தமிழ் வழிக் கல்வியில் படித்தவன் திடீர் என்று வேறு மொழிக்கு மாறும் போது எப்படி இருக்கும் என்றுத் தெரியுமா?
கண்கள் இரண்டையும் யாரோ இறுக்கமாக கட்டி காட்டில் தள்ளி விட்டது போல் இருக்கும். திக்கு தெரியாத காட்டில் கட்டை அவிழ்த்து விட்டு அனைத்தையும் தன் மொழியில் புரிந்துக் கொண்டு படித்தவர்களே துணிச்சலாய் நடந்து பாதையைக் கடந்து வென்று இருக்கிறார்கள்.
ஆரம்பக் கல்வியை தாய் மொழியில் படித்து பின் வேறு மொழிக...்கு மாறியவனால் மட்டுமே எதைக் கேட்டாலும் தாய் மொழியிலும் விளக்கி , வேறு மொழியிலும் விளக்க முடியும்.ஆங்கில வழியில் படித்தவனிடம் இந்த எண்ணை வகுத்து ஈவு மீதி எழுது என்று சொல்லிப் பாருங்கள்.ஈவு என்றால் என்னவென்று கேட்பான்.
# முகத்தை தொங்கப் போட்டு நான் தமிழ் மீடியம் படித்தவன் என்றுச் சொல்லாதீர்கள்.தலை நிமிர்ந்து நான் தாய் மொழியில் பயின்றவன் என்றுச் சொல்லுங்கள்.
No comments:
Post a Comment