தொழில் முனைவோர் உருவாக உதவிடுவோமே!! 12புதன்,ஜனவரி,
'புதிய தலைமுறை' பத்திரிகையாளர் மாலன் தலைமையில் செயல்படும் ஒரு இதழ். கல்விக்காகவும், தொழில் முயற்சிகளையும் பற்றிய விடயங்களை தாங்கி வருகிறது. 'விதைகள்'( Self Employed Enterpreneur Development Scheme) என்ற திட்டத்தின் மூலமாக இளைஞர்கள் சுயதொழில் முனைவோரை உருவாக்கி வருவதும் இவர்களது பணிகளில் ஒன்றாக இருக்கிறது. தற்போது இந்த திட்டம் சென்னை,காஞ்சிபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் செயல்பாடுகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல திட்டப்பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று புதிய தலைமுறை அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது . திட்டப்பணியாளரின் பணி என்பது, இளைஞர் குழுக்களை தொடங்குதல், பராமரித்தல், பயிற்சியளித்தல், தொழில்முனைவோர் மேம்பாட்டு திறன் மற்றும் பயிற்சியளித்தல் போன்றவை ஆகும்.
இந்த திட்டத்தை செயல்படுத்த புதிய தலைமுறை அறக்கட்டளையுடன் 'ரெப்கோ' வங்கியின் அங்கமான ரெப்கோ நுண்கடன் நிறுவனமும் கைகோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கீழ்க்கண்ட தகுதிகள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
கல்வி: 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு,ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி குறிப்பாக M.Sc(Agri).,MSW,M.A.,Social Welfare Administration,M.A(Rural Development.M.com Co-op Management,B.Sc.,Computer Science,B.Sc.Food &Nutrition, B.Sc.Agri இருத்தல் நலம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
விதைகள் வேலை வாய்ப்புத் திட்டம்,
புதிய தலைமுறை,
த.பெ.எண்-4990,
நெ.24.ஜி.என்.செட்டி தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.
மின்னஞ்சல்:rfmcptf@gmail.com
puthiyathalaimuraivv@gmail.com
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.01.2011
No comments:
Post a Comment