For Read Your Language click Translate

10 July 2014

வைரம், தர்ப்பை பற்றி புராணம் என்ன சொல்கிறது?


                  
dharba
Written by S Nagarajan
Post No. 1162; Dated:- 10th July 2014.
This is the seventh part of S Nagarajan’ article on the Puranas. First five parts were published in the past few days.
தர்ப்பம் ஏன் புனிதமானது?
தர்ப்பத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறோம். தர்ப்பம் ஏன் புனிதமானது என்பதை ஸ்ரீமத் பாகவதம் விளக்குகிறது.
மன்னனாகிய மனுவின் பட்டணம் பர்ஹிஷ்மதி என்ற பெயர் பூண்டு புகழ் பெற்றது. அந்நகரம் அனைத்து ஸம்பத்துகளினாலும் நிறைந்திருக்கும். யஜ்ஞ ஸ்வரூபியாகிய ஆதி வராஹ பகவான் தன் சரீரத்தை உதறும் காலத்தில் அந்தச் சரீரத்திலுள்ள ரோமங்கள் எந்த இடத்தில் உதிர்ந்தனவோ அந்த இடத்தில் இந்த பர்ஹிஷ்மதி நகரம் உருவானது. அங்ஙனம் உதிர்ந்த ரோமங்களே பச்சை நிறமுடைய தர்ப்பங்களாகவும் நாணல்களாகவும் விளைந்தன. அந்த தர்ப்பங்களாலும் நாணல்களாலும் யஜ்ஞங்களுக்கு விரோதிகளான ராக்ஷஸர்களை அழித்து ரிஷிகள் யஜ்ஞங்களால் பகவானை ஆராதித்தார்கள். ஆகவே தான் அவைகள் பகவானுடைய ஆராதனத்திற்கு உபயோகப்படுகின்றன.
மஹானுபாவனாகிய அந்த மனு சக்கரவர்த்தி பாதாளத்தில் மூழ்கிக் கிடந்த பூமியை இந்த ஆதி வராஹன் மேலே எடுத்து அதைத் தன் சக்தியால் ஜலத்தின் மீது நிலை நிற்கச் செய்த காரணத்தினால் அந்த உதவியை நினைத்து பர்ஹிஸ் என்று கூறப்படுகின்ற தர்ப்பங்களையும் நாணல்களையும் பரப்பி அந்த யஜ்ஞ புருஷனை யாகங்களால் ஆராதித்தான். ஆகவே அந்த நகரம் பர்ஹிஷ்மதி என்று பெயர் பெற்றது.
ஸ்ரீ மைத்ரேயர் விதுரனிடம் கூறியது,
- ஸ்ரீமத் பாகவதம் மூன்றாம் ஸ்கந்தம் 22ஆம் அத்தியாயம்
diamonds
வைரத்தைப் பரிசோதித்த பின்னரே அணிய வேண்டும்?
வைரத்தைச் சேகரிப்பதோ அல்லது அணிவதோ நன்கு பரிசோதித்த பின்னரே வளத்தை விரும்பும் ஒரு மன்னனால் செய்யப்பட வேண்டும்.
அதைப் பற்றிய தொழில்நுட்ப அறிவு உள்ளவரும் அதில் நன்கு பரிச்சயம் உள்ளவரும் ஆகிய ஒருவரே அதன் விலை மற்றும் தரம் பற்றி அறிந்தவராக இருக்கும் தகுதி வாய்ந்தவர் ஆவர்.
நிபுணர்கள் வைரத்தை மிகவும் செல்வாக்கு படைத்தது என்று கூறுகின்றனர். ஆகவே நமது விவரங்களும் வைரம் பற்றிய விவரமான விவரணத்துடன் ஆரம்பிக்கப்படுகிறது.
-கருட புராணம் 68ஆம் அத்தியாயம்
வைரத்தை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை உரைக்கும் அத்தியாயத்தில் வருவது. இதைத் தொடர்ந்து வைரம் கிடைக்கும் இடங்கள், அதன் குணாதிசயங்கள், தரத்தைச் சோதிக்கும் முறைகள் விளக்கப்படுகின்றன.
yanai4
வாஹனம் – 2
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உள்ள வாஹனம் பற்றிய தொடர்ச்சி:-
ஷீதளா தேவியின் வாஹனம் கழுதை – ஸ்கந்த புராணம் ,ருத்ர
யாமளம்
(ஷீதளா தேவி வட இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் சக்தியின் அம்சம்)
