுத்தவரையில் எவெறெஸ்ட் சிகரத்தில் உயர அதிகரிப்பு தெரிய வாய்ப்பில்லை. காரணம், புவி வெப்பமடைவதன் காரணமாக பனி உருகுகிறது… ஆகவே நகர்வினால் ஏற்படுத்தப்படும் உயர்வு கணிக்க முடியாதிருக்கலாம்) இங்கு இமயமலையின் கீழ் இரு தட்டுக்கள் பொருந்தியுள்ளன என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
இந்த இமயமலை தோன்றியதே இரண்டு தட்டுக்கள் ஒன்றுடனொன்று முட்டி மோதியதால் தான்!
(இமயமலைப்பகுதியிலுள்ள பாறைகளில் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது நம்பாதவர்களுக்காக)

சுனாமி ஏற்பட்டதும் இரு தட்டுக்களின் முறுகல் தான்!
இன்றைய பதிவு சொல்ல வந்த விடையத்தை(எவ்வாறு அழிந்தது) சொல்லமுதலே நீள்மாகிவிட்டது.
ஒன்றை விளக்க வெளிக்கிடும் போது பல பாதைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அப்போது தான் நாம் சொல்லவருவது ஒரு நம்பகத்தன்மையானதாக இருக்கும்.

இது ஒரு கலந்துரையாடல்…. உங்களது கருத்துக்கள் எதிர் பார்க்கப்படுகின்றன! ( ஏன் என்றால் நான் ஒன்றும் பெரிய அறிவாளி இல்லை! வாசிச்சது, கேட்டது , ஜோசித்தது எல்லாம் சேர்ந்து தான் இந்த ஆக்கம். அதனால், இத்தொடரை பிரயோசனமாக்குவதற்கு உங்களது பங்களிப்பு நிச்சயம் தேவை!)
By : Chandran Pirabu (1946)



லெமுரியா அழிந்தது எப்படி? தப்பியது யார்? – Lemuria 03

PART 01 | PART 02
போன பதிவில் கண்ட நகர்வு பற்றி பார்த்திருந்தோம். இன்று அதன் தொடர்ச்சியை சுவார்ஷயமான தகவல்களுடன் பார்ப்போம்.
இங்குள்ள படத்தை அவதானிக்கவும் குமரிக்கண்டம் இருந்ததாக நான் கூறும் இடத்தின் மத்தியில் 4 புவித்தட்டுக்கள் ஒன்றுடனொன்று இனைந்திருப்பதை அவதானிக்க முடியும். இந்த நான்கு தட்டுக்களிலும் ஏற்பட்ட எதிர் எதிர் திசைகளிலான அசைவே குமரிக்கண்டம் பிளவு பட்டு நீரினுள் மூள்கிப்போக காரண‌மாக இருக்கும். இங்கு முக்கியமாக நோக்க வேண்டிய இன்னொரு விடையம் என்னவென்றால் இத்தட்டுக்கள் விலகியது என்பதை விட நான்கும் உள்னோக்கி குவிந்தது என்பதே ஏற்றுக்கொள்ளத்தக்கது.
இலங்கை, மடகஸ்கார் போன்ற நாடுகள் உன்மையில் குமரிக்கண்டத்தை சேர்ந்த நாடுகளே! இவை குமரிக்கண்டத்தின் எல்லைப்பகுதிகளில் காண‌ப்பட்ட மலைப்பிரதேச நாடுகளாகும். என‌வேதான் லெமூரியா மூழ்கியபோதும் இவ் நாடுகள் தப்பிபிழைத்துள்ளன. ( இதை, தட்டுக்கள் உள்னோக்கி குவிந்துள்ளன என்பதற்கான ஒரு சான்றாக கொள்ள முடியும்). இங்கு “இந்த நான்கு தட்டுக்களும் திடீரென ஒரே நாளில் தமது மாற்றத்தை வெளிப்படுத்தி இருக்குமா?” எனும் கேள்வி எழுகிறது. அவ்வாறு ஒரே நாளில் நடைபெற்றிருப்பதற்கு புவியியலில் சாத்தியமில்லை. “அப்படியானால் அங்கு வாழ்ந்த உயிரினங்கள் எங்கே? அவை பிறபகுதிகளுக்கு குடிபெயரவில்லையா?” எனும் தொடர் கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக அங்கிருந்த மனித சமுதாயம் எங்கே? எனும் ஒரு பெரிய கேள்வி எழுகிறது. ( இங்கு, மனித சாமுதாயத்தின் தொட்டிலாக லெமூரியா கருதப்படுவது நினைவுகூறத்தக்கது.)
இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் “பொரிக்ஷா” எனும் ரஷ்ஷிய சிறுவன், தான் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாகவும்; அப்போது அடிக்கடி தான் பூமிக்கு வந்து போய் இருப்பதாகவும்; பூமியில் குமரிக்கண்டபகுதியில் அறிவில் மேம்பட்ட 9 அடி உயரம் கொண்ட மனிதர்கள் வாழ்ந்தார்கள் என‌வும் கூறியுள்ளான். சிறுவனின் உண்மைத்தன்மை இன்னும் ஆறியப்படவில்லை. ஆனால், எமது புராணங்களில் 9 அடி மனிதர்களை பற்றி பல பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அரக்கர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்).
அத்துடன் பரிமாண வழர்ச்சி படியை பார்க்கும் போது சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு படி காணாமல் போயுள்ளது. ( இது பரிமாண கொள்கையின் தந்தையான சார்ல்ஸ் டாவினால் ஏத்துக்கொள்ளப்பட்ட கருத்து.) இப்போது சமீபத்தில் சீன ஆய்வாளர்களால் இந்தோனேஷிய பகுதியில் ஒரு வித்தியாசமான எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது நியான்டர்தார்ஸ் களினுடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. -
—————————————————————————————
யார் இந்த நியான்டர்தார்ஸ்? மேலும் பல உண்மையான வியப்புக்களுடன் அடுத்த பகுதியில் சந்திப்போம். இது ஒரு கலந்துரையாடல் உங்களது கருத்துக்கள் தேவைப்படுகின்றது. தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.


அழிந்து போன உயிரினம் லெமூரியாவில் வாழ்ந்ததா? – Lemuria 04


PART 01 | PART 02 | PART 03
போன பகுதியில் நியான்டர்தார்ஸ் ( neanderthal ) பற்றி எழுதியிருந்தேன், ஆனால் நியான்டர்தார்ஸ் வாழ்ந்த காலப்பகுதி லெமூரியாவிற்கு முன்னரானது என கருத்து நிலவி வருகிறதே… அது பற்றி இன்று பார்ப்போம். :)
சமீபத்தில் சீன ஆராச்சியாள‌ர்களால் இந்தோனேசிய பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நியான்டர்தார்ஸினுடையதாக இருக்கலாம் என கருதப்பட்டது. நியான்டர்தார்ஸ் என்றழைக்கப்படும் உயிரினம் சுமார் 40 லட்சம் ( நான் குறிப்பிட்ட காலம் பிழையாக இருக்கலாம், சரியானது தெரிந்தவர்கள் பின் குறிப்பிடவும்.) ஆண்டுகளுக்கு முன் வரை மனிதனுடன் வாழ்ந்த உயிரினம். மனிதன் பரிமாண வளர்ச்சி பெற்ற அதே மூதாதையரிடமிருந்தே அவ் உயிரினமும் தோன்றியிருந்தது. உருவ அமைப்பிலும் மனிதனை ஒத்திருந்தாளும்; சில முக்கிய வேறுபாடுகள் காணப்பட்டன. அதாவது, தலை சாதாரன மனித தலையை விட சற்று பெரிதாகவும், நெஞ்சுப்பகுதி சற்று முன்னோக்கி நீண்டதாகவும், முக்கியமாக மனிதனை விட உடல் வலு மிக்கவைகளாக‌ காணப்பட்டாலும் மூளைவளர்ச்சி ஒப்பீட்டு ரீதியில் மிக குறந்ததாக இருந்துள்ளது. வழமை போலவே இவ் உயிரினமும் ஆதி மனிதனின் வேட்டையில் முற்றாக ஒழிக்கப்பட்டது. ( நியான்டர்தார்ஸ்ஸின் உடலில் 13 சோடி விலா எலும்புகள் காணப்பட்டுள்ளன. இன்றும் மனிதரில் 5% ஆனோருக்கு 13 சோடி விலா எலும்புகள் உள்ளனவாம். அப்படியானால்… இனக்கலப்பு நடந்திருக்கலாம்… (சாதாரண மனிதரில் 12 சோடி விலா எலும்புகளே இருக்கும்.))
ஏன் நியான்டர்தார்ஸ் பற்றி சொல்ல வந்தேன் என்றால்…

நமது புராணங்களில் (இராமாயணம்) ஹனுமார் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை அவர்கள் மனிதர்களுடன் (ராமர் முதலானோர்) இருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக ஹனுமார் நியான்டர்தார்ஸ் இனத்தை சேர்ந்தவர் என சொல்ல வரவில்லை, மனிதன் பூரண பரிமாண வழர்ச்சியை எட்டமுன் நியான்டர்தார்ஸ்+ஆதி மனிதன் இக்கு இடைப்பட்ட ஒரு உயிரினம் இருந்துள்ளது. ( டாவினின் பரிமாண படியில் காணாமல் போனது இதுவாக இருக்கலாம்.) அந்த இனத்தின் மிஞ்சிய குழுவே வாலி,சுக்ரீவனுடைவது. எமது புராணங்களில் கூட மனிதனுடையதும் குரங்கினதும் உடலமைப்பை இணைத்தது போன்றே இவர்களது உடல்வாகு சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இராமாயணம், மகாபாரதம் என்பவை வெறும் இலக்கியமோ புராணமோஇல்லை. அவை உண்மையில் நடந்த வரலாறு.(பிற்காலங்களில் இட்டுக்கட்டப்பட்டு புராணமாக்கப்பட்டு விட்டது. ஏன்…??? அது பிறகு…)
முக்கியமாக அது லெமூரியாக்கண்டத்தில் வாழ்ந்த அறிவுமிக்க, உயர்ந்த நாகரீகம்மிக்க மனிதர்களுக்கிடையே நடந்த வரலாற்று சம்பவங்கள்.

மேருமலை போன்றவை வெறும் கற்பனையல்ல. அவை அனைத்தும் லெமூரியாக்கண்டத்தின் மத்தியில் பெரும் சுவர் போன்று அமைந்திருந்த மலைகள். ( இன்றைய கிறீன் விச்சுக்கும் அதற்கும் தொடர்புண்டு; அதை பின்னர் பார்க்கலாம்…)
லெமூரியா கண்டத்தின் மத்தியில் தொடர்ச்சியான நீண்டமலைத்தொடர் காணப்பட்டுள்ளது. ( இந்து சமுத்திரத்தின் ஆழங்களை ஆராயும் போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட ஒரு நீண்ட தூரத்துக்கு கடலின் ஆழம் குறைவாகவுள்ளது.)

