For Read Your Language click Translate

27 February 2015

நாரத சம்ஹிதை

ஜோதிடத்தின் மூலகர்த்தா
தேவரிஷியான நாரதரைப் பற்றி மட்டுமே உள்ள புராணம் நாரத புராணம். அதில் வேதத்தின் ஆறு அங்கங்களும் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஜோதிடத்தை எப்படி அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுத்துவது என்பதைத் தெளிவாக நாரத புராணம் எடுத்துரைக்கிறது. இதில் சிக்ஷ¡ பகுதி வேத சம்ஹிதைகளை நன்கு விளக்குகிறது. எப்படி வேதத்தை உச்சரிப்பது என்பதை அற்புதமாக விளக்கும் போது நன்கு உச்சரிக்கப்படும் மந்திரங்களே பலன் அளிக்கும் என்பதைத் தெளிவாக நாம் உணர முடிகிறது.

ஒரு கீதத்தின் பத்துக் குணங்களையும் இந்த புராணமே நன்கு விளக்குகிறது. இசைக் கருவிகளில் வீணையையும் வேணுவையும் இந்தப் புராணம் விளக்குவது போல வேறு எந்த நூலும் விளக்கவில்லை!
பிரம்மா ஜோதிடத்தைப் பற்றி நான்கு லட்சம் சுலோகங்களில் விளக்கியுள்ளார்! இதன் சுருக்கத்தை நாரதர் விளக்கியுள்ளார். இந்த ஜோதிடப் பகுதி வானவியல், ஜாதகம் பார்த்தல். ஜோதிட சாஸ்திரம் என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கப்படுகிறது. வானவியல் பகுதியில் கிரகணம், நிழல்கள், கிரக சேர்க்கைகள். கணித மூலங்கள் போன்றவையும் ஜாதகப் பிரிவில் ராசிகள் பிரிக்கப்பட்ட விதமும் அதன் அடிப்படைக் கருத்துக்களும் கிரக சேர்க்கைகளும் விளக்கப்படுகின்றன. சூர்ய சித்தாந்த கருத்துக்களை இங்கு காணலாம்.வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதாவில் உள்ள பல கருத்துக்கள் இங்கு உள்ளன. நாரத சம்ஹிதையில் உள்ள பல சுலோகங்கள் அப்படியே ப்ருஹத் சம்ஹிதாவிலும் இருப்பது வியப்பூட்டும் ஒரு விஷயம்! நாரத புராணத்தில் நவீன விஞ்ஞானத்தின் பல இயல்களைப் பார்த்து வியக்கலாம்! ஒரு முக்கியமான விஷயம், ஜோதிடம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் நாரதரின் பார்வை தனிப்பார்வையாக உள்ளது!
த்ரி ஸ்கந்த ஜோதிஷம்
ஜோதிஷம் சூர்யாதி க்ரஹணம் போதகம் சாஸ்த்ரம் என்பது ஜோதிடம் என்றால் என்ன என்பதை விளக்குகிறது.
கிரஹ சஞ்சாரங்களைத் துல்லியமாக நிர்ணயிக்க உதவும் கணக்குகளும் அதையொட்டி நல்ல காரியங்களை நல்ல நேரங்களில் ஆரம்பித்து நற்பயன் காண்பதையும் நாரத சம்ஹிதா, ஸ்கந்த த்ரியா என்று மூன்று பகுதிகளாக விளக்குகிறது! த்ரிஸ்கந்த ஜோதிஷம் என்ற பெயரில் இன்று பிரபலமாக இது விளங்குகிறது.
பின்னால் இது விரிந்து சித்தாந்தம், ஹோரா (பராசரர்,ஜைமினி, யவனர் முறைகள்), வாஸ்து சாஸ்திரம் முஹ¥ர்த்தம் உள்ளிட்ட சம்ஹிதா, ப்ரஸ்னம் பார்த்தல், சகுனம் பார்த்தல் என ஐந்தாக விரிவடைந்தது.பிரம்மாவிடமிருந்து நாரதர் ஜோதிடத்தைக் கற்று அதை சௌனகாதி முனிவர்களுக்கு உபதேசித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இப்படிப் பட்ட அனுபவங்களைக் கொண்ட நாரதர் ஜோதிடத்தை எவ்வளவு நுணுக்கமாகச் சொல்லி இருப்பார் என்பதை ஊகித்துத் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment