படித்ததில்..... பிடித்தது.......
" If you feel peace within yourself , you will find peace everywhere else in the world "
To "Do nothing" and "To remain silent" can be achieved only Inside and not Outside.
தொடர்புக்கு :- suganesh80@gmail.com
நேஷனல் ஜாக்ரஃபிக்கின் 'டிராவலர்' பத்திரிக்கையில் 'உலகின் பத்து அற்புதங்கள்' , 'வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 50 சுற்றுலாத் தலங்கள்' மற்றும் '21-ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த பயணங்கள்' ஆகிய தலைப்புகளில் கேரளா குறிப்பிடப்பட்டு போற்றப்பட்டுள்ளது.கேரள கடற்கரைகளில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களையும், அழகும் அமைதியும் நிரம்பிய உப்பங்கழிகளில் மிதக்கும் படகு இல்லங்களையும், எண்ணற்ற கோயில்களையும், ஆயுர்வேதத்தின் அற்புதத்தையும், வளமை குன்றா ஏரிகள் மற்றும் குளங்களையும், கவின் கொஞ்சும் தீவுகளையும் நீங்கள் கேரளாவை தவிர உலகில் வேறெங்கும் பார்த்திட முடியாது.
வயநாடு எங்கு திரும்பி நோக்கினாலும் கண்களுக்கு அலுக்காத காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் வயநாட்டில் தரிசிக்கலாம். மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த வயநாடு பகுதிக்கு வெகு தொலைவிலிருந்து கூட சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
எடக்கல் குகைகள், சுல்தான் பத்தேரி
சுல்தான் பத்தேரி நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் எடக்கல் குகைகள், அம்புகுத்தி மலையில் கற்காலத்தின் உன்னத நினைவுச் சின்னமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இங்கு காணப்படும் தொன்மையான சிற்பங்களும், கல்வெட்டுகளும் வரலாற்று காதலர்களின் தீராத தாகத்தை தீர்க்கும் கலைப் பிரவாகமாய் திகழ்ந்து வருகிறது.
எடக்கல் குகைகளில் மொத்தம் மூன்று தொகுதிகளாக குகைகள் அமைந்திருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் வாழ்ந்த மனித இருப்பின் சுவடுகளாக அறியப்படுகின்றன.
இந்த குகைகளின் சுவர்களில் எண்ணற்ற தொன்மையான கல்வெட்டுகள், பல்வேறு விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்கள், பழங்கால ஆயுதங்களின் வடிவங்கள், குறியீடுகள் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன.
இவை யாவும் 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டவைகளாக கருதப்படுவதால் உலகம் முழுக்க உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றியலாளர்கள் கவனத்தை பெற்றுள்ளன. மேலும் இந்த குகைப் பகுதிகளில் காலை நேரங்களில் நடைபயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது.
குருவா டிவீப், வயநாடு
குருவா டிவீப் எனும் இந்த அழகிய ஆற்றுப்படுகை தீவுத்திட்டு கபினி ஆற்றில் அமைந்துள்ளது. வயநாட் பகுதியின் முக்கிய ஆறாக இந்த கபினி ஓடுகிறது.
குருவா டிவீப் என்று அழைக்கப்படும் இந்த ஆற்றுத் தீவுத்திட்டு செழிப்பான பசுமையான மரங்கள் அடர்ந்த ஒரு சோலை போன்று காட்சியளிக்கிறது. இப்பகுதியில் ஏராளமான தாவர இனங்களும் காட்டுயிர் அம்சங்களும் வசிக்கின்றன.
பல அரிய வகைப்பறவைகளும் இந்த குருவா தீவுத்திட்டினை இருப்பிடமாக கொண்டுள்ளன. மருத்துவ குணங்கள் கொண்ட விசேஷமான மூலிகைச்செடிகள், ஆர்க்கிட் மலர்த்தாவரங்கள் போன்றவற்றை இங்கு பயணிகள் காணலாம்.
இயற்கையின் செழிப்பை சுற்றிப்பார்த்து ரசிக்க விரும்பும் ரசனை உள்ளம் படைத்தவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும். உலகின் பல பகுதிகளிலிருந்தும் பயணிகள் விஜயம் செய்து ரசிக்கும் அளவுக்கு இந்த தீவுத்திட்டின் இயற்கை வளம் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
கேரள சுற்றுலாத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஃபைபர் படகுகள் அல்லது மிதவைகள் மூலம் இந்த தீவுத்திட்டுக்கு பயணிகள் செல்லலாம். இயற்கை அழகு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வருடத்தின் சில பருவங்களில் மட்டுமே சுற்றுலாப்பயணிகள் இந்த தீவுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
எனவே தீவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றுச்செல்வது அவசியம்.