அங்கு வாழ்ந்தவர்கள் யாவர்? அவர்களின் அறிவு எவ்வாறானது? அவர்கள் பேசிய மொழி என்ன? இன்னும் வியப்பான மறுக்கப்படும் உண்மைகள் வரும் பதிவுகளில் காத்திருக்கின்றன…
—————————————————————————————–
இது ஒரு கலந்துரையாடல்… உங்களது கருத்துக்கள் எதிர்பார்க்க படுகின்றன…

By : Chandran Pirabu (7333)




லெமூரியா / குமரி கண்டத்தில் இலங்கையின் பங்கு என்ன? Lemuria 05

போன பதிவில், லெமூரியாவிற்கும் நியாண்டர்தார்கும் புராணங்களுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்ந்திருந்தோம்!முன்னைய பதிவுகளை பார்வையிட இங்கு சொடுகுங்கள்.
இன்று,
போனபதிவில் லெமூரியாவையும் இராமாயணத்தையும் ஒப்பிட்டு பார்த்திருந்தோம். அங்கு ஒரு சிக்கல் எழுகிறது…
அதாவது, இராமாயணத்தில் தற்போதைய பாக்கு நீரினையை கடந்தே இராமர் இலங்கை சென்றதாக கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் பார்க்கும் போது, லெமூரியா கண்டத்தில் இராமாயணம் நடந்தது என்பது பொய்யாகிறது. எனினும், இன்றைய மதுரையல்ல உண்மையான மதுரை. கடல் கோல்கள்,கடலரிப்புக்கள் காரணமாக மாற்றமடைந்த 3வது மதுரையே இன்றைய மதுரை. ( நிரூபிக்கபட்டது). அதே போல், இந்தியாவிலிருக்கும் “திருநெல்வேலி” எனும் நகர் பெயர் இலங்கையிலும் ஒரு பிரதேசத்துக்குண்டு.
(சற்று திரிபடைந்து, மொழி நடைக்கேற்ப‌ “தின்ன வேலி” என கூறப்படுகிறது.) அதா போல் தான் வத்தளங்குன்று போன்ற பிரதேசங்களும்.

இவ்வாறு தாம் வாழ்ந்த இடங்களின் பெயர்களை புதிதாக வாழப்போகும் இடங்களுக்கு வைப்பது, அக்காலத்தில் உலக மரபு, சம்பிரதாயமாக இருந்துள்ளது. (பல நாடுகளில் இப்படி ஒரே பெயர்கள் இருக்கின்றனவாம்.)
ஆகவே, என்னை பொறுத்த வரையில் இப்போதிருக்கும் இலங்கையல்ல இராமாயணத்தில் கூறப்பட்டது. இப்போது இருப்பது பண்டைய இலங்கையின் மலைப்பகுதி பிரதேசமாகும். ( தற்போதைய இலங்கையின் புவியியல் அமைப்பை பார்த்தாலே தெரியும். இலங்கை ஒரு மலை பிரதேசத்திலிருந்த நாடு என்பது.)
நிரூபிப்பதற்கு சான்றுகள் குறைவாயினும் தொலமியின் 1 வது உலக வரைபடத்தை இதற்கு ஒரு சான்றாக கொள்ளலாம்.

தொலமியின் உலக வரைபடத்தை பார்த்தோமானால், இலங்கை தீவானது 14 மடங்கு பெரிதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல நாடுகளை சரியாக கணிப்பிட்ட தொலமி இலங்கையை தவறுதலாக குறிப்பிட்டிருக்க சந்தர்ப்பமில்லை.
( தொலமியின் வரைபடம் தொடர்பாக பெரிய சர்ச்சையே உள்ளது. 1) தொலமி தாம் கீறியதாக சொல்லும் வரைபடம் உண்மையில் அவர் கீறியதல்ல; அது ஒரு பலங்குடி மக்களிடையே புலக்கத்திலிருந்தது. 2) அது வெளியுலகத்தவரால் வரையப்பட்டது. 3) நாம் தொலமியினது எனக்கூறுவது தொலமியினதே இல்லை. …)

எது எப்படியோ இலங்கை லெமூரியா கண்டத்திலிருந்த ஒரு முக்கிய நாடு.
ஏற்கனவே கூறியிருந்தேன் “லெமூரியா கண்ட‌த்தின் மத்தியில் பாரிய மலைத்தொடர் இருந்தது” என. அதன் கிழக்கு பகுதியிலேயே இலங்கை இருந்துள்ளது. ராமர் முதலானோர் வாழ்ந்தது மேற்கு பகுதியில். மலைத்தொடர்களுக்கிடையே நீரோடைகள் காணப்படுவது சகஜம், அப்படி பட்ட நீரோடையை தாண்டி கிழக்கை நோக்கி படையெடுத்ததே, பாக்கு நீரினை யை கடந்ததாக கொள்ளப்படுகிறது.

பண்டைய அறிவு என்பது. தற்போதைய அறிவியல் விஞ்ஞானத்திற்கு நிகரான ஆனால் முற்று முழுதாக வேறுபட்ட தொழில் நுட்ப ஆறிவாகும். உதாரணமாக நாம் இன்று பயன்படுத்தும் கணித குறியீடான “ஃபை”(22/7) என்பது 16 ம் நூற்றாண்டில்(??) அறியப்பட்ட ஒன்று. (வட்டம் தொடர்பான பாவனைகளுக்கு பாவிக்கப்படுகிறது.)
ஆனால், கி.மு 10000 5000 இடைப்பட்ட எகிப்திய பிரமிட்டுகளில் இத்தொழில் நுட்பம் கச்சிதமாக பாவிக்கப்பட்டுள்ளது!!!

