For Read Your Language click Translate

12 May 2014

கருடனை வணங்குவது எப்படி?, கருடர் காயத்திரி மந்திரங்கள்

கருட அஷ்டோத்திர சத நாமாவளி
கருட தரிசனம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித் தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும். விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் `பெரிய திருவடி' என்று அழைக்கப்படுகிறார். இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார்.

பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, `வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்தார். கருட தரிசனம் சுப சகுனமாகும்.

கருடன் மங்கள வடிவினன். வானத்தில் கருடன் வட்டமிடுவ...தும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.

அவ்வளவு எளிதில் எல்லோரும் கருடனை காண முடியாது. எந்த தினத்தில் காணுகிறோமோ அந்த தினத்திற்கு என்று பலன்கள் உண்டு. உலகலந்த பெருமானின் வாகனம், உலகை காக்க தர்மத்தை நிலை நாட்ட பிறவி எடுக்கும் பகவானின் அமர்வு பீடம் கருட தேவன்.

கருட தேவனுக்கு என்று காயத்ரி மந்திரமும் உண்டு.

இங்கே நான் சொலவது என்ன வென்றால், கூட்டம் சேரும் இடத்தில் கருடன் வருவார் என்கிறார்கள்,

அப்படியானால் ஏன் அரசியல் கூட்டம் போடும் இடங்களிலும் திருவிழாக்காலங்களில் மக்கள் அலை மோதும் இடங்களிலும் கருடன் வருவதில்லை.

ஏன் கிரிக்கெட் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி இருக்கும்பொது ஏன் அங்கே கருடன் வட்டமடிக்க வருதில்லை.. அவர்கள் சொல்வதுபடி பார்த்தால் இது நடக்க வேண்டுமல்லவா?

ஆனால் கோயில் கும்பாபிசேகம் நடைபெரும் இடங்களில் கருடன் வருகிறார் என்றால் அதுதான் தெய்வத்தின் அருள் என்பது. இதில் சிறிய கோயில் பெரிய கோயில் என்பதில்லை.

கருட தரிசனம் காணும்போதெல்லாம் பாப விமோசனம்.

ஞாயிறு அன்று தரிசித்தால் நோய் அகலும்

திங்கள் அன்று தரிசனம் செய்தால் குடுமப நலம்

செவ்வாய் அன்று தரிசனம் செய்தால் தைரியம் கிடைக்கும்

புதன் அன்று தரிசனம் செய்தால் எதிரிகள் ஒழிவார்கள்.

வியாழன் அன்று தரிசனம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்

வெள்ளி அன்று தரிசனம் செய்தால் பணவரவு கிடைக்கும்

சனி அன்று தரிசனம் செய்தால் நற்கதி கிடைக்கும்.

நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்...
1Like · ·








ஸ்ரீ கருட வசிய மூல மந்திரம்
இம்ஸ்ரியும் கிரயும் ஹோராம் மக மக
ஓம்தச ஹரிஷி ஹாய சாத்ரி பக பக
ச்ன்னாது ரிதபார்யா திதுர்க்கதே வதாம் வதாம்
ஓம் விஷ்ணும் கர்க்கராய மகா சுதர்ஷனைய
இஉம் கிளியும் சொவ்வும் நவமணி வவ்வும் சவ்வும்
பஞ்சக்ஷறைய ,வாசி வாசி ,மாசி மாசி ஸ்வாகா


கருடனை தரிசிக்கும் போது








கருடனை தரிசிக்கும் போது கை கூப்பலாகாது. வலது கை மோதிர

விரலால் இரு கண்ணங்களையும் 3,4,தடவை தொட்டு சொல்ல

வேண்டிய சுலோகம்.

குங்குமாங்கித வர்ணாய

குந்தேந்து தவளாய ச !

விஷ்ணு வாஹ ! நமஸ்துப்யம்

பஷிராஜாய தே நம : !!