மீன்முட்டி அருவி, கல்பெட்டா
கேரளாவின் இரண்டாவது மிகப்பெரிய அருவியாக அறியப்படும் மீன்முட்டி அருவி 300 அடி உயரத்தில், கல்பெட்டா நகரிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
இந்தப் பகுதியில் காணப்படும் நீரில் இயற்கையாகவே மீன்கள் நீந்த முடியாத ஒரு சூழல் உள்ளது. இதன் காரணமாக 'மீன்களை தடை செய்யும் பகுதி' என்ற அர்த்தத்தில் இந்த அருவி மீன்முட்டி அருவி என்று அழைக்கப்படுகிறது.
மீன்முட்டி அருவியை ஊட்டி செல்லும் காட்டு வழியாக இரண்டு கிலோமீட்டர் ஹைக்கிங் மூலம் அடையலாம். அவ்வாறு நீங்கள் அருவிக்கு செல்லும் அந்த இரண்டு கிலோமீட்டர் நெடுந்தூர பயணத்தில் மீன்முட்டி அருவியின் மயக்கும் அழகை பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.
எனினும் ஹைக்கிங் செல்லும் போது உங்களுக்கு பயண வழிகாட்டி ஒருவரின் உதவி கண்டிப்பாக அவசியம். மேலும் அருவிக்கு செல்லும் வழியில் நீங்கள் கற்கால சிற்பங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
பூக்கோட் ஏரி, வயநாடு
பூக்கோட் ஏரி அல்லது பூக்கோடே ஏரி என்று அழைக்கப்படும் இந்த நன்னீர் ஏரி வயநாட் பகுதியில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் காணப்படும் இந்த ஏரி கேரளாவின் இயற்கை எழில் நிறைந்த பிக்னிக் சிற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.
இந்த ஏரியின் கரையில் அமர்ந்தபடி சுற்றிலும் சொர்க்கம் போன்று எழும்பியிருக்கும் இயற்கை காட்சிகளை ரசித்து மகிழலாம் அல்லது குடும்பத்துடன் ஏரிப்பகுதியில் படகுச்சவாரியும் மேற்கொள்ளலாம்.
ஏரியிலிருந்து சிறிது தூரத்தில் ஸ்ரீ நாராயண ஆஷ்ரம் அமைந்துள்ளது. ஆன்மீக அதிர்வுகளை மனதில் நிரப்பிக்கொள்ள இந்த ஆசிரமத்திற்கு விஜயம் செய்யலாம். அமானுஷ்ய அமைதியுடன் வீற்றிருக்கும் இந்த ஆசிரமப்பகுதியானது பயணிகளின் கவலைகள் யாவையும் துடைத்தெறிந்து மனதை இறகு போல் லேசானதாக மாற்றும் அற்புத வலிமை கொண்ட ஸ்தலமாகும்.
புராதனமான இந்த ஆசிரமத்தை சுற்றிலுமுள்ள பரவசமூட்டும் இயற்கைக்காட்சிகளும், பூத்துக்குலுங்கும் மரங்களும், தூய நீருடன் மின்னும் ஏரியுமாக காட்சியளிக்கும் பூக்கோட் ஏரிஸ்தலம் காண்பவர் கண்களை கவராமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஏரிப்பகுதியிலிருந்து கொஞ்ச தூரத்தில் அமைந்துள்ள கடைகளில் அன்புக்குரியவர்களுக்காக ஞாபகார்த்தப் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.
ஃபாண்டம் ராக், வயநாடு
‘ஃபாண்டம் ராக்’ எனும் இந்த சுற்றுலா அம்சம் வயநாடு பகுதியில் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும்.
ஃபாண்டம் ராக் என்பது இயற்கையாகவே மண்டையோட்டு வடிவத்தில் உருவாகியிருக்கும் ஒரு பாறை அமைப்பாகும். உள்ளூர் மக்கள் இதனை ‘சீங்கேரி மலா’ அல்லது ‘தலைப்பாறை’ என்று அழைக்கின்றனர்.
தத்ரூபமான ஒரு மனித மண்டையோடு நம்மை உற்று பார்ப்பது போன்று உருவாகியிருக்கும் இந்த மலைப்பாறை அமைப்பானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்கிறது. செதுக்கப்பட்டாற் போன்ற மண்டையோட்டு அமைப்பை ஒத்திருப்பதால் ‘ஃபாண்டம் ராக்’ என்ற பெயரை பெற்றுள்ளது.
ஃபாண்டம் ராக்’ பாறை அமைப்பு அமைந்துள்ள பிரதேசம் மலையேற்றத்துக்கும் கூடார வாசத்துக்கும் ஏற்ற இயற்கை சூழலைக் கொண்டுள்ளது. இருப்பினும், அதற்கான உபகரணங்கள், பாதைகள் மற்றும் முன் தயாரிப்புகளை பயணிகள் தங்கள் சொந்த முயற்சியில் தான் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
ஃபாண்டம் ராக் ஸ்தலத்துக்கு அருகிலேயே கல்பெட்டா மற்றும் சுல்தான் பேட்டரி போன்ற இதர முக்கியமான சுற்றுலாத்தலங்களும் காணப்படுகின்றன. இந்த இரண்டு இடங்களும் ரம்மியமான இயற்கை எழில் காட்சிகள் பரந்து காட்சியளிக்கின்றன.
கண்ணில் படும் இடமெல்லாம் இயற்கைக்காட்சிகள் என்பதால் கையில் கேமெராவுடன் பயணிப்பது நல்லது. கல்பெட்டாவிலிருந்து ஃபாண்டம் ராக் பகுதி 25 கி.மீ தூரத்திலும், அங்கிருந்து சுல்தான் பேட்டரி 10 கி.மீ தூரத்திலும் உள்ளது.
கல்பெட்டா நகரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெப்பாடி நகருக்கு அருகே சூச்சிப்பாறை அருவி அமைந்திருக்கிறது. 300 அடி உயரத்திலிருந்து ஆர்பரித்துக் கொட்டும் இந்த அருவி காவலாளி பாறை என்று பிரபலமாக அறியப்படுகிறது.
சூச்சிப்பாறை அருவியின் மூன்று நீட்சிகளில் இரண்டு மீன்முட்டி அருவியிலும், மற்றொன்று கந்தன்பாறை அருவியிலும் விழுகின்றன. அதன் பிறகு இவை சாளியார் நதியுடன் இணைகின்றன.
அதோடு இந்த மூன்று நீட்சிகளும் சேரும் இடம் ஒரு சிறிய குளத்தை உண்டாக்குகிறது. இந்தக் குளத்தில் பயணிகள் படகுப் பயணம் செல்வதோடு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளத்து நீரில் நீந்தித் திளைக்கலாம்.
சூச்சிப்பாறை அருவியை 2 கிலோமீட்டர் நெடுந்தூர நடைபயணம் மூலம் பசுமையான தேயிலை தோட்டங்களையும், காடுகளையும் கடந்து அடையும் அனுபவம் உங்கள் நினைவு இடுக்குகளில் பசுமை மாறாமல் அப்படியே நிலைத்திருக்கும்.
மேலும் இங்கு பயணிகளுக்காக மரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் குடில்களில் இருந்து அருவியின் அழகையும், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பிரம்மாண்டத்தையும் பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.
Wayanad Wildlife Sanctuary, சுல்தான் பத்தேரி
Wayanad Wildlife Sanctuary is located on a part of the Wayanad plateau and is a major tourist destination of Kerala. This is one of the most popular animal sanctuaries of South India and ranks second among the wildlife sanctuary of Kerala. Every year thousands of tourists flock to the sanctuary to see the wildlife that exists in the place.One can spot deer, elephant, Indian Bison and even tiger and wild birds like peacocks and pea fowls are also very easy to spot in the sanctuary.
Many people come to the sanctuary simply because of its serene and calm atmosphere. The sanctuary is beautifully located and offers green and clean view all around. Deciduous trees like teakwood are found growing in abundance in and around the sanctuary. The Wayanad Wildlife Sanctuary should be on your ‘must visit’ list especially if you are traveling with children.
The sanctuary is being considered for World Heritage Site by the UNESCO Heritage Committee.