அவர்கள் எவ்வாறு அவ் அறிவை பெற்றனர்? மேலும் வியத்தகு சம்பவங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்…
By : Chandran Pirabu


லெமூரியத்தமிழ் படிவுகள் எகிப்தில்? வியத்தகு அறிவியல் – Lemuria 06

லெமூரியாக்கண்டத்தை சேர்ந்த நாடுதான் இலங்கை என்பதை போன பதிவில் பார்த்திருந்தோம்!முன்னைய பதிவுகளை வாசிக்க இதை சொடுகவும்.
இன்று…
ஏலியன்ஸ் (வேற்று கிரக வாசிகள்) பற்றி பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவை தொடர்பான சம்பவங்களை பார்த்தோமானால்… அவர்கள் பயணிப்பதாக கருதப்படும் பறக்கும் தட்டானது; திடீரென திசைகளை மாற்றத்தக்கதாயும், பறப்பதற்கு ஓடுபாதை தேவையற்ற ஒன்றாகவும் இருக்கும் என கருதப்படுகிறது.
அதேவேளை இராமாயணத்திலும் இராவணனின் வாகணமான புட்பக (புஸ்பக வோ தெரியல) விமானம் விபரிக்க பட்டுள்ளதும் இதே முறையில் தான். இராவணனுக்கு 10 தலைகள் என கூறப்பட்டுள்ளது அது அவனது அறிவு மேம் பாட்டை குறித்ததாக இருக்கலாம். காலப்போக்கில்… லெமூரியாவின் பேரழிவின் பின்னர்…அவை மாற்றப்பட்டு கதைகளாகியிருக்கலாம்.
(இன்னும் நாம் ஏலியன்ஸின் பறக்குந்தட்டுக்கு கிட்டக்கூட வரவில்லை… பறக்கும் தட்டின் இயக்கம் பற்றியும் பொரிக்ஷா கூறியுள்ளான்.)
பொரிக்ஷா எனும் ரஷ்ய சிறுவன் ஏற்கனவே… லெமூரியாவில் வாழ்ந்தவர்கள் அறிவாளிகள் என கூறியுள்ளான். (பொரிக்ஷா பற்றி ஏற்கனவே குறிப்பு தந்திருக்குறேன்.)
மேலும் இந்து சமுத்திரத்தில் மேற்கொள்ளபட்ட சிறிய அளவிலான ஆராச்சியின் போது… சில பாறைப்படிவங்களில் அணு படிவுகள் காணப்பட்டுள்ளன. ( இது “அலெக்ஸான்டர் கொண்ட்ற டேவ்” எனும் பிரபல ஆராச்சியாலரின் தலைமையில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போது அறியப்பட்டுள்ளது. இது அவரால் எழுதப்பட்ட புத்தகத்திலிருந்தது.)
இது பற்றி அவர் குறிப்பிடுகையிலேயே… எம்மை விட அறிவில் மேம் பட்டவர்கள் வாழ்ந்திருக்க கூடிய சந்தர்ப்பம் இருக்கலாம் என ஐயம் வெளியிட்டுள்ளார்.
சில நேரம் அது இயற்கையானதாகவும் இருக்கலாம்.

அதே வேளை எகிப்து நதி பகுதிகளிலும், யூப்ரட்டீஸ் நதிகரையிலும் கண்டெடுக்கப்பட்ட புராதன பொருட்களை பார்க்கையில் அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களானது திராவிட மொழிக்குடும்பத்தை சார்ந்த எழுத்துக்களாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ( முன்னர் சுமேரிய எழுத்துக்கள் என கருதப்பட்டு வந்தது. எனினும் பின்னைய ஆராச்சிகளின் மூலம் அது அதிகமாக திராவிட எழுத்துக்களை, சொற்களை ஒத்துப்போவது அறியப்பட்டது. பொதுவாக இடத்தை குறிப்பதற்கு ஊர் எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது.( இன்னும் பல சொற்றகள் உதாரணமாக போட்டிருந்தார்கள் எனக்கு மறந்துவிட்டது.) ஈரானில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போதும், திராவிட, தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அன்றாட பாவணைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
இன்னொரு விடையம்… உலக வரை படத்தில் தெற்கு நோக்கி செல்லச்செல்ல திராவிடத்தன்மை அதிகரிப்பதை காணமுடியும். ( நிரூபனமானது.)
ஆகவே… இந்து சமுத்திரத்தில் ஒரு கண்டம் இருந்தது… அங்கு திராவிட மொழிக்கு நிகரான மொழி பேசப்பட்டது எனும் வாதம் நிரூபனமாகிறது.
—————————————————————————————–
இனி…
மாயன் நாட்காட்டி, எகிப்திய தொழில் நுட்பம் , இன்றைய நாட்காட்டி, இன்றைய தொழில் நுட்பம் என்பவற்றுடனான லெமூரியாவின் தொடர்பை பார்க்கலாம்.

நாட்காட்டி வியக்கத்தக்கதாக உள்ளது.
குறிப்பாக இன்றைய கிறீன் விச்சிக்கு நிகராக முன்னர் இலங்கையில் ஒரு இடம் இருந்துள்ளது….