கருட வாகன தரிசன பலன்....... * ஞாயிறு - பாவங்கள், பிணி நீங்கும்.
* திங்கள் - சுகம் கிடைக்கும்.
* செவ்வாய் - துணிவு, மகிழ்ச்சி கிட்டும்.
* புதன் - எதிரிகள் நீங்கிச் செல்வார்கள்.
* வியாழன் - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
* வெள்ளி - செல்வ வளம் பெருகும்.
* சனி - நம்பிக்கை ஓங்கும்.



கருடர் காயத்திரி மந்திரங்கள்        







கருடர் காயத்திரி மந்திரங்கள்

கருடர் வழிபாடு

மரணபயத்தை போக்கிட
ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ணபக்ஷõய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
சுவர்ணபக்ஷõய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
ஓம் தக்ஷபத்ராய வித்மஹே
தனாயுபுத்ராய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்





























































வரலாற்றில் கருடன்.......

* சமுத்திர குப்தர்கள் பொன் நாணயங்களில் கருட முத்திரையை பதித்தார்கள்.

* சந்திரகுப்த விக்கி ரமாதித்யன் டெல்லியில் ஒரு கருட கம்பத்தை ஸ்தாபித்தான்.

* தேவகிரி யாதவர்களின் சின்னமும் கொடியும் கருடன் தான்.

* அமுத கலசம் தாங்கிய கருடனை பவுத்தர்கள் வழிபட்டனர்.

* அமராவதி சிற்பத் தொகுதியில் கருட சிற்பங்களைக் காணலாம்.

கருடஆபரணங்கள்.......

கருடனை, எட்டு வகையான ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. அந்த எட்டு ஆபரணங்களும் எட்டு பாம்புகளை குறிக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.

* பூணூல் - வாசுகி.
* இடது கையில் - ஆதிசேஷன்
* அரையில் அணி - தட்சகன்
* மாலை - கார்கோடகன்
* வலது காதில் - பத்மன்
* இடது காதில் - மகா பத்மன்
* திருமுடியில் - சங்கபாலன்
* வலது தோள்பட்டையில் - குளிகன்

சம ஆசனம்.......


* திருவில்லியங்குடியில் கருடன் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

* ஸ்ரீவில்லிபுத்தூரில் கருடனுக்குப், பெருமாளுடன் சம ஆசனம்தரப்பட்டுள்ளது.

* திருத்தண்காலில் கருடன் கைகளில் பாம்பும், அமிர்த கலசமும் காணப்படுகிறது.

* திருக்குளந்தையில் உற்சவராகப் பெருமாள் பக்கத்தில் அமர்ந்து கருடன் அருளாசி புரிகிறார்.

* அழகர் கோவிலில் பெருமாளைச் சுமந்தபடி காட்சியளிக்கிறார் கருட பகவான்.

வாகனனுக்கு வாகனம்........

தெய்வங்கள் அனைத்துக்கும் அநேகமாக வாகனங்கள் உள்ளன. ஆனால் வாகனங்களுக்கு வாகனம் எதுவும் கிடையாது. ஆனால் கருடன் அதிலும் சிறப்பு மிக்கவராக உள்ளார். ஏனெனில் கருடனுக்கு வாகனம் உண்டு. அதாவது வாயுதான் கருடனின் வாகனமாக உள்ளதாக இதிகாச புராணங்கள் தெரிவிக்கிறது. இதற்கு சான்றாக இருப் பது விஷ்ணு சகஸ்ரநாமம். இதில் வரும் 'சுபர்ணோ வாயு 'சுபர்ணோ வாஹன!' என்ற பதம் இதனை விளக்குகிறது.








