For Read Your Language click Translate

31 October 2014

வெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமையும்?

வெளிநாட்டு பயண யோகம்

பாடத்திற்கு இந்த தலைப்பு வைப்பதற்கு ஒன்றுக்கு இரண்டு முறையோசிக்க வேண்டி இருந்தது, வெளி நாட்டுப் பயணம் என்பதுயோகமா அல்லது தோஷமா என்று. தாய் தந்தை, சகோதரசகோதரிகள், உற்றார் உறவினர், நண்பர்கள் இப்படி பலரைப் பிரியவேண்டியதிருக்கும். இதுவாவது பரவாயில்லை. சிலர் மனைவிமக்களைப் பிரிந்து வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படியிருந்தால் இதில் என்ன யோகம் இருக்கப்போகிறது.

சரி வெளி நாட்டுப் பயணம் எதற்காக ஒருவருக்கு ஏற்படும்.தொழில் காரணமாக பொருளீட்டுவதற்காக இருக்கலாம். அயல்நாட்டிற்கு தூதுவர்களாக செல்பவர்கள் தொழில் காரணமாகசென்றாலும் பொருளீட்டுவது அவர்களுடைய நோக்கமாக இருக்கமுடியாது. அடுத்து உல்லாச பயணம், மேல் படிப்பு, மருத்துவசிகிச்சை போன்றவற்றிற்காகவும் வெளிநாட்டிற்கு செல்பவர்களும் இருக்கிறார்கள். (சொந்த ஊரில் நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தும்,குடும்பம் நல்ல வசதியான குடும்பமாக இருந்தாலும், தொழில்செய்ய வெளி நாட்டிற்கு செல்பவர்களும் இருக்கிறார்கள். பலசமயங்களில் இது ஏன் என்று எனக்கு விளங்காத புதிராகஇருந்திருக்கிறது.) இதைப் பற்றியெல்லாம் ஆராய்வதுதான் இந்தபாடத்தின் நோக்கம்.

ஜாதகத்தில் வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாட்டில்வசிப்பது போன்றவற்றை குறிப்பிடுபவை 9,12ம் இடங்கள்தான். இந்த இடங்கள் சர ராசிகளான மேசம், கடகம், துலாம், மகரம் போன்ற ராசிகளில் அமைந்தாலோ ஜல ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் போன்ற ராசிகளில் அமைந்தாலோ வெளி நாட்டிற்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.

இவற்றுள் கடக ராசிக்கு வெளிநாட்டு யோகத்தைக் கொடுப்பதற்கான பலம் அதிகம் இருக்கிறது. காரணம் இது, சர ராசியாகவும், ஜல ராசியாகவும் இரட்டிப்புத் தகுதி பெறுகிறது.

12 லக்னங்களில் ரிஷப, சிம்ம, விருச்சிக, கும்ப லக்னக்காரர்களுக்கு மற்ற லக்னத்தில் பிறந்தவர்களை விட வெளிநாடு செல்லும் யோகம்/வாய்ப்பு அதிகம் ஏற்படும். காரணம் இந்த லக்னங்களுக்கு 9 மற்றும் 12 இடம் ஆகிய 2 இடங்களும் சர ராசியாகவோ அல்லது ஜல ராசியாகவோ வரும்.

உதாரணமாக ரிஷப லக்னகாரர்களுக்கு மகரம் 9ம் இடமாகவும், மேசம் 12ம் இடமாகவும், சிம்ம லக்ன காரர்களுக்கு மேசம் 9ம் இடமாகவும், கடகம் 12ம் இடமாகவும் அமையும். விருச்சிக லக்னகாரர்களுக்கு கடகம் 9ம் துலாம் 12ம் இடமாகவும் அமையும். கும்ப லக்னகாரர்களுக்கு துலாம் 9ம் இடமாகவும், மகரம் 12ம் இடமாகவும் அமையும்.

9,12ம் இடம் இவற்றில் ஒரு வீடு மட்டும் சர அல்லது ஜல ராசியில் அமைந்தால் சற்று குறைந்த அளவேனும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். இவற்றில் 9,12 வீடுகளில் ஒன்று கூட சர ராசியாகவோ/ஜல ராசியாகவோ இல்லாவிட்டால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு குறைந்தே காணப்படும். வாய்ப்பு குறைவு என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள். காரணம் வாய்ப்பே இல்லை என்று சொல்லவில்லை.

ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளாலும் வெளிநாட்டுப் பயணம் ஏற்படலாம். அந்த கிரக நிலைகளை வைத்து என்ன காரணத்திற்காக வெளிநாடு செல்ல வேண்டி வரும் என்பதையும் தெரிந்துக் கொள்ளலாம்.

உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் 4ம் அதிபதி 9ல் இருந்து அந்த 9ம் இடம் சர ராசியாகவோ ஜல ராசியாகவோ இருந்து 12ம் அதிபதியுடன் சம்பந்தமானால் (பரிவர்த்தனை, சேர்க்கை, பார்வை இவற்றில் ஏதாவது ஒன்று) மேல் படிப்பிற்காக அவர் வெளிநாடு செல்வார் என்று முடிவெடுக்கலாம். (4 இடம், தொடக்க/இடைநிலைப் படிப்பிற்கான இடம் என்றும், 9ம் இடம் மேல் நிலை, பல்கலைக் கழக படிப்பைக் குறிப்பிடும் என்று சொல்லப் படுகிறது).

வேறொருவர் ஜாதகத்தில் 4ம் அதிபதி 12ல் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படிப் பட்டவர் பிறந்த நாட்டில் இருப்பதை விட வெளி நாட்டில் இருப்பதையே அதிகம் விரும்புவார். வெளி நாட்டில் இருப்பது சொந்த நாட்டில் இருப்பதைப் போன்றே நினைத்துக் கொள்வார். ஆனாலும் சொந்த நாட்டின் கலாச்சாரத்தையே பின் பற்றுபவர்களாக இருப்பார்கள்.

தசாம்சத்தில் 5,9,12ம் அதிபதிகளின் தொடர்பு தொழில் செய்து பொருளீட்டுவதற்காக வெளிநாட்டிற்கு போவதைக் குறிக்கும். இந்த மூவரும் ஒருவருக்கொருவர் சம்பந்தப் பட்டிருந்தால், பெரும்பாலும் நிரந்தரமாகவே வெளிநாட்டில் தங்கி விடுவார்கள். யாராவது இருவர் மட்டும் சம்பந்தப் பட்டிருந்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சொந்த நாட்டிற்கு திரும்பி விடும் வாய்ப்புகள் அதிகம்.

இதில் தர்ம கர்மாதிபதி யோகம் இருந்து 12ம் அதிபதி/வீட்டோடு தொடர்பிருந்தால் வெளிநாட்டில் பெரும் பதவி வகிப்பது, உயரிய விருதுகள் வாங்குவது போன்றவை நடக்கும். 10ம்,12ம் அதிபதிகள் சம்பந்தமும் (தசாம்சத்தில்) இதே போன்ற நிலையைத் தோற்றுவிக்கும். அயல் நாட்டு அரசதந்திரிகளுக்கு பெரும்பாலும் இத்தகைய கிரக நிலை இருக்கும்.

இங்கே நன்றாக கவனிக்கத் தக்கது என்னவெனில், சர ராசிகள் அதிகமாக வெளிநாட்டுப் பயணத்தைத் தரகூடியது. அடுத்து உபய ராசிகள் ஓரளவுக்கு வெளி நாட்டுப் பயணத்தை தர கூடியன என்றாலும் அவை ஒரு குறுகிய காலத்திற்கு உட்பட்டதாகவே இருக்கும். அதாவது, ஒன்று/இரண்டு வாரம் உல்லாசப் பயணம் போவது இந்த categoryயில் வரும்.

ஒரு பொதுவான அம்சமாக சொல்லப்படுவது குரு 9ல் இருந்தால் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் ஏற்படும் என்று. அதனால்தான்ஓடினவனுக்கு 9ல் குரு என்று சொல்லி வைத்தார்களோ என்னவோ.

