For Read Your Language click Translate

17 May 2014

அந்தரத்தில் தொங்கும் கோவில் விக்ரகம் -அலெக்ஸாண்டரை அசத்திய கோவில் அழிந்தது எப்படி?

அலெக்ஸாண்டரை அசத்திய கோவில் அழிந்தது எப்படி?

59706274-ruins-surajkund
Picture: Ruins in Surajkund, Multan,Pakistan
பாகிஸ்தானில் மூலஸ்தான்: அலெக்ஸாண்டரை அசத்திய இந்துக்கோவில் அழிந்தது எப்படி?
Post no 868 Dated 26th February 2014
டாக்டர் மும்தாஜ் ஹுஸைன் பதான், “சிந்து”, ஆங்கிலப் புத்தகம், ஹைதராபாத், பாகிஸ்தான், 1978.
( திருப்பதியில் உள்ள பாலாஜி கோவிலும், திரு அனந்த புரத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோவிலும் தங்கத்திலும் வைரத்திலும் கொழிப்பதற்கு முன்பாக, 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிகப் பணக்கார கோவிலாகத் திகழ்ந்தது மூலஸ்தானம் என்னும் இடத்தில் இருந்த கோவில் ஆகும். இப்போது இந்த நகரை மூல்டான் என்று அழைப்பர். இங்கு காந்த சக்தியால் அந்தரத்தில் தொங்கிய அதிசய சூரியன் விக்ரஹம் அலெக்ஸாண்டரை அசரவைத்தது என்று கிரேக்க, மற்றும் அராபிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். இது பற்றி சிந்து ராஜ்ய வரலாறு என்னும் புத்தகத்தில் டாக்டர் மும்தாஜ் என்ற பெண்மணி எழுதியதை அப்படியே தருகிறேன. அடைப்புகுறிக்குள் இருப்பது மற்றும் எனது கருத்துக்கள்—லண்டன் சுவாமிநாதன்)
“முற்காலத்தில் மேற்கு பாகிஸ்தானில் மாலி என்னும் வகுப்பினர் வாழ்ந்தனர். அவர்களின் பெயரில் மாலிஸ்தான் என்ற சம்ஸ்கிருதச் சொல் தோன்றியது. அதுவே இன்று மூல்டான் ஆகிவிட்டது. மாலோய், சிபி ஆகிய இரண்டு சக்திவாய்ந்த சமூகங்களை கிரேக்கர்களும் குறிப்பிடுவர். இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இன்றும் இவர்கள் பெயரில் பல இடங்கள் இருப்பதைக் காண்கிறோம். மத்திய இந்தியாவில் மால்வா, பஞ்சாபில் சிவிகோட், சிந்து மாகாணத்தில் சிவிஸ்தான், பலுசிஸ்தானில் சிபி என்றும் அழைக்கபடும் இடங்கள் இவர்களின் செல்வாக்கைக் காட்டுகிறது.
(சோழர்கள் தமிழர்களா? என்று நான் ஏற்கனவே இதே பிளாக்–கில் எழுத்ய கட்டுரையில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்).
பிரம்மாவின் வழி வந்த மனுவின் ஏழு புத்திரர்களில் ஒருவர் காஸ்யப மஹரிஷி. அவர் பெயரில் மூல்டான் நகரம் காஸ்யபபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. மனுவின் ஏழு புத்திரர்களை நட்சத்திர ரூபத்தில் சப்தரிஷி நட்சத்திர மண்டலக் கூட்டத்தில் காணலாம். மூல என்பதற்கு சூரியன் என்றும் ஒரு பொருள் உண்டு. சிந்து சமவெளியில் மூல்டானில் இருந்த பிரபல சூரியதேவன் கோவில் பற்றி அராபிய யாத்ரீகர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
மூலம் என்ற சொல்லுக்கு தோற்றுவாய், கடவுள், ஆகாயம், வான மண்டலம் என்ற பொருள்களும் உண்டு. இதில் எந்த்ச் சொல்லும் சூரியதேவனுக்கும் பொருந்தும். இந்திய துணைக்கண்டத்தில் முதல் முதலில் கட்டப்பட்ட கோவில் என்பதாலும் இப்பெயர் இர்க்கலாம். கிருஷ்ண பரமாத்மாவின் புதல்வன் சம்பா கட்டிய கோவில் இது.
இந்த இடத்துக்கு ஆத்யஸ்தானம் என்ற பெயரும் உண்டு. ஆதியான இடம், முதல் இடம் என்று அர்த்தம். ஆனால் சூரியனுக்கு உள்ள மற்றொரு பெயரான ஆதித்ய என்பதே இப்படி திரிந்து போனது. நாம் இபோதும் ஞாயிற்றுக் கிழமைக்கு ஆதித்ய வார், ஆய்த்வார், ஆய்த் என்றெல்லாம் சொல்கிறோம்.மனுவின் மகனான தைத்யன் ஹிரண்யகசிபுவின் மகன் பிரஹலாதன் இதை நிறுவியதாகவும் சொல்லுவர். சம்ஸ்கிருத மொழியில் தேர்ச்சிபெற்ற ஆலபரூனி என்ற அறிஞர் இந்தக் கோவில் கர்தா யுகத்தில் தோன்றியதாவும் 216432 அண்டுகளுக்கு முன் இது கட்டப்படதாகவும் எழுதி வைத்துள்ளார். (கர்தா யுகம் என்பது கிருத யுகம் என்று ஊகிக்கலாம்)
(இதை எல்லாம் ஒரு பாகிஸ்தானிய முஸ்லீம் பெண்மணி எழுதுகிறார் என்பதை நினைவிற் கொண்டு மேலும் படியுங்கள்)
Pakistan, Punjab map