By : Chandran Pirabu (1999)




குமரிக்கண்ட மக்கள் பயண்படுத்திய கலண்டர் எப்டியானது? – Lemuria 07

லெமூரியாதொடர்பான முன்னைய பதிவுகள் :)
இன்றைய பதிவில் லெமூரியாவில் நாம் பயண்படுத்திய நாட்காட்டி (கலண்டர்) தொடர்பான தகவல்களைப்பார்ப்போம்.
இன்று எவ்வாறு “கிறீன் விச்” எனும் இடம் சர்வதேச நியம நேரமாக‌ (0) தொழிற்படுகிறதோ… அவ்வாறே லெமூரியர்காலத்தில் ஒரு இடம் இருந்துள்ளது. அது இலங்கையில் இருந்த ஒரு இடமாக இருக்க சந்தர்ப்பம் உள்ளது. காரணம்… நமது காப்பியங்களின் படி 3 இலங்கை இருந்ததாக கூறப்படுகிறது. ( இது நான் ஏற்கனவே கூறி இருந்த மதுரை தொடர்பான சம்பவங்களுடன் ஒத்து போக கூடியது. அதாவது வெவ்வேறு அழிவுகளின் போது… இடம் காலத்துக்கு காலம் மாற்றப்பட்டுள்ளது…
இதன் படி பார்க்கையில் தற்போதைய இலங்கை உண்மை இலங்கையின் எஞ்சிய பகுதியே என்பது தெளிவாகின்றது… இது தொடர்பாக முந்தைய பகுதிகளில் ஏற்கனவே கூறியுள்ளேன்.) தென்னிலங்கை… இது இராவணனின் தலை நகரம்… நிரட்ச இலங்கை… இது 0 பாகை புவி அச்ச கோட்டில் ( நில நடு கோடு ) உள்ளது… ( இவை தொடர்பான தகவல்கள் ஐப்பெருங்காப்பியங்களில் உள்ளனவாம் \\\குமரி மந்தன் குறிப்பு\\\ ) இதை தான் மாயனின் சூரிய சித்தார்ந்தம் எனும் நூல் லங்கா புரி என கூறுகிறது.
லங்காபுரி… ரோமபுரி…சித்தபுரி…பத்திராசுவம் எனும் நான்கு… முக்கிய பெரும் நகரங்களும்… ஒன்றுக்கொன்று 90 பாகையில் மேற்காக அமைந்து இருந்ததாக குறிப்புகள் உள்ளன. இந்த நில நடு இலங்கையே முன்னைய காலங்களில் நாடுகளின் நேரங்களை கணிக்கவும் ( இன்றைய கிரீன் விச்)… ஆண்டு கலண்டரை உருவாக்கவும் மைய புள்ளியாக இருந்து இருக்கின்றது. பண்டைய காலங்களில் 5 வகையான கலண்டர்கள் பாவணையில் இருந்து இருக்கிறது… அதில் 2 வகையானது நீண்டகாலம் நிலைத்து நின்றுள்ளது… (1. நிலா ஆண்டு முறை. 2. சூரிய ஆண்டு முறை.) 5 வகையான ஆண்டு முறைகள் இருந்தமையாலேயே… பொங்கல், சித்திரை, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு… என வெவ்வேறு… பண்டிகைகளாக கொண்டாடும் முறை நிலவி வந்துள்ளது. ( இன்றும் நிலவுகிறது…) இதில்… இன்றைய ஆண்டு முறையை மிகவும் ஒத்த தாக இருந்தது… சூரிய ஆண்டு + சந்திர ஆண்டு முறையே…
அதாவது… சூரியன் தன்னை தானே… அண்னளவாக சுற்ற 25 1/3 நாள் எடுக்கும்… அதே வேளை பூமியும் சுற்றுவதால் புவியில் இருந்து பார்க்க 27 1/3 நாட்கள் போன்று தோன்றும்… சூரியனில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கரும்புள்ளி ஒவ்வொரு 27 1/3 நாளுக்கும் ஒருக்கா புவியை நோக்கி வருகிறது… ( புவியின் காந்த புலத்தை பாதிக்க தக்கது…) இதை அடிப்படையாக கொண்டே 27 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டன. ஒரு பெளர்ணமி நாளில் நிலவுக்கு பின்னர் இருக்கும் நட்சத்திரம்…. அடுத்த பெளர்ணமியில் வருவதில்லை… அடுத்து அதே நட்சத்திரம் வர 12 மாதங்கள் எடுக்கும்… ( வர எடுக்கும் காலத்தை கொண்டே இந்த 12 என்பது கணிக்கப்பட்டது…. தற்போது 10 எவ்வாறு ஒரு அடியாகாக பயண்படுகிறதோ… அவ்வாறே… முன்னர்… 12 பயன்பட்டுள்ளது…. ( முன்னைய அளவு முறைகளை பார்க்கவும்… அனைத்தும் 12 ஐ அடியாக கொண்டுள்ளது…)) இந்த 12 மாதங்களையும் கணிப்பதற்காகவே ( நினைவு வச்சுக்கொள்ளவே) 12 இராசிகள் எனும் நட்சத்திர உருவ முறை பாவனைக்கு வந்தது. ( வேறு காரணங்களும் இருக்கு… அது இந்த தலைப்புக்கு பொருத்த மற்றது.)
இதை கணித்த முறை மிகவும் வியப்பானது… காரணம்… அந்த காலத்தில் எவ்வாறு இவ்வளவு தெளிவாக கணிப்பிட முடிந்தது என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது… இந்த ஆண்டு முறை பற்றி மிக விரிவாக குமரிமைந்தன் என்பவர் பதிவிட்டுள்ளார்….
16 ம் நூற்றாண்டில்… போப் கிரகெரி… என்பவராலேயே… இன்றைய ஜனவரி 1 ஐ ஆண்டின் தொடக்க நாளாக கொண்டாடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுக்கு முன்னர் லெமூரிய கலண்டர் படி தை 1 ( இன்றைய ஜனவரி 14) தான் ஆண்டின் தொடக்க நாளாக இருந்தது. ( இது வரலாற்று உண்மை!!??) மதம் அற்ற தமிழர்களின் முறையை பின்பற்றுவதை விரும்பாத… காரணத்தாலேயே… கிரகெரி… ஆண்டு முறையை மாற்றி அமைத்து இருந்தார்…
இது தொடர்பான மேலும் பல சுவாரஷ்யங்களை எதிர்வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள். பலரும் நாம் தொழைத்த நம் அறிவை அறிந்துகொள்ள பகிருங்கள். :)
By : Chandran Pirabu (2021)