Timing of Events

அதாவது எப்போது வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். ஏனென்றால் ஒரு சிலரைத் தவிர யாரும் எல்லா நேரத்திலும் வெளிநாட்டிற்கு போய்க் கொண்டிருக்கப் போவதில்லை. ஆகையால் எந்த கிரகத்தின் தசா புத்தி அந்தரங்களில் வெளி நாட்டுப் பயணம் ஏற்படும் என்று பார்ப்பது முக்கியம்.

1)      9ம், 12ம் அதிபதிகளின் அல்லது அவர்களோடு சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா புத்தி அந்தர காலங்கள்.

2)      சந்திரனோடு சம்பந்தப் பட்டுள்ள கிரகத்தின் தசா, புத்தி, அந்தரம். (சந்திரன் ஜலக் கிரகம். அத்துடன் ஜல ராசியும், சர ராசியுமான கடகத்திற்கு அதிபதி என்பது இங்கே கவனிக்கத் தக்கது)

3)      ராகு, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் 12ல் இருந்தால் அவர்களது தசா, புத்தி, அந்தரங்கள்

4)      ஜாதகத்தில் உச்சம்/நீசம் பெற்ற கிரகங்களின் தசா புத்தி அந்தர காலங்கள்.

5)      ராகு தசையில், ராகு அல்லது கேது புத்திகள்

6)      குரு 12ம் இடத்து அதிபதியாக இருந்தால் சனி தசை குரு புத்தியில்

7)      9ம் அதிபதியுடன் சம்பந்தப் பட்ட கிரகத்தின் தசா, புத்தி அந்தரங்கள்.

8)      பிறந்த ஜாதகத்தில் சூரியன் இருக்கும் வீட்டை சனி கோச்சாரத்தில் கடக்கும் காலம்.

9)      கோச்சார குரு 9,12ம் இடத்தைப் பார்க்கும் காலங்கள் அல்லது 9,12 அதிபதிகளை பார்வையிடும் காலங்கள்

உண்மையில் பார்க்கப் போனால் இந்த தலைப்பில் ஒரு பகுதி பதிவிடுவிடுவதுதான் எனது நோக்கமாக இருந்தது. ஓரிரு பின்னூட்டங்களைப் பார்த்தப் பிறகு ஒரு சில விஷயங்கள் விடுபட்டு போனது தெரிய வந்தது. அத்துடன் மேலும் சில விளக்கங்களைக் கொடுக்க வேண்டியதும் இருக்கிறது. அதற்காகத்தான் இந்தப் பாகம் 2.

சரி பாடத்திற்குப் போகும் முன் சில அடிப்பபடை விஷயங்களைப் பார்த்து விடுவோம். வெளிநாட்டுப் பயணத்திற்கு 2 விதமான ராசிகள் முக்கியம் பெறுகின்றன. 1) சர ராசிகள் 2) ஜல ராசிகள். அடுத்து கிரகங்களில் ராகு.

சர ராசிகள் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாறிக் கொண்டு இருக்கும் தன்மையைக் காட்டக்கூடியது. வெளிநாட்டுப் பயணம் போன்ற இடம், மதம், மொழி போன்ற மற்றத்தைக் கொண்டது என்ற வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்தது, ஜல ராசி. சரி, இது ஏன். கடலைக் கடந்து வெளிநாடுகளுக்கு போக வேண்டியிருப்பதால் என்று கூறப்படுகிறது. தரை வழி பாதையாக வெளிநாட்டிற்கு போக முடியுமே என்று யாரும் கேட்கலாம். அது எனக்கும் தெரியும். இருப்பினும், முந்தைய காலத்தில் முனிவர்கள் சொன்னதைத்தான் இங்கே குறிப்பிடுகிறேன்.

சர ராசிகள் - மேசம், கடகம், துலாம், மகரம்

ஸ்திர ராசிகள் - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்

உபய ராசிகள் - மிதுனம், கன்னி, தனுசு, மீனம்

பஞ்ச பூத தத்துவத்தில் நீர் ராசிகள் என  கடகம், விருச்சிகம், மீனம்

போன்றவை குறிப்பிடப் படுகின்றன.

அத்துடன், காற்று, நிலம், நெருப்பு, ஆகிய த்ததுவங்களை கொண்ட ராசிகளும் இருக்கின்றன. இவற்றுக்கு வெவ்வேறு குண நலன்களும் இருக்கின்றன. இவற்றை வேறொரு பதிவில் பார்க்கலாம்.

இவற்றைத் தவிர்த்து மகரமும் ஜல ராசி என சொல்லப் படுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் சில இடங்கள் அதற்குறிய அல்லது அவற்றால் குறிப்பிடப்படும் இடங்களாக கூறப் படுகிறது. அவற்றையும் பார்த்து விடுவோம்.

மேஷம் : மலை, குன்று, காடு, வெப்ப மண்டல நாடுகள், கிராமங்கள்

ரிஷபம் : ஆட்டுக் கொட்டகை, விவசாய நிலம்

மிதுனம் : சோலை, தோட்டம், சூதாடும் இடங்கள், படுக்கையறை, அரங்கம்

கடகம் : நீர் நிலைகள், விவசாய நிலங்கள்

சிம்மம் : குகை, மலை, குன்று, அடர்ந்த காடுகள், பாறைகள் நிறைந்த இடங்கள்

கன்னி : படுக்கையறை, பட்டறை, நகரம்

துலாம் : வியாபார ஸ்தலங்கள்

விருச்சிகம் : பாம்புப் புற்று, எறும்புப் புற்று, பாதாள அறை, கிராமங்கள்

தனுசு : போர்க்களம், காடுகள்

மகரம் : நீர் நிலைகள், நீரினால் சூழப்பட்ட இடங்கள்

கும்பம் : ரகசிய இடங்கள், கிராமங்கள், மது அருந்தும் இடம், சூதாட்ட களங்கள்

மீனம் : நீர் நிலைகள், நீரினால் சூழப்பட்ட இடங்கள்

இவை அனைத்தும் அக்கால சூழ்நிலைக்கு ஏற்ப சொல்லப் பட்டவை. இன்றைய சூழலுக்கு தகுந்தாற்போல் சில மாற்றங்கள் இருக்கலாம். 

ராகு கிரகம், வெளிநாட்டுப் பயணத்திற்கு உரிய கிரகம் என்று கூறப்படுகிறது. இது அன்னிய மதம், மொழி, தேசம் போன்றவற்றைப் பிரதிநிதிக்கக் கூடியது. ராகுவின் தசா, புத்தி, அந்தர மற்றும் சஞ்சார காலங்களில் வெளிநாட்டுப் பயணம், வெகு தூரத்தில் உள்ள ஊர்களுக்குப் பயணம் போன்றவை ஏற்படலாம்.

வெளி நாட்டு வாசம் ராகுவினால் ஏற்படும் என்பதைப் பற்றிப் பார்ப்போம். (இது முந்தைய பதிவில் விடுபட்டது). இதை வர்கச் சக்கரங்களில் உள்ள கிரக நிலையை வைத்தும் பார்க்கலாம். உதாரணமாக, வீடு, மனை, வசிப்பிடம் போன்றவற்றை சதுர்தாம்சம் (D4) குறிப்பிடுகிறது. ராசி சக்கரத்தின் (D1) 9,12 இடங்கள், அதன் அதிபதிகள், ராகு இவற்றுக்கான சம்பந்தத்தைப் பார்க்க வேண்டும். 12ம் அதிபதி சதுர்தாம்சத்தில், 9ல் ராகுவுடன் இருந்தால், 9,12ம் அதிபதிகள் அல்லது ராகுவின் தசா புத்தி அந்தரங்களில் வெளிநாட்டில் தங்கும் அல்லது  வசிக்கும் வாய்ப்பு, நிலை வரலாம். இது போன்ற உதாரணங்களை வைத்து உங்களுக்கு நீங்களே பலனைக் கணித்துக் கொள்ளுங்கள்.

லக்னம் சர ராசியாகவோ ஜல ராசியாகவோ இருந்து லக்னாதிபதி, ஜல கிரகங்களான சந்திரன், சுக்கிரன் இவர்களுடன் சம்பந்தப் பட்டாலோ அல்லது லக்னாதிபதி, 9ல், 12ல் இருந்து அது சர ராசியாகவோ ஜல ராரியாகவோ இருந்தாலும், வெளிநாட்டு யோகம் நிச்சயம். 

Posted by narayanasamy jagadeesan at 06:48 No comments:

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: வெளிநாடு யோகம்

WEDNESDAY, 12 DECEMBER

வெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமையும்?

அயல் நாடுகளில் ஒருவருக்கு மிக சிறப்பான வேலை அமைந்து ,கைநிரைவாக வருமானம் பெற்று தனது தாய் நாட்டில் வாழும் , தனதுஉறவுகளின் சந்தோசம் மட்டுமே முக்கியம் என்று தனதுவாழ்க்கையை பணயம் வைத்து கடும் உழைப்பால், முன்னேற்றம்அடைந்து தானும் நன்றாக  வாழ்ந்து, தன்னை சார்ந்தவர்களையும்நன்றாக வாழ வைக்கும் ஜாதக நிலைகளை பற்றி கொஞ்சம் ஆய்வுசெய்வோம் !

 6  ம்  வீடு

முதலில் வெளி நாடு செல்வதற்கு ஒரு ஜாதகத்தில் ஆறாம் வீடு சரராசியாகவோ( மேஷம், கடகம், துலாம்,மகரம் ஆகியவை சர ராசிகளாகும்) , ஸ்திர ராசியாகவோ( ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்)அமைந்து, ஆறாம் பாவகம்  100 சதவிகிதம் நன்றாக அமைந்து அந்த ராசி மண் தத்துவம் (ரிஷபம்,கன்னி,மகரம்) அல்லது நீர்தத்துவம் (கடகம், விருச்சிகம்.மீனம்) அமைப்பை பெற்று இருக்குமாயின் ஜாதகருக்கு வெளிநாடுசெல்வதற்கு , எந்தவித தடைகளும் ஏற்ப்படாமல் பயணம்மேற்கொள்ள வசதி வாய்ப்புகளை நிச்சயம் வழங்கும் , பயணங்களில்எந்தவிதமான உடல் தொந்தரவுகளோ அல்லது சட்ட சிக்கல்களோஏற்ப்படாமல், இனிமை நிரந்த பயணமாக அமையும் .

மேலும் மற்ற நாடுகளில் உள்ள உணவு வகைகளை ஏற்றுகொள்ளும்உடல் அமைப்பு , சீதோசன நிலையை ஏற்றுகொள்ளும் உடல்அமைப்பு , வெளிநாடுகளில் வாழும் மக்களின் முழு ஆதரவுஅவர்களின் ஒத்துழைப்பு என, பல விஷயங்களை நல்ல முறையில்அமைய நிச்சயம் இந்த 6  ம்  வீடு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் .

  8  ம் வீடு

இரண்டாவது ஜாதகர் வெளிநாடு வந்தாகிவிட்டது, தான் வேலைசெய்யும் இடத்தில் உள்ளவர்களின் முழு ஒத்துழைப்பும் , தனது மேல்அதிகாரியின் உதவியும் , தான் தங்கும் இடத்தின் தன்மையும் , அங்கேஅமையும் சிறப்பான வசதிகளும்.

 பணியில் விரைவான முன்னேற்றமும், பயணம் செய்ய நல்ல வாகனவசதியும் , பயணம் செய்யும் காலங்களில் எவ்வித பாதிப்பையும்தராத நிலையும் ஜாதகருக்கு அமைய வேண்டுமெனில்,  ஜாதகத்தில் 8 ம் வீடு சர ராசியாகவோ( மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும்) , ஸ்திர ராசியாகவோரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்) இருந்து 100  சதவிகிதம்நன்றாக 

அமைந்து .

  8  ம் வீடு மண் தத்துவம்(ரிஷபம்,கன்னி, மகரம்)  அல்லது நீர் தத்துவம்(கடகம், விருச்சிகம். மீனம்)  அமைப்பை பெற்றுஇருக்க வேண்டும் . மேலும் ஜாதகருக்கு கேளிக்கைகள் , விளையாட்டு, நல்ல பொழுது போக்கு அமைய வேண்டும் எனில் இந்த 8  ம் வீடு 100சதவிகிதம் நன்றாக இருப்பது நலம் தரும் .

 12  ம் வீடு

முன்றாவதாக ஜாதகர் வெளிநாடு சென்று ஒரு நல்ல வேளையில்அமர்ந்து , அனைத்து வசதிகளையும்,  அனுபவிக்கும் யோகத்தைபெற்றாகி விட்டது , சரி இனி ஜாதகர் சம்பாதிக்கும் அனைத்தும் தனதுசந்ததியினருக்கும் சேமித்து பாதுகாக்கும் தன்மை , அந்தநாட்டு குடிஉரிமையை பெறுவதில் எவ்வித சிக்கல்களும் அற்ற நிலை .

 வெளிநாடு செல்லும் பொழுதும் , வரும்பொழுதும் பாதுகாப்பானபயணம் , வெளிநாடுகளில் இருக்கும் பொழுது ஜாதகருக்குநிம்மதியான வாழ்க்கை , அங்கேயே ஒரு நல்ல வாழ்க்கைதுணையை அமைத்து கொள்ளும் தன்மை , நல்ல உணவு , தாய்நாட்டில் இருப்பவர்களால் எவ்வித தொல்லையும் அற்ற நிலை ,நிரந்தர வேலை , அந்த வேலையில் ஜாதகரின் ஈடுபாடு அதனால்ஜாதகருக்கு ஏற்ப்படும் முன்னேற்றம் , நல்ல ஆடை  ஆபரணசேர்க்கை , நல்ல சுக போகங்களை அனுபவிக்கும் யோகம்அனைத்தையும் ஜாதகருக்கு அளிப்பது 12  ம் பாவகமே , அதற்க்குஇந்த 12  ம் வீடு  சர ( மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும்)அல்லது  ஸ்திர( ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்)

ராசியாக வந்து , மண் (ரிஷபம்,கன்னி, மகரம்)அல்லது நீர்தத்துவத்தை(கடகம், விருச்சிகம். மீனம்)  பெற்று 100  சதவிகிதம் நன்றாக இருப்பது அவசியம் .

மேற்கண்ட அமைப்பை பெற்று ஜாதகருக்கு லக்கினம் நன்றாகஇருந்து நடக்கும் திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் 6  8  12  வீடுகளின்பலனை நடத்துமாயின் ஜாதகர் நிச்சயம் வெளிநாடுகளில் சகலயோகத்தையும் அனுபவிக்கும் தன்மையை தடையில்லாமல்நிச்சயம் தரும் என்பதில் சந்தேகமே இல்லை .






மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும்
உபயம்: உபய ராசியில் ஜெனித்த ஜாகருக்கு கேந்திர ஸ்தானாதிபதிகளில் 7ம் இட அதிபதி நற்பலன்களைத் தரமாட்டார்.ஊழ்வினையின் காரணமாக பூமியில் பல தொல்லைகளை அடைவார். போதுமான வருமானம் இல்லாமல் செய்யும் தொழிலில்முன்னேற்றம் கிடைக்காமல் பண விரயமும் ஏற்படும். அரசாங்க பகையும் உண்டாகும். உடல் உபாதையும் நோயும் ஏற்படும். அதேசமயத்தில் மற்ற கிரகங்களின் பலத்தைப் பொறுத்து மேற்கண்ட கெட்ட பலன்களின் ஆதிக்கம் குறைய வாய்ப்புண்டு.

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்.
ஸ்திரம்: ஸ்திர ராசி லக்னமாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு நன்மை செய்யும் பாக்கிய ஸ்தானாதிபதியான 9ம் இட அதிபதியால்தீமையே உண்டாகும். அதே சமயத்தில் பாக்கியாதிபதி 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் நின்றால் அரசாங்க நன்மை முதலானயோகங்கள் உண்டாகும். மற்ற இடங்களில் நின்றால் பிரயோசனம் இல்லை. நற்பலன்கள் உண்டாவதில்லை. எடுத்த தொழிலில்முற்று பெறாமல் தடை உண்டாகும். 

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும்.
சரம்: சர ராசியில் பிறந்த ஜாதகனுக்கு பதினோராம் இட அதிபதியான லாபாதிபதியால் நற்பலன்கள் இல்லை. ஏனெனில் அவன் தசைகாலங்களில் வீடு, பொருள் நஷ்டமும் அரசாங்க பகையும் உண்டாகும். இந்த பலன்கள் ஏற்படாமல் செல்வம் போன்ற யோகபலன்களை அளித்தாலும் வியாதிகளை உண்டாக்குவான். இதனால் ஜாதகன் பெற்ற தனங்கள் அழியலாம். எனினும் லாபஸ்தானாதிபதி 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் நன்மையான பலன்களையே தருவார். 

ஜலராசிகள்(Watery Signs)

கடகம், விருச்சிகம். மீனம் ஆகிய மூன்றும் ஜல ராசிகளாகும். இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் மிகுந்தவர்கள். இதை Fruitful Signs என்றும்சொல்லுவார்கள். ஜலராசி 10-வது வீடாக வந்தால் தண்ணீர் சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள். குளிர் பானங்கள், துணிமணி சம்மந்தப் பட்டதொழில் கப்பல் சம்மந்தப் பட்ட தொழில் ஆகிய வற்றில் இருப்பார்கள். இந்த ராசிக்கரர்கள் கற்பனை வளம்மிக்கவர்கள்.

காற்று ராசி (Airy sign)

நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். கற்பனை மிகுந்தவர் கள். எதையும் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றஆர்வம் மிகுந்தவர்கள். கற்பனை மிகுந்தவர்கள். இந்த ராசி மூளை சம்மந்தப் பட்டதால் மூளை சம்மந்தப் பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள்.அக்கவுண்டண்ட்ஸ், வக்கீல்கள், ஆசிரியர் போன்ற தொழிலுக்கு ஏற்றவர்கள். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசியும் காற்று ராசிகளாகும்.

நிலராசி (Earthy Signs)

ரிஷபம்,கன்னி, மகரம் ஆகிய மூன்றும் இந்த ராசியைச் சேர்ந்தவை. இந்த ராசியை லக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல் படக்கூடியவர்கள். எதையும் யதார்த்தமாகவும், எச்சரிக்கையுடனும் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள். சிக்கனமாகச் செலவழிக்கும் மனதுஇவர்களுக்கு உண்டு. இந்த ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலைகொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு வாயுத் தொந்தரவு உண்டு. ஜீவனஸ்தானமான 10-ம் இடம் நில ராசியாக வந்தால் நிலம், கட்டிடம்சம்மந்தமான வேலைகள், விவசாயம் ஆகியவை மிகுந்த பலன் தரும்.

நெருப்பு ராசி (Fiery Signs)

மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை நெருப்பு ராசி எனப் படும். இந்த மூன்று ராசிகளை லக்கினமாகப் பெற்றவர்கள் மிக்க தைரியசாலிகளாகவும்,தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களுக்குத் தலைமை தாங்குபவர்களாகவும்இருப்பார்கள். இந்த நெருப்பு ராசியில் உள்ள கிரகங்களும் மேற்கூறிய தன்மைகளைப் பெற்று இருக்கும். நெருப்புராசியை ஜீவனமாகப் பெற்றவர்கள்நெருப்பு சம்மந்தப் பட்ட தொழிலில் இருக்கவும் சாத்தியக் கூறுகள் உண்டு.

Posted by narayanasamy jagadeesan at 20:08 No comments:
Thank you narayanasamy jagadeesan..


No comments:

Post a Comment