மூல்டானில் அலெக்ஸாண்டர்


மூல்டான் பற்றி தொல் பழங்காலக் குறிப்புகளும்கிடைக்கின்றன. கிரேக்க நாட்டு ராணுவ தளபதியான் ஸ்கைலாக்சும் இது பற்றி எழுதியிருக்கிறார். அவர் முதலாம் டேரியஸ் மன்னன் (கி.மு.550 – 486) காலத்தில் பஞ்சாபுக்கு வந்தார். காஸ்யப புரம் பற்றி ஹெரோடோட்டஸ், டாலமி ஆகியோரும் குறிப்பிட்டனர். மூல்டான் கோவிலுக்கு வந்த அலெக்ஸாண்டர் அங்குள்ள கலைகோவிலைக் கண்டு அசந்தே போய்விட்டார். அந்தக் கோவில் விக்ரகம் பல காந்தக் கற்களின் உதவியால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். மூலஸ்தான் சூரியதேவனார் கோவில் பற்றி 1200 ஆண்டுகளுக்கு முன் சீன யாத்ரீகர் யுவான் சுவாங்கும் எழுதி வத்தார். சூரியனார் சிலை சொக்கத் தங்கத்தினால் ஆனது. ஏராளமான ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டது என்கிறார் அவர். அவர் வந்த காலத்தில் ஓடிய ராவி நதி கூட, இப்போது திசை மாறி ஓடுகிறது.
அராபியர் படை எடுப்புக்கு முன் சிந்து மாகாண ஆட்சி சாக் என்னும் பிராமணர் கையில் இருந்தது. அவர்கள் புத்த மதத்தினர் ககளி இருந்த் ஆட்சியைப் பறித்தனர். அராபியர் படை எடுத்த காலத்தில் ராஜ க்ண்ட என்பவர் கடுமையாகப் போரிட்டு அராபியரின் உணவு சப்ளை கிடைக்காதபடி செய்து பட்டினியில் வாடவீட்டார். இதனால் அவர்கள் கழுதைகளைக் கொன்று சாப்பிட நேரிட்டது. இதனால் கழுதை விலை யானை விலை, குதிரை விலை என்று ஏறிப் போனது. ஆனால் முற்றுகை வெகு காலம் நீடித்தவுடன், கோவில் பூஜாரிகள் மூல்டான் கோட்டையை அராபியரிடம் ஒப்படைத்தனர்.
அராபியர்களின் தீவிரவாதப் பிரிவான இஸ்மாயிலிகளின் போதனையால் வெறியர்களான அல் ஹைதம், சைபான் ஆகியோர் மூல்டான் சூரிய தேவன் விக்ரஹத்தைச் சுக்கு நூறாக நொறுக்கினர். முகமது பின் காசிம் எழுப்பிய மசூதியையும் மூடவித்தார் சைபான்.
(வரலாறு படித்தவர்களுக்கு முகமது பின் காசின் என்பவரை நினைவில் இருக்கும். இவர் துவக்கி வைத்த முஸ்லீம் ஆட்சிதான் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆட்டிப்படைத்தது. இவர்களும் பிரிட்டிஷாரும் செய்த தீவினைகளையே “ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி” என்றும், வேத நூல் பழிக்கும் வெளித் திசை மிலேச்சர் என்றும் பாரதியாரும் பாடலில் சாடுகிறார்—சுவாமி)
chin_mudra
மூல்டான் விக்ரஹ வருணனை




