For Read Your Language click Translate

31 October 2014

தெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்!


தெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்!

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் உட்சபட்ச பரிகாரம் என்ன? 

ஹோமம் தான். 

கோவிலுக்கு போறது, சாமி கும்பிடுறது, அர்ச்சனை செய்றது,அபிழேகம் செய்றது, மொட்டை போடுறது, அலகுகுத்திக்கிறது, தீ மிதிக்கிறது எல்லாமே பரிகாரத்தின் ஒரு வடிவமாக இருந்தாலும் ஹோமம் தான் கடைசி. 

இதுக்கு மேலே பரிகாரம் செய்யணும்னா தவம்தான் செய்யணும்.  ஒரு மலை உச்சியா பார்த்து ஏறி உட்கார்ந்து தவம் செய்தால் பரசிவன் வந்து குழந்தாய் என்ன வரம் வேண்டும் என்று கேட்டாலும் கேட்கலாம். போகட்டும்.

சரி...சொல்லுங்க. 

ஒரு ஹோமம் செய்றிங்க. ஐயர் நெருப்பு வளர்க்கிறார். மந்திரம் சொல்றார். 

என்னென்னமோ காயி, வேரு,இல்லை, பட்டைன்னு அக்கினியில் போடுறார். அதை பற்றி கொஞ்சமாவது தெரியுமா? 

அட ... மந்திரம் தெரியுமான்னு கேட்கலை. அங்கே என்ன செய்றாங்கன்னு தெரியுமா?

தெரியாதுல்ல. 

நீங்களும் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி, என்னமோ நடக்குதுன்னு  எதுவுமே புரியாம உட்கார்ந்து இருக்கீங்க.  

அதை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்களைன்னாலும், ஹோமம் செய்யும் போது செய்யப்படும் சடங்குகள் என்னென்ன?

அது எதற்காக செய்யப்படுகிறது, என்பதை இப்போ சொல்றேன். கொஞ்சமாவது அதை பற்றி தெரிஞ்சுக்கோங்க.

முதலில் கணபதி ஹோமம். 

எந்த  காரியம் செய்தாலும்  முதலில் கணபதியை வணங்கனும். செய்யும் காரியத்தில் விக்கினங்கள் வாராமல் இருக்க விநாயர் வழிபாடு.

அதிலும் ஹோமம் மாதிரி உயர்ந்த பரிகாரங்கள் செய்யும் போது, அரக்க சக்திகள் அதை தடுக்க பார்க்கும் என்கிறது புராணங்கள்.

உண்மைதான். ஹோமத்தின் வழி அந்த பலனை பெற வேண்டும் என்ற விதியமைப்பு இல்லைனா, பல தடைகள் வரும்.

நீங்களே பாருங்க. ஹோமத்திற்கு தேதி குறிச்சிருப்பாங்க. அந்த நாள் நெருங்கும் போது,வீட்டில் இருக்கும் பொம்பளைங்க யாரவது தீட்டுன்னு குண்டை தூக்கி போடும்.

வர்ற 20 ம் தேதிதான் குளிக்கிற கெடு. சனியன் இப்பவே வந்துட்டு என்பார்கள்.

ஹோமத்திற்கு நாள் குறித்திருப்பார்கள். அந்த நாள் நெருக்கும் போது நெருங்கின பங்காளி ஒருத்தர் சிவலோக பதவியை அடைஞ்சுடுவார்.

பங்காளி இறப்பு பதினாறு நாள்  சூதகம்ன்னு ஹோமத்தை ஒத்தி வைக்கிற மாதிரி வந்துடும்.

ஹோமத்திற்கு நாள் குறிச்சுருப்பங்க. அந்த நாள் நெருங்கும் போது கையிலே  பணமே இல்லாமே திண்டாட வேண்டிவரும்.

அட கடவுளே இவ்வளவு சோதனை வருமா?

எல்லாருக்கும் இல்லை ராஜா. ஒரு சிலருக்கு. சரி.. முதலில் கணபதி பூஜை. துர்தேவதைகலாலோ, துஷ்ட்ட சக்திகளாலோ எந்த இடையூறும் இல்லாமல் நடப்பதற்கு வினைகளை வேறறுக்கும் விநாயகர் பூஜை.



அடுத்து சங்கல்ப்பம்.

கோடான கோடி மக்கள் வாழக்கூடிய இந்த பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். சரியான முகவரி எழுதப்பட்ட தபால் எப்படி குறுப்பிட்ட நபரை சென்றடைகிறதோ, அதைபோல் செய்யகூடிய இந்த ஹோமங்கள் குறுப்பிட்ட இலக்குகளை சென்றடையக்கூடியதாக இருக்க வேண்டும்.

அந்த இலக்கு என்பது யாகத்தின் தலைவராக இருப்பவருக்கு, அதாவது யாருக்காக செய்கிறோமோ அவருக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக பிராத்தனை செய்யப்படுவது.

அடுத்து குலதெய்வ பூஜை. 

இது பெரும்பாலான ஹோமங்களில் செய்யபடுவதில்லை. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள். உலகத்தில் எத்தனை சாமிகள் இருந்தாலும் குலதெய்வம் முக்கியமானது.

நம் முன்னோர்கள் காலத்தில் குலதெய்வ பூஜை என்பதை குறையில்லாமல் செய்தார்கள்.

எந்த காரியமாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தை வேண்டினார்கள். வருடத்திற்கு ஒரு முறை விழாஎடுத்தார்கள்  .

வீட்டில் ஒரு சுபகாரியம் நடந்தாலும் முதல் பத்திரிகை சாமிக்கு வைத்தார்கள். ஆக குலதெய்வத்தோடு  அவர்களுக்கு இருந்த நெருக்கம் அதிகம்.

இது எந்திர யுகம். காரில் போகும்போது ஹாய் முருகா என்று ஒரு கை தூக்கிவிட்டு போகுற அளவிற்குத்தான் நேரம் இருக்கிறது.

என்ன செய்ய..... எப்படி இருப்பினும் , அடுத்து செய்ய வேண்டியது குலதெய்வ பூஜை.  குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு செய்யப்படும் பூஜை.

ஆகமத்தில் இடம் இல்லையே என்று அலச்சியம் செய்யக்கூடாது.

அடுத்து செய்யப்படுவது பிதிர் பூஜை. 

இது ஒன்னும் அமாவாசை தர்ப்பணம் இல்லை. தெய்வமாகி போன நம் முன்னோர்களை தேடிபிடித்து வணங்குவது.

நீத்தார் உலகம் என்று சொல்லக்கூடிய இடத்தில் நம் மூன்று தலைமுறையை  சேர்ந்த முன்னோர்கள் இருப்பார்களாம்.

வருடத்தில் ஒரு நாள் மட்டும் வெளியே வருவதற்கு அனுமதி உண்டு. அது திதி நாள். அன்று அவர்களுக்கு உரிய திதி கடமைகளை சரிவர செய்தால் மகிழ்ந்து வாழ்த்திவிட்டு செல்வார்களாம்.

ஒன்றுமே செய்யவில்லை என்றால், வந்தவர்கள் நல்ல மனது உள்ளவராக இருந்தால் மனக்குறையோடும், கெட்ட மனது உள்ளவராக இருந்தால் சபித்து விட்டும் போய்விடுவார்களாம்.

அது போன்ற குறைகள் இருந்தால் அவற்றை நீக்கி அவர்கள் ஆசியை பெறுவதற்காக செய்யப்படுவது பிதிர்பூஜை.

இதுவும் பெரும்பாலான ஹோமத்தில் தவிர்க்க படுகிறது. இது முறையல்ல.

எந்த தேவதையை குறித்து ஹோமம் செய்கிறோமோ அந்த தேவதையை கும்பத்தில் நிலைநிறுத்தல்.

கும்ப ஸ்தாபனம்

கும்பம்  என்பது உடல். அதன் மேல் வைக்கப்படும் தேங்காய் என்பது தலை. கும்பத்தில் சுட்டப்படும் நூல் நாடி நரம்புகளை குறிக்கும். உள்ளே இருக்கும் தண்ணீர் ரத்தத்தை குறிக்கும். 

தர்ப்பை என்பது ஆகர்ஷ்சன சக்தி நிறைந்தது. காந்தத்தை எப்படி இரும்பு கவர்ந்து இழுக்கிறதோ, அதைபோல் தெய்வீக சக்தியை கவர்ந்து இழுக்கும் தர்ப்பையை கலசத்தில் வைக்கிறார்கள். 

ஆக கலசத்தில் நம் பிரதான தேவதை பிரச்சனமாக இருக்கிறார் என்பதை சொல்வதுதான் அதன் தாத்பரியம். 

என்ன ஹோமம் செய்கிறோம்? அதாவது எந்த தெய்வத்தை நினைத்து செய்கிறோமோ, அந்த தெய்வத்தை கும்பத்தில் நிலை நிறுத்துவதுதான் ஆஹாவனம் என்று பெயர்.

அடுத்து செய்யப்படுவது நவக்கிரக தோஷ பரிகாராம். 

ஜெனனி ஜென்ம சௌக்கியனாம்
வர்த்தினி குல சம்பதாம்
பதவி பூர்வ புண்ணியனாம்
லிக்கியதே ஜென்ம பத்திரிகா என்பது ஜோதிட வாக்கு.

நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் காரணம் நவகிரகங்கள். நம்புகிறமோ இல்லையோ, ஏற்றுக் கொள்கிறோமோ  இல்லையோ, அவர்கள் தங்கள் பணியை செய்கிறார்கள்.

இதைதான் வாங்கி வந்த வரம் என்கிறார்கள். இவர்கள் நம் வாழ்க்கையில் புகுந்து விளையாடுவதால் தான் நாம் பரிகாரம் செய்கிறோம். அதனால் நவகிரங்களை வணங்கி பூஜிக்க வேண்டும்.

இதை ஹோம நிறைவுக்கு முன் செய்வதும் உண்டு. இனி ஹோமம் ஆரம்பம்



இந்த நடைபெறும் போதுதான் வேத பாராயணங்கள் செய்யப்படுகிறது. வேத பாராயணங்கள் என்பது இறைவனை ஆராதிப்பது என்று பொருள்.

பொதுவாக பாராயணங்கள் என்பதே இறைவனை புகழ்ந்து பாடி, அவர் அருளை பெறுவதுதான்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் மூலமந்திரம், வேதமந்திரம், காயத்திரி மந்திரம், பிராத்தனை மந்திரம் என்ற நான்கு உண்டு.

உதாரணமாக மூல மந்திரம் என்பது பீஜாச்சரம் கொண்டு சொல்வது. அது ஓம் ஸ்ரீம் ரீம் என்று வரும். வேத மந்திரம் என்பது ஒலி அலைகளால் நன்மை பெறுவது.

காயத்திரி மந்திரம் என்பது எந்த தெய்வத்தை நோக்கி ஹோமம் செய்கிறோமோ அவரின் புகழுரைகளை சொல்வது.

பிராத்தனை மந்திரம் என்பது நம் வேண்டுதல் பலிப்பதர்க்காக சிரம் தாழ்த்தி, கை கூப்பி, மனதார பிராத்திப்பது என்று பொருள்.

பாராயண முடிவில் சமகம் சொல்லப்படுகிறது. இதை பற்றி தனியே ஒரு கட்டுரை எழுதுகிறேன். இப்போதைக்கு படம் மட்டும். வசுவதாரா கொண்டு நெய் ஊற்றும் போது சொல்லப்படும் மந்திரம் சமகம்.

கடைசியாக பூர்ணாஹுதி 

இது ஹோமத்தின் நிறைவு பகுதி. பட்டு துணியில் வாசானாதி திரவியங்கள் சேர்த்து, எட்டு கண் விட்டெரிக்கும் அக்னி  தேவனுக்கு சமர்ப்பணம் செய்வதுதான் பூர்ணாஹுதி எனப்படுவது. 

இந்த அவிர் பாகத்தை பெற்று கொள்ள தேவலோக தேவேந்திரனே வருவாராம். இதை செய்து முடித்ததும் ஹோமம் நிறைவு பெறுகிறது.

சுபம் 

Posted by narayanasamy jagadeesan at 19:56 No comments:

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: jothidam, medical, sastharam, பலன்கள், ஹோமம்

No comments:

Post a Comment