கருட அஷ்டோத்திர சத நாமாவளி






    கருட அஷ்டோத்திர சத நாமாவளி
    ஓம் வைநதேயாய நம:
    ஓம் ககபதயே நம:
    ஓம் காச்யபேயாய நம:
    ஓம் மஹாபலாய நம:
    ஓம் தப்தகாஞ்சநவர்ணாபாய நம:
    ஓம் ஸுபர்ணாய நம:
    ஓம் ஹரிவாஹநாய நம:
    ஓம் ச்சந்தோமயாய நம:
    ஓம் மஹாதேஜஸே நம:
    ஓம் மஹோத்ஸாஹாய நம:
    ஓம் க்ருபாநிதயே நம:
    ஓம் ப்ரஹ்மண்யாய நம:
    ஓம் விஷ்ணுபக்தாய நம:
    ஓம் குந்தேந்து தவளாநநாய நம:
    ஓம் சக்ரபாணிதராய நம:
    ஓம் ஸ்ரீமதே நம:
    ஓம் நாகாரயே நம:
    ஓம் நாகபூஷணாய நம:
    ஓம் விஜ்ஞாநதாய நம:
    ஓம் விசேஷஜ்ஞாய நம:
    ஓம் வித்யாநிதயே நம:
    ஓம் அநாமயாய நம:
    ஓம் பூதிதாய நம:
    ஓம் புவநத்ராத்ரே நம:
    ஓம் பயக்நே நம:
    ஓம் பக்தவத்ஸலாய நம:
    ஓம் ஸத்யச்சந்தஸே நம:
    ஓம் மஹாபக்ஷõய நம:
    ஓம் ஸுராஸுரஸுபூஜிதாய நம:
    ஓம் கஜபுஜே நம:
    ஓம் கச்சாபாசிநே நம:
    ஓம் தைத்யஹந்த்ரே நம:
    ஓம் அருணாநுஜாய நம:
    ஓம் அம்ருதாம்சுவே நம:
    ஓம் அம்ருதவபுஷே நம:
    ஓம் ஆநந்தநிதயே நம:
    ஓம் அவ்யயாய நம:
    ஓம் நிகமாத்மநே நம:
    ஓம் நிராதாராய நம:
    ஓம் நிஸ்த்ரைகுண்யாய நம:
    ஓம் நிரஞ்ஜநாய நம:
    ஓம் நிர்விகல்பாய நம:
    ஓம் பரஸ்மைஜ்யோதிஷே நம:
    ஓம் பராத்பரதரப்ரியாய நம:
    ஓம் சுபாங்காய நம:
    ஓம் சுபதாய நம:
    ஓம் சூராய நம:
    ஓம் ஸூக்ஷ்மரூபிணே நம:
    ஓம் ப்ருஹத்தமாய நம:
    ஓம் விஷாசிநே நம:
    ஓம் விஜிதாத்மநே நம:
    ஓம் விஜயாய நம:
    ஓம் ஜயவர்த்தநாய நம:
    ஓம் ஜாட்யக்நே நம:
    ஓம் ஜகதீசாய நம:
    ஓம் ஜநார்த்தநமஹாத்வஜாய நம:
    ஓம் ஜநஸந்தாபஸஞ்சேத்ரே நம:
    ஓம் ஜராமரணவர்ஜிதாய நம:
    ஓம் கல்யாணதாய நம:
    ஓம் கலாதீதாய நம:
    ஓம் கலாதரஸமப்ரபாய நம:
    ஓம் ஸோமபே நம:
    ஓம் ஸுரஸங்கேசாய நம:
    ஓம் யஜ்ஞாங்காய நம:
    ஓம் யஜ்ஞவாஹநாய நம:
    ஓம் மஹாஜவாய நம:
    ஓம் அதிகாயாய நம:
    ஓம் மந்மதப்ரியபாந்தவாய நம:
    ஓம் சங்கப்ருதே நம:
    ஓம் சக்ர தாரிணே நம:
    ஓம் பாலாய நம:
    ஓம் பஹுபராக்ரமாய நம:
    ஓம் ஸுதாகும்பதராய நம:
    ஓம் ஸ்ரீமதே நம:
    ஓம் துராதர்ஷாய நம:
    ஓம் அமராரிக்நே நம:
    ஓம் வஜ்ராங்காய நம:
    ஓம் வரதாய நம:
    ஓம் வந்த்யாய நம:
    ஓம் வாயுவேகாய நம:
    ஓம் வரப்ரதாய நம:
    ஓம் விநதாநந்தகாய நம:
    ஓம் ஸ்ரீமதே நம:
    ஓம் விஜிதாராதிஸங்குலாய நம:
    ஓம் பதத்வரிஷ்டாய நம:
    ஓம் ஸர்வேசாய நம:
    ஓம் பாபக்நே நம:
    ஓம் பாசமோசநாய நம:
    ஓம் அர்நிஜிதே நம:
    ஓம் ஜயநிர்க்கோஷாய நம:
    ஓம் ஜகதாஹ்லாதகாரகாய நம:
    ஓம் வக்ரநாஸாய நம:
    ஓம் ஸுவக்த்ராய நம:
    ஓம் மாரக்சாய நம:
    ஓம் மதபஞ்ஜநாய நம:
    ஓம் காலஜ்ஞாய நம:
    ஓம் கமலேஷ்டாய நம:
    ஓம் கலிதோஷ நிவாரணாயயோம் நம:
    ஓம் வித்யுந்நிபாய நம:
    ஓம் விஸாலாங்காய நம:
    ஓம் விநதா தாஸ்ய மோசநாய நம:
    ஓம் ஸோமபாத்மநே நம:
    ஓம் த்ரிவ்ருந்மூர்த்நே நம:
    ஓம் பூமிகாயத்ரி லோசனாய நம:
    ஓம் ஸாமகாநரதாய நம:
    ஓம் ஸ்ரக்விநே நம:
    ஓம் ஸ்வச்சந்தகதயே நம:
    ஓம் அக்ரண்யே நம:


    கருடப்பத்து






      கருடப்பத்து
      1. ஓம் பூரணனே பதினாறுதிங்கள் சேறும் பொருந்தியே யருக்கன் பதினெட்டுஞ் சேரும், காரணனே கருமுகில் பொன்மேனிசேருங் கருணைபெறு மஷ்டாட்சரங் கலந்து வாழும், வாரணனே லட்சுமியோடெட்டுஞ்சேரும், மதிமுகம்போல் நின்றிலங்கு மாயாநேயா ஆரணனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே.
      2. மந்திரமோ அஷ்டதித்து மெட்டுஞ் சேரும், வாழ்கிரக மொன்பதுமே வந்து சேரும், கந்திருவர் கணநாத ராசிவர்க்கம் கலைக்கியான நால்வேதங் கலந்து வாழும், நந்தி முதல் தேவர்களுங் கவன யோகம் நமஸ்கரித் துன் பாதம் நாளும் போற்ற, அந்தரமாய் நிறைந்திருக்குங் கெருடன் மீதில் அன்புடனேயேறி வந்தருள் செய்வாயே.
      3. மூலமுதலோரெழுத்து நீர்தானாகும் மூன்றெழுத்து மைந்தெழுந்து மொழியலாமோ, சீலமுதல் ஓம் - அங் - உங்-மங்-றிங் கென்றே சிவனுடைய திருநாமம் நீர்தானாகும், காலமுதல் ஓம்-அங்-உங்-மங்- றிங் கென்றே கருணைபெரு மிவ்வெழுத்து நீர்தானாகும். ஆலவிஷங்கை யேந்துங் கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
      4. நவ்வென்றும் கிலியென்றும் ஓம்சிவாயமென்றும் நமநம சிவசிவ ராராவென்றும், சவ்வென்றும் ஓங்கார ரீங்காரமாகித் தவமுடைய விவ்வெழுத்தும் நீர் தானாகும். ஒவ்வொன்றும் ஓம் நமோ நாராயணா வென்று உன்பாத முச்சரித் துகந்து போற்ற, அவ்வென்று ரகுராமா கெருடன்மீதில் அன்புடனே யேறி வந்தருள் செய்வாயே.
      5. உதிக்கின்ற சிவசொரூப முனக்கே யாகும் ஓம் - அவ்வும் - உவ்வுங்கிலியு மென்றே, பதிக்கிசைந்த ஐந்தெழுத்தை வெளியில்விட்டே பச்சை முகில்மேனியனே பணிந்தே னுன்னை, விதிக்கிசைந்த மெய்பொருளே அரி கோவிந்தா, விளக்கொளி போல் மெய்த்தவமே விரும்பித்தாதா, அதற்கிசைந்த நடம்புரியும் கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
      6. வேதமுதலா யிருந்த சிங்கரூபம் விளங்குகின்ற விரணியனை வதையேசெய்தாய் பூதமுதலாம் பிறவும் புண்ணியநேயா புகழ்ந்தவர்க்குத் துணைவருவா யசோதைபுத்ரா, நாதமுதல் விந்துவா யுயிருக்கெல்லாம் நயம் பெறவே நிறைந்திருக்கும் வாத பிரமயாதவன் போல் நிறைந்திருக்கும் கருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
