For Read Your Language click Translate

28 May 2014

இந்திய வரலாறு-08


இந்திய வரலாறு-08






வேத காலம்










ஹிந்து மதத்தின் வரலாறு பற்றி கடந்த பதிவில் பார்த்தோம். ஹிந்து மதம் உருப்பெற்று செழிப்படைந்தது வேதகாலத்தில் தான். வேத காலத்தின் வரலாறு மற்றும் வேதங்கள் பற்றி இனி விரிவாக பார்க்கலாம். வேதகாலம் என்பது மனிதன் முழுமையான நாகரிகம் அடைந்தபிறகு உருவான காலமாகும். அதாவது உலோக காலத்திற்கு பிறகு வந்த காலம். இது கிமு 2000 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பது ஐதிகம். வேத காலம் வட இந்தியாவையும், வடமேற்கு இந்தியாவையும் மையப்படுத்திச் செழித்து இருந்தது. ஹிந்து மதத்தின் வேராக கருதப்படும் வேதங்கள் இயற்றப்பட்டது இகாலக்கட்டதில் தான்.













வேதங்கள் என்பவை இந்து மதத்தின் அடிப்படையாக அறியப்படும் நூல்களில் சிலவாகும் மேலும் காலத்தால் மிகவும் பழமையானது. இன்றும் வேதங்களில் சில நடைமுறையில் இருக்கின்றன. வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழி சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும்.என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம்,பொருள், இன்பம், வீடு என்பர்). என்பனவாகும்.






வேதங்கள் வேதமொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது.இம்மொழி சம்ஸ்கிருத மொழியின் முன்னோடி. தேவநகரி என்றும் அழைக்கபடுகிறது,வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளன. ஏறத்தாழ கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது .விஜநகர ஆட்சியில் புக்க அரசர் காலத்தில் வாழ்ந்த சாயணாசாரியர் என்னும் பதினாலாவது நூற்றாண்டு காலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதிய, வேதார்த்த பிரகாஷா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும்.


இது சமய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உலகின் மிக பழமையான நூல்களிலும் ஒன்று.வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றை சில இடங்களில் உரைநடையிலும், மற்ற இடங்களில் ரிக் என்று சொல்லப்படும் வேதகால செய்யுள்நடையிலும் எடுத்துக் கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.






வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு:
சம்ஹிதை - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
பிரமாணம் எனப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்.






யசுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சப்த பிரமாணம் என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். சதபத பிராம்மணம் சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.


காலம் காலமாக வாய்வழியாகவே பின்பற்றப்பட்டு வந்த சுலோகங்கள் கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனாச்சார்யர் வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். ரிக்வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காடுவாழ் முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்)அல்லது அனுபவத்துக் குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உணர்வதற்குத் துணையான வேதாந்த பாகங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு.


வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும்.இதனை ஞான காண்டம் என்பர். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.






ரிக் வேதம்(rig veda):








இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று.மேலும் நான்கு வேதங்களில் மிகவும் பழமையானது. இயற்றப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 க்கும், கி.மு 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வேத கால சமஸ்கிருதம் அல்லது தேவநகரி மொழியில் எழுதப்பட்ட மந்திரங்களை கொண்டது.


ரிக்வேதம் முழுவதும் செய்யுட்களாக உள்ளது. சிறப்பான ஏழு சந்தங்களால் அமையப்பட்டது . அவைகள் காயத்திரி, உஷ்ணிக், அனுஷ்டுப், பிரஹதி, விராட், த்ரிஷ்டுப்,ஜகதி ஆகும். இதில் காயத்திரி சந்தஸ் அதிக புழக்கத்தில் உள்ளது.


ரிக்வேதம், வேதகால சமசுகிருதத்தில் 1,028 சுலோகங்களால் இயற்றப்பட்டுள்ளது .இவ்வேதம் பத்து மண்டலங்களாகப் (பகுதிகள்) பிரிக்கப்பட்டுள்ளது.








இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சுலோகங்கள் கடவுள்களைப் போற்றும் நோக்கிலே அமைந்தவை. ஒரு கடவுள் கொள்கை, பல கடவுள் கொள்கை மற்றும் இயற்கையை கடவுளாக கொண்டு பெரும்பாலான சுலோகங்கள் எழுதப்பட்டுள்ளன. சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன.


முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான தாசர் எனபடும் அசுர இனத்தாருக்கும் மற்றும் இமயமலைவாசிகலான கிராதர இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.


ரிக் வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள் அக்னி, இந்திரன், சோமன் என்போராவர்.இவர்களைவிட மித்திரன், வருணன், அஷ்வினிதேவர்கள், விஷ்ணு, உருத்திரன், தேவர்களின் குருவான பிரகஸ்பதி, பிரிதிவி, சூரியன், வாயு, மழை, அத்ரி, அந்தரிச்சன், துவஷ்டா, சரஸ்வதி,அதிதி, நான்கு திசைகள், நீர், நதிகள், மலைகள் போன்ற கடவுளர்களும், இந்நூலில் போற்றப்படுகிறார்கள்..






வசிட்டர், விசுவாமித்திரர், பரத்துவாசர், வாமதேவர், அகத்தியர், கிரத்சமத், கக்ஷிவான்,தீர்க்கதமா, கோதமர், வேதாதிதி, சியாவாஷ்வ, மதுசந்தா, அபாலா (பெண் முனிவர்), அஷ்டக்,பிரஸ்கண்வர், ஜமதக்கினி, அயாஸ்வா, அஜிகர்த்தன், கன்ஹஷேப், பராசரர், சக்தி மற்றும் அத்ரி போன்ற முனிவர்களை பற்றிய குறிப்புகளும் உள்ளன.






ரிக் வேத்த்தில் திவோதாஸ், சுதாஸ், மனு, புரூரவா, நகுசன், யயாதி, மாந்தாதா, புரு, குசிக்,திரிச்சு மற்றும் குசிகர் போன்ற அரசர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.






ரிக்வேத்தில் குறிப்பிடப்படும் பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள், அதிதி, இந்திரத் தாய்கள்,இந்திராணி, ஊர்வசி, கக்ஷிவான் மகள் கோஷா, ஜுஹூ, தட்சிணா, நிபாவரி, யமீ வைஸ்வதி,ராத்திரி, லோபமுத்ரா [அகத்தியரின் மனைவி], வசுக்கரனின் மனைவி, வாக், விவ்ருஹா,விஷ்பல, விஸ்வவாரா, சசி, சஷ்வதி, சிகண்டினி, காஷ்யபி, சிரத்தா காமயானி, ஸர்மா[ பெண் நாய்], சார்ப்ப ராக்ஞி, சிக்தா, சுதேவி மற்றும் சூர்யா.






ரிக்வேத கால மக்கள் சிறிய அளவில் பயிர்த்தொழில் செய்து வந்தாலும், பசுக்கள், குதிரைகள்,ஆடுகள் ஆகியவைதான் பெருஞ்செல்வமாக கருதினர். அவர்களிலே மாமிச உணவு உண்ணாதவர்கள் எவரும் இல்லை எனலாம். ’புலால் இல்லாமல்’ மதுயர்க்கமே (உணவே)இருக்கமுடியது. ரிக்வேத கால இறைச்சி உண்ணும் மக்கள் முக்கியமாக பசு, குதிரை, ஆடு மற்றும் செம்மறியாட்டின் இறைச்சியை உண்டனர். பலவிதமான பசு ரசமும் [பசுக்குழம்பும்]அவர்களுடைய முக்கிய உணவாகும். ’சுரபி பக்வம் மாம்ஸ்’ என்ற சொறொடர் (சமைக்கப்பட்ட மணங்கமழும் இறைச்சி) இதையே தெளிவு படுத்துகிறது. பால், தயிர் மற்றும் நெய்யும் முக்கியமானது என்றாலும் ‘புரோடாஷ்’ என்பது அவர்களுக்கும், அவர்கள் வணங்கும் தேவர்களுக்கும் விருப்பமான உணவாகும். தென் இந்தியாவின் முதன்மையான உணவான அரிசி பற்றி ரிக் வேத்த்தில் எந்த குறிப்புகளும் காணப்படவில்லை. சவ்வரிசி முதன்மையான உணவு, வறுத்த தாணியத்தை ‘தானா’ என்றும், தினை மாவை ’கரம்ப’ என்றும், ரொட்டியை ‘அபூப்’ என்றும், அழைத்து அதை உண்டனர். மேலும் பழ வகைகளும் உண்டனர்.






ஆரிய மக்கள் வாழம் இருப்பிடங்களை ‘கிராமங்கள்’ என்றும், ராஷ்டிரங்கள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. கிராமத் தலைவரை ‘கிராமணி’ என்றும், ராஷ்ட்டிரத் தலைவரை ‘ராஜா’என்றும் அழைத்தனர். ’சாம்ராட்’, ஸ்வராட், ஷாஸ், ஈஷான், பதி, பூபதி, பூதி மற்றும் நிருபதி என்ற சொற்களால் ராஜாவை அழைத்தனர். ராஜாவின் மகன்களை ராஜபுத்திரர்கள் என்றழைத்தனர். அவர்களிடையே சபை, சமிதி, போன்ற சமூக அமைப்புகள் இருந்தன. சமூகத் தலைவர்களை ‘குல்ப்’ (குலத்தலைவர்) என்றும் ’விரஜாபதி’ (சமூகத்தலைவர்), ’கணபதி’ஆகியவர்கள் குற்ற வழக்குகள், சிவில் வழக்குகளில் விசாரித்து நீதி வழங்கினர். ரிக் வேதத்தில் புரோகிதர் (பிரதமர்) பணிகள், வேள்வி செய்வதும், செய்வித்தலும் மற்றும் மத தொடர்பான விடயங்களில் மன்னனுக்கு ஆலோசனை எவ்வாறு கூறுவது போன்று பல குறிப்புகளும் உள்ளன.






யசுர் வேதம்:


yajus "வேள்வி" + veda "அறிவு" என்பவற்றின் சேர்க்கையே யசுர் வேதம்.


இந்துக்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.






யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை


1. சுக்கில யசுர்வேதம்,


2. கிருஷ்ண யசுர்வேதம்


இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன.கிருஷ்ண யசுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.






கிருஷ்ண யசுர்வேதம்:


கிருஷ்ண யசுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை:
தைத்திரீய சம்ஹிதை
மைத்ராயணி சம்ஹிதை
சரக-கதா சம்ஹிதை
கபிஸ்தல-கதா சம்ஹிதை


என்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது.


மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு பிராமணத்தையும் (வேதவிளக்கம்) கொண்டுள்ளன.






சுக்கில யசுர்வேதம்








சுக்கில யசுர்வேதம் முனிவர் யோகீசுவர யாக்கியவல்கியரால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும் தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை:
வஜசனேயி மாதியந்தினியம்
வஜசனேயி கான்வம்


என்பனவாகும். வட இந்தியாவிலும், குசராத்திலும், நாசிக்குக்கு வடக்கேயுள்ள மகாராட்டிரத்திலும் பிரபலமானது. பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில்,இந்தியாவில் மிகப்பெரிய வேத மரபுகளுள் ஒன்றாகும். கான்வ சாகை (கான்வ உட்பிரிவு)நாசிக்குக்கு தெற்கேயுள்ள மகாராட்டிரம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா,கேரளா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றது. ஜகத்குரு என அழைக்கப்படும் ஆதி சங்கரர் கான்வ சாகையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய இந்துக்கோயிலான ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.


மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான ஈசாவாஸ்யம், பிருஹதாரணியம் ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.






சாமவேதம்:














sāman "கிரியைகளுக்கான மந்திரங்கள்" + veda "அறிவு" ), என்பது சாம வேதம் ஆகும். இந்து சமயத்தின் அடிப்படையாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். ஆனால், புனிதத் தன்மையில் ரிக்வேத்த்திற்கு அடுத்த்தாக இது இரண்டாம் நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அளவில் இது ரிக்வேதத்தில் ஏறக்குறைய பாதியளவு இருக்கும்






அதர்வண வேதம்:








அதர்வண வேதம் நான்கு வேதங்களுள் ஒன்றாகும் மேலும் இது நான்காவது வேதமாக கருதப்படுகிறது. அதர்வண வேத கூற்று படி பிரம்மதேவர் இவ்வுலகத்தை படைத்தார் பின் அதர்வன் - அங்கிராசா என்ற இரண்டு முனிவர்களை படைத்தார் அவர்களால் இயற்றப்பட்டது அதர்வண வேதம் என்பது கூற்று. அதர்வண வேதத்தில் கடவுள் பற்றிய பல சுலோகங்கள் தந்திரங்கள் மற்றும் பல மருத்துவ குறிப்புகள் உள்ளன.


இவாறாக நான்கு வேதங்களும் வகைபடுதப்பட்டு அவற்றில் சில இன்றளவும் நடைமுறையில் உள்ளன. ஆதி காலத்தில் ஓதப்பட்ட வேடங்களில் இன்று இருப்பவை மிக சொற்பமே. அவற்றில் இருக்கும் தத்துவங்களும், கருத்துக்களும் ஏராளம். எகிப்திய, மெசபடோமியா நாகரிகத்திற்கு ஒப்பானதாக நம் நாகரிகம் இருந்தாலும் வரலாற்றில் அவற்றிற்கு இருக்கும் ஆதாரங்கள் சொற்பமே.


வேதங்களை தொடர்ந்து வேதங்களுக்கு பின் வந்த உபநிடதங்கள் மற்றும் இதிகாசங்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்

















நன்றி!!!


ம.ஞானகுரு

No comments:

Post a Comment