செயின் மரம், வயநாடு
செயின் மரம் என்றழைக்கப்படும் இந்த ஸ்தலமானது சுவாரசியமான கதையை தன் பின்னணியில் கொண்டுள்ளதால் வயநாடு பகுதியிலுள்ள பிரசித்தமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஒரு பெரிய அத்திமரம் இந்த ஸ்தலத்தின் பிரதான விசேஷமாக பார்வையாளர்களை கவர்கிறது.
இப்பகுதியில் வழங்கி வரும் கதைகளின்படி, காலனிய ஆட்சியில் ஆங்கிலேய பொறியாளர் ஒருவர் உள்ளூர் ஆதிவாசி இளைஞனின் துணையுடன் இப்பகுதியை (வயநாடு) சிரமப்பட்டு அடைந்துள்ளார்.
ஆனால் ஒரு அழகிய மலைப்பிரதேசத்தை கண்டுபிடித்த பெருமை யாவும் தனக்கே சேரவேண்டும் என்ற எண்ணத்தில் திரும்பும் வழியில் அந்த வழிக்காட்டி இளைஞனை கொன்று விடுகிறார்.
அப்படி கொல்லப்பட்ட இளைஞனின் ஆவியானது நெடுநாள் இப்பகுதிக்கு வரும் மக்களை அச்சுறுத்தியவாறு இருந்துள்ளது. இறுதியில் ஒரு பூசாரி தன் சக்தியின் மூலம் அந்த ஆவியை இங்குள்ள அத்தி மரத்தில் ஒரு செயினால் கட்டிவைத்து விட்டார்
எனவே அந்த அத்தி மரத்திற்கு செயின் மரம் என்ற பெயர் நாளடைவில் ஏற்பட்டு விட்டது. இன்றும்கூட ஒரு செயினை (சங்கிலி) இந்த அத்தி மரத்தில் தொங்குவதை பார்க்கலாம்.
இது போன்ற கதைகளை நம்புகிறோமோ இல்லையோ, இந்த இடத்தின் இயற்கை எழிலும் வனப்பும் நம் கண்களை சங்கிலி ஏதும் இல்லாமலே கட்டிப்போடுவதால் வயநாடு வரும்போது மறக்காமல் இந்த ‘செயின் ட்ரீ’ ஸ்தலத்துக்கு விஜயம் செய்யலாம்
செம்பரா சிகரம், கல்பெட்டா
கல்பெட்டா நகரம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வயநாடு மாவட்டத்திலேயே உயரமான சிகரமாக கருதப்படும் செம்பரா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த சிகரம் சாகச பிரியர்களின் விருப்பமான பகுதியாக விளங்குவதால் இதன் உச்சியில் எண்ணற்ற டிரெக்கிங் முகாம்களை நீங்கள் பார்க்கலாம்.
அதுமட்டுமல்லாமல் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சிலே பயணிகளுக்கு தேவையான மரக் குடில்கள், காலணிகள், டிரெக்கிங் உபகரணங்கள் போன்றவற்றை வழங்கி வருகிறது.
அதோடு அவர்களே சுற்றுலாப் பயணிகளுக்கு பயண வழிகாட்டிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள். ஆனால் நீங்கள் செம்பரா சிகரத்தில் டிரெக்கிங் செல்வதற்கு மெப்பாடி வன இலாக்கா அதிகாரியிடம் அனுமதி பெறுவது அவசியம்.
நீலிமலா மலைக்காட்சி தளம், வயநாடு
வயநாடு பகுதியில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விஜயம் செய்யப்படும் ஸ்தலங்களில் இந்த நீலிமலா மலைக்காட்சி தளமும் ஒன்றாகும். சாகசப்பொழுதுபோக்கு விளையாட்டு போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த இடம் மிகவும் ஏற்றதாகும்.
மலைக்காட்சி தளத்தை நோக்கி செல்லும் மலையேற்றப்பாதையின் வழியே ஏறும்போது ரம்மியமான இயற்கைக்காட்சிகளை நாலாபுறமும் பார்த்து ரசிக்கலாம். நேரம் இருப்பின் கூடாரம் அமைத்து தங்குவதற்கும் இம்மலைப்பகுதி ஏற்றதாக உள்ளது.
சாகச மனம் கொண்ட ரசிகர்கள் விருப்பம் போல் இயற்கை எழிலை சுற்றிப்பார்த்து ரசிப்பதற்கு வசதியாக ஏராளமான ஒற்றையடிப்பாதைகள் இந்த நீலிமலா மலைக்காட்சி தளத்தின் அருகே அமைந்துள்ளன.
