For Read Your Language click Translate

09 June 2014

நாகதோஷம்



ஆண்,பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12-வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.

லக்னம் அல்லது சந்திரனுக்கு 2-ல் ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம். இதனால் கணவன்-மனைவி இடையே சண்டை, சச்சரவு, அல்லது விவாகரத்து உண்டாகலாம்.

லக்னம் அல்லது சந்திரனுக்கு 4-ல் ராகு அல்லது கேது உள்ளதும் நாகதோஷம். இதனால் இருதய சம்பந்தமான நோய், சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு நோய், குடும்ப வாழ்க்கையில் அதிருப்தி, முதலிய கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது.

லக்னம் அல்லது சந்திரனுக்கு 5-ல் ராகு அல்லது கேது இருந்தால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும். ஆனால் 5-ம் இடம் சுபச்சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் நாகதோஷம் நிவர்த்தி அடைந்து குழந்தைச் செல்வம் ஏற்படும்.

லக்னம் அல்லது சந்திரனுக்கு 7-ல் ராகு அல்லது கேது நிற்பது களத்திர தோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படலாம். தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும். சில தம்பதிகளிடையே பிரிவினை காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும்.

லக்னம்,அல்லது சந்திரனுக்கு 8-வது இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் நாகதோஷமாகும். இதனால் விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டை சச்சரவு, பிரிவினை ஏற்பட வாய்ப்புண்டு, ஆனால் 8-வது வீட்டை சுப கிரகம் பார்த்தாலோ அல்லது 8-ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.

லக்னம் அல்லது சந்திரனுக்கு 12-ம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் நாகதோஷம். இதனால் நோய் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு. பண விரயமும் ஏற்படும். 12-ம் அதிபதி பலமாக இருந்தால் தோஷ நிவர்த்தி ஏற்படும்.

பாம்பு புற்றை இடித்தாலோ அல்லது பாம்பினை அடித்து கொன்றாலோ நாகதோஷம் ஏற்படும். இதன் காரணமாக விந்து சக்தி நீர்த்துப்போய் குழந்தை தாமதம் அல்லது குழந்தை இல்லாத நிலையும் ஏற்படும்.

நாகப்பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும், பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப்பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறதாம்.

ஆகவே தோஷமுள்ளவர்கள் கீழுள்ள ஆலயங்களில் ஏதாவது ஒன்றில் நாகப்பிரதிஷ்டை செய்தால் தோஷம் நீங்கும் என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர்.

ராமநாதர்-ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), முத்தால பரமேஸ்வரியம்மன் -பரமக்குடி (ராமநாதபுரம்), மகுடேஸ்வரர்-கொடுமுடி (ஈரோடு), அனந்தீஷ்வரர்-சிதம்பரம் (கடலூர்), முத்துக்குமரர் -பரங்கிப்பேட்டை (கடலூர்), நாகராஜா சுவாமி -நாகர்கோவில் (கன்னியாகுமரி),குமரக்கோட்ட முருகன்- காஞ்சீபுரம் (காஞ்சீபுரம்).

பச்சைவண்ணப் பெருமாள் -காஞ்சீபுரம் (காஞ்சீபுரம்), பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்-அமிர்தபுரி (காஞ்சீபுரம்), ஆதிகேசவப்பெருமாள் -ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சீபுரம்), நஞ்சுண்டேஸ்வரர்- காரமடை(கோவை), திருவேட்டீஸ்வரர்-திருவல்லிக்கேணி (சென்னை),தேனுபுரீஸ்வரர் -மாடம்பாக்கம் (சென்னை), இரவீஸ்வரர் -வியாசர்பாடி (சென்னை).

அருணஜடேசுவரர்-திருப்பனந்தாள் (தஞ்சாவூர்), சுப்பிரமணிய சுவாமி -குமாரவயலூர் (திருச்சி),தொண்டர்கள் நயினார்சுவாமி -திருநெல்வேலி (திருநெல்வேலி), பக்தவச்சலப்பெருமாள்-திருநின்றவூர் (திருவள்ளூர்), சாமாண்டியம்மன்-சாமாண்டிபுரம், கம்பம் (தேனி), விருப்பாச்சி ஆறுமுகநயினார்-தீர்த்ததொட்டி (தேனி).

சிவலோகநாதர்-திருப்புன்கூர் (நாகப்பட்டினம்), நாகநாதசுவாமி -நாகநாதர் சன்னதி (நாகப்பட்டினம்),அர்த்தநாரீஸ்வரர் -திருச்செங்கோடு (நாமக்கல்), அரங்குளநாதர் -திருவரங்குளம்(புதுக்கோட்டை), கல்யாணராமர்-மீமிசல் (புதுக்கோட்டை).

காசிவிஸ்வநாதர்-இரும்பாடி சோழவந்தான் (மதுரை),அய்யனார்சுவாமி -கோச்சடை (மதுரை),செல்லத்தம்மன்,கண்ணகி -சிம்மக்கல்(மதுரை), அங்காளஈசுவரி-மாந்தோப்பு (விருதுநகர்), நாகேஸ்வரசுவாì -பூவரசன்குப்பம் (விழுப்புரம்).

No comments:

Post a Comment