For Read Your Language click Translate

10 May 2014

நன்மை தரும் தேன்

நன்மை தரும் தேன் *





இந்த தேனை நான் வாங்கி வந்த போது தேனின் மருத்துவகுணங்களை பதிவாக விடுக்க தோன்றியது. அந்த அடிப்படையில் இதனை சமர்பிக்கிறேன். வீட்டில் இனி பலசரக்கு பொருட்கள் வாங்கும் போது அந்த பட்டியலில் தேனும் இடம்பெறட்டும். மறக்கமாமல் உங்கள் குடும்ப உறுப்பினர்களை தேனை சாப்பிட சொல்லி ஊக்கப்படுத்தி உடல்நலத்தை மேம்படுத்துங்கள். நன்றி. இவ்வாறு நீங்கள் தேன் வாங்குவதால் இந்த தேனை சேகரிக்கும் ஆதிவாசி மக்களுக்கு மறைமுகமாக உதவி செய்து அவர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த உதவுகறீர்கள் பதிவர்களே! 
"ஊளைச்சதை குறையும் வாந்தி
உள் வெப்பம் மாறுபசியுடன் ருசி கூடும்
கேளப்பா விக்கல் முக்க பரோகம் போம்
ஆமய்யா மரப்பொந்தின் தேனால்"- வைத்திய அந்தாதி

தாய்ப்பால் தலைசிறந்தது. அதற்கு இணையானது பசும்பால் என்பார்கள். ஆனால் இதற்கெல்லாம் மேலானது என்றால் அது தேன். தேனில் கலந்துள்ள ஊட்டச்சத்துக்கள் வேறு எதிலும் இல்லை என்பதை இந்த வைத்திய அந்தாதியும், தேவாரமும் விளக்குகின்றன. அதாவது மரப்பொந்தின் தேனை அருந்தி வந்தால், தனது உடலையே தான் தூக்க முடியாமல் நடக்கும் சிலரின் ஊளைச்சதை குறையும். பசி ருசி அதிகமாகும். உடலுக்கு குளிர்ச்சி தரும். விக்கல், இருமல், சயரோகம் என்னும் எலும்புருக்கி நோய் குணமாகுமாம்.

"ஐவகையிரு மலீனை விக்க லக்சிப்பிண்
மெய்யானவே தீரும் பசியும் வரும் கண்
பொய்யு மிலையிது மலைத்தேனே
உய்யும் மருந்திற் களுபானமாகும் மானே"- தேவாரம்

பெரிய மலைகளில் இருக்கும் பாறைகளில் மேல் உள்ள இடுக்குகளில் கட்டப்பட்டுள்ள கூடுகளில் இருந்து எடுக்கப்படும் தேனுக்கு மலைத்தேன் என்று பெயர். இந்த மலைத்தேனை குறிஞ்சித் தேன் என்றும் சொல்வார்கள். இந்த மலைத்தேனை அருந்தினால் ஐந்து வகை இருமல்களான சிலேத்மகாசம்,சுவாசகாசம்,ஈளைஇருமல்,அள்ளு மாந்தம், சுக்கிருமல் ஆகியவை குணமாகுமாம்.

"வாமமொடு பித்தம் மாற்றும்
மாந்தமெனும் நோயை விரட்டும்
ஆறுதலென அரும்பசி ருசியூட்டும்
ஆதலினால் இது கொம்புத் தேனே"-புலிப்பாணி
மாமரம், வேப்பமரம் போன்ற மரங்களின் உச்சாணிக் கொம்பில் ஒய்யாரமாய் தொங்கும் தேன்கூட்டில் எடுக்கப்படுவது கொம்புத்தேன். இந்த தேனை அருந்தினால் வாத நோய் குணமாகும். பித்தநோய்கள் மாறும். குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தநோய் மறையும். பசியையும் ருசியையும் அதிகப்படுத்தும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.
இப்படி தேனின் மருத்துவகுணம் பிரமிக்க வைக்கிறது.
இப்போது குறிப்பிட்ட வகையான தேனை சேகரிக்க தேன்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு தேன் சேகரிக்கப்படுகிறது. தேவ அமிர்தம் என்று கூறியிருக்கிறார்கள் தேனை. இந்த தேனில் என்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம். நீர் 18 சதவீதம், கார்போஹைட்ரேட் 76 சதவிகிதம்,குளுபார்க்மி திரவ பிசின் 0.4 சதவீதம், உலோக சத்துக்கள் 0.2 சதவீதம் மற்றும் சர்க்கரை சத்துக்களும், பூக்களின் சத்துக்களும் உள்ளன. சுக்ரோஸ், டெக்ஸ்ட்ரோஸ்,டெக்ஸ்ட்ரியன் ஆகிய சர்க்கரை சத்துக்கள் உள்ளன.
டாஸ்டேஸ், கார்டலேஸ், லிப்பேஸ்,பெராக்ஸைடோஸ் ஆகிய நொதிப்பொருட்களும் உள்ளன. மக்னீசியா, பாஸ்பரிக்,இரும்பு,சுண்ணாம்பு சத்து ஆகியவும் சிறிதளவு உள்ளன. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு செரிமானம் ஆகக்கூடிய அளவு தேன் சிறிய உணவாக திகழ்கிறது.
ஒரு டீஸ்பூன் தேனில் 10 டீஸ்பூனில் இருக்க கூடிய பாலின் வலிமை அடங்கியிருக்கிறதாம்.300 கிராம் மாமிசத்தின் சத்துக்களும், 8 ஆரஞ்சுப்பழங்களின் சத்துக்களும் ஒரு டீஸ்பூன் தேனில் கிடைக்கின்றன.
தேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்சல், இருதயத்தில் ஏற்படும் வலி,பலவீனம் ஆகியவற்றை போக்கும்.
குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும். கல்லீரலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும். தேனை குறைந்த அளவு அருந்தினால் மலச்சிக்கலை போக்கும். பேதியை நிறுத்தும். இரத்த சோகை நோயை போக்கும். நரம்புகளுக்கு வலிமை தரும். தூக்கத்தை தரும். நீர்க்கோவையை சரிசெய்யும். சிறுநீர்க்கழிவை குறைக்கும்.
தோல் சம்பந்தமான நோய்களை போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். கிருமிநாசினியாக வேலை செய்யும். பற்கள், கண்கள் ஆகியவற்றுக்கு பலம் தரும். தீச்சுட்ட புண்கள், சிரங்குகள், ஆறாத இரணங்கள் ஆகியவற்றை ஆற்றும் ஆற்றல் பெற்றது.
உடல் பருமனை குறைக்கும். இரத்த அழுத்த நோய்களை குணமாக்கும். சூல ரோகங்களை போக்கும். நீண்ட ஆயுளை தரும்.பெண்களின் கருப்பை நோய்களை குணமாக்கும். உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக இயங்க செய்யும்.
இப்படி தேனை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
தற்போது ஆங்காங்கே தேன்பெட்டிகளை வைத்து விதவிதமான தேன்களை சேகரிக்கிறார்கள். என்ன வகையான தேன்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்.
நாவல் மரத் தேன்
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்து. காலையில் வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் நெல்லிப்பொடி, 2 ஸ்பூன் நாவல் தேன் கலந்து குடித்தால் சர்க்கரை நோய், சிறுநீரக நோய்,கண் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து விடும். பற்கள் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
குங்குமப்பூ தேன்
கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும்.உடல் பலம் மற்றும் நிறம் பெறும். இரத்தம் சுத்தமாகும்.
லிச்சி மரத்தேன்
லிச்சி பழம் தமிழ்நாட்டு பழங்களின் ராணி என்று கூறப்படுகிறது. இந்த பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட தேன் பல நோய்களை தீர்க்கிறது.
பூண்டுத் தேன்
இரத்தக் கொதிப்பை நீக்கும்.உடலில் கொழுப்பை கரைக்கும். இதயத்தை பாதுகாக்கும். நெஞ்சுச்சளி நீக்கும். உடல் எடையை குறைக்கும்.
இஞ்சித்தேன்
பல்வலி,வயிற்றுவலி,தலைவளி,சளி,இருமல்,ஆஸ்துமா,தொண்டைப்புண்ணை குணமாக்கும்.
துளசித்தேன்
இரத்தக்கொதிப்பை நீக்கும்.கல்லீரல்,மண்ணீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.பல்,எலும்புகளை பலப்படுத்தும்.
உலர்பழத்தேன்
உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி தரும்.இரத்தம் விருத்தியாகும்.நினைவாற்றல் அதிகரிக்கும்.மலச்சிக்கல் வராது.
அத்திப்பழ தேன்
மூலவியாதிக்கு நல்ல மருந்து.தலைவாதம்,தோல்நோய்,சிறுநீரக நோய்,கல்லீரல் பெருக்கம்,உடல்வெப்பத்தை சரிசெய்யும்.மூளைக்கு பலம் தரும். ஆண்மை விருத்திக்கு நல்லது.
ஆப்பிள் தேன்
நரம்புக்கும், மூளைக்கும் நல்ல பலம் தரும்.கீழ்வாதம், முடக்குவாதம்,தொண்டைப்புண்ணை நீக்கும்.காய்ச்சல்,சளி போன்றவை சரியாகும்.சீரண உறுப்பில் ஏற்பட்டிருக்கும் இரணங்களை நீக்கும்.
மாம்பழ தேன்
வைட்டமின் ஏ அதிகம் செரிந்தது என்பதால், கண் பார்வைக்கு நல்லது. கூந்தலை அதிகப்படுத்தும்.கணையம், கல்லீரலை பலப்படுத்தும். இதயத்திற்கு புத்துணர்வு அளிக்கும்.மூட்டுவலி, இரத்தக்கொதிப்பை நீக்கும்.
பேரீட்சை தேன்
வைட்டமின் சத்துக்களும்,தாதுக்களும் அதிகம் உள்ள தேன். இது ஒரு முழு உணவு. ஆண்மைக்குறைவை நீக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
ரோஜாத்தேன்
உடல்பொலிவு பெற உதவும். கழிவு மண்டலம் சிறப்பாக இயங்க உதவும். மூலநோய் வராமல் இருக்க தொடக்க நிலை மருந்தாக பயன்படுத்தலாம்.காசநோய் குணமாக சிறந்த நிவாரணி.

இந்த தேன் சேகரிப்பாளர்களின் முகவரி
Last Forest
PB no-35
Kotagiri,
Nilgiris-17
phone: 4266 272277
துணுக்கு செய்தி-சோவியத் ரஷ்யாவில் 100 ஆண்டுகளுக்கும் மேல் நோயின்றி வாழ்ந்தவர்களை ஆய்வு செய்ததில் அவர்களின் பிரதான உணவாக தேன் இருந்தது தெரியவந்தது. தேன் சாதாரணமாக 50 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது. நமது நண்பர்களும் நலமாக வாழ இந்த தகவல்களை அவர்களிடம் கொண்டு சேர்பபோமே!

தேனீப்பெட்டி, தேன் வளர்ப்பு பற்றிய விவரங்கள் அறிய
திருமதி.ஜோஸ்பின் செல்வராஜ்
விபிஸ் இயற்கை தேன் உற்பத்தியாளர்கள்,
புதூர்,மதுரை.
98655 55047.












 பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.
* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.
* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
  * எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
* ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.
* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
  * தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும். Posted by hayura hayu at 08:20 No comments:




உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது.
ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.

அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன.

இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.

ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.

மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.

படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும்.

120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும்.

நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.

சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது.

ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை

No comments:

Post a Comment