சமஸ்கிரத மொழி உருவாக்கமும் லெமூரியத்தமிழரும்! – Lemuria 08

இன்று லெமூரியாவிற்கும் தமிழருக்கும் / தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்புகளை விடையங்களை பார்க்க ஆரம்பிக்கலாம்…
இதில் எழுதப்போகும் பல விடையங்கள் நான் வாசித்து; சரியாக இருக்க‌லாமென நம்பும் விடையங்களே…. சிலது நான் இப்படி இருந்து இருக்கலாம் என்று நினைப்பவை… ஆகவே, எதுவும் நூறு வீதம் நம்பத்தக்கது இல்லை.
நீங்களும் உங்களுக்கு தோன்றுபவற்றை கொமென்ட்ஸில் போடுங்கள். அப்போதுதான் இந்த பதிவு கொஞ்சமாவது பிரயோசனமாக இருக்கும். :) .

இந்த பதிவு எழுதும் போது பல சம்பவங்கள், இந்துக்களின் புராண நூல்களை அடிப்படையாக கொண்டே இருக்கும். ( நான் இந்து என்பதால் அவை பற்றிதான் எனக்கு தெரியும்.) இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய வேறு மத நூல்கள் அல்லது கோட்பாடுகள் தெரிந்திருந்தால் எழுதவும். :) .


முன்னைய பதிவுகளுக்கு. :)

நூறு… இருனூறு வருடங்களுக்கு முன்னர் கூட, உலகின்…முக்கியமாக ஐரோப்பிய நாடுகளின் சட்டங்கள், தொழில்நுட்ப நுட்பங்கள் என்பன‌ இலத்தீன் மொழியிலேயே இருந்தது. ( ஐரோப்பிய நாடுகளில் பேசப்பட்டுவரும் மொழிகள் பல கிரேக்க மொழியை அடிப்படையாக கொண்டதாகும்.)

இதற்கான காரணம்… குளூக்குறி (?) ( இரகசிய மொழி) / மறை மொழியில் சட்டங்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவேயாகும்.
காந்தியடிகள் சட்டம் படித்தபோது கூட, ஸ்பெசலாக கிரேக்க மொழியை கற்க பயிற்சி எடுத்து இருந்தாராம்.

இதை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம்,
சமஸ்கிரத மொழிக்கும் தமிழுக்கும் இடையிலான ஒரு தொடர்ப்பை காட்டுவதற்கே.

குமரிக்கண்டத்தில்…
தொழில் நுட்பம், ஆட்சிமுறைகள் என்பன வளர்ச்சியடைந்த போது… அதை ஒரு குறிப்பிட்ட மக்கள் மத்தியில் மட்டும் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருவதற்கு; அன்றைய நடைமுறையிலிருந்த மொழியைவிட இன்னொரு இரகசிய மொழி தேவைப்பட்டது. அதற்காக உருவாக்கப்பட்டதே இந்த சமஸ்கிரத (sanskrit ) மொழியாக இருக்கலாம். ( நன்றி : குமரி மைந்தன்). ஆனால், துரதிஸ்டவசமாக வரலாற்று சம்பவங்கள் கூட சமஸ்கிரத மொழியில் மட்டுமே எழுதப்பட்டதனால் அங்கு பேசப்பட்ட மொழி தொடர்பான சான்றுகள் இல்லாமல் போய்விட்டன. காரணம், மேல்மட்ட மக்களிடையே இந்த இரகசிய மொழி ஒரு தனி மொழியாக உருவாக தொடங்கியமையால் அவர்களால் எழுதப்படும் வரலாற்று குறிப்புகளும் அவ்மொழியிலேயே எழுதப்பட்டு விட்டது.
இன்று கூட உலகில் பேசப்பட்டு வரும் பல மொழிகளில் தமிழ் மொழியின் தன்மையும், அவ் அவ் மொழிகளின் பின்வந்த சொற்களில் சமஸ்கிரதத்தின் தன்மையும் காணப்படுகின்றனவாம்.
அடுத்து, உலகில் எழுத்து உரு இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டும் இருந்துவரும் மொழிகள் தமிழ் உச்சரிப்புடன் மிகவும் நெருக்கமாக இருக்கின்றனவாம்.

அதனால், குமரிக்கண்ட வரலாற்று சம்பவங்களும், தமிழ் மொழியின் தொன்மையான வரலாறுகளும் சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்ட நூல்களிலேயே உள்ளன. முக்கியமாக வேத நூல்களாக கருதப்படும்… இருக்கு, யசூர்,சாமம் முதலிய நூல்களில் குமரிக்கண்ட வரலாறே கதைகளாக கூறப்பட்டுள்ளன என கருதப்படுகிறது.
மகாபாரதம் குமரிக்கண்டத்தில் நடந்த ஒரு வரலாற்று சம்பவம். ( இது சம்பந்தமாக நான் ஏற்கனவே இந்த லெமூரியா தொடர்பதிவுகளில் கூறியிருந்தேன். )
அது சம்பந்தமாக மேலதிகமாக நான் தெரிந்துகொண்ட தகவல்களை இதில் குறிப்பிடுகிறேன்…
மகாபாரதம்…
பாம்பை தமது இலட்சனையாக கொண்ட ஒரு குழுவுக்கும், பருந்தை இலட்சனையாக கொண்ட இன்னொரு குழுவுக்குமிடையே நடந்த உண்மையான ஒரு போரேயாகும். பிற்காலங்களில் இந்த வரலாற்றை பதிவு செய்யும் போது… இது போன்ற ஓர் போர் இன்னொரு முறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக பல இடைச்செருகல்களுடன் ஒரு குழுவை முதன்மையான குழுவாக காட்டி… மக்களுக்கு நீதியை/ நற்கருத்துகளை புகுத்தி ஒரு போர் வெறியற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக மாற்றியமைக்கப்பட்டு இருக்கலாம். ( துரதிஸ்ட வசமாக தொழில் நுட்ப முறைகளும் மறைக்கப்பட்டு இருக்கலாம். :\ )
டெனிக்கன் எனும் பிரபல ஆராச்சியாலர் தனது நூலில் (chariots of god ) கொண்டவானம் எனும் பகுதியை அழிப்பதற்கு கண்ணனும் அர்ச்சுனனும் பயன்படுத்திய சாதனங்கள் இன்றைய அணுவாயுதத்துக்கு நிகரானது என்பதை ஒப்பிட்டுக்காட்டி இருக்கிறாராம். நாகசாகியில் போடப்பட்ட அணு குண்டுடனும் அதன் அழிவுகளுடனும் ஒப்பிட்டுள்ளாராம்.
அசுவத்தாமன் வீசிய ஒரு சாதனம் கருவிலிருந்த குழந்தைகளை கூட அழித்தது என சமஸ்கிரத நூல்களில் குறிப்புக்கள் இருக்கின்றனவாம்.

அடுத்த பதிவுகளில் மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.
எம்மைப்பற்றிய இத்தகவல்கள் பலரிடம் சென்றடைய பகிர்ந்து உதவுங்கள்.

By :Chandran Pirabu (2025)

லெமூரியாவும் தமிழர்கள் இழந்தவைகளும்! – Lemuria 09

முன்னைய பதிவுகளை பார்வையிட…
போன பதிவில்… லெமூரியா, மகாபாரதம், தமிழ், சமஸ்கிரதம் போன்றவற்றுக்கிடையில் நான் வாசித்து,ஊகித்து அறிந்து கொண்ட சில தொடர்புகளை எழுதியிருந்தேன். இன்றும் அவ்வாறான சில சுவார்ஷ்யமான தொடர்புகளை பார்ப்போம்…
——————————————————————————————–

எகிப்திய நாகரீகத்தினை பார்த்தால்…
மிகவும் பிந்தங்கிய நிலையிலிருந்து திடீரென ஒரு மேன்மையான நிலையை எட்டியுள்ளமை விளங்குகிறது.
அவர்களின் தொழில் நுட்ப அறிவு திடீரென இவளவு வீரியம்மிக்கதாக மாறியமை… அங்கு ஒரு புதிய சமூகம் குடியேறியிருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தான் அலெக்ஸ்ஸான்டர் கொஞ்தர்தேவ் எனும் பிரபல தொல்பொருளாராச்சியாலரும் சொல்லி இருக்கிறார். அவர் அந்த சமூகம் தென் பகுதியிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும்… அது லெமூரியா கண்டத்திலிருந்து வந்து குடியேறிய சமூகமாக இருக்க வேண்டும் என்றும் தனது குறிப்பில் கூறியுள்ளார்.
( கொந்த்ரதேவ்… லெமூரியா கண்டம் தொடர்பாக நீண்ட கால ஆராச்சியை மேற்கொண்டு சில உண்மைகளை உலகறியச்செய்தவர் என்பதை நான் ஏற்கனவே இந்த தொடரில் எழுதியுள்ளேன்… )

அத்தோடு… வேறு ஆய்வாலர்களும்… மொசபடேனியம்..(???) மற்ற இடங்கள் மறந்துவிட்டன… போன்ற பாதையூடாக எகிப்துக்கும்… இந்திய பகுதிக்கும்… வியாபாரம் நடந்து இருக்கிறதாம்… மேலும்… அரபிக் கடலோரங்களில் எகிப்துக்கு கொண்டுவரப்பட்ட சில பண்டங்கள் காண்டெடுக்கப்பட்டுள்ளன… ( இதில் தமிழ் சுமேரிய எழுத்துக்கள் இருக்கின்றன என இந்த தொடர் பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டேன்…)
அது இருக்கட்டும்… நாங்கள் எங்களது நூல்களில் இதுகள் சம்பந்தமாக ஏதாவது இருக்கா என்று பார்த்தா… சிலது இருக்கு…
மகாபாரத்தில் நகலனின் மகன்… சுக்ராச்சாரியாரின் ம‌களை திருமணம் முடிக்கிறார்.
ஆனால், நகுலனின் மகன்… விடபமன்னனின் மகளின் மூலம் 3 பிள்ளைகளை பெற்றான்.
இதனால், ஆத்திரமடைந்த சுக்ராச்சாரியார் நகுலனின் மகனை வயோதிபமடையச்செய்கிறார். ( இங்கு தவ வலிமை மூலம் முதுமையடைய செய்வதாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், அது தவ வலிமையாகவுமிருக்கலாம்… அதைவிட முன்னர் வாழ்ந்த அந்த மேம்பட்ட சமூகம்… விரைவில் முதுமையை ஏற்படுத்துவதற்காக ஏதாவது யுக்திகளை கையாண்டதாகவும் இருக்கலாம்… அந்த யுக்திகள் மறைக்கப்பட்டதுக்கு காரணம் நான் ஏற்கனவே போன பதிவில் சொன்னமாதிரி… அனைத்து மக்களுக்கும் அந்த ரெக்னிக் சென்றடையக்கூடாது என்ற உள்னோக்கமாகவே இருக்கும்.)

பின்னர்…
நகுலனின் மகன்… மீண்டும் இளமையை பெற வேண்டுமென்றால்… தனது மகன்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என பரிகாரம் கூறப்படுகிறது. சுக்ராச்சாரியாரின் மகள் மூலம் பிறந்த பிள்ளைகள் இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கவே… விடபமன்னனின் மகளின் பிள்ளைகளில் ஒருவன் ஒப்பிக்கொள்கிறான். பிறகு… இளமையைப்பெற்ற நகுலனின் மகன்…
தனக்கு உதவ மறுத்த பிள்ளைகளை நாட்டைவிட்டு துரத்துகிறான்…

இவர்களிலிருந்தே யாதவர்களும்… துரியோத‌னின் வம்சமும் உருவாகி இருக்கிறதாம். ( யார்; யார் வழி வந்தவர்கள் என்பது எனக்கு நினைவில்லை/தெரியாது… தெரிந்தவர்கள் கொமென்டில் போடவும்.)
யூதர்களின்… நூலின் படியும்…
ஆபிரஹாம் என்பவருக்கு முதலில் பிள்ளைகள் இல்லை… பின்னர் சேவகி மூலம் பிள்ளைகள் பிறக்கின்றன… நீண்ட கால்த்துக்கு பிறகு… மூத்த மனைவி மூலம் பிள்ளை பிறக்கிறது. மூத்த மகன் வெளியேறுகிறான்… அவன் வழி வந்தவர்கள் அரேபியர்கள்… இளையவன் வழி வந்தவர்கள் யூதர்கள். என கூறப்பட்டுள்ளதாம். ( நன்றி : குமரி மைந்தன்.)

இந்த ரெண்டிலயுமே… ஒரு குழு நாட்டை விட்டு வெளியேறுகிறது…
இந்த யூதர்களின் “தோரா” நூல்…
எகிப்தில்…. அரசு உரிமை பிரச்சனை காரணமாக, ஒரு தொகை அடிமைகளுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக கருதப்படும் மோஷே (?) வினால் எகிப்திய அரன்மனை நூல்களைப்படித்து எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரம்… மிசிரத்தானம் என்ற சொல்லிற்கு தமிழ் அகராதி… எகிப்து என்று அழைக்கப்படும் நாடு என கூறுகிறது.
அதற்கான விளக்கப்படியும்… நாட்டால் விரட்டப்பட்ட ஒருவன் மிலேச்சம் எனும் தேசத்துக்கு சென்று அம்மக்களுடன் கலந்து அரசனமையால் ஏற்பட்ட பெயர் என விளக்கப்படுகிறதாம்.
——————————————————————————————–
ஆகவே…
இதன் படி பார்க்கும் போது…
லெமூரியா கண்டத்தில் இருந்து அங்குபோய் குடியேறிய மக்கள் கூட்டத்தாலேயே… எகிப்திய நாகரீகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பது விளங்குகிறது.
(ஏற்கனவே… லெமூரியாவில் பண்டைய தமிழ் ( தற்போது வெகுவாக மாறி இருக்கிறது ) மொழியே பிரதான மொழியாக இருந்திருக்கலாம் என சில சான்றுகள் மூலம் இப்பதிவில் எழுதி இருந்தேன்… இது அதை மேலும் உறுதிப்படுத்துகிறது.)

ஆனால்… பின்னர் ஏற்பட்ட சுனாமி, கண்ட தாழ்வு, ( அல்லது அணு யுத்தம்(???) ) போன்ற காரணங்களால்… லெமூரியா திடீரென அழிய… எகிப்தியர்கள் முன்னெச்சரிக்கையாக வரலாற்றை திறமையாக பதிந்து வைத்தார்கள். ( அது விளங்கி கொள்ள முடியாத சித்திர எழுத்திலிருப்பது துரதிஸ்டம்.)
மேலே இருக்கும் வரலாற்று சம்பவங்களிலிருந்து இன்னொன்றும் உறுதியாகிறது…
அதாவது… யூதர்களின் தோரா… எகிப்திய நூலகத்திலிருந்து எழுதப்பட்டது என்றால்… எகிப்தை உருவாக்கிய நகுலனின் மக்களின் வம்சத்தினரால்… எகிப்தில் பதியப்பட்ட லெமூரிய (மகாபாரத) வரலாறே… தோராவிலிம் ( இதை கிறிஸ்தவர்கள் “பழைய ஏற்பாடு” என அழைப்பதும் இதைத்தான்.) சில திரிபுகளின் பின்னர் எழுதப்பட்டு இருக்கலாம்…

அடுத்த பதிவை விரைவில் எதிர்பாருங்கள். நம் பலத்தை நம்மிடையே நாம் தான் பகிரவேண்டும். பகிருங்கள் எழுத ஊக்குவியுங்கள். :)
By : Chandran Pirabu (5634)

1 comment: