For Read Your Language click Translate

16 May 2014

நாக மாணிக்கம் என்பது உண்மையா?

நாக மாணிக்கம் என்பது உண்மையா? 


மாணிக்கம் என்பது தொடர்பாக பல ஆண்டகளாக பல கருத்துக்கள் நிலவி வருகிறது. இது தொடர்பாக பொதுவாக இன்றுவரை பலராலும் கூறப்படும் கருத்து நாகமாணிக்கம் என்பது நாக பாம்புகளால் கக்கப்படுகின்ற ஒரு வகை கற்கள் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக எதிர்கருத்து ஒன்றும் அறிவியலாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் சரியான அறிவியல் ரீதியாக எதுவும் நிரூபிக்கப்பட்டதாக எமக்கு தெரியவில்லை. நாகமாணிக்கம் என்பது தொடர்பாக உண்மைத்தன்மையை ஆராயும் பொருட்டு இது தொடர்பாக வெளியாகிய செய்திதொகுப்புக்களுடனும்  எதிர்மாறான கருத்துக்களுடனும் இந்த செய்தி உங்களை சந்திக்கின்றது.
Naka Manikkam நாக மாணிக்கம் என்பது உண்மையா? தொடரும் மர்மங்கள்.! (1)
“நாக மாணிக்கம்” என்பது தொடர்பாக பொதுவாக ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளதும் பலராலும் நம்பம்பட்டு வருவதுமான கருத்து….!!!!
நாகரத்தினக்கல் என்பது நாகங்களில் எந்த ஒன்று அறுபது வருடங்களுக்கு மனிதர்இமிருகம்இகீரி என யாரையும் கடிக்காமல் இருந்தால் அதன் கடைவாயில் உள்ள விஷமே இறுகிப்போய் நாகரத்தினமாக மாறிவிடும்.இந்த நாகரத்தினத்தை வைத்து நாகப்பாம்புகளை விரட்டலாம்.
எப்படி வலம்புரிச்சங்கு அபூர்வமானதோ அதுபோலவே இதுவும் அபூர்வமானது. இம்மாதிரியான நாகங்கள் சுனைபக்கத்தில் பச்சைத்தவளைகள் நிறைய இருக்கும் இடங்களில்இ அடர்ந்த சீரகச்செடிகள் நிறைந்த புதர்களுக்குள் வாழும். இவை பச்சைத்தவளைகளை மட்டுமே உண்டு வாழும்.
ஒரு லட்சம் பாம்புகளில் ஒன்று மட்டுமே இப்படி நாக மாணிக்கத்தை உருவாக்கும் வலிமை கொண்டதாக இருக்கும். இப்படிப்பட்ட நாகங்கள் இளமையை பாதுகாப்பதில் வலு கெட்டிகாரர்கள் சுமார் 110-150 ஆண்டுகள் வாழக்கூடியன. இதனால் பயன்படாத இதன் விஷமானது நாளடைவில் நாகரத்தினமாக உருவாகும். நாக ரத்தினம் இந்த பாம்புகளுக்கு உருவாகும் தருவாயில் இறக்கைகள் முளைத்து பறக்கும் வல்லமை கொண்டனவாக காணப்படும். இதுதவிர இவைக்கு வேறுபலன் கிடையாது கண்பார்வை மங்கி காணப்படும்
இச்சந்தர்ப்பத்தில் அமாவாசை தினங்களில் காரிருள் காரணமாக இவை ஒளியின்றிஇஇரை தேட வசதியின்றி இந்த நாக ரத்தினத்தை வெளியில் கக்கி அதன் ஒளியில் இரைதேடும். நாக மாணிக்கம் மிகுந்த பிரகாசமானது. இரை தேடி முடிந்த பின் மீண்டும் வந்து உள்ளெடுத்துக் கொள்ளும்.
இவை பல நுாறு வருடங்களாக சேமித்த விஷத்தில் உருவாகியது. இதனால் மகா கொடிய விஷத்தன்மை வாய்தது. கையில் காயம் உள்ளவர்கள் இதனை தொட்டால் உடனே மரணம் நேரும். வாயில் வைத்தாலோ புண்களில் பட்டாலோ உடனே மரணம் நேரும்.பார்த்து கையாள்வது சிறந்தது.
இந்த நாகரத்தினம் எப்போதும் தங்கம் அல்லது வெள்ளியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும்.அல்லது பாலில் முழ்கிக்கிடக்க வேண்டும். இந்த பூமியில் நமது விஞ்ஞான அறிவுக்கும் எட்டாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன.அவற்றை நம்புவதும்நம்பாததும் அவரவர் இஷ்டம்.அவற்றை நம் பகுத்தறிவால் ஒருபோதும் உணர முடியாது.சிலவற்றை மனித உணர்வாலும்இ சிலவற்றைப் பாசத்தாலும்இசிலவற்றை தியானத்தால் மட்டுமே உணரமுடியும்.
இந்துதர்மத்தை அதன் படைப்புக்களாலேயே நக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நாத்திகர் இந்து புராணங்களைவாசிக்க ஆரம்பித்தார்.முடிவு அவரே ஒரு அரிய இந்து படைப்பை உருவாக்கிவிட்டார்.அந்த நாத்திகர் கவியரசு கண்ணதாசன்இஅவரது அழியாத காவியம் : அர்த்தமுள்ள இந்துமதம்இபாகங்கள்20க்கும் மேல்!!
மேலே கூறப்பட்ட விடயம்  இன்றுவரை பலராலும் “இதுதான் உண்மை” ஆக இருக்கலாம் என நம்பப்பட்டு வருகின்ற ஒரு விடயம்தான் . எனினும் இது தொடர்பாக பல முரனான கருத்துக்களையும் முன்வைக்க முடியும். இதனை அறிவியல் ரீதியாக நோக்கினால் சில இடங்களில் முரண்பாடுகள் தோன்றுவது என்னமோ உண்மைதான். கீழே அறிவியல் ரீதியாக எடுத்துரைக்கப்பட்ட ஒரு கருத்து உங்கள் பார்வைக்காக…..
 அறிவியல் ரீதியாக முன்வைக்கப்படும்  தகவலையும் இந்தியாவில்  பாம்பாட்டிகள் தம்மிடம் உள்ள நாக பாம்புகளில் இருந்து நேரடியாக நாகமாணிக்கம் எடுக்கும் காட்சிகள் அடங்கிய காணொளியும் உங்களை அதிரவைக்க இருக்கிறது.
நாக மாணிக்கம் என்பது உண்மையா? தொடரும் மர்மங்கள்.
பாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக்குள்ளயே தனது வயிற்று தசைகளினால் முட்டை ஒட்டை உடைத்து அதிலுள்ள திரவப் பொருட்களை செரித்து விட்டு வெறும் முட்டை யோட்டை மட்டும் திருப்பி கக்கிவிடும். பாம்புக்குத் தெரியும் முட்டையில் பலவிதமான புரோட்டீன்கள் உள்ளன என்று. ஆகவே முட்டையின் மீது அதற்கு ஒரு விதமான ஈர்ப்பு எப்பொழுதும் உண்டு.
பறவைகள் தங்களது செரிமானத்துக்கென்றே சில கடினமான முனைகளை கொண்ட கற்களை தேடி எடுத்து விழுங்குகின்றன. நாளடைவில் அவைகளின் கூர் மழுங்கிய பின்னர் அவைகள் உண்மையிலே நன்றாக பளபளப்பாக இருக்கும்.அவை இனிமேலும் பயன்படப் போவதில்லை என்பதை அறிந்து அவற்றை தங்களது எச்சத்துடன் வெளியேற்றி விடுகின்றன. அவற்றில் கோடியில் ஒன்று மரகதமாகவோ, மாணிக்கமாகவோ, இரத்தினமாகவோ இருக்க வாய்ப்புண்டு. அவ்வாறு வெளியேற்றப்படும் கற்களில் உள்ள எச்சத்தின் வாடையால் முட்டையோ என நினைத்து பாம்புகள் விழுங்கி விடும் வாய்ப்பு உள்ளது. பின்னர் அவற்றை செரிக்க முடியாமல் கக்கி விட்டுச் சென்றுவிடும். பறவைகள் வாழும் இடங்களில் கிடக்கும் கற்களைத்தான் விழுங்குகின்றன.
இவ்வாறு தான் பாம்பு போற போக்கில் முட்டை என நினைத்து முட்டை போல உள்ள பளபளப்பான கற்களையும் விழுங்கிவிடும். ஆனால் அதை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்து சிறிது நேரங்கழித்து அதை கக்கிவிடும். அவ்வாறு கக்கும் முன் அகப்பட்ட பாம்பை போஸ்ட் மார்ட்டம் செய்த காட்டுவாசிகள், ஆஹா நாகமாணிக்கமாக இனிமேல்தான் மாறும் என கதை கட்டி விடுவார்கள்.
ஆனால் கக்குவதற்கு சிறிது சிரமப் படும், நேரமும் எடுத்துக் கொள்ளும். சில சமயங்களில் பாம்பு விழுங்கும் கற்களில் மாணிக்கம் போன்ற மதிப்புள்ள கற்களாக இருந்து விட வாய்ப்புண்டு. ஆனால் அதற்கு அது விலையுர்ந்த கல்லென்று கண்டிப்பாகத் தெரியாது. ஆதலால் அதையும் கக்கிவிடும். இதை தற்செயலாக பார்ப்பவர்கள் பாம்பு நாக மாணிக்கம் வைத்திருப்பதாகவும் அதை வைத்துதான் அதில் இருந்து வரும் ஒளியினால் இரவில் இரை தேடுவதாகவும் கதை கட்டி விடுகிறார்கள்.
எந்தவித உயர்ந்த கற்களுக்கும் சுயமாக ஒளிவீசும் தன்மை கிடையாது என்பதை படித்தவர்களும் மறந்துவிட்டு கற்களை தேடி அலையும் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது. ஒளியின் ஏதாவது ஒரு கீற்றாவது இருந்தால் தான் கற்கள் அதை தனக்குள் சேதாரம் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான முறை பிரதிபலித்து தன்னைக் காட்டிக் கொள்ளுமே தவிர அதிலிருந்து ஒளி கிடைக்கவே கிடைக்காது. இதில் கல்லின் மதிப்பு என்பது அதன் நிறத்தையும் அதன் பிரதிபலிக்கும் தன்மையையும் அது ஏற்படுத்தும் ஒளி விலகலின் கோண(Refractive Index) அளவையும் பொறுத்துத் தான் மதிப்பிடப்படுகிறது.
ஒரு கல்லின் மதிப்பு அதற்கு பட்டை தீட்டப் படும் தரத்தின் தன்மையைப் பொறுத்தும் பட்டைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும்தான் உயருகிறது. வைரத்திற்கும் சொந்தமாக ஓளி கிடையாது. வைரம்தான் உலகத்திலேயே மிகவும் கடினமான பொருள் என்பதால் அதன் பட்டை பரப்பு எளிதில் சேதமாகாததால் நீண்ட காலத்திற்கு அதன் ஒளி பிரதிபலிக்கும் தன்மை மாறாமல் இருக்கிறது.
மேலும் வைரத்திற்குத்தான் ஒளிவிலகலின் கோண அளவும் அதிகம். அதாவது அதனூடே ஒளி செல்லும் வேகம் குறைவாக இருக்கிறது.








பாம்புகள் கடித்தால் எளிதான மருந்து இது.அரசு கவனிக்குமா ? 3புதன்,ஆகஸ்ட்,
5 கருத்துகள்


தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி விட்டால் பாம்புக்கடியும் அதிகமாகி விடுவதுண்டு. வயலுக்கு செல்லும் விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுவது வழக்கம். பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அவசர சிகிச்சைக்கு உட்படுத்ததாத நிலையில் மரணம் நிச்சயம். பொதுவாக ஆங்கில மருத்துவம் எங்கும் தீவிரமாக வியாபித்து பரவியிருக்கும் நிலையில் அது தான் சிறந்த மருந்துகளை தரும் என்பதும் பரவலான நம்பிக்கை.

ஆனால் ஓமியோபதியில் ஏராளமான நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்துகள் இருக்கின்றன. மருந்து தயாரிப்பு மாபியாக்கள் இந்தியாவை பொறுத்தமட்டில் இது போன்ற குறைந்த செலவில் குணப்படுத்தும் மருத்துவத்தை எழுச்சி பெறவிடாமலே வைத்திருக்கின்றனர் என்பது சமூவியலாளர்களின் கருத்து. கடுமையான இதய நோய் பாதிப்பு, கடுமையான சர்க்கரை நோயாளர்கள் கூட ஓமியோபதியின் சிறப்பான மருந்துகளால் நலமாக இருப்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா
 இது போல் பாம்புக்கடியால் மரணத்தை தழுவ இருப்பவர்களை ஓமியோபதி மருந்துகள் எளிதாக குணப்படுத்தக்கூடும். அரசு மருத்துவமனைகள் எங்கோ நகரத்தில் இருக்கும் போது, கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு முதலுதவி கிடைப்பது கடினம். இந்த நேரத்தில் ஓமியோபதி சிறந்த உயிர்காப்பானாக இருக்க முடியும். தமிழகத்தில் பதவியேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இதனை கருத்தில் கொண்டு ஓமியோபதி மருத்துவத்தை கிராமங்களுக்கு பரப்பினால் பாம்புக்கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கை கட்டுப்படும்.

சிவன் கழுத்தில் பாம்பு எப்போதும் ஒரு சின்னம். இந்த பாம்புகள் மனிதனுக்கு மிகமிக உதவிகரமான ஒரு ஊர்வன இனம். இந்த பாம்புகள் மனிதனை ஒரு போதும் விரோதியாக பார்ப்பதில்லை. பதிலாக, மனிதன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டு விளைவிக்கும் பயிர்களை அழிக்கும் எலிகளை கொன்று வாழ்கின்றன. வாழ்ந்து மடிவதற்குள் ஆயிரக்கணக்கில் குட்டிகளை போட்டு மனிதனின் பயிர்களை அழிக்கும் இந்த எலிகளை குறி வைத்து தான் பாம்புகள் வாழ்கின்றன. ஆனால் நண்பனாக இருக்கும் இந்த பாம்புகளை மனிதன் விரோதியாக நினைப்பது தான் வேதனை. 

எலியை தேடி
பாம்புகளுக்கு தான் ஊர்ந்து போவது மனிதன் வகுத்த வாய்க்கால் வரப்பு என்றோ, அவன் உழைத்து உணவை உருவாக்கும் வயல் என்பதோ தெரிவதில்லை. அவை எலியை தேடி வயலுக்கு வருகின்றன. அவ்வளவு தான். அப்படி வரும் இடத்தில் மனிதன் அவற்றை எதிர்கொள்ளும் போது மனிதனுக்கும், பாம்புக்குமான போராட்டத்தில் பாம்பு மனிதனால் அடித்துக் கொல்லப்படுகிறது. அதிலும் தற்போது தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இப்படி பாம்பால் கடிபடுபவர்களும், பாம்புகள் மனிதரால் அடித்துக் கொல்லப்படுவதும் தாராளமாக நடக்க தொடங்கும். நாம் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டது போல் அனைத்து பாம்புகளும் விஷமுள்ளவை அல்ல.

அதைவிட வயல் என்றால் பாம்பு வரத்தான் செய்யும். நாம் தான் அதை கவனித்து நடந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்க வேண்டும். பாம்புகளை அழித்தால் நாளடைவில் வயல்களில் எங்கு நோக்கினும் எலிகள் ஆயிரக்கணக்கில் நிறைந்து விடும். பிறகு விளைந்த நெல்மணிகளை எல்லாம் எலியின் வளைக்குள் தான் அறுவடை செய்ய வேண்டியதிருக்கும். எனவே, பாம்புகளை மட்டும் அடித்துக் கொல்லாதீர்கள். சிறிது கவனமெடுத்து அவற்றை விட்டு விலகி நில்லுங்கள். பாம்புகள் பொதுவாக தானே விலகிச் சென்றுவிடும் இயல்பு கொண்டவை.

நிச்சயம் மருந்து இருக்கிறது
 அதையும் மீறி பாம்புகள் கடித்தால் நிச்சயம் மருந்து இருக்கிறது. தற்போது நாம் எதற்கெடுத்தாலும் ஆங்கில மருத்துவத்தை விட்டால் வேறு வழியே இல்லை என்று தான் முடிவுக்கு வருவதுண்டு. ஆனால் பல்வேறு நோய்களை ஆங்கில மருத்துவம் முழுமையாக குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை. பாம்பு கடிக்கு உடனடி நடவடிக்கையாக கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் அதன் விஷத்தை முறிக்கும் எதிர் மருந்துகளை டாக்டர்கள் செலுத்தி கடிபட்டவரை முடிந்த வரை பிழைக்க வைத்து விடுகிறார்கள். ஆனால் இந்த மருந்துகளை விட ஓமியோபதி மருத்துவத்தில் மிக எளிதாக பாம்பு விஷத்தையும், பாம்பு தீண்டியதால் ஏற்படும் துயரத்தையும் விரைவாக குறைக்க முடியும் என்று தெரிகிறது. 

நஞ்சுள்ள நாகம் தீண்டினால் மற்ற முறைகளை காட்டிலும் ஓமியோபதியில் சிறப்பான முறையில் சிகிச்சையளிக்க முடியும். முதலில் கடிவாய்க்கு இரண்டு அங்குலம் மேலே ஒரு கயிற்றால் இறுக்கமாக கட்ட வேண்டும். இந்த கட்டுக்கு மேல் மேலும் இரண்டு மூன்று கட்டுக்களை கட்டலாம். பிறகு கடிவாயில் கடிபட்டவரோ அல்லது உதவியாளரோ வாயை வைத்து விஷத்தை உறிஞ்சி எடுக்க வேண்டும். அப்படி உறிஞ்சி எடுப்பவரின் வாயில், நாக்கில், உதட்டில் புண்கள் இருக்கக்கூடாது. இப்படி உறிஞ்சி எடுத்த பிறகு கடிவாயைக் கத்தியால் ஆழமாய் கீறி எடுத்து அந்த இடத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட்டினால் அரை மணி நேரத்திற்கு மேல் நன்றாக கழுவ வேண்டும். இதன் பிறகு அந்த கட்டுக்களை அவிழ்க்கலாம். ஆனால் கடிபட்டவரை தூங்க அனுமதிக்கக்கூடாது.
பிராந்தி, விஸ்கி
 மேலே கூறியபடி இறுக்கமான கட்டுக்களை கட்டி விஷத்தை உறிஞ்சிய பிறகு முடிந்தால் கடிபட்ட இடத்திற்கு மேல் சிறிது தூரத்தில் அனலைக்காட்ட வேண்டும். இதனுடன் கடிவாயில் எண்ணெய் அல்லது எச்சிலை தடவிக் கொண்டேயிருக்கவும். கடிபட்டவருக்கு விஷத்தின் விளைவுகள் குறையும் வரை அனலைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இது ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடிக்கலாம்.

இதைச் செய்யும் போதே, அடிக்கடி உப்புதண்ணீரை குடிக்க குடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த சமயத்தில் அபாயகரமான அறிகுறிகள் தோன்றினால் மூன்று டீஸ்பூன் ஆல்கஹாலை ( பிராந்தி, விஸ்கி) போன்றவற்றை மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை முன்னேற்றம் ஏற்படும் வரை கொடுத்துக் கொண்டேயிருக்கலாம். விஷத்தின் குறிகள் எப்போது ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பிராந்தியை தரலாம். இப்படி செய்து கொண்டே ஓமியோபதி மருந்துகளை பிரயோகிக்கலாம்.

அதாவது, கடிபட்டவர் விரைவாக சோர்வடைதல், குத்துவது போன்ற வலி அதிகமாகவும், இந்த வலி இதயத்தை நோக்கி செல்வது போலவும், வாந்தி, மயக்கம், தலை சுற்றல், கடிபட்ட இடத்தில் நீல நிறம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் ஓமியோபதி மருந்தான ஆர்சனிக் 30 ஐ அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கடிபட்டவருக்கு தரவும். இது தவிர விஷம் பாய்ந்தவர், தூக்க கலக்கத்துடனும், ஆனால் தூங்க முடியாமலும், முகம் சிவந்தும், சூடாகவும், வீங்கியும் இருத்தல், தொண்டையில் வறட்சி, கண்மணிகள் அசையாமலும் விரிந்தும் இருத்தல், மூடப்பட்ட பகுதிகளில் வியர்த்தல் ஆகிய குறிகள் இருந்தால் பெல்லடோனா 30 என்ற மருந்தை தரவேண்டும்.

விஷங்களை முறிக்கும் மருந்து
மேலே கூறிய படி கடிவாய்க்கு மேல் கட்டுக்களை கட்டி விஷத்தினை உறிஞ்சிய பிறகும், ஒரு வேளை கடித்த நாகம் மிகுந்த விஷத்தன்மை உடையதாக இருந்தால் கடிபட்டவருக்கு வீரியப்படுத்தப்பட்ட நாக விஷங்களை முறிக்கும் மருந்துகளான லாக்கலிஸ், தூஜா, குரோடலஸ், எலாப்ஸ் போன்ற மருந்துகளின் 30 வது வீரியத்தை தரலாம். இவ்வாறு கொடுப்பதால் பாம்பு கடிபட்டு பல மருத்துவர்களாலும் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

நாக விஷ மருந்துகளை கொடுப்பதற்கு முன்னால் ஆர்னிகா 3 எக்ஸ், 30, 200 வீரியங்களில் ஏதாவது ஒன்றை தரலாம்.
எச்சினேசியாவின் தாய்த்திரவம் 10 சொட்டுக்களை திரும்ப திரும்ப அளித்தால் பாம்பு விஷத்தின் முறிவு மருந்தாக செயல்படும். விஷப்பூச்சிகளில் கடிகளுக்கும் இந்த மருந்தை தரலாம். பாம்பு விஷத்தினால் ஏற்படும் துயரக்குறிகளை போக்குவதில் செனேகா மிகச்சிறப்பாக செயல்படுகிறது. வெறிபிடித்த நிலையில் உள்ள விலங்குகளின் கடிகளுக்கும் இது முறிவு மருந்தாக பயன்படுகிறது. அரசு கவனிக்குமா ?

No comments:

Post a Comment