For Read Your Language click Translate

17 May 2014

பறவைகள்(புறா) திசை அறிவது எப்படி ?



பறவைகள் எவ்வாறு திசையை அறிகின்றன ?

கூண்டிலடைத்து வளர்க்கப்பட்ட பறவைகளும், பறக்கவிடும்போது, இயற்கையாகப் புலம்பெயரும் பறவைகள் புலப்பெயர்வின்போது பறக்கும் அதே திசையிலேயே பறக்க முயல்வது தெரிய வந்துள்ளது.

அத்துடன் இயற்கையாகப் புலம்பெயரும் பறவைகளிடம் நிகழும் பறப்புத் திசை மாற்றமும் ஏறத்தாழ அதே காலத்திலேயே கூண்டுப் பறவைகளிலும் நிகழ்வதும் அறியப்பட்டுள்ளது.

தற்காலத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த ஆராய்ச்சிகள் பெருகியுள்ளன. இவற்றிற்கென தனிப் படிப்புகளும் உள்ளன. முனைவர் சலீ...ம் அலி (1896-1987) என்பவர் பறவைகளின் வாழ்க்கை முறை பற்றி ஆய்வு செய்த பறவை நிபுணர் ஆவார். இவரின் ஆய்வுகள் மூலம் பறவைகள் பற்றிய பல்வேறு சுவையான தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

பறவைகள் தங்களது இடம்பெயர்ச்சிக்கு குறைந்தது இரண்டு அச்சுகளாகிய அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் பயன்படுத்துகின்றன எனப் புதிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒரு சிலரின் ஆய்வுப்படி பறவைகளின் இடப்பெயர்வு வடக்கு, தெற்கு திசையில் அமைகின்றது. ரஷ்யாவில் உள்ள ரிபாஷி என்னுமிடத்தில் உள்ள உயிரியல் மையத்தின் ஆய்வாளர் நிகிதா சென்ஸ்டவ் வசந்த காலத்தில் பறவைகள் நெடுந்தொலைவு மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் சென்று திரும்பும்போது கிழக்கு மேற்காக இடம்பெயர்கின்றன என்று தன் ஆய்வில் கூறியுள்ளார். இதிலிருந்து பறவைகள் எவ்வாறு அட்ச ரேகைகளைக் கண்டறிகின்றன என்பது தெரியவில்லை. ஆனால் தீர்க்க ரேகை என்பது வடக்கு தெற்கு திசைகளில் செல்கிறது. இதை நடுப்பகலில் உள்ள சூரியனின் இருப்பிடத்தை வைத்தோ அல்லது பூமியின் காந்தப்புலத்தை வைத்தோ எளிதில் கண்டறியலாம் என்று சென்ஸ்டவ் விளக்கியுள்ளார்.

மூன்றாவதாக வானத்தில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் இடம்பெயரும் பறவைகள், அவை செல்ல வேண்டிய இடத்தில் தீர்க்கரேகையை அறிந்து இடம் பெயருகின்றன என்பர். ஆனால் இதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை.

பறவைகள் இவ்வாறு புவி காந்தயீர்ப்பு மற்றும் காந்த விலக்கு விசை மூலம் திசைகளை மாற்றி கொள்கிறது


புறாவின் மூளையில் "GPS" கண்டுபிடிப்பு.

Posted Image

அன்றைய காதலர்களும்.. அரசிளம் குமரர்களும்.. குமாரிகளும்.. இன்றைய குமரங்களும் குமரிகளும்.. போல்.. சிமாட் போனை கையில வைச்சுக்கொண்டு ஈமெயில்.. எஸ் எம் எஸ்.. பேஸ்புக் என்று சமூகத் தொடர்பாடல்கள் மூலம்... செய்தி அனுப்பி எல்லாம் காதலிக்க முடியல்ல. அதற்குப் பதிலா அவர்கள்.. புறா அல்லது அன்னப் பறவை.. ஒன்றை பிடிச்சு பழக்கி.. அதன் காலில் அல்லது கழுத்தில்.. செய்திகளைக் கட்டிவிட்டு.. காதலனுக்கோ.. காதலிக்கோ.. தூது அனுப்பினார்கள்.

பண்டைய அரசர்களும் போர்.. மற்றும் மற்ற அரசர்களோடு இராஜீய உறவுக்கான தூதுகளை புறாக்களைப் பயன்படுத்தி.. மேற்கொண்டிருந்தனர்.

அந்தப் புறாக்களும்.. திக்கறிந்து திசையறிந்து.. குறிப்பிட்ட செய்தியை குறிப்பிட்டவரிடம் கொண்டு போய் சேர்த்துவிடும். அதனை நவீன தமிழ் சினிமாக்கள் சிலவற்றிலும் காட்டியுள்ளனர்.

அந்தப் புறாவும் திக்கறிந்து திசையறிந்து.. குறிப்பிட்ட செய்தியை குறிப்பிட்டவரிடம் கொண்டு போய் சேர்த்துவிடும். அதனை நவீன தமிழ் சினிமாக்கள் சிலவற்றிலும் காட்டியுள்ளனர்.


சரி..உந்த காதல் புராணத்தை விட்டு.. இப்ப விசயத்துக்கு வருவம்..! விசயம் என்னென்னா.. எப்படி இந்தப் புறாக்கள் திசைமாறாமல் பறந்து சென்று சேர வேண்டிய இடத்தைச் சேர்கின்றன. புறாக்கள் மட்டுமல்ல.. பறவைகள் எல்லாமே எப்படி திசை மாறாமல் இலக்கு நோக்கிப் பறக்கின்றன என்ற கேள்வி விஞ்ஞானிகளிடம் பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது. அதற்கு பல்வேறு கொள்கை விளக்கங்களும் அளிக்கப்பட்டு வந்துள்ளன. இந்த நிலையில்..


Posted Image


இப்போது அந்தக் கேள்விக்கு கிட்டத்தட்ட ஒரு விடை கிடைக்கிற மாதிரி விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அதுதான் புறாவின் மூளையில் 53 நரம்புக் கலங்களைக் கொண்ட விசேட தொகுதி ஒன்று.. இனங்காணப்பட்டிருப்பது. அந்த நரம்புக்கலங்கள் (GPS neurons)
பூமியின் காந்தப் புலச் செறிவுக்கு ஏற்ப தூண்டப்பட.. அந்த வழி திசையறிந்து பறக்கின்றனவாம் புறாக்கள்..!

அதெப்படி.. காந்தப்புலத்தை.. குறிப்பிட்ட கலங்கள் கண்டறிகின்றன என்ற விடயம் இன்னும் பூரணமாக விளங்கிக் கொள்ளப்படவில்லை. இருந்தாலும்... இவ்வளவையும் கண்டறிந்த ஆய்வாளர்கள் அதைச் செய்யாமலா இருப்பார்கள். எனவே புறாக் கூட அதன் மூளையில் உள்ள.. இயற்கையான GPS ஐ வைச்சுத்தான் திசை அறிந்து பறக்கிறது என்ற உண்மை உறுதியாக வெளிவர அதிக நாள் எடுக்காது என்று நம்பலாம்.


இது இன்னொரு விசயத்தையும் விளங்கிக் கொள்ள உதவும். குறிப்பாக செறிவான மொபைல் சிக்னல் உள்ள இடங்களில்.. வாழ்ந்து வந்த பறவையினங்கள் பல அருகி விட்டுள்ளதுடன் இன்னும் சில இடம்பெயர்ந்தும் சென்றுவிட்டன. பறவைகளின் இந்த நடவடிக்கைக்கும்.. இதன் மூலம் சரியான விளக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது..!






காம்பஸ் என்னும் திசை காட்டும் கருவியை நாம் அறிவோம். அதன் ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டிக் கொண்டிருக்கும்
புல் மேயப் போகும் மாடுகளும் காட்டில் திரியும் மான்களும் ஒரே திசையை நோக்கி நின்றுகொண்டு புல் மேய்வதைக் கண்ட விஞ்ஞானிகள் ஆச்சரியப் பட்டார்கள். அவை ஏன் இப்படி நின்று புல் மேய்கின்றன என்பது நீண்ட காலமாகப் புரியாத புதிராகவே இருந்தது. இப்போழுது கூகுள் விண்கல புகைப்படங்களை வைத்து ஆராய்ந்ததில் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த மாட்டு மந்தையோ மான்கள் கூட்டமோ உயர் அழுத்த மின்சாரம் (High Voltage Pwer lines) செல்லும் கம்பிகளுக்குக் கீழாக வந்தால் இப்படி ஒரே திசையில் நிற்காமல் வெவ்வேறு திசையை நோக்கி நிற்பதும் கூகுள் படங்கள் மூலம் தெரியவந்தது. பெரும்பாலும் அவை வடக்கு தெற்கு அச்சுக்கு அணுசரனையாகவே நிற்கும். ஆனால் மின்சார கம்பிகளுக்கு 30 மீட்டருக்குக் கீழாக வந்தால் இது மாறிவிடுகிறது. இதற்கு என்ன காரணம்?
மாடுகள், மான்கள் மற்றும் வௌவால் போன்ற பல பிராணிகளின் உடலிலும் பறவைகளின் மூக்கிலும் காந்தம் (magnetite) இருப்பது தெரிகிறது. இந்த காந்த துருவங்கள் மின்சாரக் கம்பிகள் வெளிவிடும் அலைகள் மூலமாக “extremely low-frequency magnetic fields” (ELFMFs) திசை மாறும் என்பது தெரிந்ததே.




Magnetic fields light up 'GPS neurons', scientists say


வெளி இணைப்பு- நன்றி BBC

தொகுப்பு: யாழில் நெடுக்ஸ்


உசாத்துணை [தொகு]
முனைவர் அ. சுப்பையா பாண்டியன், 'அறிவியல் ஒளி',அக்டோபர் 2010 மாத இதழ்.
'9-ஆம் வகுப்பு அறிவியல் பாடநூல்' தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்-2011( சமச்சீர்கல்விப் பொதுப் பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது)
அலி, சலீம்; அலி, லயீக் பதே (2004). பறவை உலகம். புது தில்லி: நேசனல் புக் டிரஸ்ட். pp. 132. ISBN 81-237-4146-4.

மேற்கோள்கள் [தொகு]



No comments:

Post a Comment