இந்த ஒற்றையடிப்பாதைகள் யாவுமே பல காப்பித்தோட்டங்களின் வழியே வளைந்து நெளிந்து செல்கின்றன. இஞ்சிச்செடி மற்றும் பாக்கு மரங்கள் போன்ற தாவரங்களின் நறுமணம் மற்றும் நாக்கு சுவையைவிட நறுமணச்சுவையை அதிகம் தரும் காப்பிக்கொட்டைகளின் வாசனை போன்றவை இப்பகுதியெங்கும் பரவியிருப்பதை மலையில் ஏறிச்செல்லும்போது அனுபவித்து ரசிக்கலாம்.
நீலிமலா மலைக்காட்சி தளத்திலிருந்து காணக்கிடைக்கும் காட்சிகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘எங்கிருந்தோம் இத்தனை நாள் இந்த காட்சிகளைக் காணாமல்’ என்று உணர்ச்சிப்பிரவாகத்தில் மூழ்க வைக்கும் காட்சிகள் எந்த திசையில் திரும்பினாலும் நம் கண் முன் விரிகின்றன.
கண்ணுக்கெட்டிய தூரம் விரியும் வெல்வெட் பசுமை, ஓவியம் போன்று அலயலையாக நீண்டிருக்கும் சிகரங்கள், வெள்ளிக்கோடாய் வழியும் அருவி, தென்றல் தவழும் புல்வெளிச்சரிவுகள், பள்ளத்தாக்குகள், அடர்ந்த கானகப்பகுதிகள் என்று சுற்றிலும் கொட்டிக்கிடக்கும் இயற்கை காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. இங்கிருந்த மீன்முட்டி நீர்வீழ்ச்சியை முழுமையாக தரிசிக்கும் காட்சியும் பரவசமூட்டுவதாக உள்ளது.
தென்னிந்தியாவில் வசிக்கும் ஒரு இயற்கை ரசிகராக இருக்கும் பட்சத்தில் இந்த சொர்க்கபூமிக்கு ஒரு முறையாவது நீங்கள் விஜயம் செய்வது அவசியம். அது சிரமமான பயணமாகவே இருக்கக்கூடும், ஆனால் ‘வாழ்விலே ஒருமுறை’ எனும் அனுபவமாக அது உங்கள் மனதில் பதிந்துவிடும்.
கேரளா
திருநெல்லி கோயில், வயநாடு
திருநெல்லி கோயில் வயநாடு பகுதியில் பிரம்மகிரி மலைக்கு அருகில் அமைந்துள்ளது. விஷ்ணு பஹவானுக்கான பழமையான கோயில்களில் ஒன்றாக இது பிரசித்தி பெற்றுள்ளது. வயநாடு பகுதியிலிருந்து 900 மீட்டர் தூரத்திலேயே உள்ள எழில் நிறைந்த சூழலில் இக்கோயில் அமைந்துள்ளது.
இதன் இருப்பிட முக்கியத்துவத்தின் காரணமாக ஹிந்துக்கள் மத்தியில் இது முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது. நாலா புறமும் மலைகள் வீற்றிருக்க ஒரு பள்ளத்தாக்கு பகுதியில் இந்த கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கோயிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி காணப்படுவதால் கோயிலை சென்றடைவது சற்றே மலைக்க வைக்கும் கடின பயணமாகத்தான் இருக்கும்.
இந்த கோயில் எப்போது கட்டப்பட்டது என்பது குறித்த பதிவுகள் ஏதும் இல்லை. எனினும் இது மிகப்புராதனமான பழமை வாய்ந்தது எனும் கருத்துகள் நிலவுகின்றன. 962 – 1019ம் ஆண்டிலேயே இக்கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அக்காலத்திலேயே தென்னிந்தியா முழுக்க பக்தர்கள் மத்தியில் பூஜிக்கப்பட்ட ஒரு கோயில் ஸ்தலமாக இது விளங்கியுள்ளது.
கடந்து போன நூற்றாண்டுகளின் ஊடாக நீண்ட காலம் பயணித்து இன்றும் நம் மத்தியில் வீற்றிருக்கும் இந்தக் கோயிலின் தரிசனம் நம் உணர்வுகளை தீண்டி சிலிர்க்க வைக்கிறது.
No comments:
Post a Comment