இந்தக் கோவிலில் இருந்த விக்ரஹத்தை பைபிளில் வரும் எபிரேய தீர்க்கதரிசி ஜாப் (அயூப்) புடன் ஒப்பிடுகின்றனர் அராபியர்கள். இந்திய துணைக் கண்டத்தில் பல பாகங்களில் இருந்து வந்த மக்கள் கூட்டம் மூலம் கோவிலுக்கு ஏராளமான வருவாய் கிடைத்தது. இதை வைத்தே அரசாங்கம் நடந்தது.
சூரிய தேவன் சிலை ஒரு நாற்காலியில் உட்காரவைத்தது போல வீற்றிருந்த திருக்கோலத்தில் இருந்தது. உடல் முழுதும் சிவப்புத்தோல் போர்த்தப் பட்டு கண்கள் மட்டும் ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.கண்கள் போல ஜொலித்த இரண்டு ரத்தினக் கற்களும் மிக மிக விலை மதிப்புடையவை. அவைகளை அவர்கள் கண்களில் பொருத்தி இருந்த முறை அதை உண்மைக் கண்கள் என்று நம்புமாறு இருந்தன. இவை இரண்டும் குருவி முட்டைகளை விடப் பெரியவை என்றும் கோவில் முழுதும் பிரகாசத்தைப் பரப்பியது என்றும் இபி நதீம் எழுதிவைத்துள்ளார். தலையில் தங்கக் கிரீடமும் தங்க விதானமும் அமைக்கப்பட்டிருந்தது. தொடையின் மீது இருந்த கைகள் நாலு என்று எண்ணுவது போல அமைக்கப்பட்டிருந்தது




(எனது கருத்து:- சின் முத்திரையைத் தான் அராபிய முஸ்லீம்கள் இப்படி நாலு என்னிக்கை என்று எழுதினர் போலும்: சுவாமி)
மூல்டானில் வேறு இரண்டு கற்சிலைகளும் இருந்தன. அவற்றின் பெயர் ஜுன்புகாத், சூன்புகாத் (துவார பாலகர்கள்??) பள்ளத்தாக்கின் இரண்டு பக்கமும் 80 கஜ இடைவெளியில் அமைக்கப்படிருந்தன. இந்த சிலைகளை வெகு தொலைவிலேயே காண முடியும். உடனே பகதர்கள் மரியாதை காரணமாக வண்டியில் இருந்து இறங்கி வெறும் காலகாளல் நடந்து கோவிலுக்கு வருவர்.
(இன்றும் திருப்பதியில் இத்தகைய காட்சிகளைக் காண்கிறோம்)
வெகு தொலைவில் இருந்தெல்லாம் மக்கள் வந்து காணிக்கைகலைக் குவித்தனர். சிலர் ஆயிரம் மைல் தொலைவில் இருந்து வந்தனர். அங்கே முடிகளை காணிக்கை கொடுத்துவிட்டு கோவிலை வலம் வந்தனர்.
(இன்றும் திருப்பதி, பழநி ஆகிய இடங்களில் இதைக் காண்கிறோம்)
counting 4 ashmolean
Picture of Surya in Ashmolean Museum, Oxford, England.


