For Read Your Language click Translate

19 September 2014

பித்ரு பூஜை, தர்ப்பணம் முதலியவை அவசியம்!

உலகங்களை உற்பத்தி செய்து பரிபாலித்து வரும் பகவானுடைய அரசாங்கம்தான் மிகப்பெரிய அரசு ஆகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் பித்ருக்களும் ஈசுவரனுடைய அரசாங்கத்தின் அதிகாரிகள் ஆவர். வடக்கில் உள்ள தேவலோகமும் தெற்கில் உள்ள பித்ரு லோகமும் அவர்களுடைய இருப்பிடம் என்று மறைகள் கூறுகின்றன.
இந்த இறைவனது அரசுக்கு நாம் செலுத்தும் வரிகள் – தேவர்கடனும் பிதிர் கடனும். நம்மையெல்லாம் காக்கின்ற அவ்வதிகாரிகளின் ஜீவனத்துக்கு என்ன வழி-வகை செய்துள்ளார், ஸர்வேசுவரன்?
நாம் செய்யும் தேவ யக்ஞங்களும் பித்ரு யக்ஞங்களுமே அவர்களை காப்பாற்றுகின்றன.
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஓக்கல் தான் என்று
ஐம்புலத்து ஆ(று) ஓம்பல் தலை
- என்பது திருவள்ளுவர் வாக்கு
எனவே, பித்ருக்களின் ஆசி கிடைத்தால், நல்லது நடக்கும், அவர்களுக்கான கடமைகளைச் சரிவரச் செய்து, அவர்களின் ஆசிகளைப் பெறுதல் முக்கியம்.

No comments:

Post a Comment