For Read Your Language click Translate

17 May 2014

இந்தியாவில் உப்பு -"சைந்தவா" என்று அழைக்கப்படும் இந்துப்பு

இது உப்பு பெறாத விஷயம் என்று இனி சொல்லாதீர்கள் 24திங்கள்,ஜனவரி,
4 கருத்துகள்
.

யோடைஸ்டு சால்ட்- அதாவது அயோடின் கலந்த உப்பு. இதைத்தான் நாம் உணவு சமைக்க பயன்படுத்தி வருகிறோம். கடலில் இருந்து எடுக்கப்பட்டு பின் தொழிற்சாலைகளில் வைத்து அயோடின் என்ற திரவம் கலக்கப்பட்டு வரும் இந்த உப்பு தான் நமது உடலுக்கு உகந்ததா? நிச்சயமாக இது நூறு சதவீதம் சரியென்று சொல்லி விட முடியாது. இதில் இந்துப்பு (Halite or Rock Salt)தான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ நூல்கள் சொல்கின்றன. ஆக..இனி இந்துப்பை பற்றி பார்க்கும் முன்பு பொதுவாக உப்பு பற்றிய செய்திகளை இங்கு தருகிறேன்.
உப்பு வந்த கதை
மனிதனுக்கு உப்பு என்ற ஒன்றை தெரிந்திருக்காவிட்டால் அவன் நாடோடி வாழ்க்கையை அவ்வளவு சுலபமாக விட்டிருக்க மாட்டான் என்கிறார்கள் மனித பரிணமாத்தை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள். அதாவது மனிதன் சாப்பிட கிடைத்த தானியங்களுடன் சேர்த்துக் கொள்ள தேவையான உப்பு எங்கெல்லாம் கிடைத்ததோ,அங்கெல்லாம் புதிய மனித குழுக்கள் தங்கி மனித குடியேற்றங்கள் உருவாகியிருக்கின்றன. கடற்கரையில் தோன்றிய மனித நாகரீகங்கள் எல்லாம் பெரும்பாலும் உப்பை அடிப்படையாக கொண்டவை என்கிறார்கள்.
இப்படி உப்புக்கு பெரிய வரலாறு இருக்கிறது. உப்பு இல்லாமல் உணவுகள் இருக்க முடியாது என்பது உண்மை. உப்பை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் பயன்படுத்தி வந்ததாக சான்றுகள் இருக்கின்றன. எகிப்திய நாடு ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலேயே மிகவும் செல்வாக்கு பெற்ற நாடாக விளங்கியிருக்கிறது. காரணம், எகிப்தியர்கள் சகாரா பாலைவனத்திலிருந்த உப்பை வெட்டி எடுத்து ஒட்டகத்தின் மேல் ஏற்றி வந்து சுற்றியுள்ள நாடுகளுக்கு எல்லாம் விற்பனை செய்து செல்வத்தை ஈட்டியிருக்கிறார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட The Book Of Job என்ற நூலில் உப்பை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பைபிளில் உப்பை பற்றி 30 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உப்பை நேர்மைக்கும், நீதிக்கும் ஒரு அடையாள சின்னமாக அதில் குறிக்கப்படுகிறது. இந்துக்களிடம் கூட சத்தியத்தை உறுதி செய்ய உப்பின் மேல் சத்தியம் பெறும் வழக்கம் இருக்கிறது.
இப்படி பல நாடுகளிலும் உப்புக்கு இருக்கும் வரலாற்றை பல நூறு பக்கங்களுக்கு சொல்லிக் கொண்டே போகலாம். நாம் இந்தியாவில் கிடைக்கும் உப்பையும், குறிப்பாக இந்துப்பு பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் உப்பு
இந்தியாவில் உப்புத் தொழில் மிகத்தொன்மையானது. கி.மு நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்த மெளரியரின் அமைச்சரவையில் இருந்த கெளடியல்யர் அர்த்த சாஸ்திரத்தை எழுதி புகழ் பெற்றார். இவருக்கு சாணக்கியர் என்ற பெயரும் உண்டு. இந்த நூலில் இந்தியாவில் கிடைக்கும் பல வகை உப்புக்களை பற்றி அவர் எழுதியிருக்கிறார். நாம் இங்கு சொல்ல வந்த "சைந்தவா" என்று அழைக்கப்படும் இந்துப்பு சிந்து மாகாணத்தில் கிடைப்பதால் இதற்கு இந்த பெயர் வந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.

இது தவிர, "சமுத்ரா" அதாவது கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பு, "உத்பேஜா" அல்லது உப்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும் ஒரு உப்பு, "ரோமகா" உறைந்து படிவங்களாக கிடக்கும் உப்பு, "ஒளத்பிதா" என்று ஒரு உப்பு. இப்படி 5 வகை உப்புகள் இந்திய நாட்டில் கிடைப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த உப்பானது பாறை போலவும், படிகங்களாகவும் பூமியின் மேற்பரப்பிலும், அதற்கடியிலும் இருந்து வந்துள்ளது. பூமியின் ஆழத்தில் இருக்கும் இந்த இந்துப்பை எடுக்க, சுரங்கம் தோண்டி கரிச்சுரங்கத்தில் இருந்து கரியை வெட்டி எடுப்பது போல் எடுத்து மேலே கொண்டு வருவார்கள். இந்தியாவில் இமாசலபிரதேசத்தில் மன்டி என்ற இடத்தில் இந்துப்பு கிடைக்கிறது. தமிழ்நாட்டில் சில இடங்களில் கிடைத்தாலும் இந்துப்பு பற்றி அவ்வளவாக விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.
சாதாரண (கடல்) உப்பின் நன்மையும், கெடுதலும்
இந்துப்பு பற்றி எனக்கு தெரிந்த சித்த மருத்துவர்களிடம் நான் கேட்டு தெரிந்துள்ளதை விட "தினமணி" ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையை இங்கு தருகிறேன்.

கேள்வி: என் வீட்டு சமையலில் உப்பை சரியான அளவில் சேர்ப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எனக்கு அதன் அளவு போதாது என்று கூறி அதிகமான உப்பு போட்டு சாப்பிடுகிறேன். இது எனக்கு கேட்டை விளைவிக்குமா?
ராஜேந்திரன், புதுச்சேரி.
பதில்: தண்ணீரிலிருந்து தான் சுவை தோன்றுகிறது. அது முதலில் தனிப்பட்ட முறையில் அறியப்படாத ஒரு பொருள். வருடம் என்ற காலம், ஆறு பருவங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாலும் பஞ்சமகா பூதங்களான நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகியவற்றின் குணங்களின் ஏற்றத்தாழ்வினாலும் சுவை என்பது இனிப்பு முதலான ஆறு தனித்த சுவையாக தோற்றம் அடைகிறது.
நீர் மற்றும் நெருப்பின் அதிக சேர்க்கையினால் ஏற்படும் சுவை உப்பு, உப்புச்சுவை உமிழ்நீரை பெருக செய்யும் தன்மை கொண்டது. உணவிற்கு சுவையூட்டுகிறது. அதிக சேர்க்கை தொண்டையையும், தாடைகளையும் எரிக்கிறது. உங்களை பொறுத்த வரை உப்புச்சுவையிலுள்ள நீர் மற்றும் நெருப்பின் தேவை, உடலின் ஏதோ ஒரு பகுதியின் தேய்மானத்தை ஈடுகட்டுவதற்காக அதன் மீது நாட்டத்தை ஏற்படுத்துகிறது.
உப்பு சரியான அளவில் சேர்க்கும் போது, பசித்தீயை தூண்டுகிறது. நாக்கிலுள்ள ருசி கோளங்களில் படிந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தி சுவையை உணரும்படி செய்கிறது. உண்ட உணவை சீரணிக்க உதவுகிறது. வயிற்றில் ஈரப்பசையை ஏற்படுத்துகிறது. குடல் முழுவதும் எண்ணெய் பசையை ஏற்படுத்தி குடலின் இயற்கையான அசைவுகளுக்கு உதவுகிறது.

வியர்வை கோளங்களை சுறுசுறுப்புடன் இயங்க செய்கிறது. குடலில் சேர்ந்துள்ள இறுகிய மலத்தை உடைத்து வெளியேற்றுகிறது. உடல் முழுவதும் விரைவில் பரந்து பரவும் திறன் உடையது. உடலிலுள்ள எண்ணற்ற ஓட்டைகளை சுத்தப்படுத்திவிடும். ஊடுருவும் தன்மையும், சூடான வீரியமும் உள்ள உப்புச்சுவையின் நன்மைகளை நீங்கள் அடைந்தாலும் இந்த உப்பை உணவில் அதிகம் சேர்த்தால் தலைவழுக்கை, நாவறட்சி,உடல் எரிச்சல், வீக்கம், இசிவு எனும் கைகால்களில் உண்டாகும் வலிப்பு நோய், பித்தம் ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பித்த நோய் போன்றவை உருவாகும்.இவை எல்லாம் சாதாரண உப்பில் உண்டாகும் கேடுகள்.

இந்துப்பு
ஆனால் மனிதன் பயன்படுத்த தக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.
  • இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.
  • ஆண்மையை வளர்ப்பது.
  • மனதிற்கு நல்லது.
  • வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.
  • இலேசானது.
  • சிறிதளவு உஷ்ணமுள்ளது.
  • கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது. ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.
  • எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் பயன்படுத்துங்கள். இன்றைக்கு அயோடின் கலந்த உப்பின் தேவையும் உடலுக்கு தேவை என்பதால் அத்துடன் இந்துப்பையும் வாங்கி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்படி அவர் பதிலளித்திருக்கிறார்.
இந்துப்பு பொதுவாக நாட்டுமருந்துக்கடைகளில்.காதி கிராப்ட்டில் கிடைக்கும். தூத்துக்குடியிலிருந்து சிலர் இந்த இந்துப்பை வாங்கி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஆகவே நண்பர்களே, இனி இந்துப்பை வாங்கி பயன்படுத்துவோம். உடலுக்கு மிகவும் நல்லது. எந்த கெடுதலும் இல்லை. சாதாரண சமையல் உப்பில் கிடைக்கும் சுவை இதிலும் கிடைக்கும். கால்.கை வீக்கம் தோன்றினால் டாக்டர்கள்," உப்பை குறைங்க" என்பார்கள். அப்படி ஒரு பிரச்சினை இந்துப்பில் வருவதில்லை.


இந்துப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ள விக்கிபீடியாவில் பாருங்கள்

harvesting-sea-salt

ஒரு கிலோ எடையுள்ள கடல் நீரில் சுமார் 35 கிராம் அளவுக்கு உப்பு இருக்கிறது. 

sea water freezing point

தண்ணீரின் உரை நிலை 0 டிகிரி செல்சியஸ் என்பது நாம் அறிந்ததே, ஆனால் நீரின் உப்புத்தன்மையை பொறுத்து இது மாறும். கடல் நீரின் உரை நிலை -2 டிகிரி செல்சியஸ் ((28.4 °F).) ஆகும்.
ice expands
திடப்பொருள்கள் வெப்பத்தால் விரிவடையும் என்பது நமக்கு தெரியும். நீர் ஐஸ் கட்டியாக மாறும் போது விரிவடைகிறது.
mariana-trench-graphic-30812
Image courtesy: deepseachallenge.com/the-expedition/mariana-trench/
மனிதன் கண்டறிந்த வரையில் உலகில் உள்ள கடல்களில் மிக ஆழமான பகுதி பசிபிக் பெருங்கடலில் காணப்படும், மரியானா அகழி ஆகும்.

No comments:

Post a Comment