கேதுவின் வாஹனம் புறா (மத்ஸ்ய புராணம் கேதுவின் வாஹனம் ராஜாளி என்று குறிப்பிடுகிறது)
ப்ரம்மாவின் வாஹனம் ஹம்ஸம் – நாரதீய புராணம், ஸ்ரீமத் பாகவதம்
ராகுவின் வாஹனம் புலி
செவ்வாயின் வாஹனம் குதிரை
அக்னியின் வாஹனம் ஆடு – நாரதீய புராணம்
குபேரனின் வாஹனம் நரன் – நாரதீய புராணம் (மனிதனே குபேரனுக்கு வாஹனம். சில நூல்கள் மனிதனின் ஆவி அல்லது ப்ரேதம் என்றும் குறிப்பிடுகின்றன. ஆனால் பொதுவாக அவன் நர வாஹனன் என்றே குறிப்பிடப்படுகிறான்)
சந்திரனின் வாஹனம் மான் – நாரதீய புராணம் (மத்ஸ்ய புராணத்தில் சந்திரனின் வாஹனமாக வெண்குதிரை குறிப்பிடப்படுகிறது)
வருணனின் வாஹனம் மகரம் – விதி மார்க்க ப்ரபா
MERCURY_1991356g
நவ கிரகங்கள்
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், ப்ருஹஸ்பதி, சுக்ரன், சனி, ராகு,கேது ஆகிய இவைகள் உலகத்தினருக்கு இதம் செய்யும் நவ கிரகங்கள்.
-வாமன புராணம்,மார்க்கண்டேய புராணம், நாரத புராணம்,மத்ஸ்ய புராணம்,அக்னி புராணம், விஷ்ணு தர்மோத்தர புராணம், மஹாபாரதம், யாக்ஞவல்ய ஸ்மிருதி,வைகானஸ ஸ்மிருதி சூத்ரம்
சூரியனின் அதி தேவதை – சிவன்
சந்திரனின் அதி தேவதை – பார்வதி
செவ்வாயின் அதி தேவதை – ஸ்கந்தன்
புதனின் அதி தேவதை – விஷ்ணு
குருவின் அதி தேவதை – ப்ரஹ்மா
சுக்ரனின் அதி தேவதை – இந்திரன்
சனியின் அதி தேவதை – யமன்
ராகுவின் அதி தேவதை – பசு அல்லது காலம்
கேதுவின் அதி தேவதை – சித்ரகுப்தன்
-மத்ஸ்ய புராணம்
அழகாபுரியின் வர்ணனை!
குபேரனுடைய பட்டணமான அழகாபுரியைப் பற்றிய ஒரு சிறிய வர்ணனை இது:
ஸ்ரீ மைத்ரேயர் விதுரனிடம் கூறியது:-
அந்த அழகாபுரிக்கு வெளியில், தீர்த்தபாதனான ஸ்ரீ மஹாவிஷ்ணு வின் பாதாரவிந்தங்களில் படிந்ததனால் மிகவும் பரிசுத்தமான நந்தை என்றும் அலக்நந்தை என்றும் இரண்டு நதிகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.
வாராய்! விதுரனே! தேவஸ்தீரிகள் தமது விமானங்களிலிருந்து இறங்கி மன்மத க்ரீடைகளால் இளைப்புற்றவராகி இந்நதிகளுக்கு வந்து தமது காதலர்களை ஜலங்களால் நனைத்துக் கொண்டு ஜலக்ரீடை செய்வார்கள். அந்த தேவ ஸ்த்ரீகள் ஸ்நானம் செய்யும் போது அவர்களது தேகங்களிலிருந்து நழுவிய புதிய குங்குமங்கள் பட்டு, பொன்னிறம் உடையதான இந்நதிகளின் ஜலத்தைக் கண்ட யானைகள் தண்ணீர் குடிக்க வேண்டுமென்னும் விருப்பம் இல்லாதிருப்பினும் அந்த ஜலத்தைத் தாமும் குடித்துத் தமது பெண் யானைகளையும் குடிக்கச் செய்கின்றன. அந்த அழகாபுரியில் வெள்ளியாலும் பொன்னாலும் விலையுயர்ந்த ரத்தினங்களாலும் செய்த பற்பல விமானங்கள் ஆங்காங்கு நிறைந்திருக்கும். புண்ய ஜனங்களும் அவர்களது பெண்மணிகளும் அந்நகரில் உலவிக் கொண்டிருப்பார்கள். அத்தைகையதான அந்த நகரம் மின்னல்களும் மேகங்களும் சூழப்பெற்ற ஆகாயம் போல விளங்கும்.
-ஸ்ரீமத் பாகவதம் நான்காம் ஸ்கந்தம் ஏழாம் அத்தியாயம்
தொடரும்…………………………………………………

No comments:

Post a Comment