முல்டானில் மக்கள் சாமி கும்பிட்ட முறை பயங்கரமானவை, ஒரு மாதிரியானவை. ஒரு சிலர் கத்தியை எடுத்து கண்களைத் தோண்டி விக்ரகம் முன் காணிக்கை செலுத்தினர். மற்றும் சிலர் மூங்கில் கழியைக் கூராக்கி வயிற்றை அதில் வைத்து அழுத்தி முதுகின் வழியே வரச் செய்தனர். இதனால் அவர்கள் இறக்க நேரிட்டது.
(எனது கருத்து:கண்ணப்ப நாயனார், விஷ்ணு, சிபி சக்ரவர்த்தி ஆகியோர் கண் தானம் செய்ததை நான் ஏற்கனவே இதே பிளாக்—கில் எழுதி இருக்கிறேன். அதை நினைவுபடுதுகிறது மேற்கூறிய முஸ்லீம் அறிஞரின் வருணனை– சுவாமி)
மூல்டான் கோவிலுக்குச் சென்று வந்தவர்கள் கூறியதை இபின் ருஷ்டா என்பவர் கி.பி 903 ல் பின்வருமாறு எழுதுகிறார்:
“ இந்த விக்ரஹம் 20 கஜ தூரம் இருக்கும். இது வானத்தில் இருந்து வந்ததாகவும் தேவர்களே வணங்கச் சொன்னதாகவும் இந்துக்கள் நம்புகின்றனர். இந்த்க கோவில் வருவாய் அராபிய ஆட்சியாளர்களுக்கும் கோவில் குருக்கள்மார்களுக்கும் பெரும் வருவாயாக விளங்கியது. சிலர் தனது வருவாயில் பாதியையும் மற்றும் சிலர் முழுச் சொத்துகளையும் கோவிலுக்கே தானம் செய்தனர். கோவில் பூஜாரிகள் மிகவும் கடுமையான விரதத்தை அனுஷ்டித்தனர். குளித்துவிட்டு சுத்தமாக இருந்தனர். மாமிச உணவைத் தொடவில்லை. மீன், சோறு, காய்கறிகளைப் படைத்துவிட்டு கோவிலுக்கு வரும் மிருகங்கள், பறவைகள், பூச்சிகளுக்கு பகிர்ந்து கொடுத்தனர். விக்ரஹம் இரும்பினால் செய்யப்பட்டது. காந்த சக்தி மூலம் அந்தரத்தில் நிற்கவைத்தனர்.
அதே காலத்தைச் சேர்ந்த இபின் நதீம் பின்வரும் தகவலைத் தருகிறார்:
இந்த கோவில் விக்ரகம் ஏழுகஜம் அகலமுடையது. கோவிலின் உயரம் 180 கஜம். விக்ரகத்துக்கு நான்கு முகங்கள். ஒவ்வொரு முகமும் ஒரு நுழை வாயிலில் தெரியும் பக்தர்கள் எந்த வாசல் மூலமும் உள்ளே வருவர்.
அல்பரூனி (கி.பி. 973—1048) வேறுவித மான தகலைத் தருகிறார். இந்த விக்ரஹம் மரத்தால் ஆனது என்றும் தோலினால் மூடப் பட்டிருந்தது என்றும் சொல்கிறார். அராபியர்கள் விலை உயர்ந்த தங்க விக்ரகத்தை எடுத்துக் கொண்டு மரச் சிலையை வைத்திருப்பதை இது காட்டுகிறது. ஆனால் இறுதியில் இந்த மரச் சிற்பத்தையும் ஜமாம் பின் சைபான் நொறுக்கிவிட்டு பூஜாரிகளையும் சுவடே இல்லாமல் அடியோடு அழித்துவிட்டார்.
(வேறு ஒரு கட்டுரையில் அந்தக் கோவிலில் 6000 ஊழியர்கள், குருமார்கள் இருந்ததாக எழுதி இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் படுகொலை செய்தது மேற்கூறிய ஜமாம் பின் சைபான்,என்று யாத்ரீகர் தகவல்களில் இருந்து தெரிகிறது)
அராபியர்களுக்கு மூல்டான் விக்ரஹம் பலவகையில் உதவியது. பெரும் வருவாயைக் கொடுத்தது. அது மட்டுமல்ல. இந்து மன்னர்கள் படை எடுத்தபோதெல்லாம் முஸ்லீம்கள் இந்து விக்ரஹத்தை கோட்டை மதில் சுவருக்கு மேலே வைத்து முன்னேறி வந்தால் இந்தச் சிலையை கீழே போட்டு நொறுக்கிவிடுவோம் என்று மிரட்டினர். உடனே வந்தவர்கள் பின்வாங்கிவிடுவர். இப்படியாக மூல்டானின் அழிவு ஒத்திபோடப்பட்டது
சிந்து சமவெளியில் முதலில் நுழைந்த முஸ்லீம் தளபதியான முகமது பின் காசிமிடம் இந்த சிலையால் மிகப் பெரிய வருவாய் கிடைப்பதாக தெரிவித்தனர். ஆகையால் அவன் சிலையை உடைக்கவில்லை. ஆனால் இந்துக்களைக் கேலி செய்வதற்காக அந்தச் சிலையின் கழுத்தில் பசுமாட்டின் மாமிசத்தைத் தொங்கவிட்டுச் சென்றான்.”
டாக்டர் மும்தாஜ் ஹுசைன் பதான் எழுதிய சிந்து மாகாணம் என்ற புத்தகத்தில் கண்டதை மேலே படித்தீர்கள். ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்)
swami_48@yahoo.com
thank youMr. London swaminathan

No comments:

Post a Comment