அகத்தியர் என்றால் அகத்தை உணர்ந்தவர். அகம் என்னும் ஆன்மாவை தொடர்பு கொண்டு பார்க்கிறார். அண்டபிண்டங்கள் அவர் கண்களுக்கு தெரிகிறது. உலக மக்களுக்கு உண்மையைத் தெரிவி...க்க வேண்டும் என்று கடவுளை நாடிக் கேட்கிறார். கடவுள் எந்த மொழியில் சொன்னால் மக்களுக்கு உண்மை விளங்கும் என்று தமிழ் மொழியைத் தேர்வு செய்து உருவடிவம், வரிவடிவம், ஒலி வடிவம், ஒளி வடிவம் போன்ற இலக்கண மொழியைத் அகத்தியர் வாயிலாக இறைவன் படைத்த மொழி தமிழ் மொழியாகும்.
அதனால்தான் தமிழ் இறை மொழி என்பதாகும். தமிழ் அனைத்து மொழிகளுக்கும் தந்தை மொழியாகும். மற்ற மொழிகள் மனிதர்களால் படைக்கப் பட்டதாகும். தமிழ் மொழியில் இருந்து பிரிந்த மொழிகள்தான் உலகில் உள்ள அனைத்து மொழிகளும். இதை மக்கள் உணர்ந்தால் தமிழ் மொழியின், உண்மையும் பெருமையும், அறிந்து கொள்ள முடியும். சித்தர் ஆதியேடுகளின் படி ~2037ற்கு முன் ஞானச்சித்தர்கள் காலம் பிறக்கின்றது. உலகமாற்றம் நடைபெறும். சித்தர்கள் நம்முன் மீண்டும் நடமாடுவார்கள். உலகோர் ஞான சூட்சுமங்களை அறியத் தமிழ்மொழி கற்பர். நன்றி
No comments:
Post a Comment