      7. முக்கோண நாற்கோண மொழிந்தைங் கோணமுச்சுடரே யறுகோண மெண்கோணமாகும். சட்கோண நாற்பத்து மூன்று கோணம் தந்திரமுஞ் சிதம்பரமுஞ் சகலசித்தும், இக்கோணமிது முதலாய் வகாரமட்டும் இறையவனாய்த் தானிருந்து ரட்சித்தருளும், அக்கோணமீதிருந்து கெருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
      8. பச்சை முகில் மேனியனே யுனக்கே யிந்தப் பார்தனிலே பத்தவதாரமுண்டு, மச்சமென்றும் கூர்மமென்றும் வராக மென்றும், வாமனென்றும் ராமனென்றும் பவுத்தனென்றும், துஷ்டரையடக்க மோகினி வேடங்கொண்டவராய்த் தோன்றினாயுன்சொரூப மெல்லாம் அறிவாருண்டோ, அச்சந்தீர்த் தெனையாளக் கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
      9. வேதியனாய்த் தோன்றிவந்தாய் மாயலிக்கு விண்ணவர்க்காய், நரசிங்கரூபமாய்ச், சாதியிலே ராகவனாய்க் கிருஷ்ணனாகத் தானுதித்து த்வந்திருந்தாய் தரணி வாழ்க, சோதனைகள் பார்த்திடுவோர் துதிப்போர் தம்மை துஷ்டரையும் வதை செய்துலோகமாள்வாய், ஆதிமுதலோரெழுத்தே நீகெருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
      10. மாயவனே ரகுராமா அருகேவாவா வஞ்சனைகள் பறந்தோட நெஞ்சில் வாவா, காயாம்பூ நிறமுடனே கனவில்வாவா கருமுகில் மேனியனே என் கருத்தில் வாவா, நாயகனே யென்னாவிலிருக்க வாவா நாள்தோறும் முன்பாதந் துதிக்க வாவா ஆயர்குலத்துதித்தவனே கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
      11. முப்புரத்தை யெரித்தவனே யிப்போ வாவா முகில் நிறத்தவனே ஜகநாதா முன்னே வா வா எப்பொழுதுந் துதிப்பவர் பங்கில் வாவா ஏழைப் பங்கிலிருப்பவனே யிறங்கி வாவா, ஒப்பிலா மணிவிளக்கே யொளிபோல் வாவா, ஓம் நமோ நாராயணா வுகந்து வாவா, அப்பனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
      12. துளபமணிமார் பழகா சுகத்தைத் தாதா சுருதியே மெய்பொருளே வரத்தைத்தாதா களபகஸ்தூரியனே கடாட்சந் தாதா, கம்சனை வென்றவனே கருணை தாதா, பழம் பொருளே சிவ சோதி பாக்கியந்தாதா பத்தி முத்தி சித்தி செய்யவுன் பாதந்தாதா, அளவில்லா மெய்ப்பொருளே கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.
      கருடப் பத்து முற்றிற்று.





      No comments:

      Post a Comment